tag:blogger.com,1999:blog-308805442024-03-23T06:16:11.800-04:00Just another pageMusings of a random storytellerSridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comBlogger192125tag:blogger.com,1999:blog-30880544.post-67974133029009135992024-03-12T09:22:00.007-04:002024-03-12T10:47:12.838-04:00அறிவியல் திருவிழா - 3<span style="white-space-collapse: preserve;">"சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருநூறு பேர்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தியதில்..."</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பதினாறு வயதுதான் இருக்கும். இதென்னடா, இத்தனை சிறுவயதில், இன்சுலினிக்கு ஏதோ மாற்று மருந்து கண்டுபிடித்து விட்டாளோ என நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் பக்கத்தில் இருந்தவரோ தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் ஆய்வுகளில் பொழுதைக் கழித்து இப்போது ஓய்வு பெற்றபிறகும், பெரு நிறுவனங்கள் வலிய அழைத்து ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்த வைக்கும் அளவிற்கு அறிவியல் ஆர்வலரான ஸ்காட்டிஷ்காரர். அவரும் ஆர்வமானார்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"அந்த இருநூறு பேர்களின் தகவல்களைக் கொண்டு ஐயாயிரம் பேருகளுக்கான தகவல்கள் உருவாக்கி, செயற்கை பாட்களை தொடர்ந்து சோதனை செய்ய ஒரு டேட்டா மாடலை உருவாக்கி..."</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">நான் ஆர்வமாக பங்கேற்கும் சிறுவர்கள் அறிவியல் போட்டிகளில், கடந்த 2-3 வருடங்களான ஆய்வுகளில் பெரும்பாலும், சுற்றி சுற்றி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் வந்து நின்றுவிடுகின்றன. இந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்னும் ஒன்றிரெண்டு ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இவர்கள்தான் நமது மருத்துவத் துறையின் ஆய்வுகளின் போக்கை தீர்மானிக்கும் சக்தி கேந்திரங்கள். எதிர்காலத்தில் நம்முடைய நோய் நமது கவனத்திற்கு வருமுன்னரே இவர்களுடைய செயற்கை நுண்ணறிவு செயலிகள் அவற்றைக் குணப்படுத்த வல்லவையாக இருக்கும்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">இன்னொரு பையன், "நியூரோ நோய்களைக் கண்டறிய உதவும் மாடல்" என ஒரு பெரிய மாடலைப் பற்றி நுணுக்கமாக 10 நிமிடங்களில் பிரசன்டேஷன் செய்து முடித்தான். ஒரே சமயத்தில் பத்து பதினைந்து ரேடியோலஜிஸ்ட்டுகளின் பணியை செவ்வனே செய்து முடிக்கும் என்கிறான்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"வழூ வரையறைப் பற்றி ஏதும் உன் ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டேன். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">அதெல்லாம் வெகு துல்லியமாக இருக்கும் என அடித்து சொன்னான். கோட் போட்டுக் கொண்டு கனவான் உடுப்பில் இருந்ததால், துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்யாத குறை. அந்தப் பையன் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுடன்தான் இந்த அறிவியல் போட்டிகளுக்கு வருகிறான். நானே அவனுடைய ஆய்வுகள் மூன்று நான்கினைப் பார்த்திருக்கிறேன். இதிலும் தன்னுடைய ஆய்வுகளுக்கான செயலிகளையும், அதற்கான மூலப் பிரதிகளையும் இணையவெளியில் பொதுவில் வைத்துவிடுவான். ஏதோ அவன் பிரசன்டேஷன் செய்யும் போது பார்த்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்றில்லாமல், ஆற அமர அந்த செயலிகளை இயக்கி எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் பார்த்துக் கொள்ளுங்களேன் என்கிற தன்னம்பிக்கை.</span><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhRA_N7OXLjI6o4Yj08Ltd3gjxpz5hZ9Xe1kRCe7pLMryhcbRMpUV3AQIq2gRrxk5n2uYnkIuXwOT0AUrhpLi5ag2QE9dROJWGDRoaZszanek-Ay68UOCCg0JugqwXEnhGvf4NyHCdtOi2c7bMAGIVZJ_DuNRVfymSB83lFvZ4lOReQKUtNIqrg" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img data-original-height="1080" data-original-width="1920" height="225" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhRA_N7OXLjI6o4Yj08Ltd3gjxpz5hZ9Xe1kRCe7pLMryhcbRMpUV3AQIq2gRrxk5n2uYnkIuXwOT0AUrhpLi5ag2QE9dROJWGDRoaZszanek-Ay68UOCCg0JugqwXEnhGvf4NyHCdtOi2c7bMAGIVZJ_DuNRVfymSB83lFvZ4lOReQKUtNIqrg=w400-h225" width="400" /></a></div><div><br /><br /><span style="white-space-collapse: preserve;"><br /></span></div><div><span style="white-space-collapse: preserve;">இன்னொரு பெண், "உங்கள் வீடு க்ரீனாக, அதாவது பசுமை நிலைக்கு சாதகமாக இருக்கின்றதா" என்றொரு சுவாரசியமான ஆராய்ச்சியை செய்திருந்தாள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும், சூழலியலை மாசுபடுத்தும் சாத்தியங்கள் கொண்ட உபகரணங்களும், அவற்றின் சூழலியல் ஃபுட்ப்ரிண்ட்களும் (கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்ற அளவுகள்) கொண்டும் உங்கள் வீட்டின் பரப்பளவை கொண்டும் ஓர் எளிய சமன்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமாம். அந்த சமன்பாட்டின்படி நாம் நம்முடைய சூழலியலுக்கு பாதகமாக இருக்கிறோமா அல்லது அதன் வரையறைக்குள் இருக்கிறோமா எனத் தெரிந்து கொள்ள முடியும் என்றாள். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">நாடுகளுடைய அணுசக்தி கொள்கைகளை விமர்சித்து பக்கம் பக்கமாக படித்து தலை சோர்ந்து போனவர்களுக்கு மாற்றாக இப்படியொரு சிந்தனைத் தரப்பு. தம் வீடுகள் சூழலியல் மாசுபடுதலை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனவா என்றக் கேள்வியை முன்வைக்கும் ஆய்வுகள்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"இதன் அடிப்படையில் ஏதாவது டேட்டாக்கள் பெற முற்பட்டாயா? ஏதாவது சர்வே நடத்தி பங்கேற்பாளர்கள் எப்படி தங்கள் வீட்டின் பசுமை நிலையைப் பற்றிய நிலையைக் கண்டு கொள்ள முடியும் என்று நிறுவினாயா?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">அந்தப் பெண் சாமர்த்தியமாக அத்தகைய கணக்கெடுப்புகளைச் செய்யவில்லை. ஆனால் முழுநீளத்திற்க்கு நல்லதொரு பிரசன்டேஷன் செய்திருந்தாள். என்ன செய்வது. இது ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஃபோரம். அதனால் அப்பெண்ணிற்கு முழு மதிப்பெண்கள் அளிக்க இயலவில்லை.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"தோல் காயங்களைப் பற்றி ஆராயும் ஏ ஐ செயலி" என்றொரு பையன் விஸ்தாரமாகப் பேசினான். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">பெயர்தான் கணிணித் துறை ஆய்வறை. ஆனால் இவர்களின் ஆய்வுகளின் போக்கெல்லாம் மருத்துவத் துறையை மையமாகக் கொண்டிருந்தன என்பது புரிந்தது.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">முன்னதாக, அந்நாளின் காலைப் பொழுதில் இடைநிலை பள்ளி மாணவர்களின் ஆய்வுகளில் அமர்ந்திருந்தேன். அவர்களின் நல்லூழோ, அல்லாததோ, அந்த ஆய்வறையின் ஜட்ஜ் நான் மட்டும்தான். இயற்பியலில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வுகளை பிரசண்ட் செய்தார்கள்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"எந்த மாதிரியான மெட்டீரியல்கள் கொண்டு ஒலி மாசை வெகுவாக குறைக்க முடியும்?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"ப்ரொபல்லர்களின் அளவைக் கொண்டு ட்ரோன்களின் பறக்கும் சக்தியை எப்படி அதிகப்படுத்துவது?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"கவண் வில்லின் நாணின் நீளம் எப்படியாக அதன் விசையை பாதிக்கின்றது?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"காந்தங்கள் மீதான சீதோஷ்ண நிலைகளின் பாதிப்புகள்"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"விற்களில் நாண் இழுபடும் தூரம்"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"லேசரின் பொய்யாத்தன்மை"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"கால்பந்தாட்ட காலணிகளின் முளைகளின் மெட்டீரியல் விளையாட்டுத் திறனை பாதிக்குமா?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"எவ்வகையான டார்ட்டுகள் தூரம் அதிகமாக பாய்கின்றன"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"கை போன்களின் திரைகாக்கும் அட்டைகள் எவ்வளவு பாதுகாப்பானவை?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"எவ்வகையான உணவுகள் ஹைட்ரஜன் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">இப்படி பல தலைப்புகளில் ஆய்வுகளிலும் தகவல்களிலும் என்னை மூழ்கடித்தனர். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"ட்ரோன்களின் திறன்களை அதிகரிப்பதனால் என்ன சாதித்து விட முடியும் என நினைக்கிறாய்?"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"அடுத்த முறை என்னுடைய பிரசன்டேஷனுக்கு தோதாக ட்ரோன்கள் வழியே ஹேண்ட் அவுட்களை விநியோகிக்க முடியும்"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">சமத்காரமான பதில்கள். தங்கள் ஆய்வுகளில் எந்தக் கேள்விக் கேட்கப்பட்டாலும் அதை தலைநிமிர்ந்து எதிர்கொள்ளும் திடம் மிகவும் கவர்ந்தது.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">எங்கள் வீட்டு ஜூனியர், பயோ மெடிக்கல் துறையில், காய்கறிகள், பழங்களிலிருந்து மரபணுவை பிரித்தெடுத்துக் காட்டுகிறேன் என்றதொரு பிரசன்டேஷன் செய்திருந்தார். இளவரசியார், பற்களின் எனாமலை பாதிக்கும் குடிபானங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருந்தார். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">பிறகு ஒரு ரோபாட் காரை தானியங்கியாக ஓட்டிக் காண்பிக்கும் போட்டியில் ஜூனியர் பங்க்கேற்றார். கூடவே உயரத்திலிருந்து விழும் எடையின் சக்தியில் ஒரு வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மற்றுமொரு போட்டி. இதில் சவால் என்னவென்றால், வண்டியின் முனையில் ஒரு முட்டையைக் கட்டி விடுவார்கள். ஓடும் வண்டி தன் எல்லைக் கோட்டிற்குள் வந்து சரியாக நிற்க வேண்டும். எல்லைக் கோட்டின் மறுபுறம் ஒரு மதில்சுவர் இருக்கும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டிச் சென்றாலும் போய் முட்டிக் கொண்டு முட்டை உடைந்து தோல்விதான். இயல்பான பள்ளிக்கூட வேலைகளிடையே இந்தப் போட்டிகளுக்கு தயாராகி அதில் கலந்து கொள்வதே ஒரு தனி சவால்தான். போட்டிகளில் வெற்றி கிடைத்தால் அது போனஸ்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">இந்தப் பிள்ளைகளின் ஆர்வத்தின் வேகத்தை அணை போட்டு செழுமைப்படுத்தி பயன்படுத்தும் பொறுப்பினை இது போன்ற அறிவியல் திருவிழாக்களில் பொறுப்புணர்ந்த பெரியவர்கள்வசம் கொடுத்து விடுகிறார்கள்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">அமெரிக்கர்களிடையேயான அடிப்படை பண்புகளில் ஒன்று, அனைவருக்குமான வாய்ப்புகளை தடையில்லாமல் வழங்குவது. சிற்சில அரசியல் ஆதாயங்கள் பார்க்கும் போக்கு உண்டுதான். ஆனால் இந்தியர்கள் பொறுப்புகளில் அதிகரிக்கும்போதே, அவர்களுடைய பாரம்பர்ய அரசியலான செல்வாக்கானவர்களின் கால்களைக் கட்டிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கும் சில்லறத்தனங்கள் இதில் அதிகமில்லை. அதுவே இந்த சிறுவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் உணர்வை மேலோங்கச் செய்கிறது.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">அரங்கு முடிந்து என்னுடைய தீர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்தான்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"பிரமாதமான கேள்விகள் கேட்டீர்கள். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்றான்.</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">எதிர்பாராத திசையில் இருந்து வந்த பந்தை எதிர்கொள்ள சற்றுத் தடுமாறினேன். </span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"உன்னுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியல் படித்திருக்கிறேன் தம்பி. இப்போது நிதி சேவைக்கான ஐடி குழுவில் பணிபுரிகிறேன்"</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">"ஓ, நிறைய எண்களை சமாளிக்கும் வேலை. வாழ்த்துகள் உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுச் சென்றான். </span><br /><br /><p><span style="white-space-collapse: preserve;">செயற்கை நுண்ணறிவு பாட்க்களின் எதிர்கால இடம் சந்தேகமானதுதான். இந்த சமத்கார சாதுர்ய சிறுவர்களுடன் அல்லவா அவை போட்டி போட வேண்டும்.</span><span style="white-space-collapse: preserve;"> </span></p><br /></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-53409918328174920192023-12-18T20:23:00.011-05:002023-12-19T09:11:36.575-05:00தமிழ்விடு தூது<p>(<u>சிறார் இலக்கியம்:</u> அமெரிக்காவில், ஆலன்டவுன் நகரில் உள்ள எங்கள் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கென, சங்கப் பாடல்களை மையம் வைத்து எழுதிய மூவங்க நாடகம். 23-ஏப்ரல்-2023ல் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. </p><div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">2023ம் ஆண்டின் சிறந்த அனுபவமாக, சிறார் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதைக் குறிப்பிடலாம். எங்கள் ஊர் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் சிறுவர்களைக் கொண்டு புறநானூற்று சித்திரம் ஒன்றை மூவங்க நாடகமாக சென்ற ஏப்ரல் மாதம் அரங்கேற்றினோம். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த நாடகத்திற்கான ஒத்திகை செய்தோம் என்றாலும், அந்தப் பளு தெரியாதவகையில், மாணாக்கர்கள் மிகச் சிறப்பான ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">தமிழ்ப்புலவர் ஔவைக்கும், தகடூர் அரசன் அதியமானுக்குமான நட்புறவு பற்றி புறநானூற்றில் <span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>அருமையான சித்திரம் ஒன்று கிடைக்கின்றது. இறவாவரம் கொண்ட அருங்கனியான நெல்லிக்கனியை அன்னைத் தமிழுக்கு ஈந்த கொடையையும் தாண்டி, ஔவை எனும் விறலியின் பெருமிதமும், கம்பீரமும் அந்தப் பாடல்களில் சிறப்பாக ஒளிர்கின்றன.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">புறம் 206, தகடூர் அரண்மனையின் வாயிற்காப்போனிடம், கவிச்செருக்குடன், 'காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை! எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே' என்று பாடும் பாடல். அதில் தொடங்கி, புறம் 101, புறம் 91, புறம் 95 என்று பிற பாடல்களை கோத்து நாடகமாக உயிர்பெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பெற்றோரும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">நாடகம் மிகச் சிறப்பாகவே அரங்கேறியது. அதை யூட்யூபில் சேர்க்க இவ்வளவு காலம் காத்திருந்தேன். அயலகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் இவ்வளவு இனிமையாக பைந்தமிழைப் பேசுவது என்பது மிக உவகையளிக்கும் அனுபவம். வசனங்களை சப்-டைட்டில்களாக வீடியோவில் சேர்த்து ஒலிகோப்பை சீர்படுத்தி இணைத்திருக்கிறேன். இன்னமும் சிறப்பான வீடியோ எடுத்திருக்கலாம். விழா கோலாகலத்தில் அதன் மீதான கவனம் சற்று பிந்திவிட்டது. </div></div><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">அடுத்த ஆண்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு நாடகம் தயாரிக்கும் யோசனை இருக்கின்றது. இவ்வளவு ஆர்வமுள்ள அணி இருக்கும்போது நமக்கென்ன சுணக்கம்.)</span></p><p><br /></p><h1 align="center" style="line-height: normal; text-align: center;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தமிழ்விடு தூது (சங்கச் சித்திரம் பேசும் சிறார் நாடகம்)<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/IKlz-FDsXOM" width="320" youtube-src-id="IKlz-FDsXOM"></iframe></div><br /></span></h1><div><b><u><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">காட்சி 1:</span></u></b></div><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">(பாத்திரங்கள்: ஔவையார், வாயில்காப்போன்1, வாயில்காப்போன்2,
வாயில்காப்போன்3, வாயில்காப்போன்4)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">காவல்காரர்கள் 3 பேரும் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">குரல்: வாயிலோயே! வாயிலோயே!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.1: யாரோ உம்மை அழைக்கிறார்கள் போல.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.2: இருமுறை கூப்பிட்டுவது போலிருக்கிறதே. அப்படியானால் நம் இருவரையும்தான் அழைக்கிறார்கள்
போல.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.3: அப்படியானால் சரி. என்னை யாரும் அழைக்கவில்லை. (நிம்மதியென கைகளைத்
தூக்கிக் காட்டுகிறார்)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.4: நான் வேண்டுமானால் உங்களை அழைக்கட்டுமா?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">குரல் (மீண்டும்): வாயிலோயே! வாயிலோயே!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.1: ஏதோ பெண் குரல் போலிருக்கிறதே. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.2: குரலில் ஒலிக்கும் உறுதியும், இறுமாப்பும்,
ஏதோ தமிழ்ப்புலவர் போலிருக்கிறது.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.3: கதவைச் சாத்துங்கள்! கதவைச் சாத்துங்கள்!
புலவர்கள் என்றாலே எனக்கு சற்று பதட்டமாக ஆகி விடுகிறது. நாம் இங்கே காய்ந்து கருகி காவல் காக்கிறோம் என்றால்,
இவர்கள் வெறும் வாயை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டி பிழைக்கிறார்கள். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.4: ஆமாம். ஆமாம். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔவையார் அரங்கினுள் நுழைகிறார். காவல்காரகள்
அமைதியாக இருக்கின்றார்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: வாயிலோயே!
வாயிலோயே! செவிக்கு இனிய செய்யுள்களை யாத்து, கவிபுனைந்து பரிசு பெறும் புலவர்க்கு,
மூடாத கதவுகள் தகடூர் அரண்மனையின் கதவுகள் என்பார். ஆனால் எனக்கு இவை மூடியே இருக்கின்றனவே. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.1: அது வந்து… அது வந்து….<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.2: அதுதான்…. அதுதான்…..<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.4: எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.3: உஷ்ஷ்ஷ்...! அரச உத்தரவு அன்னையே. உங்களுக்கு…. இன்னும் அரச அழைப்பு வரவில்லை.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: (புரிந்து கொண்டவர் போல் தலையை ஆட்டிக் கொண்டு)
அதியமானுக்கு தன் திறன் தெரியவில்லையா. அல்லது என் திறம் தெரியவில்லையா. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">வா.கா.3: அப்படியில்லை புலவரே. அது அதற்கென ஒரு நேரம் வரவேண்டுமில்லையா. நாட்டிற்கு முதன்மையாக படைகளும், பாதுகாப்பும் தேவை. கலை இலக்கியம் எல்லாம் பொழுது போக்கத்தானே. பொறுத்திருங்கள். பரிசில் கிடைக்காமலா போகும் <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ:
(சிரிக்கிறார்). காடு திறந்திருக்கிறது
காவலரே, தேடி வருபவர்க்கெல்லாம் மரம் ஒன்றைக் கொடுக்க. இதோ, எம் யாழினை தூக்கினோம். செல்வோம் இப்போதே. கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔவையார் அரங்கிலிருந்து வெளியேற முயல, அவரெதிரே
அதியமான் வருதல்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதி: தவறு என்னுடையதுதான். தவறு என்னுடையதுதான்.
