60-களில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (University of South California) நாடகத் துறைக்கு இவர் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப் பட்டார். 96-ல் அதே பல்கலைகழகத்திற்கு இவர் ஒரு காப்பாளர். (trustee).
August 19, 2008
Steven Spielberg - அசத்தும் ஆளுமை
ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஈ.டி, ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், மைனாரிட்டி ரிப்போர்ட்... இப்படி எத்தனையோ பிரம்மாண்டமான திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு பிடித்த 10 படங்களில் கண்டிப்பாக ஸ்பீல்பர்கின் படங்கள் இல்லாமல் இருக்காது. இவரைப் பற்றி முழுமையாக படிக்க விக்கிப்பீடியா வாருங்கள். தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள் என்று இவருடைய படைப்புகள் முழுவதும் தொகுத்து தந்திருக்கிறார்கள். What an amazing Career!!
60-களில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (University of South California) நாடகத் துறைக்கு இவர் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப் பட்டார். 96-ல் அதே பல்கலைகழகத்திற்கு இவர் ஒரு காப்பாளர். (trustee).
60-களில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (University of South California) நாடகத் துறைக்கு இவர் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப் பட்டார். 96-ல் அதே பல்கலைகழகத்திற்கு இவர் ஒரு காப்பாளர். (trustee).
வகைகள்:
catch me if you can,
Duel,
Stephen Spielberg,
சினிமா
August 13, 2008
Roshomon - பார்வைகளால் ஆன உலகம்
இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் பொழுது முப்பரிமாண தோற்றம் கிடைக்கிறது. இந்த இரு கண்களும் மூளைக்கு செலுத்தும் செய்திகள் மாறுபட்டால் என்னவாகும்? காட்சிகள் பிழற்ந்து போகும். இந்த உலகத்தில் நாம் காணும் உண்மை, பொய், வலியது, இகழ்ந்தது எல்லாமே நாம் பார்க்கும் பார்வையினால்தானே (perspectives). Beauty is in the Beholder's eyes.
ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மோடு அந்த மழையும் தொடர்ந்து வருகிறது. அதனூடே சில பார்வையாளர்களை சந்திக்கின்றோம். அவர்கள் மூலம் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகின்றது. சம்பந்தப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் சம்பவத்தை விவரிக்க பல்வேறு பார்வைகள் (perspectives) கிடைக்கின்றன.
ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மோடு அந்த மழையும் தொடர்ந்து வருகிறது. அதனூடே சில பார்வையாளர்களை சந்திக்கின்றோம். அவர்கள் மூலம் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகின்றது. சம்பந்தப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் சம்பவத்தை விவரிக்க பல்வேறு பார்வைகள் (perspectives) கிடைக்கின்றன.
வகைகள்:
Roshomon,
அகிரா குரசோவா,
சினிமா,
ரஷொமோன்
August 11, 2008
ரைஃபிளால் நான் சுட்டபொழுது...
'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட் பரீட்சை என்பார்கள். கல்லூரியில் C சர்டிபிகேட். பத்து விநாடிகளில் மேகஸினை லோட் பண்ணி சேஃப்டி லாக் போட்டு கீழே வைக்க வேண்டும். அடுத்த செட் அதே பத்து விநாடிகளில் மேகஸினை அன்லோட் செய்து கீழே வைக்க வேண்டும். 'பரேட்! ஜெனெரல் சல்யூட் சலாமே ஷஸ்த்ர' என்று சொன்னவுடன் வலது கையில் இருந்து ரைஃபிளை செங்குத்தாக தூக்கி இடது கையால் பேரலில் ஒரு அடி அடித்து பிடித்து, வலது காலை தூக்கி இடது காலுக்கு பின்னால் ஒரு 45 டிகிரியில் வைத்து வலது கையை ரைஃபிளின் கீழே 'பட்' பகுதியில் சல்யூட் அடிக்கும் நிலையில் வைக்க வேண்டும். நான்கு விரல்களும் ஒன்றாக விரித்து ஒரு பக்கமும், கட்டை விரலை இன்னொரு பக்கமும் பிடித்துக் கொண்டு விறைப்பாக நிற்க வேண்டும்.
மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட் பரீட்சை என்பார்கள். கல்லூரியில் C சர்டிபிகேட். பத்து விநாடிகளில் மேகஸினை லோட் பண்ணி சேஃப்டி லாக் போட்டு கீழே வைக்க வேண்டும். அடுத்த செட் அதே பத்து விநாடிகளில் மேகஸினை அன்லோட் செய்து கீழே வைக்க வேண்டும். 'பரேட்! ஜெனெரல் சல்யூட் சலாமே ஷஸ்த்ர' என்று சொன்னவுடன் வலது கையில் இருந்து ரைஃபிளை செங்குத்தாக தூக்கி இடது கையால் பேரலில் ஒரு அடி அடித்து பிடித்து, வலது காலை தூக்கி இடது காலுக்கு பின்னால் ஒரு 45 டிகிரியில் வைத்து வலது கையை ரைஃபிளின் கீழே 'பட்' பகுதியில் சல்யூட் அடிக்கும் நிலையில் வைக்க வேண்டும். நான்கு விரல்களும் ஒன்றாக விரித்து ஒரு பக்கமும், கட்டை விரலை இன்னொரு பக்கமும் பிடித்துக் கொண்டு விறைப்பாக நிற்க வேண்டும்.
வகைகள்:
ஒலிம்பிக்,
சுயபுரானம்,
ரைஃபிள்
August 8, 2008
பைசல் ஆன பழைய கணக்கு!
"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்கதான் 9-ம் வகுப்புல நம்பர் தியரி பத்தி எனக்கு வகுப்பு எடுத்தீங்க. நீங்க சரியா பாடம் எடுத்திருந்தா எனக்குப் இப்ப இந்த புரிதல் பிரச்சினை வந்திருக்காது. அதனால நீங்கதான் இந்த ஆராய்ச்சி முடிய உதவி செய்யனும்" என்று தீர்மானமாக சொன்னான் விஷ்வா. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பாசோ. 'நான் சாதாரண ஹைஸ்கூல் கணக்கு வாத்தியாருப்பா. எனக்கு தெரிஞ்சது நாலு டெக்ஸ்ட் புக், ஏழு நோட்ஸ், இருவது வருசமா அதே முந்நூத்தம்பது கணக்கைத்தான் திருப்பி திருப்பி போட்டுக்கிட்டு வாரன். நீ என்னமோ பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டு வந்திருக்க. ரிங்க் தியரி, ஃபீல்ட் தியரின்னு புதுசு புதுசா சொல்ற. இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசுப்பா' பரிதாபமாக சொன்னார் பாசோ. பாளளயங்கோட்டை சோமநாதன் என்றால் யாருக்கும் தெரியாது. "பாசோ" என்றால்தான் கண்டிப்பானா கணக்கு வாத்தியார். எப்பொழுதும் வெள்ளை முழுக்கை சட்டையும் அடர்த்தியான வண்ணத்தில் கால்சராயும் அணிந்திருப்பார். குள்ளமாக, கெச்சலாக, தொலைவில் இருந்து பார்த்தால் பள்ளி மாணவன் போலத்தான் இருப்பார். அவர் வீட்டு மொட்டை மாடியில் கீத்துக் கொட்டகைப் போட்டு 'ஙய்ய்' என்று ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் மங்கலான ட்யூப்லைட் வெளிச்சத்தில் ஒரு பத்து பதினைந்து பேர் கணக்கு போட்டு பழகிக் கொண்டிருப்பார்கள். எல்லாம் அவர் பள்ளிக்கூடத்து மாணவர்கள்தான். பொதுத் தேர்விற்காக தனி ட்யூஷன். |
வகைகள்:
கணக்கு வாத்தியார்,
சிறுகதை,
பாசோ
August 6, 2008
பில் கேட்ஸை மிஞ்சிய கோயம்புத்தூர்காரர்
உலகின் தலைசிறந்த தொழில் சிந்தனையாளர் - Business Guru - தர வரிசையில் முதல் இடத்தில் ஒரு தமிழர் கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத். இரண்டாம் இடத்தில் இருக்கறது போன மாசம் ஓய்வுப் பெற்ற பில் கேட்ஸ்.