பரிசு பெற்றதும் தாங்கள் புறப்பட்டு விடுவீர்களே என, பொறுமைக் காத்தேன். தமிழ் இன்னமும் சிலகாலம் தகடூரில் தங்கியிருக்கட்டுமே
அம்மா. அருள்கூர்ந்து நீங்கள் பொறுத்தருள வேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ:
(மீண்டும் சிரிக்கிறார்). நானறியாததா மன்னா. ஒரு நாளானாலும் சரி. இரு நாட்களானாலும் சரி. பலநாட்களுக்கு பலருடன் வந்தாலும்
சரி. உன் விருந்தோம்பல் முதல் நாள் போல என்றுமே சிறந்ததாகவே இருக்குமல்லவா. காலம் தாழ்ந்தாலும், நீ கையளிக்கும் பரிசு எங்களுக்கு
உறுதியானதுதானே. மற்றவரும் புரிந்து கொள்ளட்டும்
எனப் பாடினேன்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face="Nirmala UI, sans-serif">o0O0o</span></p><p class="MsoNormal" style="line-height: normal;">(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.</p><div>வாயி லோயே! வாயிலோயே!</div><div>வாயி லோயே! வாயிலோயே!</div><div>காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;</div><div>மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்</div><div>மழுவுடைக் காட்டகத்து அற்றே</div><div>எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.</div><div><br /></div><div>(<u>புறநானூறு: 206</u>)</div><div><br /></div><div>o0O0o</div><div><br /></div><div><b><u><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">காட்சி 2:</span></u></b></div><div><br /></div><p class="MsoNormal" style="line-height: normal;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgfU2oQftJr3HMzeFTrViw4LPlAsbHr5AhDtZp9SKGef0PaSNC5iXSZtWGiiDegCM1OMf1Em7xJgwr1h-RaN46vsMiQ03hfgkac7xPNwHQFHAzQ4HbJTuN8gWOGA5bckwXn7S3K-fNmmn3DpgTBM3Pd57JWq69tCJfx25BNATOf3l7pdo4Fx5n4" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="640" data-original-width="512" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgfU2oQftJr3HMzeFTrViw4LPlAsbHr5AhDtZp9SKGef0PaSNC5iXSZtWGiiDegCM1OMf1Em7xJgwr1h-RaN46vsMiQ03hfgkac7xPNwHQFHAzQ4HbJTuN8gWOGA5bckwXn7S3K-fNmmn3DpgTBM3Pd57JWq69tCJfx25BNATOf3l7pdo4Fx5n4=w256-h320" width="256" /></a></div><br /><br /><p></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span style="font-size: 12pt;">(பாத்திரங்கள்: அதியமான், அமைச்சர்1, துணையமைச்சர்1,
கருவூலத்தலைவர், ஔவையார்)</span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை1: கருவூலத் தலைவர் காத்திருக்கிறார். நீங்கள்
அதிகம் கவலை கொள்ளாமல் ஆணையிடுங்கள். ஔவயாருக்கு
உகந்த பரிசினை இப்போதே அளித்துவிடுவோம்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதி: ஔவையாருக்கு உகந்த பரிசு…. (சற்று நிதானித்து
கருவூலக்காரரைப் பார்க்க)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">கரு: பொன்னும் மணியும் புரவியும் பல்லக்கும் நிலமும் வீடும் ஆடைகளும் அணிகலன்களும் படையும் ஆட்களும் அனைத்தும் இருக்கின்றன. உங்கள் உளவிருப்பத்தைச் சொன்னால் சித்தப்படுத்தி
விடுகிறேன்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதி: ஓ! இதுதான் நீங்கள் ஔவையாருக்கு உகந்த பரிசென
எண்ணியிருக்கிறீர்கள். இல்லையா. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔவையார் அரங்கினுள் நுழைகிறார்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: வெற்றிகரமான வாளேந்தி, பகைவர்கள் அனைவரையும்
போரில் வென்று, பொன் மாலை அணிந்து பொலிவுடன் திகழும் மன்னா, நீ வாழ்க!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதி: (கையை முன்னால் நீட்டி) இந்த பரிசினை தமிழின்
சார்பாக நீங்கள் ஏற்க வேண்டும். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔவையார், அவன் கையிலிருந்த சிறிய நெல்லிக்கனியைப்
பார்க்கிறார். சற்றும் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: (மிகவும் மகிழ்ச்சியோடு) நீலநிற மணியை கழுத்தில்
கொண்டது போலிருக்கும் அந்த சிவனைப் போல உன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதியமான் கரம் கூப்பி வணங்குகிறார். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">துஅமை1: அன்னையே, உங்களுக்கும் தகடூர் அரசருக்கும்
உள்ள நட்புறவானது எங்கள் எளிய சிந்தையை எல்லாம் கடந்தது. ஆனாலும் இப்போது… <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை1: அட, அதிகப்பிரசங்கியே.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">துஅமை1: இல்லை ஐயா. சற்றுமுன்
கருவூலத் தலைவர் பட்டியலிட்டு சொன்ன பரிசில்கள் மதிப்பு அளப்பரியாதது. இந்த சிறிய நெல்லிக்கனியை அரசர் ஔவைக்கு அளிப்பதும்
அவர் அதற்கு வாழ்த்துவதும்… <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை1: நிறுத்தப்பா. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: ஐயங்களை
தெளிவதுதானே அமைச்சுப் பணி. தடுக்காதீர்கள் ஐயா. (பிறகு துணையமைச்சரின் பக்கம் திரும்பி)
இதோ சொல்கிறேன். இத்தனை விலைமதிப்பற்ற பொருட்களைக்
காட்டிலும், இந்த கனியை எனக்கு அளித்ததிலிருந்து புரியவில்லையா, இது ஓர் அருங்கனியாகத்தான்
இருக்க வேண்டுமென. பெறுவதற்கு அரியக் கனியை,
பெருமுயற்சியுடன் பெற்ற அரசர், அதன் சிறப்பைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலே, அன்னைத்
தமிழுக்கே அது உகந்த பரிசென அளித்ததில் இருக்கிறது அவருடைய கொடை உள்ளத்தின் உச்சம்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அதி: நாடும் நிலமும் கோலோச்சும் அரசனும் அவன்
புகழும் காலத்தோடு மறைபவை. ஆனால் மொழியும்,
இலக்கியமும் காலம் கடந்து வாழ்பவை. அன்னைத்
தமிழாகிய நீங்கள் நீண்டு வாழ்ந்தால், உங்கள் சொற்களில் நானும் நீண்டு வாழ்வேனம்மா.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: நன்று சொன்னீர்கள்! நன்று சொன்னீர்கள்! தமிழ் இனி ஓரிடம் தங்காமல் செல்லட்டும்
எண் திசையும். தமிழுக்கு எத்திசைச் சென்றாலும்
அத்திசைச் சோறே.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face="Nirmala UI, sans-serif">o0O0o</span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"></span></p><p class="MsoNormal" style="line-height: normal;">(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.</p><div><div>அதியமான் பரிசில் பெறூஉங் காலம்</div><div>நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்</div><div>கோட்டிடை வைத்த கவளம் போலக்</div><div>கையகத் ததுஅது பொய்ஆ காதே;</div></div><div><br /></div><div><div>(<u>புறநானூறு: 101</u>)</div><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"><span style="font-size: medium;">o0O0o</span></span></p></div><div><b style="font-size: 12pt;"> காட்சி
3:</b></div><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">(பாத்திரங்கள்: தொண்டைமான், ஔவையார், அமைச்சர்2,
துணையமைச்சர்2)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: புதிய படைக்கலன்கள் எல்லாம் வந்துவிட்டனவா
அமைச்சரே? கூரிய வேல்கள், விரைவு அம்புகள், பொலிந்த வாட்கள்…<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை2: ஆம்.
நன்கு பெரிய் பிடிகளுடன், எண்ணெய் பளபளப்புடன் படைக்கலன்கள் பொலிகின்றன. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">துஅமை2: (சற்று முன்வந்து) இப்போது படைப்புக்கடவுள்
ஒருவரும் உங்களைத் தேடி வந்திருக்கிறார். ஔவையார்
எனும் தமிழ்ப்புலவர்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: ஓ! ஔவையாரா. அவர் அதியமானின் அவைக் கவிஞராயிற்றே. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை2:
ஆமாம். தகடூர் மீது படையெடுக்க வேண்டாம்
என சமாதான தூது செய்தியுடன் அனுப்பியிருக்கிறார்களோ.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">துஅமை2:
நாம் திரட்டியிருக்கும் படைபலத்தையும், கருவிகளையும் கண்டு பயந்துவிட்டிருப்பார்கள்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: ஆகா.
அரசர் ஆணைகளுக்கு புலவர்கள் தூதா. புதியதாக
இருக்கிறதே. அழைத்து வாருங்கள். என்ன சொல்கிறாரெனப்
பார்ப்போம்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔவையார் அரங்குள் நுழைகிறார்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: வாழிய
மன்னா! வாழ்க நின் கொற்றம்!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: தமிழைப் போற்ற, இந்த தொண்டைமான் என்றும்
தயங்கியதேயில்லை அம்மா. வணக்கம்!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: மகிழ்ச்சி. இப்போதுதான் உன் படைக்கல அணிவகுப்பைப் பார்த்துக்
கொண்டே வந்தேன். அல்லது அப்படி நான் பார்க்க
வேண்டுமென்பது உன் அமைச்சரின் எண்ணமாக இருக்கும். (சிரிக்கிறார்)<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: (புன்முறுவல் செய்தபடி) அப்படியெல்லாம் இல்லை. இன்று புதியதாக வந்தவை அவை. இன்னமும் முறையாக அடுக்கப்பட்டு படைவீடுகளுக்கு
அனுப்பி, சிறப்பாக அணிவகுப்பில் சேர்க்க வேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: ஆமாம். மயிலிறகு சூட்டி, மெருகு குன்றாமல் ஒளிர்கின்றன
அனைத்தும். கண்ணைப் பறிக்கின்றன.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: (பெருமையுடன்) ஆமாம். நாங்கள் வெகு சிரத்தையுடன்
படைக்கலங்களை பராமரிப்போம். உங்கள் தகடூரில்
அப்படி செய்வதில்லைப் போல. <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: அங்கே,
இவ்வளவு பராமரிப்புகளுக்கு எங்கே நேரம்? எப்போதும்
போரிலேயே இருந்து கொண்டிருக்கும் வீரர்களின் வேல்கள், பகைவர்களைக் குத்தி, நுனி சிதைந்தும்
முறிந்து, கொல்லன் பட்டறைகளில் கிடக்கின்றன. சீர்படுத்தியதும் அடுத்த போருக்கு கிளம்பிவிடுவார்கள். எப்போதும் போர்களிலே நேரங்கழிக்கும் அவர்களுக்க்,
படைக்கலன்களை அழகுபடுத்தி, மாலை சூட்டி அணிவகுப்புகளில் வைத்துப் பார்க்க எங்கே நேரம்
இருக்கப் போகிறது?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அமை2: இதென்ன பேச்சு? போர்த்தொழிலில் சிறந்தவர்
அதியமான் என்பது போலல்லவா சொல்கிறீர்கள்?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">துஅமை2: நீங்கள் நின்று கொண்டிருப்பது தொண்டைமானின்
அவை என்பது நினைவில் இருக்கட்டும் புலவரே.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: போரில் மட்டுமல்ல. தன்னிடம் பொருள் இருந்தால், மற்றவர்க்கு உணவளித்துவிட்டு
தான் உண்பான். பொருள் இல்லையென்றல் தன் உணவையே
பிறருக்கு அளித்துவிடும் ஈகைக் குணத்திலும் அதியமான் ஒப்புயர்வற்றவன்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">தொ: (பெரியதாக சிரித்து) கற்றோரின் சொற்திறம்,
எம் போர்த்திறம் விட சிறந்தது எனப் புரிந்து கொண்டேன். தமிழ் போற்றும், தமிழ்ப்புலவர் போற்றும் தகடூர்
மன்னன் மீது போர்த்தொடுக்கும் எண்ணம் என் மனதை விட்டு நீங்கியது. கவிச்சொல்லை விட பெருஞ்சொல் வேறு உண்டா?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">ஔ: இதோ என் யாழை தூக்கிக் கொண்டேன். தமிழை துணையாக்கிக் கொண்டேன். செல்வேன் எத்திசையும். எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face="Nirmala UI, sans-serif">o0O0o</span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"></span></p><p class="MsoNormal" style="line-height: normal;">(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.</p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"></span></p><div><div>இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்</div><div>கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து</div><div>கடியுடை வியனக சவ்வே; அவ்வே,</div><div>பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து</div><div>கொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்</div><div>உண்டாயின் பதம்கொடுத்து</div><div>இல்லாயின் உடன் உண்ணும்</div><div><br /></div><div>இல்லோர் ஒக்கல் தலைவன்,</div><div>அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே</div><div><br /></div></div><div>(<u>புறநானூறு: 95</u>)</div><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"><span style="font-size: medium;">o0O0o</span></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"><b>இறுதிக்காட்சி: </b><o:p></o:p></span></p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;">அனைவரும் திரண்டு வந்து நிற்க, அதியமான் கூற்றுடன்
நிறைவடைகிறது)<o:p></o:p></span></p><p>
<span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt; line-height: 107%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">அதி: தமிழுக்கென ஒரு கனி
ஈந்தேன். தமிழ் எனக்கு மங்காப் புகழை பதில்
அளித்தது. அன்னைத் தமிழுக்கு என்றென்றும் எம்
வணக்கம். </span></p><p><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt; line-height: 107%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"></span></p><p class="MsoNormal" style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Times New Roman"; font-size: medium; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt; line-height: 107%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"></span></span></p><p></p><p class="MsoNormal" style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: "Times New Roman"; font-size: medium; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span face="Nirmala UI, sans-serif">o0O0o</span></p><p class="MsoNormal" style="line-height: normal;">(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.</p><p class="MsoNormal" style="line-height: normal;"><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt;"></span></p><p><span face=""Nirmala UI",sans-serif" style="font-size: 12pt; line-height: 107%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"></span></p><div><div>நீல மணிமிடற்றொருவன் போல்</div><div>மன்னுக பெரும நீயே தொன்னிலைப்</div><div>பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட</div><div>சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது</div><div>ஆதல் நின்னகத் தடக்கிச்</div><div>சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!</div><div><br /></div><div>(<u>புறநானூறு: 91</u>)</div><div><br /></div></div><div><p class="MsoNormal" style="line-height: normal;"><span face="Nirmala UI, sans-serif">o0O0o</span></p></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-37672603952160012762023-12-07T11:25:00.005-05:002023-12-19T15:31:09.470-05:00கிணற்றை மூழ்கடித்த வெள்ளம்: ஜே ஜே சில குறிப்புகள்<p>(<span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, </span><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">"ஜே ஜே சில குறிப்புகள்" நூல் பற்றிய எனது கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்)</span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjrottp_xncwG1xG0J6YBzEpsMxzK1wtftw8Zi7AJc8lP6vuhOjnRoF7V6ZWUYcM85nBNy8QGbLO7iOpfBPxCO9V5cHgp6LqGk8DYxL9oIe1kMopOwgcKBY1cYmzgOnWRCVGnaIkGs8vTLa6uoBJ1JGhjvc62-Ebeue9j4xsFDIx8g1HKJmTDzO" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="400" data-original-width="339" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjrottp_xncwG1xG0J6YBzEpsMxzK1wtftw8Zi7AJc8lP6vuhOjnRoF7V6ZWUYcM85nBNy8QGbLO7iOpfBPxCO9V5cHgp6LqGk8DYxL9oIe1kMopOwgcKBY1cYmzgOnWRCVGnaIkGs8vTLa6uoBJ1JGhjvc62-Ebeue9j4xsFDIx8g1HKJmTDzO=s16000" /></a></div><br /><br /><p></p><p>1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த நாவலிலேயே இருக்கின்றது. இந்த நாவலின் எழுத்தாளரும், அதில் படைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அவர்களின் தீர்க்கதரிசனமாக முன்வைப்பது, 90களுக்கு பிறகு, தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளை கடந்து பரந்த வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான். '21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிற்குள், ஒரு தவளை கூட கிணற்றுக்குள் இருக்க முடியாது. அப்படி பிடிவாதமாக வெளிவராதவை உயிர் மூச்சற்று அழிந்து போகும்" என்கிறார் எழுத்தாளர். அதாவது கிணற்றுத் தவளைகள் உலகளாவியத் தவளைகளாக ஆகிவிடும் என்பது எழுத்தாளர் மற்றும் ஜேஜே-வின் முடிபு. </p><p>இந்திய பண்பாட்டு விசாரமும், மேற்கத்திய தர்க்க சிந்தையும் ஜேஜே-யின் எழுத்தின் சாரமாக, பாலுவால் அடையாளப்படுத்தப்படுகின்றன. </p><p>கோபாலகிருஷ்ண அடிகா, குட்டிக்கிருஷ்ண மாரார், என்று, இந்திய பெருநிலத்தின் ஒரு பெரும் முன்னோடி எழுத்தாளர் பரிவாரத்தை , மொழிகளைக் கடந்து இந்த சிந்தனைப் பிரவாகத்தை எப்படி இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ஆற்றாமையின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் இந்த நாவல் என்று குறிப்பிடுகிறார். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/VgoyOCmX7Ws" width="320" youtube-src-id="VgoyOCmX7Ws"></iframe></div><br /><p><br /></p><p>இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜேஜே-விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு. முல்லைக்கல் மாதவன் நாயர், முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன். திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுததுலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம். அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகை செய்தி என எடுத்துக் கொண்டு அதை ஜேஜே-வின் பார்வையில் விவரித்துக் கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல். பாலுவின் ஆதர்சம் ஜேஜே என்றால், ஜேஜே-யின் நிர்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜேஜே-வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கபூர்வ உணர்ச்சி தத்தளிப்பை நிகழ்த்துகிறார். இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள், அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிக தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாபூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது. </p><p>நோயுற்றிருந்த இளம்பருவத்தில், புனைவுலகை அடைக்கலமாகக் கொண்ட, கற்பனாவாத இளைஞனுக்கு, ஜேஜேயின் ஆண்-பெண் உறவுப் பற்றியக் கட்டுரை ஒன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மாய்மாலங்களும், பொய்முகங்களும், எவ்வித சமரசங்களும் அற்ற, ஏளனங்களும் நுண் கேலிகளும் செறிந்த அப்பட்டமான எழுத்து. ஒருவகையில் ஜேஜே-வின் பரிச்சயம் பாலுவை கற்பனாவாதச் சூழலிலிருந்து தரைக்கு இழுத்து வருகிறது. அதொரு கிராஷ் லேண்டிங் போன்ற நிலைகுலையவைக்கும் தரையிறக்கம். அதைத் தொடர்ந்து பாலு தன்னுடைய பால்ய வயதில், தன் சகோதரியுடனான பால்ய விளையாட்டை பகுத்தாராய முற்படுகிறார். ஒரு நெருக்கடி நிலை அளிக்கும் உந்துதலும், அதை சமாளிக்க முற்படும்போது உண்டாகும் தீவிரத்தின் பரவச நிலையும் ஒரு பகுதி. அதன் வழியே அடையும் வெற்றியினால் உண்டாகும் மகிழ்ச்சி. இடையே அந்த பாவனை உலகு விலகி, கனவுகள் பிடுங்கப்படும்போது உண்டாகும் அவஸ்தை. இந்த மூன்று பகுப்புகளை நம் வாழ்வின் எந்தவித பகுதிகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ள முடியும். நாராயண குருவின் சீடரான சத்தியானந்தரின் ஆசிரமத்தில் பாலுவின் உடல் நோய்களுக்கு சிகிச்சைகள் நடக்கின்றன. சத்தியானந்தரின் மானுட சேவையில் தன்னை கரைத்துக் கொள்ளும் உன்னத நோக்கம் எவ்வளவு தூரத்திற்கு பயன்தரும் பெறுமானத்தைக் கொண்டது என்ற நிதர்சனம் பாலுவிற்கு உறைக்கிறது. சத்தியானந்தரின் தீர்க்கமான ஒருமுகப்பட்ட நோக்கிற்கு எதிர்மாறாக, அனைத்திலும் அலைக்கழிக்கப்படும், எதிலும் கொஞ்சம் நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடுதலையும் கொண்டவனாக உணர்கிறான்., முக்கியமாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜேஜே-வால், அவனுடனான சந்திப்புகளால், அவனுடனான கருத்து பரிமாற்றங்களால் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும் என நம்புகிறான். பதிலுக்கு இவனால் தமிழிலக்கியத்தின் உச்சத்தை ஜேஜே-விற்கு கடத்தி விட வேண்டும் என்பது பாலுவின் விழைவு. </p><p>ஜேஜே-வை சந்திக்கச் செல்லும் எழுத்தாளர் மாநாட்டில் திருச்சூர் கோபாலன் நாயரை சந்திக்கின்றான். அவனுடைய ஆதர்ச எழுத்தாளரின் தளத்தில் இருப்பவரல்ல அவர். முற்போக்கு சரித்திர நாவல் என்ற பெயரில் பிற்போக்கான படைப்பை உருவாக்கியவர் என்பது பாலுவின் கணிப்பு. அதற்கேற்றாற்ப் போல அவனுடைய ஆதர்சமான ஜேஜே கோபாலன் நாயருக்கு அந்நியமாக இருக்கிறது. அங்கே ஒரு புத்தகக் கடையில் வைத்து ஜேஜே-வை முதன்முதலாக பார்க்கிறான் பாலு. சேர்த்தலை கிருஷ்ண ஐயர் மற்றும் முன்ஷி வேலுப் பிள்ளை போன்றோரின் பேச்சுக்களை விட்ட ஜேஜே-வின் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது. பாலுவும் அறிமுகப் படுத்தப் படுகிறான். அப்பொழுதுதான் ஜேஜே-யின் புகழ்பெற்ற வாசகமான 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?" கிண்டலை பாலு எதிர்கொள்கிறான். புதுமைப் பித்தனைப் பற்றி அவன் பிரஸ்தாபிக்க முற்படும்போது, முல்லைக்கல் மாதவன் நாயரின் வருகையோடு அந்த சந்திப்பு முடிந்து போகிறது. </p><p>சூரியனை நோக்கி பறக்க முற்ப்டுவதற்கும், கூரை மேலேறி கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது. ஜேஜே தன்னுடைய நெருக்கடி காலத்தில் மிகுந்து உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான். ஆனால் வேதனைகளுக்கும், வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை. சிந்தனை பீறிடும் எழுத்தை படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி. </p><p>ஜேஜேயின் எழுத்தில் எம் கே அய்யப்பனின் தாக்கத்தைப் பற்றி பாலு குறிப்பிடுகிறான். எம் கே மார்ச்கியவாதி. இந்திய மரபு சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்டவர். அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட நிலைகுலைய வைக்கும் நோக்குடன் எழுதுவதை விட, ஒரு சமூக அமைப்பை மாற்றிப் போடும் விஞ்ஞான நோக்குடன் எழுதவேண்டிய அவசியத்தை பற்றி அவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்ததாக ஜேஜே-வின் நாட்குறிப்புகள் சொல்கின்றன என பாலு குறிப்பிடுகிறார். இந்த நாட்குறிப்புகள் பிற்பாடு பத்திரிகைக்கான எழுத்து பிரதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன. நேர் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட கேள்விகளின் மீது ஜேஜே-யின் எழுத்து விவாதங்களை கட்டியெழுப்புகின்றன.</p><p>வறுமையுற்ற சூழலில்தான் கலை படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்கும்ன்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜேஜே கலையை காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலை மீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை. இந்த சட்டகத்தை ஜேஜே வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர். </p><p>கிருஷ்ண ஐயரின் ஒன்பது வயது பேத்தி, புல்வெட்ட வரும் கிழவன் ஒருவரின் சொந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே அவர் வேலையை முடித்துக் கொண்டு போகும்போது அவருடன் போய் விடுகிறாள். "அவர் ஒரு பாதி கதையை சொல்லி முடிப்பதற்குள் அவர் வேலை முடிந்து கிளம்பி விட்டார். மறுபாதியைக் கேட்க அவருட்டன் போய் விட்டு வந்தேன்" என்று அவள் விளக்குவதைக் கேட்காமல் வீட்டார் அந்த சிறுமியைப் போட்டு மொத்துகின்றனர். இந்த சம்பவத்தை ஜேஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து படிக்கிறார் பாலு. கூடவே ஜேஜே-யின் மனைவி சரசம்மா "அந்தப் பெண் புத்திசாலி. இன்னமும் கூட நேரம் கழித்து வந்திருக்க வேண்டும்" என்று சொல்கிறாள்.</p><p>ஏஜி சோமன் நாயர் : சந்திக்க ஜேஜே வரும்போது பாலு வாசகநிலையிலிருந்து சற்று முன்னேறி சிறுகதைகள் எழுத்தாளனாகி விட்டான். இப்போது பாலுவிற்கு ஜேஜே-யுடன் முரண்படும் புள்ளிகளும், அப்படி முரண்படுவதற்கு அவனுக்கான நியாயங்களும் தெரியத் தொடங்கிவிட்டன. ஆனாலும் ஜேஜே-தான் தன்னை பழமைவாத வரம்புக்குள்ளிருந்து உந்தித் தள்ளி வெளிப்பட வைத்தது என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை. அவன் உறக்கத்தைக் கலைத்து, சுரணைக் கெட்டத்தனத்தையும் தடித்தனத்தையும் குத்திக்காட்டி உணரச் செய்ததே ஜேஜே-வின் எழுத்துத்தான்.</p><p>அடுத்து ஓர் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி பாலு விவரிக்கும்போது, பாலுவும் ஓர் எழுத்தாளனாக அங்கீகாரம் பெற்று அந்த மாநாட்டின் விருந்தினராக கலந்து கொள்கிறான். அப்போது ஆல்பேர் காம்யு இறந்த செய்தி வருகிறது. தொடர்ந்து ஜேஜே-வின் மரணச் செய்தியும். இந்துசூடன், கே பி கங்காதரன், தாமரைக்கனி, பசவப்பா என பல்வேறு எழுத்துலக தொடர்புகளிடையே தன் ஆதர்சத்தின் இறப்பை எழுத்தாளர் கடந்து செல்லும் காட்சி சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றது. அதுவரை ஜேஜே-வை மையமாக கொண்டு பாலுவின் அகப்பயணமாக நகரும் நாவல், மெல்ல பாலுவின் புறவுலகை அவனுடைய சுயபச்சாதாபமும், அங்கதமும் கலந்த விவரணையில் வாசகர்களுக்கு புலனப்படுகிறது. ஜேஜே-வின் மறைவிற்காக தன்னுடைய இரங்கலை இவ்வுலகிற்குத் தெரிவிக்க தத்தளிக்கும் ஓர் எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறான்.</p><p>ஜேஜே-வுடனான எழுத்தாளரின் நினைவோடை தொடர்கிறது. நாம் ஒரு சம்பவத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டெடுக்கும்போது அதன் மீதான புதிய புரிதல்களும் திறப்புகளும் உண்டாகிறது. பாலுவிற்கும் அவர் தகப்பனார் எஸ். ஆர். எஸ்ஸுக்கும் அறிமுகமாகியிருந்த சம்பத்தின் நாட்டகத்திற்கு செல்லும்போது ஜேஜே-வை பாலுவின் அப்பா பார்த்தது பற்றி அடுத்த அத்தியாயம் பேசுகிறது. காலத்தின் இடைவெளியிலோ, அல்லது தூரத்தின் இடைவெளியிலோ ஒரு காட்சி நமக்கு நன்றாக துலக்கமடைகின்றது என்று ஜேஜே சொல்வது அசோகமித்திரனின் நாவலில் வரும் கூற்றை ஒட்டி இருப்பதாகத் தெரிகின்றது. நெருக்கத்தில் புலனாகாத பல நுணுக்கங்கள் அகல்கையில் உயிர்பெற்று நம்மை இழுத்துப் பிடிக்கின்றன. ஜேஜே-வை ஓர் ஓவியனாக எழுத்தாளர் கண்டடையும் இடம் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இத்தனைக்கும் அவர் அப்பாவுடனான அந்த பயணத்தில் அவர் இடம்பெறவில்லை. ஒரு அப்ஸ்ட்ராக்ட் (நுண்புல) வகை ஓவியத்தை காட்சிபடுத்தும் அத்தியாயம் ஒரு சிறிய அப்ஸ்ட்ராக்ட் உத்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றது. அது ஒரு சிறிய மறைமுக பொத்தான் (ஸ்விட்ச்) போல சரளமான விவரனைப் பகுதிக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.</p><p>பாலுவிற்கு ஜேஜே போல, ஜேஜேவிற்கு ஓர் பெரும் அகத்தூண்டுதலாக அரவிந்தாட்ச மேனன் நாவலில் சொல்லப்படுகிறார். இசை இலக்கியம் ஓவியம் என்ற கலைகளின் கூட்டுப் பரிமாணமாக அரவிந்தாட்சன் போன்ற ஆளுமைகள் பாலுவின் மனதில் எவ்வகை தாக்கம் செலுத்தினர் என்பதை இந்தப் பகுதி வழியே நாம் புரிந்து கொள்ளலாம். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஜேஜே-விற்கு எதிரில் நின்றிருக்கும் தொழுநோய் பிச்சைக்காரனைப் பார்த்ததும், ஜேஜேவின் சிந்தைப் பிரவாகம் கட்டற்று ஓடுகின்றது. பிச்சைக்காரன் மீது இரக்கப்படுவது என்பது இயல்பு. ஆனால் அதில் நம்மை நாமே ஒரு படி மேலே ஏற்றிக் கொண்டு கொடையளிக்கும் பீடத்தில் நம்மை வைத்துக் கொள்ளும் ஒரு மறைமுக ஈகோ உணர்வும் எழுந்து விடுகிறது. 'தான் கொடையளிக்கிறோம்' என்ற உணர்வின்றி ஒருவருக்கு அவருடைய நிலைக்கு சமமாக, முடிந்தால் அதற்கும் கீழாக தன்னை வைத்துக் கொண்டு கொடயளிக்க இயலுமா என்ன? அப்படி உதவி பெற்றுக் கொள்பவர் சற்றேனும் சிறுமை உணர்வு அடையாமல், அதை வேறு வக்கிர பிரயோகமாக கொள்ளாமல் அதைக் கடந்து போக முடியுமா? இது என்னைப் போன்ற சாமானியர்களின் சிந்தைப் போக்காக இருக்கலாம். ஜேஜேவிற்கு இந்த கைவிட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரனுக்கு உதவும் நிலை இன்னமும் பன்மடங்கு விரிவான பெரும் அகச்சிக்கலாக உருவெடுத்து நிற்கின்றது. அந்த சிக்கலில் ஜேஜே உழன்று தவித்து, தெளியும்போது பல மணி நேரம் கடந்து விட்டிருக்கின்றது. இப்போது உணர்ச்சி பிரவாகத்துடன் அந்த குஷ்டரோகி பிச்சைக்காரனைத் தேடி ஓடி வேறொரு குஷ்டரோகியைக் காண்கின்றான். அவனுக்கு முன்னால் ஒரு வெள்ளி நாணயத்தைப் போட்டுவிட்டு, அவனால் அந்த நாணயத்தை தரையிலிருந்து பற்றியெடுக்க முடியுமோ என்று உடனடி உந்துதலில் அந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்க குனிகிறான். அந்த இடைப்பட்ட பின்ன நொடியில் அந்தக் குஷ்டரோகி அந்த நாணயத்தை தன் காலால் அழுத்திக் காபந்து பண்ணிக் கொள்கிறான். இந்த சம்பவம் ஜேஜே-வை பெரும் அவமானத்திற்குள்ளாக்குகிறது. 'ஜென்மக் கணக்கு' எனும் சிறுகதையில் இப்படியானதொரு அனுபவச் சித்திரத்தை நானும் எழுதியிருக்கிறேன். பாலுவோ, ஜேஜே-வோ அடைந்த அனுபவம் போல் அந்த சித்திரமும் என் அனுப்வத்தின்பால் உந்தப்பட்டு உருவானதுதான். தன்னுணர்வு அற்று பிச்சையளிப்பது பற்றிய அகக் கூச்சத்தில் தடுமாறும் ஒரு பாத்திரம். எதிரில் இருக்கும் பிச்சைக்காரி அவன் தடுமாற்றத்தை மறுதளிக்கும் அகந்தையாக புரிந்து கொண்டு அவளிடமிருந்த ஓர் இருபது பைசா நாணயத்தை இவனுக்கு கொடுத்துவிட்டு விலகிப் போவாள். அந்த சிறுமையை எப்படிக் கடப்பது என்று அவன் அல்லலுறுவான். </p><p>தனிநபர் சுதந்திர சிந்தையின் அபத்த வெளிப்பாடுகள் இப்படியான நம்பமுடியாத முரண்களில் கொண்டு நிறுத்திவிடுகின்றன. முல்லைக்கல் மாதவன் நாயர் போன்ற வெகுஜன வணிக படைப்பாளிகளின் சிந்தைக்கு அப்பாற்ப்பட்ட வெளியில் ஜேஜே நின்று கொண்டிருக்கிறான். சாமர்த்தியமான பெயர் உதிர்த்தல்கள், உலக இலக்கிய வாசிப்பனுபவம் என்கிற பீற்றல்கள், மைய நிரோட்ட இலக்கிய போக்கில் எதிராக தருக்கி நிற்கும் அகந்தை, இவையெல்லாம் முல்லைக்கல் மாதவன் நாயரை சீண்டுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை. அதனால் உண்டாகும் எரிச்சல்களும் கோபங்களும் கிளர்ந்தெழுகின்றன. தங்கள் நிலையை காபந்து பண்ணிக் கொள்வதற்கென இலக்குகளை மாற்றியமைத்துக் கொண்டு சாமர்த்திய கேள்விகளை சாடிக் கொள்கின்றனர். இடையே ஜேஜே-வின் வாழ்க்கையின் காதல் பக்கம் ஒன்று வந்து போகின்றது. ஜேஜே-யின் மனைவி சாராம்மா ஜேஜே மிகவ்ம் திறமைசாலியான அரசியல்வாதியாக இருக்கிறார். அரவிந்தாட்சனின் சொற்களில், பாலுவிற்கு தெரிவது ஜேஜே தன்னை ஒரு பெரும் இசையுலக பெர்ஃபெக்ஷனிஸ்டாக வைத்துக் கொண்டு, ஏனைய அபஸ்வரங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுவதும் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றான். ஜேஜே-வின் மீது தீவிர விமர்சனம் வைத்திருக்கும் பலருக்கும் அவன் மீதான அபிமானம் குன்றியதில்லை. மாறாக ஜேஜே-விற்கு எதுவும் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தன. பாலு ஜேஜே-வின் பால்யக்காலம் பற்றி பிரஸ்தாபிக்க ஆரம்பிக்கின்றான். ஜேஜே-வின் எழுத்துலக பயணம் பற்றி விரிவான பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன. அவனுடைய கால்பந்தாட்ட விளையாட்டு அனுபவங்கள் பற்றி அவ்விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி ஜேஜே எழுதிய கட்டுரைகள், அவனுடைய தொழிற்சங்க நல பங்களிப்புகள், அதனால் சிறை சென்றது, அவனுடைய இன்னபிற புத்தகங்கள் வெளியான ஆண்டு என்று அவனுடைய இறப்புவரை நுணுக்கமாக தொகுக்கப்பட்ட குறிப்புகளை நாம் காண முடிகின்றது. இந்தக் குறிப்புகளின் தொகுப்பு இந்த நாவலுக்கு ஒரு வித்தியாசமான வடிவத்தை அளித்தாலும் ஜேஜே எனும் ஆளுமைப் பற்றியதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் அளிக்கப்படுகின்றது. தன்னுடைய அன்றாட பணிகளுக்கென, தன் குடும்பத்திற்கு தேவையான இதர வேலைகளுக்கென ஒரு குற்றேவல் புரியும் தேவதையை அவன் மனம் நாடுகிறது. அப்போதுதான் அவன் இந்த சமூகத்திற்கான மகத்தான பங்களிப்பை சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செய்ய முடியும். இதே போன்றதொரு பாதிப்பை பாரதியின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகின்றது. எங்கோ இருக்கும் கரும்புத் தோட்ட ஊழியர்களுக்காக மனம் இரங்கி கவிபாடும் மனதை அன்றாடப் பசிப்பிணிக்கென அல்லாட வைப்பது நியாயமாகுமா.</p><p>ஜேஜே-வின் இறுதிக் காலங்களில் அவன் இந்த மனித சமூகம் மீது தொடர்ந்து நிராசைக்குட்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஓர் எழுத்தாளனை நேர்த்தியாக மதிப்பிடுவது போல், ஜேஜே-வின் மூன்று முக்கிய நூல்களைக் கொண்டு, ஓர் அனுபந்தமும் இந்த நாவலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலுக்கு பின்னர் தமிழ்வெளியில் இது போன்ற நவீன போக்குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல வந்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு முக்கியமான போக்கை ஜேஜே சில குறிப்புகள் தொடங்கி வைத்திருக்கின்றன.</p><p>ஜேஜே-வின் மீதான பாலுவின் பிரேமை, மெள்ள மெள்ள ஜேஜே-வின் ஆதர்சமான அரவிந்தாட்ச மேனன் மீது சென்றடைகிறது. பித்தேறிய படைப்பூக்க மனநிலையிலிருந்து, ஒழுங்கமைதி கொண்ட தாள லயத்துடனான செய்நேர்த்தியின் அடர்த்தி நோக்கி ஜேஜே நகர்கிறான். அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை நிரப்பும் அன்றாடச் செயலின் தாள லயத்துடனான இசைவில் மையம் கொள்ளும் ஜேஜேவின் குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது. </p><p>பாலுவோ, அல்லது ஜேஜே-வோ தீர்க்கதரிசனத்துடன் சொல்லிய கிணற்றுத் தவளைகள் தங்கள் சுவர்களை தாண்டி வெளியே வந்து வெட்டவெளியில் இனிய சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டனவா என்றால் அதொரு நீண்ட விவாதத்திற்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது. ஆனால் அந்த கிணற்றின் சுவர்களை அளந்து பார்க்க ஓர் அலகை இந்த நூல் நிச்சயமாக உருவாக்கித் தந்திருக்கின்றது. இலக்கிய வெளி எனும் கிணற்றை மூழகடிக்கும் வெள்ளத்தின் தோற்றுவாய் என இந்த நூலைக் குறிப்பிட்டலாம்.</p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-18307498327332906322023-10-28T00:17:00.006-04:002023-10-28T06:57:08.601-04:00ஆசையை அறுக்கும் பெருந்துன்பம்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7G5MnfTVNA8u3qNC4RuMCRgd-qaBNb2dziA_j2KvOi321D51BQWQUhgOFc2EmUbFvgQrD_NskfON2qEeUdVJKBEwXl1TJ8TVk5yfYTmk02iM2dmBVhCh3q2I8DWbjNB8Hy1-tusKlo2F9NPFVqYzlDa05HIn0PLbcPiMKiiE70DTGYRu7yRY5" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="333" data-original-width="400" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7G5MnfTVNA8u3qNC4RuMCRgd-qaBNb2dziA_j2KvOi321D51BQWQUhgOFc2EmUbFvgQrD_NskfON2qEeUdVJKBEwXl1TJ8TVk5yfYTmk02iM2dmBVhCh3q2I8DWbjNB8Hy1-tusKlo2F9NPFVqYzlDa05HIn0PLbcPiMKiiE70DTGYRu7yRY5=s16000" /></a></div><br /><p></p><p><span face=""Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; text-align: justify; white-space-collapse: preserve;">(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'ஜெயமோகன் -100' நிகழ்ச்சியில் 8ம் அமர்வில் “போதி” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)</span></p><p><span style="color: #cc0000; font-size: large;">ஜெ</span>யமோகனின் எழுத்துலகம் என்னைப் போன்ற இணையத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், பெருநாவல்கள், காவியங்கள் என பெரும்பாலானவற்றை இணையம் வழியே வெளியான சூட்டிலே வாசித்து விடலாம். இணைய வாசகர் பரப்பை மிக அற்புதமாக தன் எழுத்திற்கு கையாண்டவர்களில் ஜெயமோகன் மிகவும் முக்கியமானவர். இத்தனைக்கும் அவர் கட்டணச் சுவர் இல்லாமல் தன் இணையதளத்தை அனைவருக்குமானதாக வைத்திருக்கிறார். இன்றைய இணைய வெளியில் இப்படியொரு தளம், இலக்கிய வெளிக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சாதனை எனலாம்.