முதல் 50 சிந்தனையாளர்கள்
முதல் 50 சிந்தனையாளர்கள்
வகைகள்:
50 சிந்தனையாளர்கள்,
அடித்தட்டு மக்கள்,
பிரகலாத்,
மேலாண்மை
August 1, 2008
குசேலன் பற்றிய கதைகளும், விமர்சனங்களும்
முதல் கதை: பாகவத புராணத்தில் வருகிறது. கண்ணனும், குசேலர் (எ) சுதாமருக்கும் உள்ள நட்பு பற்றிய கதை. பத்தாவது காண்டத்தில் வரும் இந்தக் கதையில் குசேலர் கண்ணனின் ஆயர்பாடி தோழன். பின்னர் கண்ணன் அரசனானவுடன் அவனிடம் உதவி கேட்டுப் போகிறார். குருசேத்திரப் போர் முடிந்தவுடன் கண்ணனுடன் தத்துவ விசாரங்களிலும் ஈடுபடுகிறார்.
இரண்டாம் கதை: சுஜாதா எழுதியது. மத்யமர் தொடரிலா / தூண்டில் கதைகள் தொடரிலா என்று ஞாபகம் இல்லை. அதே குசேலன் / கிருஷ்ணன் நட்பை சம காலப் பின்னணியில் அமைத்த கதை. குசேலர் தன்னுடைய பால்ய நண்பனும் தற்போதைய தமிழக அமைச்சருமான (அப்படித்தான் நினைக்கின்றேன்) கிருஷ்ணனை பார்த்து உதவி கேட்கிறார். இறுதியில் ஒரு வரி சேர்த்திருப்பார். அதை இந்தப் பதிவில் எழுத முடியாது. கதை கிடைத்தால் படித்துப் பாருங்கள். நல்ல விறுவிறுப்பாக இருக்கும்.
மூன்றாம் கதை: கேரள ஸ்ரீனிவாசன் 'கத பறயும்போள்' திரைப்படத்திற்காக எழுதிய கதை. இதுவும் ஏழை பணக்கார நண்பர்களைப் பற்றிய கதைதான். இதில் சிறப்பு அம்சம் கிளைமேக்ஸில் அந்த பணக்கார நண்பன் சொல்லும் ஃப்ளாஷ்பேக். இந்த ஒரு 'நாட்'டை வைத்து அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழில் வெளியாகியுள்ள 'குசேலன்' படத்தை ஒரு விபத்து போல் பார்த்தாகிவிட்டது. ப்ளாக் எல்லாம் வைத்துக் கொண்டு ரெண்டு வரி எழுதவில்லையென்றால் எப்படி?
இந்தப் படத்தைப் பற்றிய சில +களும் -களும்...
இரண்டாம் கதை: சுஜாதா எழுதியது. மத்யமர் தொடரிலா / தூண்டில் கதைகள் தொடரிலா என்று ஞாபகம் இல்லை. அதே குசேலன் / கிருஷ்ணன் நட்பை சம காலப் பின்னணியில் அமைத்த கதை. குசேலர் தன்னுடைய பால்ய நண்பனும் தற்போதைய தமிழக அமைச்சருமான (அப்படித்தான் நினைக்கின்றேன்) கிருஷ்ணனை பார்த்து உதவி கேட்கிறார். இறுதியில் ஒரு வரி சேர்த்திருப்பார். அதை இந்தப் பதிவில் எழுத முடியாது. கதை கிடைத்தால் படித்துப் பாருங்கள். நல்ல விறுவிறுப்பாக இருக்கும்.
மூன்றாம் கதை: கேரள ஸ்ரீனிவாசன் 'கத பறயும்போள்' திரைப்படத்திற்காக எழுதிய கதை. இதுவும் ஏழை பணக்கார நண்பர்களைப் பற்றிய கதைதான். இதில் சிறப்பு அம்சம் கிளைமேக்ஸில் அந்த பணக்கார நண்பன் சொல்லும் ஃப்ளாஷ்பேக். இந்த ஒரு 'நாட்'டை வைத்து அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழில் வெளியாகியுள்ள 'குசேலன்' படத்தை ஒரு விபத்து போல் பார்த்தாகிவிட்டது. ப்ளாக் எல்லாம் வைத்துக் கொண்டு ரெண்டு வரி எழுதவில்லையென்றால் எப்படி?
இந்தப் படத்தைப் பற்றிய சில +களும் -களும்...