</p><p>'போதி' சிறுகதை, ஓர் ஆன்மிக மடத்தின் முழு வார்ப்பை, அவற்றின் மேன்மையுடன் விவரித்துக் காட்டுகின்றது. இடையே ஒரு சிறு முரண், அக்கதையின் இறுதி திருப்பத்தை முள்ளென பொதிந்து வைத்திருக்கிறது. புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என நம்பப்படுவது போல், இந்த திருவதிகை ஆதீனம், கதைசொல்லிக்கு ஒரு ஞானத்திறப்பை விளைவிக்கின்றது. எப்படியான ஞானத்திறப்பு என்றால், பூரண விசுவாவியாக இருந்தவன், அவிசுவாவியாகி மடத்தை விட்டு ஓடிப் போகிறான். அவிசுவாவியானவன் மீண்டும் மடத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவனைப் போன்ற எண்ணற்றோர் அந்த மடத்திற்கு வந்து தங்கிவிட்டு தொலைந்து போயிருக்கக் கூடும். கதை சொல்லியே தன் லௌகிக வாழ்க்கையில் தொலைந்து போய், அந்த மடத்தைத் தேடி வந்தவன்தான். மடத்தின் லௌகீகம் அவனை மீண்டும் புற உலகிற்கு விரட்டி விடுகிறது.</p><p>மடத்தின் வாயிலில் ஓர் ஆலமரம் இருக்கிறது. முதன்முதலாக அந்த மடத்தில் அடைக்கலம் தேடி வந்தவனுக்கு அந்த ஆலமரம் ஒரு பெரும் பிரமிப்பை அளிக்கிறது. இப்போது திரும்பி வரும்போது அந்த ஆலமரம் பிரமிப்பை அளிக்கவில்லை. ஏனென்றால், அந்த ஆல் அளித்த ஞானம் அவ்வுணர்வுகளை கடந்து செல்ல வைத்திருக்க வேண்டும். மடத்தின் முகப்பு நவீனமாகியிருந்ததும் அவனுக்கு ஏற்பட்ட அந்த பழைய பிரமிப்பைத் தணித்திருக்கலாம். </p><p>மகா சந்நிதானத்தை மிகக் குறைந்த வரிகளில் விவரிக்கிறார். பெரும் சுமையென ஜடாமுடி. நரைகலந்த தாடி. கழுத்தில் பல்வேறு உருத்திராட்ச மாலைகள். கையில் யோகதண்டம். தழைய கட்டிய காவி வேட்டி. சிம்மம் போல் நடந்து வருகிறார். அருகில் நெஞ்சுவரை ஏற்றி கட்டிய வேட்டியுடன் காறுபாறு. கிரகஸ்தனாக வந்து சேர்ந்த இவனுக்குப் பேட்டி அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே குரு மகா சந்நிதானத்தின் யானைக்கால் வியாதியை கவனிக்கிறான் இவன். இவனுடைய மனதை குரு சந்நிதானம் துல்லியமாகவே கணித்து விடுகிறார். "என்னை பெரிய ஞாநியென நினைத்து வந்திருப்பாய். நான் ஒரு ரோகியெனத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்திருப்பாய்" என்று சொல்லி சிரிக்கிறார். </p><p>அவன் அந்த மடத்தில் தங்கியிருந்த காலந்தொட்டும், அவனுக்கு மகா சந்நிதானத்திற்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. மடத்தின் பொக்கிஷமான ஏட்டு சுவடிகள்தான் அதற்கு பாலம். சிவஞானபோதத்துக்கு இருபத்தியேழு உரைகள் இருக்கின்றன அந்த ஏட்டுச் சுவடிகளில். சங்கீத சாஸ்திரம், வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம், இலக்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும். அவை எவற்றையும் யாரும் பொருட்படுத்தியதில்லை. கதையில் முதலில் அறிமுகமாகும் சின்ன சந்நிதானம் வரவு செலவு கணக்கில் முனைப்பாக இருக்கிறார். </p><p>குரு சந்நிதானத்துடனான உரையாடல் மிகவும் லயிப்புடன் செல்கிறது. கவிதை வாசிக்கும் மனநிலையைப் பற்றி குரு சந்நிதானம் கிண்டலாக சொல்கிறார். ஆனால் அவர் கண்கள் பித்தேறி மினுக்குகின்றன. ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடிக்க வேண்டும் என்கிறார் திடமாக. சந்நியாசம் என்பதை பொறுப்பைத் துறப்பதுதானே. சொல்லப் போனால், அந்த சந்நியாச மடத்தில் இப்போது முற்றும் துறந்த சந்நியாசி கதைசொல்லிதான். </p><p>ஒரு தீவிர சைவ சித்தாந்தவாதிக்கு அதுதான் முழுமையான வழி. வைணவத்துடன் நெருக்கமாக இருந்தாலும் அது அயல் மதம்தான். இவை இரண்ட்டையும் இணைத்து பார்க்கும் விவேகாநந்தரை அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கிறார் குரு சந்நிதானம். "“மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழுமையடையவே முடியாது" எப்பேர்ப்பட்ட ஞானம் இது. இந்தக் கதையை அப்படியே சுருக்கி இந்த இரண்டு வரிகளில் வைத்து விடுகிறார் கதாசிரியர். </p><p>புத்தக அறிவு கொண்டவனுக்கோ ஆன்மிகப் பசி. ஆன்மிக குருவுக்கோ புத்தகப் பசி. மடத்தின் சேகரிப்பில் இருக்கும் கிரந்தங்களை படியெடுத்து புத்தகங்களாக பிரசுரிக்கும்படி குரு இவனைக் கேட்கிறார் </p><p>குரு சந்நிதானத்தின் பித்து மனம், அறிவு தீட்சண்யம், புலமை அனைத்தையும் தாண்டி அவருடைய ரோகம் இவனை அலைக்கழிக்கிறது. ரோகத்தை சமாளிக்க குரு சந்நிதானத்திற்கு அபின் கஞ்சா பெதடின் என்று போதை மருந்துகள் தேவைப்பட்டன. கட்டை விரலில் புண் உண்டான போதே வைத்தியர் அந்த விரலை எடுத்து விட வேண்டும் என பரிந்துரைக்கிறார். ஆனால் அங்கஹீணனாக மடத்து அதிபதி இருக்க முடியாது என்பதால் குரு சந்நிதானம் அந்த ஆம்புட்டேஷனை ஏற்கவில்லை. அந்த விஷம் கால் முழுவதும் பரவி சீழ்பிடித்து இருக்கிறது இப்போது. </p><p>இந்த பின்னணி புரிந்தவுடன், கதை சொல்லியால் அங்கே தங்க முடியவில்லை. இன்னொரு தளத்தில் அவன் குரு சந்நிதானத்திற்கு மிக அமைதியான இறுதி வாழ்க்கை அமைய வேண்டுமென ஆழமாக விரும்புகிறான். அருகிலிருந்து சிசுருஷைகள் செய்து அவரை கடைத்தேற்ற அவன் மனம் துடிக்கிறது. </p><p>அவனுடைய அதே ஆழ்மன பிணைப்பை குரு சந்நிதானமும் பிரதிபலிக்கின்றார். 'எங்கும் போய்விடாதே. யாருக்கும் என் மீது அன்பில்லை. என்னைத் தூக்கி சாத்தி விட துடிக்கிறார்கள்' என்று ஏதேதோ சொல்கிறார் அவனுடனான இறுதி சந்திப்பின்போது. </p><p>அவை எதுவும் அவனை பயமுறுத்தவில்லை. சொல்லப் போனால், குரு சந்நிதானத்திற்கு பணிவிடை செய்ய அவன் மனம் முழு சித்தமாகவே இருந்தது. ஆனால் அவன் மனதை புரட்டிப் போட்டது குரு சந்நிதானம் தன்னுடைய உடல் உபாதை எப்படி உண்டானது என்று விவரித்த கடைசி செய்தி. </p><p><span style="white-space-collapse: preserve;">ஆசையே துன்பங்களுக்கு காரணம். ஆனால் ஆசையற்று இருக்கும் ஆசை பெருந்துன்பத்திற்கு காரணம்.</span> </p><div><br /></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-59525993358973983362023-10-02T07:06:00.006-04:002023-10-02T07:19:47.726-04:00காந்தி எனும் விடுதலை<p> </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh1x9nR8EMng7RyBEzzlQJm4NNkYcDJQNJ8LmHr5jekmjmuoLVATstqe-woYHqXJ9yaMfCHdX3etkos5Au-qtxVLrHeSrJs51qAdtemZL3TtTVDe9jpOyDgTpeA5mvaYpd6ets1y3hq2vFFhU1Ww2qrt9Ywvw_Xg8nl_cCwlbOfQencKK2fDMMD" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="173" data-original-width="292" height="238" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh1x9nR8EMng7RyBEzzlQJm4NNkYcDJQNJ8LmHr5jekmjmuoLVATstqe-woYHqXJ9yaMfCHdX3etkos5Au-qtxVLrHeSrJs51qAdtemZL3TtTVDe9jpOyDgTpeA5mvaYpd6ets1y3hq2vFFhU1Ww2qrt9Ywvw_Xg8nl_cCwlbOfQencKK2fDMMD=w400-h238" width="400" /></a></div><br /></div><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, Segoe UI, Roboto, Helvetica, Arial, sans-serif" style="color: #0f1419;"><span style="background-color: rgba(0, 0, 0, 0.03); font-size: 15px; white-space-collapse: preserve;">(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'எஸ்ரா -100' நிகழ்ச்சியில் 5ம் சுற்றில் 21ம் அமர்வில் “காந்தியோடு பேசுவேன்” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)</span></span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">புனைவிலக்கியங்கள் படைப்பது மட்டுமல்லாது, புனைவிலக்கியங்களைப் பற்றி உரையாற்றுதிலும் திரு எஸ்ரா அவர்கள் மிகவும் அலாதியான திறன் கொண்டவர் என்பதை அவருடைய உரைகளைக் கேட்டிருப்பவர்களுக்கு நன்கு விளங்கும். இதில் ஒரு முக்கிய பண்பு என்னவென்றால், அவரால் தஸ்தவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றியோ, டூமா-வின் த்ரீ மஸ்கிடியர்ஸ் பற்றியோ ஆற்றொழுக்குடன் பேசக்கூடிய தீவிரத்துடன், சமகாலத்து தமிழ்ச்சூழலின் இலக்கியங்களைப் பற்றி விரிவாகப் பேச முடியும். அவருடைய தணியாத வாசிப்பார்வம் அவரை அப்படி புத்துணர்ச்சியுடன், நடப்பு உலகின் இலக்கிய நிகழ்வுகளுடன் பிணைந்து வைத்திருக்கிறது. அவரளவிற்கு இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் பிரேமையும் திறமையும் கொண்டு, தொடர்ந்து இலக்கிய உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் தமிழுலகில் மிக அரிது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">அப்படியான ஒருவருடைய சிறுகதையான "காந்தியோடு பேசுவேன்" பற்றி ஒரு காந்தி ஜெயந்தியன்று உரையாற்ற நேர்ந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">இந்திய சுதந்திர போராட்டகாலத்தைக் காட்டிலும், தற்காலத்தில் காந்தியின் தேவை நமக்கு அதிகமாக இருக்கிறது. மேற்குலகிலும் சரி, இந்திய பெருநிலத்திலும் சரி, காந்தி மீதான வகைதொகையற்ற பக்தியுணர்விற்க்கு இணையாக, காழ்ப்புமிழ்தலும், தூற்றுதலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகின்றன. இந்த மனித சமூகத்தின் மீது நேர்மையான, உன்னதமான அக்கறை கொண்டு காந்தி தன் முழு வாழ்க்கையும் ஒரு பரிசோதனை முயற்சியாக, உன்னதத்தை நாடும் ஒரு சீரிய முயற்சியாக முன் வைத்திருக்கிறார். அவருடைய கட்டுரைகளும் பத்திரிகை பதிவுகளிலும் அதை நாம் காண முடிகின்றது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">காந்தியின் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் வைக்கப்படும் கேள்விகளையும் உள்ளிழுத்து, அவற்றுக்கான விளக்கங்களுடனே தன்னுடைய வாழ்க்கையை காந்தி ஒரு திறந்த நூலாகவே அமைத்துக் கொண்டிருந்தார். இன்றைக்கும் காந்தியத்தின் மீதான கருத்து வேற்றுமைகளை, விரிவாக விவாதிக்கும் பல கூறுகளையும் உள்ளடக்கியது காந்தியின் வாழ்க்கைப் பதிவுகள். தீவிர மதப்பற்றுடையவராகவும் ஆனால் மத அடிப்படைவாதத்தை தீர்க்கமாக மறுத்து வருபவருமான காந்தியை மேற்குலகு புரிந்து கொள்ளவே பல காலம் ஆனது. 1930களிலிருந்தே அவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவரை ஒரு மதத்தலைவராக வரையறுத்து வைத்ததால், அவர் பெயர் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் 1949ல் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அதே மத அடிப்படைவாதம் காந்தியை காவு வாங்கி விட்டிருந்தது. </span></p><p><span style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">இன்றும் அரசியல் வெளியில் காந்தியின் மீது தோட்டாக்கள் செலுத்தப்பட்டுதான் வருகின்றன.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">இலக்கிய வெளியில் காந்தியை நாம் அடையாளப்படுத்தும் போது, அவருடைய பரிமாணங்கள் புத்துருவாக்கம் கொள்கின்றன. அதன் வழியே நாம், எளிய மக்கள், ஓரிரு அடிகளாவது எடுத்து வைக்க உறுதி உண்டாகின்றது. அப்படியானதொரு படைப்பாக "காந்தியோடு பேசுவேன்" அமைந்திருக்கிறது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">இங்கிலாந்திற்கு, லண்டன் மாநகருக்கு புலம்பெயர்ந்த பேராசிரியர் லட்சுமணன், தன் அன்னையின் வாழ்க்கை வழியே காந்தியை தரிசிக்கும் நிகழ்வுதான், 'காந்தியுடன் பேசுவேன்' புனைவு. காந்தி என்கிற பிம்பத்தின் மீதான வசீகரத்திற்கு இணையாக, இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகள் என்று எவர் மீதாவது கொட்டப்பட்டிருக்கிற்தா என்கிற கேள்வி லட்சுமணனை உறுத்துகின்றது. அவரே காந்தியை நெருங்கிச் செல்ல தயங்குகிறார். அவ்வளவு மனத்தடைகளை இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் அவருடைய அம்மாவின் இளமைக் காலத்தில், கணவனின் காம இச்சைக்கான வெறும் உடலாக மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்த பெண்மணிக்கு காந்தி என்கிற ஆளுமை எவ்வளவு பெரிய விடுதலையை அளித்திருக்கின்றது என லட்சுமணனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்குகின்றது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">அரசுப்பணியில் இருந்த அவருடைய அப்பாவிற்கு, அம்மா ஒரு மனுஷி என்கிற பிரக்ஞை சிறிதும் இல்லை. அப்பாவைத் தாண்டிய உலகம் என்று எதுவும் விதிக்கப்படாத நிலையில் லட்சுமணனின் அம்மா மெல்ல மெல்ல காந்தியைப் பற்றி அறிந்து கொள்கிறாள். சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் தாண்டி அவளுக்கு காந்தியின் மீது பெரும் பிரேமை உண்டாகிறது. ஒரு தருணத்தில் அந்த பிரேமையின் ஈர்ப்பு அவளை குடும்பத்தை விட்டு துறந்து வார்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்தைத் தேடி தனியே புறப்பட்டு செல்லத் தூண்டுகிறது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">மொழி புரியாத பிரதேசத்தில் அந்நிய மனிதர்களிடையே அந்த எளிய ஆசிரமத்தில் அவள் காந்தி என்கிற அற்புத மனதை மட்டும் நம்பி தன் வாழ்க்கையை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொள்கிறாள். என்னவொரு சித்திரம் பாருங்கள். அந்த லயிப்பு அவளுக்குப் பின்னால் லண்டனில் உள்ள லட்சுமணனைத் தேடிப் போகும்போதும் அப்படியே இருக்கிறது. காந்தியை, காந்தியின் கண்கள் கொண்டு பார்க்கும் அற்புத வரம் அம்மாவிற்கு வாய்த்திருக்கிறது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">லட்சுமணனின் மனைவியான ராகேல் இன்னொரு காந்தியச் சித்திரம். காந்தியிடம் அம்மா கண்ட பூரண விடுதலையை, அம்மாவின் வழியே ராகேலுக்கும் சாத்தியமாகின்றது. வெகு இயல்பாக. இதை காந்தியின் சொற்களிலே எஸ்ரா ஓரிடத்தில் விவரிக்கிறார். அம்மாவைப் போன்ற பெண்கள் தனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கைதான் அவரை உறுதியாக இருக்கச் செய்கின்றது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்கள் மீது அவருக்கு என்றும் நன்றி இருப்பதாக காந்தி சொல்கிறார்.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">லட்சுமணனின் அம்மாவின் வாழ்க்கை நான்கு பகுதிகளாக நம் கண் முன்னே விரிகின்றன. எளிமையான இயல்பு வாழ்க்கை கொண்ட சிறுமிப் பருவம். மோசமான வதையும், சிறுமையும், ஒடுக்குதலையும் கண்ட திருமணப் பருவம். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள முற்பட்டு பிறகு அவரிடம் முற்றிலும் சரணடையும் சிஷ்யை பருவம். அதன் பிறகு ஒரு முழுமையான, தன்னிறைவு கொண்ட பெண்மணியாக உருக்கொள்ளும் அன்னைப் பருவம். லட்சுமணனுக்கு அம்மாவின் நான்காம் பருவம் மட்டும்தான் அதிகம் தெரிந்திருக்கின்றது. பிறகு மெல்ல மெல்ல பின்னகர்ந்து ஆம்மாவின் வரலாற்றை உணரத் தொடங்குகிறார். </span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">ஆனால் அவருடைய மனைவி ராகேலுக்கு அவ்வளவு காலமெல்லாம் தேவைப்படவில்லை. காந்தியை படத்தில் பார்த்தே அவளுக்கு அவரைப் பற்றிய மனச்சித்திரம் துலக்கமாக உருவாகி விடுகிறது. அதன்வழியே அவளால் அம்மாவை மிக இயல்பாக புரிந்து கொள்ள முடிகின்றது. முடிவில் லட்சுமணனுக்கு காந்தி மீதும் உண்டாகும் தீவிர ஈர்ப்பைப் பற்றியும் எச்சரிக்கை அளிக்கின்றாள். "நீ வேகமாக அவரை அணுகும் போது, அதே வேகத்தில் அவரை விட்டு விலகவும் சாத்தியம் அதிகம். உன் அம்மா போல் காந்தியைப் புரிந்து கொண்டு அவரைப் போல வாழ முயற்சி செய்" என்கின்றாள்.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">காந்தி தன் லட்சியங்களை, தன் ஆதர்சங்களை, தன் பரிசோதனைகளை கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார். காந்தியின் வழி செல்பவர்களும் அப்படியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். லட்சுமணனின் அம்மாவிற்கு வார்தா ஆசிரம வாழ்க்கை முழுமையாக சித்திக்கவில்லை. இரண்டரை மாதங்களிலே, லட்சுமணனின் அப்பா வார்தா வந்து அம்மாவை பலவந்தமாக அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு மீட்டிழுத்துக் கொண்டு போகிறார். வீட்டை விட்டு ஓடியதற்கு தண்டனையாக வலது கையை முறித்தும் போட்டு விடுகிறார்.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">ஆம். காந்தியத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்ட லட்சுமணனின் அம்மாவிற்கு பரிசாக அந்த கை முறிவு. காந்தியை கண்டடைந்தால் கிடைக்கும் பூரண விடுதலைக்கு சமமாக அந்த முறிந்த கையும் அவருக்கு இருந்தது.</span></p><p><span face="TwitterChirp, -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Helvetica, Arial, sans-serif" style="background-color: rgba(0, 0, 0, 0.03); color: #0f1419; font-size: 15px; white-space-collapse: preserve;">காந்தியுடன் ஆத்மார்த்தமாக பேசுவது என்பது ஏதோ இலகுவான, சொகுசான அனுபவமாக இருக்கப் போவதில்லை. இருக்கவும் முடியாது. அதொரு தீர்க்கமான ஆன்ம விசாரத்திற்கான பயணம். காலத்திற்கும் தன்மீது கொட்டப்படும் தூஷணைகளையும், தோட்டாக்களையும் தாங்கிக் கொண்டு புன்சிரித்தபடி இருக்கும் காந்தியின் பிம்பம் போல், முறிந்த கையுடன் காந்தி வாழ்ந்த இலண்டனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவைப் போல, உரத்துடன் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மிகப் பயணம்.</span></p><p><br /></p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-58197789802643086912023-08-16T10:48:00.006-04:002023-08-16T10:49:35.947-04:00பாறைகளை நனைக்கும் நதி<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgmjMYg1LSPw-PoTIgWWbH_kYgxoNwgKdLMTbDtjV_4Q74I4XwU1m4qCQp1E9Fx2JqALhTKVpbUC7XdLn2k-PpTRGTg8xr6lF_bJHVDi9cDBYBHncfVUjKefYWtD_09eXjf5fsWoQNJumzN6OguvNl8eXuGGmETLnus9uVPECMLPi9Y0DUb5-Ov" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="3182" data-original-width="3000" height="400" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgmjMYg1LSPw-PoTIgWWbH_kYgxoNwgKdLMTbDtjV_4Q74I4XwU1m4qCQp1E9Fx2JqALhTKVpbUC7XdLn2k-PpTRGTg8xr6lF_bJHVDi9cDBYBHncfVUjKefYWtD_09eXjf5fsWoQNJumzN6OguvNl8eXuGGmETLnus9uVPECMLPi9Y0DUb5-Ov=w377-h400" width="377" /></a></div><div><br /></div>(2022ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியி அனுபவங்களைப் பற்றி சொல்வனம் எடிட்டோரியல் குழுவைச் சேர்ந்த நம்பி கிருஷ்ணன் <a href="https://solvanam.com/2023/08/13/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/" target="_blank">சொல்வனம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில்,</a> 'கத்திக்காரன்' புத்தகம் பற்றியும் சிறு விமர்சனக் குறிப்பு சேர்த்திருந்தார். அப் பகுதி கீழே)<div><br /></div><div>o0O0o<br /><p></p><p><b><span style="color: #660000; font-size: medium;">யா</span></b>வரும் ஸ்டாலில் கத்திக்காரன் புத்தகம் எதேச்சையாகத் தென்பட்டது. பதாகை, சொல்வனம் இதழ்களுடன் பல வருடங்களாக தொடர்பில் இருப்பதால் அவற்றில் அவ்வப்போது வெளியாகிய ஶ்ரீதர் நாராயணின் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்தேன். நண்பர். நாவல் எழுதப்போவதாக பல வருடங்களாக பயமுறுத்திக் கொண்டிருப்பவர். சோம்பேறி. மொழிவளம் மிக்கவர். ஓடைநீரைப் போல் தெள்ளிய நடை. ஒழுக்கில் எதிர்கொள்ளும் பாறைகளைப் பெயர்க்க முயலாது நளினமாக நனைத்துவிட்டு ஓடிச் செல்லும் நடை. அவரது கத்திக்காரன் தொகுப்பைக் கையிலெடுக்கையில் இந்நினைவுகளே மேலெழும்பி வந்தன. </p><p>புத்தகத்தில் அதே கதைகளைக் கோவையாகப் படித்தது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பென்சில்வேனியாவின் கிழக்கு முனையிலிருக்கும் குவேக்கர்டவுன் நகரத்திற்கு அருகே ஜேஸ்டன்வில் என்ற ஒரு அழகான நடுத்தர நகரம், முற்றிலும் அவரால் கற்பனை செய்யப்பட்ட ஒரு நகரம், இக்கதைகளிலிருந்து திரண்டெழுந்ததே இவ்வாசிப்பில் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அமெரிக்க இலக்கியத்தில் பரவலாகப் பிரவேசிக்கும் சப்-அர்பன் நகரம் (ஜான் சீவர், அப்டைக், ஃப்ரான்சன், ரிச்சர்ட் யேட்ஸ், ரிச்சர்ச் ஃபோர்ட்… இவர்களின் sub-urbia-வை நினைத்துக் கொள்கிறேன்) ஒரு தமிழ்ப் புனைவில் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகவும் இயல்பாகவும் கைப்பற்றப்பட்டிருப்பதே என் ஆச்சரியத்திற்கான காரணம் என்று புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உணர்ந்து கொண்டேன். ஆனால், இந்த அமெரிக்க இலக்கியப் புறநகர்களைப் பற்றி யோசிக்கையில் அவற்றின் தனிமையும் வெறுமையுமே முதலில் நினைவிற்கு வருகின்றன. சீவரின் பிரசித்தி பெற்ற மேற்கோள் வார்த்தைகளில் கூறுவதானால்:</p><p>My God, the suburbs! They encircled the city’s boundaries like enemy territory and we thought of them as a loss of privacy, a cesspool of conformity and a life of indescribable dreariness in some split-level village where the place name appeared in the New York Times only when some bored housewife blew off her head with a shotgun. </p><p>ஆனால், ஶ்ரீதரின் ஜேஸ்டன்வில் அப்படியெல்லாம் நம்மைப் பதற்றப்படுத்துவதில்லை, அதில் துப்பாக்கிச் சுடுதலால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் தலைப்பட்டாலும். அம்மாதிரியான சந்தர்ப்பத்திலும் அதில் மனிதத்தின் பிரிதொரு அணுக்கமான புள்ளியில்தான் அவரது கதைகள் தங்களைப் பிணைத்துக் கொள்ள விழைகின்றன. அவையே அவற்றின் பலமும் பலவீனமும் எனலாம். </p><p>தொகுப்பின் தலைப்பைக் கொண்டிருக்கும் கதையின் நகர்ப்புறத்திற்கு ஒரு சர்க்கஸ் வருகிறது. அப்பா தன் நான்கு வயது மகளை அழைத்துச் செல்கிறார். சர்க்கஸிற்கே உரிய ஆரவாரமும் சுவாரசியமும் கதையில் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. சர்க்கஸ் வித்தைகளில் அச்சாரமாக விளங்கும் கத்தி எறியும் வித்தைக்குக் கதை வருகையில் அதன் முடிச்சுக்கான அஸ்திவாரங்கள் நுட்பமாகவும் வெகு இயல்பாகவும் கதையில் புகுத்தப்படுகின்றன. மகளைக் காட்டிலும் தந்தையே, அது ஒரு போதையூட்டும் ஆர்வமாக மாறும் வரையிலும், அதனால் ஈர்க்கப்படுகிறார். திகிரியில் இருத்தப்படும் பெண்ணை நோக்கி எறியப்படும் கத்தி அவளை ஒவ்வொரு முறையும் மயிரிழையில் தப்பும் கலைநேர்த்தி அவரை மிகவுமே கவர்கிறது. இங்கிருந்து தொடங்கி கலைத்திறனுக்காகக் கொடுக்கப்பட வேண்டிய விலை என்ன என்று புள்ளிக்கு நகர்வதில் அம்முடிச்சு அவிழ்கிறது. </p><p>இந்தியாவில் வளர்கையில் அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்த நினைவே எனக்கில்லை. அம்மாவாவது ஓரிரு முறை ஸ்போர்ட்ஸ் டே அன்றோ நான் பரிசு வாங்கிய ஆண்டு தினத்தன்றோ பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறாள். அப்பாவிற்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. அமெரிக்காவில் மகன் வளர்கையில் நானும் என் மனைவியும் எவ்வளவு முறை அவன் பள்ளிக்கோ அவன் விளையாட்டு பயிற்சிகளுக்க்கோ சென்றிருப்போம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அதையும் அவன் நடுநிலைப் பள்ளிக்குச் செல்கையில் அவன் கையில் ஐ-ஃபோன் வந்துவிட்ட பின் அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தையும் வானவில் என்ற கதை மீட்டெடுத்தது. தொழில்நுட்பம் நமக்கு நன்றாகப் பழகிவிட்ட போதிலும் பெற்றோர்களாக அதை எதிர்கொள்வதில் நமக்கின்னமும் இருக்கும் தயக்கத்தை இக்கதை நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது, நம் குழந்தைகள் வெகு இயல்பாகவே அதன் பாதகங்களைக் கடந்துவிடுகிறார்கள் என்பதையும். </p><p>பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகளைப் பற்றிக் கூறினேன் இல்லையா, அப்படிப்பட்ட, சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி மைதானம் ஒன்று, ஜேஸ்டன்வில்லிலும் இருப்பதை நாம் மைதானத்தின் மத்தியில் ஒரு கொலை என்ற கதை வழியே அறிந்துகொள்கிறோம். திறமை இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் வாரம்தோறும் நிகழும் இப்பயிற்சிகளில் தன்னார்வலக் பயிற்சியாளார்களாக முன்வந்து நம்மையும் குழந்தைகளையும் படுத்துவார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அந்த நகரத்தின் விளையாட்டு வரலாற்றுத் தகவல்களைப் புகுத்தி கதை சுவாரசியமாக அமானுஷ்யத்தில் தன்னை முடித்துக் கொள்கிறது. </p><p>ஸாக்கர் மட்டுமல்ல செஸ் மேட்ச் ஒன்றை மையமாக்கும் கதையும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. Insufficient material, underpromotion, najdorf, Ruy Lopez opening என்று செஸ் நுணுக்கங்களை லாகவமாகப் பயன்படுத்தியபடியே கை நழுவிய இராணி கதையை முன்னெடுத்தும் செல்லும் விதம் அலாதியானது. “கருப்பு ராணியை C8ல் கொண்டு வைத்தேன்…. B7லிருந்த வெள்ளை சிப்பாயை முன்னே B8க்கு நகர்த்தி புரமோட் செய்தான்” என்றெல்லாம் ஒரு தமிழ்க் கதையில் கதையுடன் ஒன்றும் விதத்தில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. வெல் டன் ஶ்ரீதர். ராணிக்குப் பதிலாக இராணி என்றெல்லாம் தூய தமிழ் சேட்டை செய்திருந்ததுதான் சற்று நாராசமாக இருந்தது. </p><p>ஓ ஹென்றி கதைகள் என்று இலக்கிய விமர்சனத்தில் முடிவில் திருப்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் கதைகளை வகைமைப் படுத்துவார்கள். அம்மாதிரியான முடிவை நோக்கிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகளும் இத்தொகுப்பிலுண்டு. யோகம், தொகுப்பை முடித்து வைக்கும் சிகப்பு நிறப்பை போன்ற கதைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அதற்கு ஒரு பன்முகத்தன்மையை அளிக்கிறது. அதே போல், ஐன்ஸ்டீன் (ஐன்ஸ்டீனின் வீடு), பாரதி (பாரதி என்னும் பற்றுக் கோடு), காந்தி (பியாரி பாபு) என்று வரலாற்றுப் பிரசித்தி பெற்றோரின் உபரிச் சரிதைத் தகவல்களை அவர்கள் அபிமானிகளின் கதைகளைக் கொண்டு நமக்களிப்பது தொகுப்பிற்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. </p><p>இப்படிப் பலதரப்பட்ட சுவாரஸ்யான கதைகள் இருப்பினும் அவை எதுவுமே “யானை பிழைத்த வேல்களாக” இல்லை என்று ஆர்வக்கோளாறுமிக்க ஒரு இளம் விமரிசகர் குற்றம்சாட்டக்கூடும். அப்படிப்பட்ட விபரீத ஆசையெல்லாம் ஶ்ரீதருக்குக் கிடையாது என்பதே அதற்குச் சரியான பதில். மாறாக முயல் காதுகளும் (முயல் காதுகள்) எலிக் குஞ்சுகளுமே (ஹிப்போலிடா) அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. இன்று வரையிலும் என் மகனுக்கும் எனக்கும் காலணிகளின் லேஸ்களைச் சரியாகக் கட்டிக்கொள்ளத் தெரியாது. சனியன் எப்போதுமே ஆகாத நேரத்தில் அவிழ்ந்து காலை வாரிவிடும். ஷூலேஸ்களைப் பிணைப்பது போன்ற சின்னச் சின்ன அன்றாடங்களிலும் அழகியல் துளிர்க்கலாம். “அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சவரம் செய்துகொள்வதை, நகம் வெட்டிக் கொள்வதை, வேட்டியைச் சரிவரக் கட்டிக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். தாளத்திற்கும் லயத்திற்கும் உள்ள இசைவையே அவரிடம் பார்த்திருக்கிறேன். இவரை ஒத்தவர்களே உண்மையான கலைஞர்கள்” என்ற ஜே.ஜே: சில குறிப்புகளின் பிரபலமான வரி நினைவிற்கு வந்தது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில்தான் ஶ்ரீதர் தன் கத்திகளை வீசிப் பார்க்கிறார். அவை பெரும்பாலும் வாசக நெஞ்சங்களில் மயிரிழை பிசகாமல் பாய்ந்துவிடுகின்றன என்பதே அவரது கலையின் வெற்றி. கத்திக்காரர் ஶ்ரீதரே, அந்த நாவலை எழுதி முடியுமய்யா! </p></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-86413681847103135282023-07-25T12:24:00.004-04:002023-07-25T12:24:38.335-04:00நிற்க கல்விக்கு தக<p> <span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது. </span></p><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">கல்வி கற்பது, திறனை வளர்த்துக் கொள்வது போன்றவை எல்லாம் ஏன் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருக்கப் போகிறது? அல்லது வணிகம் என்பதை மட்டுமே நம்பும் சமூகம், எப்படி சமுதாயத்தை சீர்கேடாக்குகிறது? இது <span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>போன்ற அடிப்படை பிரக்ஞை எதுவுமில்லாமல், வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எதையாவது உருட்டி பிரட்டி கருத்துரைக்க வேண்டும் என்கிற அகநெருக்கடி ஏன் உண்டாகிறது?</div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">JSTOR போன்ற தளங்களில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீடாக எழுதிக் குவிக்கப்படும் கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். காந்தி ஏன் குடியை எதிர்த்தார் என்பதை காந்தியின் அத்தனை எழுத்துகளிலும் இருந்து புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஒரு மேல்நாட்டுக்காரர் திரிபுவாதமாக எழுதி வைத்திருப்பதை அப்படியே உருவி எடுத்து தமிழ்ச்சூழலில் உலவவிடுவது போன்றவை அறிவு செயல்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானவை.</div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNgG9CwT9dUQEMztYHPeQgHuKuwDOh8twT5BSkaeUzIXuXxuWuZBJbWSVWFk1ksVVZFGjausyOW8IJkCbQvOzBSPvSDRhwq6Ng_VTgx9mJmiuo0mkmClncWK-d5fD17Suy4VoPflhnHKuE6Fj0V-H0AxItZBbUvV3-rW75GLXh6LCwK61-nfJT" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="399" data-original-width="500" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNgG9CwT9dUQEMztYHPeQgHuKuwDOh8twT5BSkaeUzIXuXxuWuZBJbWSVWFk1ksVVZFGjausyOW8IJkCbQvOzBSPvSDRhwq6Ng_VTgx9mJmiuo0mkmClncWK-d5fD17Suy4VoPflhnHKuE6Fj0V-H0AxItZBbUvV3-rW75GLXh6LCwK61-nfJT=s16000" /></a></div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">நமது சமூகத்தின் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளனவா? மிக அதிக மனித வளம் கொண்ட நாட்டில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும், அதற்கு மேல் தரமான உயர்கல்வியும் அளிக்கும் சிஸ்டம் சாமானியமாக உருவாக்கப் படுவதில்லை. ஏகப்பட்ட கருத்து விவாதங்களின் மீது, கற்க வேண்டிய கல்வி வரையறுக்கப்பட்டு, மொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த திரளின் மீதான அதன் தாக்கத்தை எடைபோட்டு, இந்த கல்வித்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">இதன் போக்கில் பல குறைபாடுகள் விளைந்து கொண்டேதான் இருக்கும். அவற்றை சீர்படுத்தி செப்பனிடுவதும் நமது பொறுப்புதான்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">மாறாக, வணிகம் மட்டுமே நோக்காக கொண்டு செயல்படும் சில சமூக்கத்தினரை உதாரணமாக காட்டி, 'அதுதான் உயர்ந்தது' என்று அடித்து விடுவதெல்லாம் அறிவுச்செயலுக்கு அடாதது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">வணிகம் மட்டுமே நோக்காக கொண்டவருடைய பார்வையில், இலாபம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். சுரண்டல், வன்முறை, பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்க்கும் தடித்தனம், காரியம் சாதிக்க யாரையும் காவுகொடுக்கும் அடாவடித்தனம், சமூக சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாதிருத்தல் என பல எதிர்மறை குணங்களை, அதன் ஊறுகள் தெரியாமலே தன்னகத்தே கொண்டிருக்கும் அவலம் நிகழ்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உண்டு.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">வள்ளுவரின் வாக்கில் சொல்வதானால், "கற்க வேண்டியவற்றை குறையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்'. இதில் 'காசு பணம் சம்பாதிப்பதும்' உள்ளடக்கம்தானேத் தவிர, அது மட்டுமே 'கற்பவை' அல்ல. ஒரு குடிமைச் சமூகத்திற்கு தேவையான பரந்துபட்ட கல்வியைத்தான் வள்ளுவர் 'கற்பவை' எனக் குறிப்பிடுகிறார். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">அரசியல் வெளியில், சிறந்த ஜனநாயக முறை என்பது மிகவும் சர்ச்சைகள் கொண்ட, கருத்து மோதல்களுக்கு பரந்த இடமளிக்கக் கூடிய, கட்டுபாடான முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி கேள்விக்குட்படுத்தும் மக்கள் செயல்பாடுகள் எல்லாம் உள்ளடக்கியது. ஜனநாயக முறையின் திறனுக்கு, தீர்க்கமான அளவுகள் இல்லை.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">ஆனால், ஜனநாயக முறைதான் நமது குடிமை அமைப்பிற்கு, குறைந்த ஊறுகளை விளைவிக்கும் சிறந்த அரசியல் முறை. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">அது போலதான், வெறும் வணிக இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட இனக்குழு செயல்பாடுகளைக் காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய சீரான கல்விமுறைதான் சமூகத்திற்கு அத்தியாவசியமான ஒன்று. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">நான் கற்ற கல்வியோ, பெற்ற செல்வமோ, அறிவுச்சமூகத்தில் வெறும் அடையாளங்கள்தான். அந்த கல்வியின் வழியே நான் என்னை நடத்திக் கொள்ளும் முறையே என் தகுதியை தீர்மானிக்கின்றது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto" style="font-family: inherit;">அப்படியல்லாது, வணிக இலாபங்களை புகழ்ந்தும், அறிவு செயல்பாட்டை இகழ்ந்தும் அடையாளப்படுத்துமானால், அந்த சமூகம் எனக்கானதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எவருக்கானதுமல்ல.</div></div><br /></div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-69392020745081651892023-07-21T15:16:00.004-04:002023-07-21T15:16:28.518-04:00மணிப்பூர்: மனிதநேயத்தின் மரண ஓலம்<p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.</span></p><div class="separator" style="clear: both;"><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் <span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"></div></div><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgSccqyfb7ou_Jp6swzEd9OQiwVhbk7csHfzGMNtAggxPirDdmzQeMqaZYh-MuSypq7vFOqkKNLbrW8Dq4AbhZqBn3DeiMR163S4utjJBBP131frcEA_63_Z-Tl-ipmOJw4CKK4W8kmf--S_7x29aWlSgDCd28IbEL7GG0wC-Ccjl1mwlsewO6Z" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="540" data-original-width="960" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgSccqyfb7ou_Jp6swzEd9OQiwVhbk7csHfzGMNtAggxPirDdmzQeMqaZYh-MuSypq7vFOqkKNLbrW8Dq4AbhZqBn3DeiMR163S4utjJBBP131frcEA_63_Z-Tl-ipmOJw4CKK4W8kmf--S_7x29aWlSgDCd28IbEL7GG0wC-Ccjl1mwlsewO6Z=s16000" /></a></div><br /><br /><p></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space-collapse: preserve;">இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.</span></p><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் <span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">"இது என் நிலம்" என்று ஆர்பரிப்புடன் கூவும் பூர்வ குடியினரை, சற்றே வளர்ந்த நாகரிக மக்களான மாயர்கள் அடிமைப்படுத்தி செல்வதை, 'அபோகலிப்டோ' திரைப்படத்தில் பார்க்கலாம். திரைப்படத்தின் முடிவில் ஐரோப்பியரின் கப்பல் (ஸ்பானியர்கள்) அமெரிக்க கடற்கரையை வந்தடையும் காட்சி வரும். ஐரோப்பிய காலனியாதிக்கம் அந்த நிலத்தின் பெரும் அரசுகளை நிர்மூலமாக்கி, பூர்வகுடிகளை பெருமளவில் அழித்த பின்னாள் வரலாறு அந்தக் காட்சியின் வழியே நமக்கு காட்டப்படுகிறது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">பழங்குடி இன மக்களுக்கான ஆகப் பெரும் பிரச்னையே அவர்கள் நாகரிக வளர்ச்சியில் நிலமுடையவர்களாக பரிணமிக்க விடாமல், வளர்ந்த நாகரிக மக்கள் அழுத்தம் கொடுப்பதுதான். காடுகளை பாதுகாக்கும் அளவிற்கான முக்கியத்துவத்தை, அந்தக் காடுகளில் உறையும் குடிகளுக்கு அளிக்க நவீன அரசுகள் முற்படுவதில்லை. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், குக்கி இன மக்கள் ஆங்கிலேய அரசுடன் போரிட்டு, தோற்றதும், மெது மெதுவே, கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகையால், கிறிஸ்துவ மதத்தை தழுவுகின்றனர். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">சுதந்திர இந்தியாவின் பெரினியல் பிரச்னைகளில் ஒன்றான எல்லைப்புற அகதிகள் பிரச்னையும் மணிப்பூர் பள்ளதாக்கை இம்சிக்கின்றது. குக்கி பழங்குடியினரின் பல நெருங்கிய இனங்கள் மியான்மரிலிருந்து, இந்திய நிலங்களுக்கு புலம்பெயர, மலையக மக்களுக்கும், பள்ளதாக்கு மக்களுக்கும் இடையே பெரும் விரிசலை உண்டு பண்ணிவிட்டது. இதில் மத வேற்றுமையும் ஓர் அடிநாதமாக இணைய, தற்போதைய கலவர சூழல் வெடித்து கிளம்பியிருக்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஆண் மையச் சமூகமான நாம், பெண்களை மூன்று தளங்களில் இருத்தி வருகிறோம். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">தாய் என தொழும் பக்தி பொங்கும் இடம். </div><div dir="auto" style="font-family: inherit;">பொன், மண், பொருள், பணியாள் போல உடைமைகளில் ஒன்றாக பெண்ணையும் கருதுவது. </div><div dir="auto" style="font-family: inherit;">மூன்றாவதாக தன்னுடைய சந்ததியை பெருக்கி தரும் இன்றியமையாத கருவி. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">சக மனிதராக பெண்களை நிறுத்தி இயல்பானதொரு குடிமைச் சமூகமாக பழகிவருவது மிகவும் அரிது. அதிலும், போர்கள், சண்டைகள் என வரும்போது பெண்களை அபகரிப்பது, வண்புணர்வு செய்வது, கொடுமைப் படுத்துவது ஒரு யுத்த உக்தியாகவே நம் சமூகங்களில் நிகழ்ந்து வருகிறது. </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">அண்மையில் இணையத்தில் பரவிய வீடியோவில் குக்கி இன பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, பொதுவெளியில் மானபங்கபடுத்தி, வண்புணர்ச்சி செய்கின்றனர் மேதி இன கொடுங்கோலர குழு, எத்தகைய மானுட அவலம் இது. இந்த கோரச் செயலில் ஈடுபட்ட மனிதர்கள், அதை படமெடுத்தவர்கள், அதை பரப்பிவிட்டவர்கள் என எத்தனை ஈனப்பிறவிகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என பேரதிர்ச்சியாக இருந்தது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இந்த கோர வீடியோக் காட்சிகளைக் கண்ட பலருடைய எதிர்வினைகளும், அந்த பேரதிர்ச்சியைக் கடந்து, இந்த அவமானத்தை எப்படி அரசியல் தரப்பில் வைத்து ஆதாயம் சேர்ப்பது என்ற முனைப்பில் இருந்தன.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">இன்றைய சோஷியல் மீடியாவின் மாபெரும் துயரம் இப்படி அடிப்படை மானுடப் பண்புகளைத் துறந்து, இணைய வெளியின் வீச்சிற்கு நம்மை நாமே பலி கொடுப்பதுதான்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், ஒரு தாய்க்கு மகனாகவோ, ஒரு பெண்ணிற்கு இணையராகவோ, அல்லது ஒரு பெண்ணிற்கு தந்தையாகவோ இருக்கப்பட்ட எவரொருவரும், அந்த இரு பெண்களுக்கு நேர்ந்த கொடுமைக்கென, பொறுப்பேற்று தலைகுனிந்து நிற்க வேண்டும். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">தங்களுக்கான கலாச்சாரம், நிலம், மொழி, மதம் என குழுவாக ஏற்றுக் கொண்டு வாழ்வது இந்த பூமியில் முக்கியமானதுதான். அதன் முரண்களும், பெறுதல்களும், இழப்புகளும் அலசி தீர்க்கப்பட வேண்டியது, மனிதநேயம் பரப்பும் விரிந்த குடையின் கீழ்தான். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space-collapse: preserve;"><div dir="auto" style="font-family: inherit;">பிறரை பலி கொள்ளும் வேற்றுமை நெருப்பில் குளிர்காய முனைவோரயும், அந்த நெருப்பு உட்செரித்துப் போகும் காலம் வாராமல் போகாது.</div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-12352232151902792702023-06-24T17:19:00.015-04:002023-06-24T17:27:19.492-04:00கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்<p><u>கல் அடுக்கு சிற்பங்கள்</u> - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" class="placeholder" id="c4c9ea3704ac2" src="https://www.blogger.com/img/transparent.gif" style="background-color: #d8d8d8; background-image: url('https://fonts.gstatic.com/s/i/materialiconsextended/insert_photo/v6/grey600-24dp/1x/baseline_insert_photo_grey600_24dp.png'); background-position: 50% 50%; background-repeat: no-repeat; opacity: 0.6;" /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZbflwC4PPMEnQnMLGtlxbVUxR3whJxLR_sAi5ossmRUOC_EVnHAEYBLf-7T34XDYvftovH6zJgbZPmU5NUmJE6rQ5A3lKFkK6e6_KOdF6bAN0ZhBbOMEoBBEQZljlDw8i4c0VqCJ1idi-mLNpHVHGoaWkKbln1A4KNO8kBMkKAgIyFu2TliIR/s822/StoneArt.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="822" data-original-width="600" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZbflwC4PPMEnQnMLGtlxbVUxR3whJxLR_sAi5ossmRUOC_EVnHAEYBLf-7T34XDYvftovH6zJgbZPmU5NUmJE6rQ5A3lKFkK6e6_KOdF6bAN0ZhBbOMEoBBEQZljlDw8i4c0VqCJ1idi-mLNpHVHGoaWkKbln1A4KNO8kBMkKAgIyFu2TliIR/w234-h320/StoneArt.jpg" width="234" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div></div></div>சிறு பிராயத்தில், கற்களை அடுக்கி வைத்து ஆடும் ஒரு விளையாட்டு நினைவில் இருக்கிறது. இந்திய துண கண்டத்தில் பரவலாக அறியப்படும் சிறுவர் விளையாட்டுதான். நமது முறை வரும்போது, சிதறிகிடக்கும் வெவ்வேறு வடிவான சிறு கூழாங்கற்களை, கீழே விழாதபடிக்கு அடுக்கி வைக்க வேண்டும். எதிரணியினர் பந்தை எறிந்து அக்கல் அடுக்கை தகர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிற்பாடு, கடலோரமாக இது போன்ற கற்களை அடுக்கி வைத்து ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு கலையாக பயிலப்படுகிறது எனத் தெரிந்து கொண்டேன். <p></p><p><br /></p><p>வாழ்க்கை நமக்கு அளிக்கும் அனுபவங்களிலிருந்து ஒரு புனைவுலகை உருவாக்கிக் கொள்வது 'கல் அடுக்கு சிற்பங்களை' உருவாக்குவது போன்றதொரு கலைதான். அதொரு கற்பனை உரு. ஆனால் அக்கற்கள் நிஜமானவை. அக் கற்கள் அந்த அடுக்கிற்காக உருவானவை அல்ல. நனவுலகில் நிகழ்ந்த அனுபவங்களை அப்படியே ஒரு புனைவுலகிற்கான அடுக்கு சிற்பங்களாக மாற்றும் ரசவாதம் அ முத்துலிங்கம் அவர்களின் தனித்த திறமை.</p><p><br /></p><p>அ முத்துலிங்கம் அவர்களுக்கு என் தந்தையை விட 5 வயது அதிகம். இக்காலத்து எழுத்தாளர்கள் இடையே ஒரு முதுதாதை வடிவாக அவர் இருக்கிறார். என் போன்ற சிறுவர்கள் கை அளாவிய இந்த குறுங்கட்டுரைகள் அவர் போன்ற பெரும் தந்தைகளுக்கு பிரியமானதாக இருக்கக் கூடும் என்று வள்ளுவரை மனதில் கொண்டு இதை மேற்கொண்டு எழுதுகிறேன். தமிழ் இலக்கியத் தொடர்ச்சியின் கடைக் கண்ணியில் இருக்கும் எவராக இருந்தாலும், அ முத்துலிங்கம் அவர்களுடைய இலக்கிய செயல்பாட்டு விளைவின் ஒரு சிறு தொடர்ச்சியாக இருக்கும் சாத்தியமே அதிகம். மக்கள் சொற்கேட்டல் பெற்றவர்க்கு உற்ற இன்பம்.</p><p><br /></p><p>தற்கால இலக்கிய சூழலைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை அ முத்துலிங்கம் அவர்கள் எப்போதும் செய்யத் தவறியதில்லை. தொழில்நுட்பமும், தொடர்புவலையும் செறிந்த இக்காலத்தில், எண்ணற்றப் புத்தகங்கள் உருவாகி வருகின்றன. அவருடைய முதல் தொகுப்பு இலங்கையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக கப்பலேறி தமிழகம் சென்று அச்சு வடிவம் அடைந்து மீண்டும் இலங்கைக்கு வருகிறது. தம் எழுத்தை அச்சு வடிவத்தில் காண்பதற்கு தவமாய் தவமிருந்த காலம் போய், இப்போது புத்தக வடிவம் எய்துதல் ஒப்பீட்டளவில் மிகவும் எளிதாகி விட்டிருக்கிறது. ஆனால் புத்தகம் ஆகுவதெல்லாம் எழுத்தாகி விடுமா? அல்லது புத்தகம் ஆக வேண்டிய எழுத்து வெற்றி பெறுகின்றதா? அரிதான எழுத்து பலவும் ஒரு பதிப்போட்டு தேங்கி, புதையுண்டு போயிருக்கின்றன. எழுத்திற்கு தேவை வடிவம் மட்டுமல்ல, தொடர் வாசிப்பும். இந்தத் தொடர்ச்சியைப் பற்றி அ முத்துலிங்கம் பல இடங்களில் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். கனடா இலக்கிய தோட்டத்தினை தோற்றுவிக்க அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்ததற்கும் இந்தக் கரிசனம் முக்கியமானது. </p><p><br /></p><p>தமிழின் இலக்கிய மரபு சங்ககாலம் தொட்டு பல்வேறு காலங்களில் பெரும் பாய்ச்சல் காட்டி வளர்ந்திருக்கின்றது. நவீன காலத்தில், சிறுபத்திரிகைகள் வழியே, மணிக்கொடி இயக்கம் வழியே, பெரும் இலக்கிய ஆளுமைகளின் தலைமையிலான கூடுகைகள் வழியே, அவர்களிடையேயான ஆரோக்கியமான, அழிச்சாட்டியமான சர்ச்சைகள் வழியே என பல பரிமாணங்கள் காட்டி வளர்ந்திருக்கின்றது. இணையம் வழியே பல தொழில்நுட்ப வசதிகளும், உடனடி தொடர்புகளும் பெருகிய காலத்தில் இலக்கிய மரபிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது எனலாம். பெரும் வணிக பத்திரிகைகளின் ஓரங்கமாக புனைவெழுத்து எட்டிய வீச்சைக் காட்டிலும் இணையம் பல மடங்கு அதிகமாகவும், முதிர்ச்சியுடனும் இலக்கிய வெளியை சுவீகரித்துக் கொண்டது. அந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக அ முத்துலிங்கம் அவர்கள் காணப்படுகிறார். </p><p><br /></p><p>இணையம் வழியே தமிழிலக்கியம் பரவ தொடக்கமாக இருந்த திண்ணை பத்திரிகையில், அவருடைய படைப்புகள் வெளி வரத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் அவருடைய வாசகந்தான். அப்போது அவர் கனடாவிற்கு வருகை புரிந்திருந்த நடிகை பத்மினியுடனான சந்திப்பை, தனக்கேயுண்டான தனிச்சுவையுடன் எழுதியிருந்ததை நினைவு கூர்ந்தேன். மைய நீரோட்ட பத்திரிகைகள் 'ஜூசி'யாக தருகிறோம் என உருவேற்றித் தரும் செய்திகளுக்கும், எத்தகைய அனுபவ்த்தையும் ஒரு கலை நுட்பத்துடன், சுவை குன்றாது, அழுத்தமான செறிவுடன் வெளிப்படுத்தும் எழுத்திற்குமான வேறுபாடு உடனே பற்றியிழுத்துக் கொண்டது. </p><p><br /></p><p>இன்றைய சமூக ஊடகங்களில், புதிய தொடர்புகளைப் பெருக்கிக் கொள்ளவென முனைப்பில், ஒரு கூட்டில் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கை அதிகம் காண முடிகிறது. அப்படியொரு அவசர அடையாளம் புனைந்து கொள்வதை, அரசியல் நோக்கெனவும் புரிந்து வைத்திருக்கிறோம். அரசியல் அரங்கின் முதன்மையான கோட்பாடு, வெற்றியை நோக்கிய பயணத்தில் உண்மைக்கான இடம் முக்கியமில்லை என்பதே. அறத்தை காவுகொடுத்து பெரும் வெற்றியில் என்ன ஒளி இருந்துவிடப் போகின்றது. "அரசியல் எனும்போது அதொரு கூடாரத்தில் அடைக்கப்பட்ட நிலை" என்கிறார் அ முத்துலிங்கம். இலக்கியம் என்பது கூடாரங்களுக்கு அப்பாற்ப்பட்ட விரிந்து படர்ந்த வெளி. வெட்டவெளியில் பயணப்படும் இலக்கிய வாழ்விற்கு துணையென சத்தியம் தவிர வேறெதுவும் இருப்பதில்லை. வம்பு சர்ச்சைகளும், பொருமல்களும் படைப்பூக்கத்திற்கான பெரும் உந்துதல் என்பதை தகர்த்து, வாழ்வனுபவங்களை சான்றாக கொண்டு கதை புனைந்து செல்லும் எழுத்தாளனாக தன்னை நிறுவிக் கொள்கிறார். அந்தக் கதைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ஒரு பெரும் சித்திரமாக நமக்கு அவருடைய படைப்புலகை துலங்கச் செய்கின்றன.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEidcUVdb6pDXoUypUquMR4kTSVgXy9nrnMLxf85nhDDgoZbEdeHT4cx6QIKe9jLOxrkONFNL5vaRG2ASZ-IbC8UUsg-Z8-xOMI4AdDOwiKe-WkAynYGHBBq8E90Q-oitq4HNBLoFnjw8e86gQiY2twKR9EBPsxC2f6_HkxW4zZxVPtIoU23YMwx" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="1600" data-original-width="1131" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEidcUVdb6pDXoUypUquMR4kTSVgXy9nrnMLxf85nhDDgoZbEdeHT4cx6QIKe9jLOxrkONFNL5vaRG2ASZ-IbC8UUsg-Z8-xOMI4AdDOwiKe-WkAynYGHBBq8E90Q-oitq4HNBLoFnjw8e86gQiY2twKR9EBPsxC2f6_HkxW4zZxVPtIoU23YMwx=w227-h320" width="227" /></a></div><br /><br /><p></p><p>கல்லூரி மாணவனாக அவர் எழுதிய சிறுகதைகளிலிருந்தே அவரிடம் அந்த முதிர்ந்த பக்குவம் படிந்திருந்தது. அதற்கு முந்தைய பருவத்தில் அவருடைய அம்மாவை ஆஸ்துமா நோய்க்கு பலி கொடுத்த துக்கத்தின் விளைவாக இருக்கலாம். ஒரு பேட்டியில் அம்மாவுடைய இறுதிக்கண அவஸ்தையை மிகக் கூர்மையானச் சொற்களில் சுருக்கமாகச் சொல்கிறார். மலைச் சுனையின் ஆழத்தில் புரளும் கற்களின் சலனம் மேற்பரப்பில் புலப்படுவதில்லை. மாறாக அந்த சுனை ஆறாக நம் மனதில் புரண்டு ஓடும்போது நாமே அக்கற்களாக தத்தளிக்கத் தொடங்குகிறோம். ஒவ்வொரு வாசிப்பிலும் அந்த மலை ஓடையின் புரட்டல் ஒவ்வொருவித கொந்தளிப்பை தோற்றுவிக்க வல்லதுது</p><p><br /></p><p>"இருப்பிடம்" என்றொரு கதை. நாம் இப்போது ஸ்பெஷல் சைல்ட் என்று சொல்லிப் பழக்கப்பட்ட தனித்துவ திறமை கொண்ட சிறுவன் பற்றிய கதை. தேர்த்திருவிழா பின்னணியில் அந்தச் சிறுவனைப் பற்றிய ஒர்ரு சம்பவமாக கதை விரிகின்றது. பெரும் தேர்ச் செல்லக் கூடிய பெரும்பாதைகளின் அமளி துமளியிடையே அபூர்வமாக பூத்து நிற்கும் ஒற்றை மலரை ஒரு கவிஞனின் மனம்தான் கண்டுகொள்ள முடியும். அதன் வசீகரத்தை அவனால்தானே அங்கீகரிக்க முடியும். நாஞ்சிலாரின் புகழ்பெற்ற இடலாக்குடி ராசாவை நினைவுபடுத்திய அழகிய கதை.</p><p><br /></p><p>அந்த முதல் சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான "அக்கா" ஒரு சிறுவனின் பார்வையில் தன் அக்காவைப் பற்றி சொல்வதாக இருக்கிறது. அந்தக் கதை நிகழும் காலத்தில் அந்த சிறுவனின் அக்கா, திருமண பருவத்திற்கு தயாராகும் ஒரு சிறு பெண். அவளை பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறது. அதில் ஒரு மாமா அவளையே உற்றுப் பார்க்கிறார். அக்கா ஓடி வந்து விடுகிறாள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியின் துளைக்கும் கேள்விகளை அனுசரித்தபடி அக்கா பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த வரன் தகையவில்லை. பிறகு மற்றொரு மாமா அழகான புகைப்படங்கள் எடுக்கிறவர். அக்காவையும் ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார். அந்தப் படத்தை இந்த சிறுவனிடம் காட்ட, தன் அக்காவிடமும் அந்தப் படத்தை காட்ட அவன் விரும்புகிறான். அந்த மாமா புகைப்படத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் தருகிறார். பெண் பார்க்க வந்த மாமாவிற்கும், காதல் கடிதம் அளிக்கும் மாமாவிற்கும் அவனுக்கு வேறுபாடு தெரிவதில்லை. அந்த காதல் கடித நாடகம் அம்பலப்பட்டு அந்த சிறுவனின் குடும்பத்தினரிடையே பெரும் களேபரம் நிகழ்கிறது. முத்துலிங்கம் அவர்களின் விருப்ப எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் போல, இந்த சம்பவத் திரிகளை சாதாரணமாக சொல்லிச் செல்லும் போது, அந்த கதையோட்டம் நமக்கு சொல்லாத ஒரு புள்ளியில் ஓர் அசௌகரியம் ஏற்படுகின்றது. அது அந்த அக்கா என்றழைக்கப்படும் சிறுபெண்ணின் மனவோட்டமாக இருக்கலாம். அல்லது அந்த கோபக்கார, தகப்பனின் இயலாமையாக இருக்கலாம். அந்த சிறுவனின் பார்வையில் கதை எழுதிப் போகும் முதிர்ந்த எழுத்தாளனின் திறன் நம்மை அப்படியான தத்தளிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. </p><p><br /></p><p>அதே தொகுப்பில் காணப்படும் "பக்குவம்" சிறுகதையின் பேசுபொருளெல்லாம் அக்காலத்து கல்லூரி வயசு இளைஞனின் படைப்பா என வியப்பாக இருக்கின்றது. பூப்படைதல் எனும் ஒரு இயல்பான பயாலஜிக்கல் நிகழ்வை மையமாக கொண்ட கதை. அக்கதையின் தொடக்கத்தில் ஒரு முரணை வைக்கின்றார் கதாசிரியர். இளைய பெண் குழந்தை பூப்படையும் வைபவத்தில், மூத்த பெண் குழந்தைக்கு ஏற்படும் சங்கடமான அனுபவம். அந்தக் கதை ஒரு இயல்பான முடிவிற்கு சென்று விடுகிறது. ஆனால் அது நமக்கு ஒரு அவஸ்தையை அளிக்காமல் போவதில்லை. இந்த முத தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் களம், அதன் மையப்பொருளை விரித்துக் கொண்டு போகும் நேர்த்தி, அவை பேசப்பட வேண்டிய பொருள் என்பதற்கான நியாயம், அதன் வடிவ பொருத்தம் இவையெல்லாம் அக்காலத்தின் முக்கிய தமிழ் எழுத்தாளர் எவர்க்கும் குறைந்ததில்லை. இலங்கையில் பேசப்பட்ட அளவிற்கு அப்போது தமிழ்ச்சூழலில் பேசப்படாமல் போயிருக்கலாம். </p><p><br /></p><p>அவர் மீண்டும் எழுதத் தொடங்கிய காலத்தில், அவருடைய படைப்புகளின் விவரணை முறையிலும், அதன் விவரிப்பிலும் குறிப்பிடதக்க மாற்றங்கள் இருக்கின்றன. இடைக்காலத்தில் அவருக்குண்டான பரந்துபட்ட அனுபவங்களும், அவருடைய உலகளாவிய நோக்கும் அவருடைய படைப்புகளின் மையம் கொள்கின்றன எனலாம்.</p><p><br /></p><p>க மோகனரங்கன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். முத்துலிங்கம் அவர்களின் கதைகளில் வரும், பெரும் எடை கொண்ட ஆப்பிரிக்க யானை. நெடுங்காலம் பூமியில் புதையுண்டு கிடக்கும் சிகாடா பூச்சி.... போன்ற அபூர்வ வகை விலங்குகள் பற்றி குறிப்பிடுகிறார். உயிரற்ற எந்திரங்களையும் ஒரு மையப்பாத்திரமாக முத்துலிங்கம் ஆக்கிவிடுகிறார். 'பூமாதேவி' கதையில் அப்படித்தான், துணி துவைக்கும் இயந்திரம் ஓர் அபாரமானதொரு பாத்திரமாக உருவகித்திருக்கிறது. ஒரு தந்தை தனது சிறு மகளுக்கு அந்த சலவை இயந்திரத்தின் முன்பாக, நாம் எப்படி மனிதர்களுடனான 'ஒப்பந்தம்' என்கிற ஒரு நடைமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நியமத்தைப் பற்றி போதிக்கின்றார். அந்தப் பெண் பெரியவளானதும் தவறாமல் தன்னுடைய ஒப்பந்தங்களை கடைப்பிடிக்கிறாள். ஆனால் அதை போதித்த அப்பாவிடம், அவருடைய சிறிய மகளாக அந்த 'பூமாதேவி' பற்றிய விளையாட்டுப் பேச்சு ஒப்பந்தத்தை காலப்போக்கில் மறந்து விட்டிருந்தாள். அந்தப் புள்ளியைச் சுற்றி கதை ஒரு சராசரி அமெரிக்க வாழ்க்கையை பின்னிப் பிணைந்து கொண்டு செல்கின்றது.</p><p><br /></p><p>கனேடிய குடியேற்ற அதிகாரிக்கு, சிறைக்கைதி எழுதும் கோரிக்கை கடித வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை "கொழுத்தாடு பிடிப்பேன்". இது போன்ற கடித வகை புனைவுகளில் ஒரு வித மர்ம வசீகரம் உண்டு. இந்தக் கதை சொல்லிப் போகும் பல சம்பவங்கள், கனடா நாட்டின் புலம்பெயர் வாசியின் ஒரு சராசரி அனுபவப் பதிவாக விரிகின்றது. ஒரு புதைந்த ரகசியத்தின் புற விளிம்புகளை தொட்டு விளக்கிக் கொண்டே போகும் சாமர்த்திய விவரிப்பு. கதை முடிந்ததும், அதன் சரடுக்ளை இழுத்துப் பிடித்து அந்த புதிருக்கான விளக்கத்தை தேடி நாம் அந்த வரிகளிடையே மீண்டும் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றோம்.</p><p><br /></p><p>புலம்பெயர் வாழ்க்கையின் இருண்மையான பக்கங்களைக் காட்டும் மற்றொரு சிறுகதை "கருப்பு அணில்". பனிக்கொட்டத்தொடங்கிய அந்த வேளையில் கதைநாயகனே ஓர் அணில் போல தன்னை உணர்ந்தபடி தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதனால் உருவாக்கிக் கொள்ளும் ஒரு கற்பித கொண்டாட்டம். தேர்ந்த சொற்களில் மனதை துளைத்து செல்கின்றது. ஒருவிதத்தில் அந்த நம்பிக்கையற்ற நிராசையின் விரக்தியை நாமும் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.</p><p><br /></p><p>சிறுபெண்ணின் மனதின் புதிர் மையங்களைத் தொட்டுப் போகும் மற்றொரு படைப்பு "மகாராஜாவின் ரயில்வண்டி". சகி என்றழைக்கப்படும் மன்றோவின் கதையை நினைவுப் படுத்துவது போல் ரோஸ்லின் பல ரகசியங்களை கதைசொல்லியிடம் சொல்கிறாள். அப்போதுதான் பிறந்திருக்கும் ஒரு பூனைக்குட்டி அவளுக்கு அரிஸ்டாட்டிலை நினைவுப் படுத்துகிறது என்று அப்படியே அதற்கு பெயர் சூட்டுகிறாள். அவள் இல்லாதபோது அந்தப் பூனைக்குட்டிகளை பார்க்க நேரிடும் கல்லூரிச் சிறுவனான கதைசொல்லி, அந்தக் குட்டிகளுக்கு அவளுடைய பெயரையே பிட்டுப் பிட்டு வைக்கிறான்.