ரசவாதம் - சில குறிப்புகள்
அன்பிற்குரிய ரா.கே,
உங்களின் கடின உழைப்பு எல்லாரும் அறிந்ததே. இந்த 'சுவர்க் கோழியின் சங்கீதம்' சிறுகதை தொகுப்பு பொறுக்கியெடுத்த முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுவர்க்கோழிகளின் 'க்ரீச்ச்' சத்தத்தின் இடையே ஒலிக்கும் அந்த மௌனத்தை சஙகீதம் என்று சொல்லாமல் எப்படி சொல்வதாம்? இழந்து கொண்டிருக்கும் சுயத்தை இந்த சுவர்கோழிகள் சத்தமாகவே சொல்கின்றன. உங்கள் நடை அப்படி இருந்தாற்ப்போல இருந்த சுழட்டி விட்டு விடுகிறது. தெளிவான நீரோடையில் திடீரென்று சுழித்து கொண்டு ஓடும் காட்டாறு போல், காலடியிலிருந்து கம்பளத்தை உருவி விட்டு விடுகிறீர்கள். உங்கள் பலமே சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்து படிப்பவனை புரட்டிப் போடுவதில்தான் இருக்கிறது. அந்த சம்பாஷணைகள் எல்லாம் என்னை எனது கல்லூரிக் காலத்திற்கு கொண்டு தள்ளுகிறது. ஒரு சமயம் நீங்கள் இன்னமும் விரிவாக விவாதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை வாசகன் அதை பூர்த்தி செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களோ?
படித்தவுடன் கடிதம் எழுதத்தான் உட்கார்ந்தேன். அதற்குள் சில வேலை அழுத்தங்கள். இதோ உங்களது 'ரசவாத குறிப்புகள்' ஏழாம் முறை படித்தாகி விட்டது. படித்ததும் ஒரு பத்து நிமிடங்களுக்கு வேலையே ஓடவில்லை. சிவவாக்கியர் பாடலில் வரும் 'வில்லின் ஓசைக்கு' சம்பூர்ண சாமியாரின் விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. இப்படி யாரும் இதுவரை யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையின் பேரில் ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணம் அந்த இறுதிக் குறிப்புகள்தான்.
உங்களின் கடின உழைப்பு எல்லாரும் அறிந்ததே. இந்த 'சுவர்க் கோழியின் சங்கீதம்' சிறுகதை தொகுப்பு பொறுக்கியெடுத்த முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுவர்க்கோழிகளின் 'க்ரீச்ச்' சத்தத்தின் இடையே ஒலிக்கும் அந்த மௌனத்தை சஙகீதம் என்று சொல்லாமல் எப்படி சொல்வதாம்? இழந்து கொண்டிருக்கும் சுயத்தை இந்த சுவர்கோழிகள் சத்தமாகவே சொல்கின்றன. உங்கள் நடை அப்படி இருந்தாற்ப்போல இருந்த சுழட்டி விட்டு விடுகிறது. தெளிவான நீரோடையில் திடீரென்று சுழித்து கொண்டு ஓடும் காட்டாறு போல், காலடியிலிருந்து கம்பளத்தை உருவி விட்டு விடுகிறீர்கள். உங்கள் பலமே சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்து படிப்பவனை புரட்டிப் போடுவதில்தான் இருக்கிறது. அந்த சம்பாஷணைகள் எல்லாம் என்னை எனது கல்லூரிக் காலத்திற்கு கொண்டு தள்ளுகிறது. ஒரு சமயம் நீங்கள் இன்னமும் விரிவாக விவாதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை வாசகன் அதை பூர்த்தி செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களோ?
படித்தவுடன் கடிதம் எழுதத்தான் உட்கார்ந்தேன். அதற்குள் சில வேலை அழுத்தங்கள். இதோ உங்களது 'ரசவாத குறிப்புகள்' ஏழாம் முறை படித்தாகி விட்டது. படித்ததும் ஒரு பத்து நிமிடங்களுக்கு வேலையே ஓடவில்லை. சிவவாக்கியர் பாடலில் வரும் 'வில்லின் ஓசைக்கு' சம்பூர்ண சாமியாரின் விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. இப்படி யாரும் இதுவரை யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையின் பேரில் ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணம் அந்த இறுதிக் குறிப்புகள்தான்.
வகைகள்:
அறிவியல் புனைவு,
சிறில் அலெக்ஸ் போட்டி,
சிறுகதை,
சிறுகதை போட்டி,
ரசவாதம்
Subscribe to:
Posts (Atom)