</p><p><br /></p><p>ஒரு பேட்டியில் அ முத்துலிங்கம் சொல்கிறார். அவருடைய இளம் பிராயம் புராண இதிகாசங்கள், பக்தி கதைகளென அம்மாவிடம் கேட்டு வளர்ந்ததை. படைப்பூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மனதை இக்கதைகள் எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என நாம் விளக்க வேண்டியதில்லை. அந்த கதை அனுபவங்கள் பிறகொரு காலத்தில் வேறு சில திறப்புகளாக வெளிப்படுவது இயல்பு. ராமாயண காவியத்தை ஆதி காவியம் என்பர். வால்மீகியை ஆதி கவி எனவும் சொல்வர். அந்த வகையில் அக்காவியத்தின் தொடக்க பாடல், முதல் கவிதையாக இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு போற்றும் பாடலா அல்லது நிந்தைப் பாடலா என பாடபேதங்கள் உண்டு. இது காவியத்தில் இடம் பெற்றிருக்கும் மறை புதிர். இதை ஒரு புனைவாக விரித்துப் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு பார்வை கிடைக்கும். கம்ப நாட்டாரின் சொற்களில் "ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன் பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள்" என்கிறார். என்ன? ராமாயணக் கதையின் உச்சமான அக்கினி பிரவேசம் பற்றிய பாடல் அது. </p><p><br /></p><p>புதுமைப் பித்தன் என்ன செய்கிறார்? அந்த செய்தியை அகலிகையிடம் கொண்டு போய் சொல்கிறார். அது சாபவிமோசனம் எனும் கதையாக உருவாகிறது. அதே செய்தியை ஓர் அன்னயின் பார்வை கொண்டு பார்க்கிறார் ஜெயகாந்தன். அவருடைய முத்திரை சிறுகதையான 'அக்னி பிரவேசம்' உருவாகிறது. மகாபாரத இதிகாசத்தில் காண்டவ பிரஸ்தத்திலிருந்து இந்திர பிரஸ்தம் உருவாகுவதை, நகர நவீனமாக்கத்தில் வைத்துப் பார்க்கிறார் அம்பை. </p><p><br /></p><p>அது போல குங்கிலியகலய நாயனாரின் கதையை முத்துலிங்கம் அவர்கள், ஒபுக்கு எனும் மேற்கு ஆப்பிரிக்க இளைஞன் ஒருவனின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கிறார். அவருடைய அலுவலகத்தில் ஒன்றும் தெரியாத வெகுளி இளைஞனாக வருபவன், அங்கிருந்த கணிணியை கற்றுக் கொள்கிறான். அங்கே பீஸ்கோ எனும் பகுதியில் இருந்து வரும் ஒரு பெண்ணை காதலியாகக் கொள்கிறான். அவள் வழியே மதுப்பழக்கமும் ஏற்படுகிறது. அவன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அவன் மீளாத ஓர் எல்லைக்கு சென்று விடுகிறான். அந்த எல்லையிலிருந்து விடுபடுதல் என்பதுதான் சாதனை. குங்கிலியகலய நாயனாரின் பக்தி தொண்டு அது போன்ற மீளா எல்லைக்குட்படும்போது இறையருளால் மீட்கப்படுகின்றது என்பது நமது தொன்மக்கதை. இந்த 'விடுபடுதல்' பற்றி மூன்று தளங்களில் பேசுகிறார். நண்பர்களிடையே அவர்களுடைய அனுபவங்களை வைத்தொரு சரடு. ஒபுக்குவின் கதை. இறுதியாக குங்கிலியகலய நாயனாரின் கதை. இம்மூன்றும் தனித்தனியாக அதனளவில் ஒரு சிறுகதையாக இருப்பவை. </p><p><br /></p><p>முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க அழுத்தம் தோற்றுவித்த சிறப்பானதொரு படைப்பு "அமெரிக்காக்காரி" சிறுகதை. இந்த சிறுகதையைப் பற்றி மட்டுமே நான் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பு படிக்க வரும் பெண், வியட்நாமிய இளைஞன் ஒருவனை திருமணம் முடிக்கிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவப் பரிசோதனை சொல்கின்றது. பிறகொரு ஆப்பிரிக்கரின் விந்தணுவை கடன் வாங்கி குழந்தை பெற்றுக் கொள்கிறாள். அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.</p><p><br /></p><p>ஒருவித கவித்துவ மன அலைக்கழைப்பை காட்சிபடுத்தும் கதை "செங்கல்". ஏதோ ஒரு இனம்புரியாத தேடலில் மையம் கொண்டு, பிறகு அந்தத் தேடலே ஒரு பாரமாக மாறி, தொலைதூர மலையின் தடையால் எதுவுமே அடைய முடியாமல் போய்விட்டது போல் ஒருவித ஹலுசினேஷன் தொனியில் முடிகிறது. இது போன்ற உத்திகள் கொண்ட மிஸ்டிகல் கதைகளில் முத்துலிங்கம் அவர்களுக்கு எப்போதும் நாட்டம் இருந்திருக்கின்றது. மற்றொரு தலைப்பு மறந்துவிட்ட கதையில், முதிய தம்பதிகள், ஒரு மனநல மருத்துவரிடம் தங்கள் பிரச்னைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு வருவர். இறுதியாக அவர்கள் சொல்லும் பிரச்னை அவர்கள் கண்களுக்கு மட்டும் புலனாகும் அவர்களுடைய பெண்ணோ, பேத்தியோ பற்றியது என்பது போல முடியும். ஒரு ஓட்டலில் உணவு பரிமாறும் வேலையில் இருக்கும் சிறு பெண், அந்த ஓட்டலுக்கு வரும் ஒரு இளைஞன் மீது காதல் கொள்கிறாள். அவளுக்கு அவனுடன் எப்படிப் பேசுவது என்று தவிப்பாக இருக்கிறது. அவனுடைய தொலைபேசி எண் அவளுக்கு எப்படியோக் கிடைக்கின்றது. ஃபோனும் செய்து விடுகிறாள். மறுமுனையில் அவனுடைய குரல் கேட்டதும் இவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒரே பேதமை. தடுமாற்றம். சட்டென, அவளுக்கும் அவனுக்கும் அறிமுகமான, அவள் வழக்கமாக செய்ய்தும் மெனு ஒப்பித்தலை செய்கிறாள். </p><p><br /></p><p>இப்படி அ முத்துலிங்கம் அவர்கள் தனது கதை உலகை வளர்த்துக் கொண்டே போகிறார். எங்கோ அந்த கதையுலகில் நாமும் இடம்பெற்று விடுகிறோம். அப்புறம் நாமும் அவருடைய பாத்திரங்களாக உருமாறி விடுகிறோம். அதை அவர் செய்கிறாரா, அல்லது அதற்கு நாம் விழைகிறோமா என்பது ஒரு விவரிக்க இயலாத அனுபவமாக இருக்கின்றது. ஆத்மநாம் ஒரு புகழ்பெற்ற கவிதை இப்படி முடிகின்றது. "எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்" என. இன்னொரு கவிதை "எனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன்" எனத் தொடங்கும். இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கும் போதுதான் ஒரு கலைஞனின் படைப்பூக்க மனம் பற்றிய ஒரு திறப்பு நமக்கு புலனாகின்றது. அ முத்துலிங்கம் அவர்கள் தனது நடையை அயராது தொடர்ந்து கொண்டேயிருக்கிறார். எதற்கான தேவையாகவும் இல்லாமல், ஒரு பறவையின் இயல்பான பறத்த போல அவருடைய எழுத்துப் பயணம் தொடர்ட்டும்.</p><p><br /></p><p>நமக்கான சதுரங்களில் நாமும் நடந்து பயில்வோம். அவருக்கு இல்லாத ஒரு வசதி நமக்கு உண்டு. அவரைப் போன்ற முன்னோடிகளின் தடம் பற்றிக் கொண்டு நாம் பறக்கலாம். இயல்பாக. எதையும் நிறுவ வேண்டிய அவசியமற்ற ஏகாந்த பயணத்தில். </p><div><br /></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-30880544.post-23672851299231366142023-01-29T09:39:00.004-05:002023-02-01T21:04:56.189-05:00குறையொன்றுமில்லை“<b><span style="color: #660000; font-size: large;">மூ</span></b>று கண்டேகே ஹோரடுத்தேனே…. ஹேள்றி” என்றவாறே அறைக்குள் நுழைந்த பசவராஜ் மொலெட்டி, அப்போதுதான் அங்கே நாகேசுவரன் அமர்ந்திருப்பதை கவனித்தார். <div><br /></div><div>அந்த பத்துக்கு பதினைந்து அலுவலக அறை பசவராஜிற்கு ஒருவிதத்தில் மூச்சுத் தினறலாகத்தான் இருந்தது. ரிடயர்மெண்ட்டிற்கு ஒரு வருஷம்தான் இருந்தது. இனி இங்கிருந்து வேறு பொறுப்பிற்கு மாற முடியாது. மாறவும் விடமாட்டார்கள். இந்த ஐடிபி பொறுப்பில் என்ன பெரியதாக கழட்டி விட முடியும்? கடைசியாக பிடிஎம் ஆறாவது ஃபேஸில் ஒரு நாற்பதுக்கு முப்பது ப்ளாட்டாவது ரெஜிஸ்தர் பண்ண முடிந்தால் இந்த ஆர்டிஓ ஆபிசில் குப்பைக் கொட்டியதற்கு ஏதோ நியாயம் செய்தது போலாகும். அறை வாசலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய இருக்கையில் அமர்ந்தவர், எதிரில் அமர்ந்திருந்த நாகேசுவரன் மீது கண்களை ஓட்டினார். அவர் எதிரில் இருந்த மேஜைக்கும் அறை வாசலை ஒட்டிய சுவருக்கும் இடையே போடப்பட்டிருந்த நாற்காலியில்தான் நாகேசுவரன் அமர்ந்திருந்தான். இவரைப் பார்த்ததும் அவன் எழுந்திருக்க முயல, </div><div><br /></div><div>“கூத் கொள்றீ…. கூத் கொள்றீ…” என்றவாறே, அவனைப் பார்த்து சிரித்தார். </div><div><br /></div><div>“இல்லி டவர் இருவதில்லா. அதக்கே ஹொரகே ஹோகுதேனே” என்றவர் மனதில் நாகேசுவரன் பற்றிய சில கணக்குகள் படபடவென ஓடிக்கொண்டிருந்தன. </div><div><br /></div><div>“யாவ ஊரின்னவரு நீரு? பெங்களூரா?”, மேஜையின், எழுத்து பலகையை இழுத்து தன்னுடைய குறிப்புப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கலானார். </div><div><br /></div><div>“பெங்களூர் ஒன்லி” என்ற நாகேசுவரன், சட்டென கேள்வியின் பொருளை உள்வாங்கிக் கொண்டவனாக, “ஆக்சுவலி ஐயம் ஃப்ரம் தமிழ்நாடு. மதுரை” என்றான். </div><div><br /></div><div>பசவராஜ் புன்னகைத்தார். இனி மொழிச் சிக்கல் இல்லாமல் உரையாடலாம் என்பது போல,
“ஓ… அந்த பெரிய கோவில் இருக்குமே… மீனாட்சி கோவில்” என்று உடைந்த ஆங்கிலத்தில் உரையாடலைத் தொடரலானார். </div><div><br /></div><div>“இங்க சாஃப்ட்வேர்லயா வொர்க் பண்றீங்க. பேரு என்ன” என்றார்.
அந்த பெயரென்ன கேள்வி தனக்கும், தன் நிறுவனத்திற்குமெனப் புரிந்து கொண்டவனாக, </div><div><br /></div><div>“நாகேசுவரன். இன்ஃபோசிஸ்” என்றான். </div><div><br /></div><div>குறிப்புப் புத்தகத்தில் அவனுடைய பெயரைக் கண்டுபிடித்தவராக, பசவராஜ்,, </div><div><br /></div><div>“போன வாரம் வந்திருந்தீங்களோ…. நான் அப்ப லீவு" என்றவர் அவனை நிமிர்ந்து பார்த்து, </div><div><br /></div><div>"இன்டர்நேஷனல் ட்ரைவிங் பர்மிட் தானே?... எந்த நாட்டுக்குப் போறீங்க” என்றார். அவர் முகம் நல்ல பிரகாசமாகிவிட்டிருந்தது. </div><div><br /></div><div>“யூ எஸ். ஜேஸ்டன்வில்ன்னு பென்சில்வேனியா ஸ்டேட்ல” என்றான் நாகேசுவரன். </div><div><br /></div><div>அவருக்கு அந்த புவியியல் குறிப்புகள் எல்லாம் அர்த்தமாகியது போலத் தெரியவில்லை. எழுத்துப் பலகையை உள்ளே தள்ளியவர், நாற்காலியை முன்னுக்கு இழுத்துக் கொண்டு, </div><div><br /></div><div>“டிரைவிங் ஸ்கூல் வழியா வந்தீங்களா?” என்றார். </div><div><br /></div><div>கொடுக்க வேண்டிய படிவங்கள், மருத்துவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட், வீசா பிரதிகள் எல்லாம் தயாராக இருக்க எதற்கு இந்தக் கேள்வி என்பது போல தயக்கமாகப் பார்த்தான். ‘நீ என்ன சொல்லப்போகிறாய்’ எனத் தெரியும் என்பது போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் பசவராஜ். </div><div><br /></div><div>“மஞ்சுநாத் டிரைவிங் ஸ்கூல்….” அவன் முடிப்பதற்குள், தலையை ஆமோதிப்பாக அசைத்துக் கொண்டவர், “ஃபோன் போடுங்க அவங்களுக்கு. இங்கதான் இருப்பாங்க. வரச் சொல்லுங்க” என்றார். கண்டுபிடித்து விட்டேன் பார் என்கிற சந்தோஷம் அவர் குரலில் ஒலித்தது. </div><div><br /></div><div>நாகேசுவரன் ஃபோனை எடுத்து கார்த்திகேயனை அழைத்தான். ஃபோனை அவர் எடுக்கவில்லை. </div><div><br /></div><div>“டவர் கிடைக்காது. வெளில போய் வேணா கூப்பிடுங்க” என்று பசவராஜ் கூற, நாற்காலியில் இருந்து எழுந்திருக்க முற்பட்டான் நாகேசுவரன். அதற்குள் அவனுடைய ஃபோன் “குறையொன்றுமில்லை” எனப் பாட ஆரம்பித்தது. கார்த்திகேயன்தான் திரும்ப அழைத்திருந்தார். </div><div><br /></div><div>“சொல்லுங்க சார்” என்றவரிடம், பசவராஜ் அவரது அறைக்கு அழைக்கிறார் எனச் சொல்ல, கார்த்திகேயன் படபடப்பாக, “நீங்க எதுக்கு சார் எங்க பேரைச் சொன்னீங்க? ஐடிபிக்கு ஃபார்ம் கொடுத்து ஐநூறு ரூபாய் கட்டினா போதும். அந்தாளு சும்மா எங்கக்கிட்டேர்ந்து கறக்கிறதுக்கு பிளான் போடறார்…. ச்சச்ச….” என்றவர், சற்று இடைவெளிவிட்டு, “தோ வந்திடறேன்” என்று அழைப்பைத் துண்டித்தார். </div><div><br /></div><div>“ப்யூட்டிஃபுல் சாங். எம் எஸ் அம்மா பாட்டுதானே” என்றார் பசவராஜ். </div><div><br /></div><div>அவர் எதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள நாகேசுவரனுக்கு சில நொடிகள் பிடித்தன.
“ஆமாம். எனக்கு மிகவும் பிடித்த பாடல் “ என்றான். </div><div><br /></div><div>“ஆமாவா” என்றார் பசவராஜ். கன்னடத்தில் ‘அவுது’ என்றால் தமிழில் ஆமாம் எனப் பொருள். உரையாடலின் போது சகஜமாக ‘அவுதா’ என்பார்கள். அதை அப்படியே தமிழர்களிடம் ‘ஆமாவா’ எனக் கேட்பது கன்னடியர் வழக்கம். கன்னடியர் தமிழுக்கு அளித்த கொடை ‘ஆமாவா’. </div><div><br /></div><div>என்றைக்கு பயணம், எந்த ஃப்ளைட், எப்போது கிளம்பும், அந்த ஊரில் என்ன கிளைமேட் என்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாரேத் தவிர, நாகேசுவரன் நாகேசுவரன் கையில் இருந்த விண்ணப்ப படிவங்கள் எதையும் வாங்கிக் கொள்ள முன்வரவில்லை. </div><div><br /></div><div>பத்து நிமிடங்களில், கத்தையான பேப்பர்களை மார்போடு சேர்த்து பிடித்துக் கொண்டு அறைக்குள் வந்த கார்த்திகேயன், “குட் ஈவ்னிங் சார்” என்றார் பணிவாக.
அதுவரை, நாற்காலியில் முன்னகரந்து நாகேசுவரனோடு பேசிக் கொண்டிருந்த பசவராஜ், சட்டென பின்னுக்கு சாய்ந்து, ஒரு காலைத் தூக்கி மற்றொரு கால் மீது போட்டுக் கொண்டு, “சாயங்காலம்” என்றார். </div><div><br /></div><div>கார்த்திகேயனோடு கன்னடத்தில் சம்பாஷித்துக் கொண்டே, மேஜையின் இழுப்பறையை இழுத்து திறந்தவர், அப்படியே நிறுத்திவிட்டு, பேச்சைத் தொடர்ந்தார். சமிக்ஞையை புரிந்து கொண்ட கார்த்திகேயன், பேசிக்கொண்டே முன்னகர்ந்து, சற்றுக் குனிந்து கையில் இருந்த பேப்பர் கத்தையினூடே சில கரண்சி நோட்டுகளை அந்த டிராயரில் நழுவவிட்டார். </div><div><br /></div><div>கார்த்திகேயனின் முதலாளி மஞ்சுநாத், அவருடைய சொந்த ஊருக்கு சென்ற கதையை அதுவரைக் கேட்டுக் கொண்டிருந்த பசவராஜ், உடனே உரையாடலை முடித்துக் கொண்டதற்கு அறிகுறியாக, தலையை அசைத்தபடி, மேஜை டிராயரை மூடிவிட்டு நாகேசுவரனிடம் திரும்பி,
“கொட்றீ” என்று கையை நீட்டி, நாகேசுவரனின் விண்ணப்ப படிவங்களை வாங்கிக் கொண்டார். </div><div><br /></div><div>“ஃபார்ம் 4A, ஃபார்ம் 1A எம் சி, போட்டோ… இங்க ஒண்ணு ஒட்டிடுங்க. அந்த புக்குக்கு ஒண்ணு, அப்புறம் இன்னொண்ணு… “என்றவர்
“அந்த பாஸ்போர்ட் காப்பில்லாம் நோட்டரைஸ் பண்ணிட்டு வாங்க. எல்லா அனுபந்தமும்…. நோட்டரைஸ் செய்திருக்கனும்னு, போன வருஷமே மெமோ போட்டாச்சே” என்றார் கார்த்திகேயனை திரும்பிப் பார்த்து. </div><div><br /></div><div>“தோ… கீழ மொகமதுகிட்ட வாங்கிட்டு வந்திடறேன் சார்” என்றவர், நாகேசுவரனிடம் வந்து குனிந்து “ஆயிரத்தைநூறு கொடுங்க” என்றார். நாகேசுவரன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பதை, பக்கவாட்டுக் கண்களில் பார்த்துக் கொண்டிருந்த பசவராஜ், கார்த்திகேயன் அறையை விட்டு வெளியேறியதும், </div><div><br /></div><div>“நீங்கள் இவர்களை எல்லாம் ஊக்குவிக்கக் கூடாது. இங்கெல்லாம் நாங்கள் இடைத்தரகர்களை அனுமதிப்பதே கிடையாது தெரியுமா. ஜி ஓ கூட போட்டிருந்தார்கள். இருந்தும் எப்படியோ உள்ளே புகுந்து விடுகிறார்கள்” என்றார் அலுப்போடு. </div><div><br /></div><div>நாகேசுவரனுக்கு என்ன பேசுவது எனத் தெரியாமல் மௌனமாக இருந்தான். சென்ற வார புதன்கிழமையே வந்தபோது, அவனிடம் பயண விவரங்களைக் கேட்ட அதிகாரி, “ஊருக்கு போறதுக்கு முதல்நாள் வாங்க. அப்பத்தான் ஐடிபி கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டிருந்தார். நாளை சனிக்கிழமை நடுயிரவில் பிரயாணம். இப்போதே மணி இரண்டு ஆகியிருந்தது. ஓட்டுநர் உரிமத்தை கையில் வாங்கிவிட்டால் போதுமென்பது போல் இருந்தது நாகேசுவரனுக்கு. </div><div><br /></div><div>செல்ஃபோன் ஒலிக்க, முகமெல்லாம் மலர கையிலெடுத்தவர்,
“என்னோட பேத்திதான். இங்க டவர் சரியா கிடைக்காது. பேசிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு முகமெல்லாம் இளகி கொஞ்சலாக “ஹேளு சின்னா.... ஹேளு… ஹலோ” என்றபடியே அறையை விட்டு வெளியேச் சென்றார். </div><div><br /></div><div>அடுத்த பத்து நிமிடங்களில் உள்ளே வந்த கார்த்திகேயன், பசவராஜ் அறையில் இல்லாததை கவனித்ததும், நாகேசுவரனிடம் தணிந்த குரலில், “சரியான மூட்டைப் பூச்சிகள் சார் இவர்கள். உறிஞ்சி எடுத்து விடுவார்கள். நீங்க முன்னாடியே கொண்டு வந்துக் கொடுத்தாலும் அப்ளிகேஷனை வாங்க மாட்டார்கள். ஜர்னிக்கு முதல் நாள் உக்காத்தி வச்சு, கற கறன்னு கறப்பார்கள். ஐறூறு ரூவாதான் அப்ளிகேஷன் ஃபீஸ். அதுக்கு மேல என்னக் கேட்டாலும் கொடுக்காதீங்க” என்றார். </div><div><br /></div><div>அதற்குள் முதுகுப் பக்கம் நிழல் தட்ட, சட்டென நிமிர்ந்து பின்னால் திரும்பியவர், “எல்லாம் நோட்டரைஸ் பண்ணிட்டேன் சார். பாஸ்போர்ட், வீசா, டிக்கெட் காப்பி எல்லா அனுபந்தமும் சேத்து வச்சிருக்கேன்” என்றார். </div><div><br /></div><div>அவருடையக் குரலைக் கூட பொருட்படுத்தாதவராக தன்னுடைய நாற்காலியில் சென்றமர்ந்த பசவராஜ், மேஜையின் இழுப்பறையத் திறந்து வேறேதோ தேடுவதில் முனைந்தார். இது இன்னொரு வகை சமிக்ஞை என்பது போல, கார்த்திகேயன், பவ்யமாக குனிந்து “சாயங்காலம் சார்” எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். </div><div><br /></div><div>“இது….” என்று இழுத்த பசவராஜ், மேஜையின் மீதிருந்த ஒரு பெரிய பதிவேடு போன்ற புத்தகத்தைத் திறந்து கொண்டே, </div><div><br /></div><div>“மிலிடரி ஃப்ளாக். நீங்க ரெண்டாவது வாங்கிக்கனும். எல்லாம் இராணுவத்துக்கு சாரிட்டி” என்றுவிட்டு, நாகேசுவரனை நிமிர்ந்து பார்த்து “ஒண்ணு நூறு ரூவா” என்றார்.
நாகேசுவரன் சிறிய தயக்கத்திற்குப் பின்னர், அவர் சொல்வதைப் புரிந்து கொண்டவனாக, பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினான். </div><div><br /></div><div>“அஞ்சு கூட வாங்கிக்கலாம். எல்லாம் மிலிட்டரிக்குதான்” என்றவர், அவன் பெயர் விலாசம் என எதையுமே குறித்துக் கொள்ளாமல் பதிவேட்டை மூடி வைத்தார். மேஜை மீது அடுக்கி வைத்திருந்த கொடிகள் எதையும் தொடாமல், மேஜையின் இன்னொரு இழுப்பறையைத் திறந்தார். </div><div><br /></div><div>“இப்ப ஃபோன் பண்ணாளே என் பேத்தி, அவ ஸ்கூல்ல ஒரு டிராமா போடறாங்க. போலியோ தடுப்பு மருந்துக்கான விழிப்புணர்வுக்காக. நீங்க டொனேஷன் டிக்கெட் ஏதாவது வாங்கிக்கனும். நீங்க டிராவல்ல போயிட்டாலும், உங்க ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் யார் வேணா வரலாமே” என்றவாறே ஒரு ரசீது புத்தகத்தை எடுத்தார். </div><div><br /></div><div>நாகேசுவரன் “வெரி நைஸ்” என்று ஃபார்மலாக சொல்லிவிட்டு, தயக்கத்துடன் பையிலிருந்து மற்றுமொரு ஐநூறு ரூபாயை எடுத்தான்.
“மினிமம் இரண்டாயிரம் ரூபாய்” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார் பசவராஜ்.
சற்று அதிர்ந்தவனாக நாகேசுவரன் பின்னகர, </div><div><br /></div><div>“என்னுடைய பேத்திக்கு, யார் ஊனமாக இருந்தாலும் மனதுக் கேக்காது. மிகவும் உருகிவிடுவாள். ஆறாம் வகுப்புத்தான் படிக்கிறாள். ஆனால் அவ்வளவு உபகார சிந்தனை அவளுக்கு”, அவர் கண்கள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர் கவனம் முழுவதும் அவன் கைகள் மீது இருந்தன.
பையில் சற்று தேடி, ஓர் இரண்டாயிரம் ரூபாய்த் தாளை வெளியே எடுத்ததும், சற்றும் தயக்கமில்லாமல் அவரே முன்னகர்ந்து, அந்த கரன்சியை பற்றி இழுத்துக் கொண்டார். கையில் இருந்த ரசீது புத்தகத்தை சுவாதீனமாக மூடி வைத்தவர், </div><div><br /></div><div>“போலியோ டிராப்ஸ்ல கூட பாலிடிக்ஸ் உண்டு. இந்த டிராமால அதெல்லாம் சொல்லியிருக்காங்க” என்றவாறே,மேஜையின் எழுத்து மேஜையை இழுத்தார்.
அடுத்த வருடத்திலிருந்து ரிடயர்மெண்ட் வாழ்க்கை, அவருடைய மருமகள் வீட்டிற்கு அடங்காமல் நடப்பது, பேத்தியின் பெயின்டிங் திறமைகள் என்று நாகேசுவரனிடம் சொல்லிக் கொண்டே, ஐடிபி புத்தகம் ஒன்றில் அவனுடைய பெயரெழுதி, புகைப்படம் ஒட்டி, கையெழுத்திட்டு, முத்திரை குத்தி முடித்தார்.
நாகேசுவரன் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்த சர்வதேச ஓட்டுநர் உரிமப் புத்தகத்தை இப்படியும் அப்படியுமாக ஒருமுறை புரட்டிப் பார்த்துவிட்டு அவனிடம் சட்டென நீட்டினார். </div><div><br /></div><div>பசவராஜ். அந்த நடைமுறை முடிந்துவிட்டதா என்கிற ஐயதுடனே நாகேந்திரன் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டான். </div><div><br /></div><div>“ஒரு வருஷம் வேலிடிட்டி உண்டு. நெக்ஸ்ட் டைம், நேரே ஆபிசுக்கு வந்திருங்க. புரோக்கர் எல்லாம் யாரும் தேவையில்லை. அவங்கள்லாம் ஒட்டுண்ணி மாதிரி. உங்களுக்கு வீண் செலவுதான்” என்றார். </div><div><br /></div><div>“மிகவும் நன்றி சார்” என்று கைகூப்பி வணங்கிவிட்டு, நாற்காலியில் இருந்து சற்று முக்கிக் கொண்டு எழுந்தான் நாகேசுவரன். நாற்காலிக்கும் பக்கவாட்டு சுவருக்கும் இடையே சற்றுக் கீழாக சாத்தி வைத்திருந்த, முன்கைக்கு வளையமும், சிறிய கைப்பிடியும் கொண்ட ஊன்றுகோலை எடுத்து கையில் பொருத்திக் கொண்டான். சற்று தடுமாறியபடி மேஜைக்கும் நாற்காலிக்கும் இடையிலிருந்து வெளியே வர முயன்றான். பசவராஜ் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. </div><div><br /></div><div>“ஒந்நு நிமிஷா… ஒந்நு நிமிஷா…” என்றவரின் குரலில் இருந்த பதட்டத்தைப் புரிந்து கொண்டவனாக, நாகேசுவரன்,
“அதொன்றும் ரெஸ்ட்ரிக்ஷன் இல்லன்னு மெடிகல் சர்டிஃபிகேட்ல கிளியரா போட்டிருக்காங்க சார்” என்றான். </div><div><br /></div><div>அவனுடைய விண்ணப்ப படிவத்தை அவசரமாக புரட்டிய பசவராஜ், “ஆ, சரி. சரி. ஒரு சின்ன அஃபிடவிட் மாத்திரம் அனுபந்தம் போட்டுக்கலாம்.” என்றவர் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்துவிட்டு.
“எனக்கு மூணு மணிக்கு கிளம்பனும் வேற. நான் அப்புறமா கார்த்திகேயன் வச்சு சேத்துக்கிறேன். ஒரு தௌசண்ட் ருபீஸ் மட்டும் கொடுத்திருங்க” என்றார், நாகேசுவரனை நிமிர்ந்துப் பார்த்து. </div><div><br /></div><div>நாகேசுவரன் அவருடைய கண்களையே ஒருகணம் உற்றுப் பார்த்தான். அனிச்சையாக பையிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் அவனுடைய விண்ணப்ப படிவத்தின் மீது சிறு குறிப்பொன்றை எழுதிக்கொண்டே, ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டார். </div><div><br /></div><div>நாகேசுவரன் கையிலிருந்த ஃபோன் ‘குறையொன்றுமில்லை’ எனப் பாட ஆரம்பித்தது. பசவராஜ் அவனை நிமிர்ந்து பார்த்து “அற்புதமான பாடல். என் பேத்தியும் ஒருமுறை அவள் பள்ளிக்கூடத்தில் இதைப் பாடியிருக்கிறாள்” என்றார் பெருமை பொங்கி வழிய. பிறகு கையைத் தூக்கி, “ஹேப்பி ஜர்னி” என்று வாழ்த்தினார் நாகேசுவரனை.
</div><div><br /></div><div>(நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலரில் (2023) வெளியான படைப்பு) </div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-10385701068789484622022-10-16T09:22:00.005-04:002022-10-16T09:22:43.470-04:00சஞ்சயனின் கண்கள்<p><b>[ </b>பிரபல எழுத்தாளர் <u><span style="color: #cc0000;">பானுமதி நடராஜன்</span></u> அவர்கள், அம்மாவின் பதில்கள் சிறுகதை தொகுப்பிற்காக எழுதிய நூல் விமர்சனம். புனைவுகள் மட்டுமல்லாது, "வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " என்ற ஃபேஸ்புக் குழுமத்திலும் தொடர்ந்து வாசித்து, நுட்பமான விமர்சனக் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பானுமதி அவர்களைப் போன்றோரின் வாசிப்பு வீச்சு எப்போதும் வியப்பளிப்பது. இந்தக் கட்டுரையின் தலைப்பு அதற்கோர் உதாரணம். இன்னுமொரு கிளப்ஹவுஸ் நிகழ்ச்சியில், 'கத்திக்காரன்' கதைக்கென அவர் முன்வைத்த விமர்சனமும் அபாரமானது. இது போன்ற கருத்து பகிர்வுகளைப் பெறுமிடத்தில் இனி எப்போதும் நம் எழுத்து இருக்க வேண்டும் என மனவுறுதி கொள்ளும்படியான விமர்சனத்திற்கு நன்றி <b>]</b></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg-K_yZwLdNyAM6M7TxDkALCeo673vxWV0kltt8-7CoPyvFsVPzLwrfTOYxihmGLC3ceeQ3grNg_R8slOmxC4ocnvj2d6eaBMQgsx6219PaqKLJP8IFNH2WjtUQdTBMA9n9bP7KpeglzxiGSaDSpkobcEJoVJHo6IFC1RHrx_zSM2MlwDnKLA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="1139" data-original-width="843" height="400" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg-K_yZwLdNyAM6M7TxDkALCeo673vxWV0kltt8-7CoPyvFsVPzLwrfTOYxihmGLC3ceeQ3grNg_R8slOmxC4ocnvj2d6eaBMQgsx6219PaqKLJP8IFNH2WjtUQdTBMA9n9bP7KpeglzxiGSaDSpkobcEJoVJHo6IFC1RHrx_zSM2MlwDnKLA=w296-h400" width="296" /></a></div><br /><br /><p></p><div dir="auto">அம்மாவின் பதில்கள் & பிற கதைகள்</div><div dir="auto">ஆசிரியர்: ஸ்ரீதர் நாராயணன்</div><div dir="auto">பதிப்பகம்: யாவரும்-பதாகை</div><div dir="auto">விலை ரூபாய் 170/_</div><div dir="auto"><b><span style="color: #cc0000;"><u><br /></u></span></b></div><div dir="auto"><b><span style="color: #cc0000;"><u>சஞ்சயனின் கண்கள்</u></span></b></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எழுத்தாளரின் 13 சிறு கதைகளும் வாழ்வெனும் போர்க்களத்தில் நடக்கும் அனைத்தையும் சஞ்சயனின் கண்களால் பார்த்திருக்கின்றன. எந்தத் தரப்பையும் சாராமல், ஆனால், எதையும் விட்டுவிடாமல் பார்க்கவும், பேசவும், மௌனிக்கவும் செய்கின்றன. போரின் முன்னே தோன்றும் அசாதாரண அமைதி, அறத்துடன் தொடங்கி பின்னர் அனைத்தையும் விட்டுவிட்டு உக்கிரமாகும் போர், தளர்ந்து, ஒசைக் கேவலுடன், கதறலுடன், பின் எப்போதுமே மறக்க இயலாத வடுக்களுடன், சிறிய இனிமை காட்டி, அதனால் சிறிது நிம்மதியூட்டி அடங்கும் போர் என்று அனைத்தும் கதைகளில் காணக் கிடைக்கின்றன.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">விடுதலைப் போரில் எம்டன் செல்வரத்தினத்தை காட்டும் கதை அவரது வரலாற்று அறிவைச் சொல்கிறது என்றால், ஜென்மக் கணக்கும், அம்மாவின் பதில்களும் குடும்ப நிகழ்வுகள். எம்டன் செல்வரத்தினம் ,கிழக்குப் பதிப்பகத்தின் சென்னை தின சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. அதில் நான் ஆறுதல் பரிசு அஸ்வதா மாவிற்காக பெற்றேன் (சந்தடி சாக்கில் சுயபுராணம்) தரகு, உடைநீர் ஓசை, கற்பகம் மூன்றும் மையமாக பெண்ணைச் சுற்றி வந்தாலும் மூவருமே ஒவ்வொரு விதத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள். ஆரஞ்சு பொம்மை, பிரார்த்தனை, செந்தாழை மூன்றிலும் தாய்மை கொண்டாடப்படுகிறது. ஆனால், மாறுபட்ட விதங்களில்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அம்மாவின் பதில்களில் மனோதத்துவம் இழைஇழையாகப் பின்னப்பட்டுள்ளது.'அம்மாவைப் பற்றி பேசும் போதெல்லாம், நந்தினியின் குரலில் ஆங்காரம் ஏறிக்கொண்டே போகும். அவள் கோபம் அம்மாவின் மேலா, அல்லது அம்மாவின் இடத்தில் அவள் இல்லாமல் போனதாலா என்று சமயத்தில் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்.'. அம்மா, பழைய சம்பவங்களை நினைப்பதில்லை. அப்பா, தேங்கிய குட்டையாகி விட, அவள் ஜீவ நதியாக ஓடுகிறாள்_அடுத்த மாநிலம் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அவளது கம்பீரமே அவள் சொல்லிக் கொண்டே இருக்கும் பதில்; விமர்சனங்கள் அவளை பாதிப்பதில்லை. ஆனால், மகன்'திகில் உலகில்'காண திரை :நிகழ்ச்சியில் திடீரென கத்தியபடி வரும் குள்ளனை பார்த்து பயப்படுகிறான்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஜென்மக் கணக்கு அக்னி நட்சத்திரப் போர். இதில் மகனுக்கும் சிற்றப்பனுக்கும் இடையே நிலவும் வார்த்தைகள் இல்லா வஞ்சப்போர்.'புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்ட'தயாளன் சமநிலையைப் பேணச் சொல்லுவது அபாரம். கதையின் முடிவில் குமரம்பெருமாள் காரில் எப்படி ஏறுகிறார் என்பதை படியுங்கள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">தரகில் என்னை கவர்ந்தது, குறைவாகப் பேசி தன்னை நிறைவாக ஒரு சாட்சியாக மட்டுமே நிறுவிக் கொண்ட கருணாகரன் முத்தாய்ப்பாக சொல்வது <span style="font-family: inherit;"><span class="x1n2onr6" style="font-family: inherit; position: relative;"><div class="x1i10hfl xjbqb8w x6umtig x1b1mbwd xaqea5y xav7gou x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz" role="button" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; touch-action: manipulation;" tabindex="0"><span style="color: #709ee1; font-family: inherit; font-weight: bold;">அருமையாக</span></div><div class="x1o1ewxj x3x9cwd x1e5q0jg x13rtm0m x1ey2m1c xds687c xg01cxk x47corl x10l6tqk x17qophe x13vifvy x1ebt8du x19991ni x1dhq9h" data-visualcompletion="ignore" style="border-radius: inherit; font-family: inherit; inset: 0px; opacity: 0; pointer-events: none; position: absolute; transition-duration: var(--fds-duration-extra-extra-short-out); transition-property: opacity; transition-timing-function: var(--fds-animation-fade-out);"></div></span></span> இருக்கிறது_'அதானே, தரத்துக்கு ஏத்த தரகு, வடியலுக்கு ஏத்த விறகு '</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">உடைநீர் ஓசையில், மாலினி, ரகுராமனை பார்த்து அவள் பேச நினைத்த சொற்கள் அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு அவள் மட்டும் வெளியே கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஆரஞ்சு பொம்மை, வீடுகளில் நாம் காணும் யதார்த்தம். நண்பர் வருகையில் ஒரு முகம், அவர் குழந்தைக்காக தரும் பரிசை கொண்டாடும் அதே முகம், அவர் போன பிறகு அந்தப் பரிசைஅப்புறப்படுத்தும் உள் மனம் காட்டும் நிஜமுகம். ஸ்ரீதருக்கு பிடித்த நிறம் ஆரஞ்சோ? அம்மாவின் பதில்களில் ஆரஞ்சு வண்ண இனிப்பு பெட்டி, இதில் பொம்மை, கற்பகம் கதையில் ஆரஞ்சு வண்ண ஆர்கிட் பூக்கள்! </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கற்பகம் கதை வண்ணதாசனை நினைவில் கொண்டு வந்தது-'இரவில் மலர்ந்த பன்னீர் மலர், பகலில் ஒளித்து வைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடும்.'மருதாணி வெளிறிய விரல்களுடன் கற்பகம் மறு வீட்டுக்கு வந்தது அவள் வாழ்வில் பளீரென்ற வண்ணத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது என்பதை அழகாகச் சொல்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பிரார்த்தனை, அப்படி ஒரு நண்பனுக்காகவும் அவன் அன்னைக்காகவும் என்னை ஏங்க வைத்துவிட்டது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சாமியும் கும்பிட வேண்டும் , மேனியும் நோகக்கூடாது என்பதைப் போன்ற கதை ஏ பி என் பெட்டிக்கடை சம்பவம். லைப்ரரி புத்தகத்தை அபேஸ் செய்யும் பலரை நான் அறிவேன்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சவரம் செய்த முகம் உண்மையில் காட்டுமிராண்டியின் முகம். தோடி ராகத்தை அடமானம் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்த ஜமீன்தாரை நினைவு படுத்தும் கோர முகம்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இளைப்பாறுதல் கதையின் நாயகி ஒரு நார்மடி பாட்டி. பேருறுவம் எடுத்துக் கொண்டு நிற்கிறாள். பேத்தியின் கணவனுக்கு மாப்பிள்ளை என்ற மரியாதை மட்டும்தான்-ஆனால் அழுத்தமாக பேசுகிறாள்-பேசிப் பார்த்து பிரச்சனையை தீர்க்க சொல்கிறாள்; வம்சத்தை வளர்க்கச் சொல்கிறாள்.'பூ தச்ச பின்னலோடு, தாழம் பூவில் மல்லிகை சரம் கோர்த்து, சந்திர சூரிய வில்லை எல்லாம் அலங்கரிக்க நீளமான பின்னலோடு'பார்த்த கொடும்பாளூர் அத்தை மகனின் உள்ளார்ந்த காதல்.; ஒரு சிலருக்கு நினைவில் மட்டுமே வாழ கொடுத்து வைத்திருக்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கோடி டா மன அவஸ்தைகளைப் பற்றி, உடல் சார்ந்து சொல்கிறது. எவ்வளவு பிரியமான உயிர் துணையாக இருந்தாலும் அந்தத் துணை இறந்த பிறகு எதிர்பாலினத்தோழமை ஒன்றாவது வேண்டி இருக்கிறது. குள வரம்பினுள் ததும்பும் நீர்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">செந்தாழை எழுதப்பட்ட விதத்தாலும், உணர்வுகளின் ஓட்டத்தாலும், யார் பெற்ற பிள்ளையோ இப்படி அடையாளம் இல்லாமல் மார்ச்சுவரியில் கிடக்கிறதே என்று அலறும் தாய்மையின் இயல்பாலும், அவன் தன் பிள்ளை இல்லை என்றாலும், இனியும் தான் ஐட்டங்காரன் அன்னை என்றுதான் அழைக்கப்பட கூடுமோ என்ற பகீர் உணர்வாலும் சிறப்பாக வந்துள்ள கதை. என்னை மிகக் கவர்ந்த கதை</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">'ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்து போகும் பல கண ங்களையும், அவற்றில் தொக்கி இருக்கும் உறவுகளையும், அவற்றினுள் உள்ள ஒலிகளையும், மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்ல மெல்ல செவியைத் துளைக்கும் கர்ண நாதம் போல் அதிர ஆரம்பிக்கின்றன.'எழுத்தாளர் அம்பை</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். கதை தரகு பக்கம் 39-சோகைய அன</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="color: #050505; font-family: inherit;">மதுரை, திருநெல்வேலியின் தமிழும், அந்த வட்டாரத்தின் சொல் மொழிகளும் ஈர்க்கின்றன.</div><div dir="auto" style="color: #050505; font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;"><div dir="auto"><div dir="auto" style="color: black; font-family: "Times New Roman"; font-size: medium; white-space: normal;"><br /></div><div dir="auto" style="font-family: "Times New Roman"; font-size: medium; white-space: normal;"><u><span style="color: #cc0000;"><b>நூலினைப் பெற</b></span></u></div><div dir="auto" style="color: black; font-family: "Times New Roman"; font-size: medium; white-space: normal;"><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">Be4Books</div><div dir="auto" style="font-family: inherit;">#24, Shop No.B, First Floor, </div><div dir="auto" style="font-family: inherit;">S.G.P Naidu Complex, </div><div dir="auto" style="font-family: inherit;">Velachery main road, </div><div dir="auto" style="font-family: inherit;">Velachery, Chennai -600 042.</div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;">Conduct & watsup No.90424 61472</div><div dir="auto" style="font-family: inherit;">gpay:+91 99400 21472</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;">(பிரதிகள் வேண்டுவோர் என்னுடைய தனிப்பட்ட வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். +1 (630) 363-0673)</div></div></div></div></div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-55748120653276919152022-09-27T19:43:00.006-04:002022-09-27T19:43:43.428-04:00கர்ண நாதம்<p> </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjMq7a8OMUCEWpIDs7z5RJ6gPd2ZM8LrpVT7OUj766hd-DTwll7rt1polnMGRTmho3aNSahYfHvnRGT8H2j-VU2MYQNtTht3nXe9dAKMsKw9Ailu3qN7lStNB8tRq47g2RhBMMlWUChWCI5wJ8i0XKy45Y7C_Th2C9cemzqW8UXtMM_XRwhJA" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="323" data-original-width="666" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjMq7a8OMUCEWpIDs7z5RJ6gPd2ZM8LrpVT7OUj766hd-DTwll7rt1polnMGRTmho3aNSahYfHvnRGT8H2j-VU2MYQNtTht3nXe9dAKMsKw9Ailu3qN7lStNB8tRq47g2RhBMMlWUChWCI5wJ8i0XKy45Y7C_Th2C9cemzqW8UXtMM_XRwhJA=s16000" /></a></div><br /></div>("அம்மாவின் பதில்கள்" நூலுக்கு, சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் முன்னுரை.)<p></p><p><span style="box-sizing: border-box; font-family: Verdana, Geneva, sans-serif;"><span style="color: #cc0000; font-size: large;"><b>பெ</b></span></span><span style="background-color: white; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px;">ரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப் புரிந்துகொள்ள. அதில் இழைந்துவரும் ஒலிநயங்களை வேறுபடுத்திப் பொருள்கொள்ள. அப்படிச் செய்யாவிட்டால் அது வெறும் ஓசையாகவே நின்றுவிடும். ஸ்ரீதரின் கதைகளில் ஏகப்பட்ட ஓசை. விடாத பேச்சொலி. சொற்களின் பிரவாகம். நகர வாழ்க்கை மற்றும் புறநகர் வாழ்க்கையின் நடைமுறை ஓசைகள். விடாது ஒலித்து சேதிகள் வருவதைச் சொல்லும் கைபேசி; ஏழரையைக் கூட்டுபவர்கள் பேச்சொலி; சாபமிடும் பெண்களின் ஆங்கார ஒலி; ஒப்பாரி ஒலி; லாரியும் பேருந்துகளும் ஆட்டோக்களும் தடம் புரண்டு ஓடும் சத்தம்; சிகரெட் பற்றவைக்கும் மென்னொலி; தழுதழுத்துப் பேசும் ஒலி; கேவல் ஒலி; தெருவோரம் போய் பிளாட்பார க்ரில்லைப் பிடித்துக்கொண்டு ஓங்கரித்தபடி வரும் வாந்தி ஒலி; கல்யாணத்தில் எல்லோரும் பேசும் சளசளவென்ற பேச்சு; வாள்வாள் என்று அழும் பிறந்த குழந்தையின் அழுகையொலி; பூஜைச் சடங்கொலி; நெல்லைத் தமிழில் ஏச்சுப்பேச்சு; கண்ணாடித் தம்ளர்களில் ஃப்ரூட் மிக்சர் ஊற்றும் ஒலி; நார்மடி உடுத்தி வெடுக்வெடுக்கென்று பேசும் சரசம்மா பாட்டியின் பேச்சொலி; அவளைப் பற்றியே விடாமல் பேசும் அவள் வயதான மகனின் புலம்பலொலி; பலரால் சித்திரவதை செய்யப்படும் ஒருவனின் அலறல்கள்; இறந்த மகனின் சடலத்தைத் தேடிப்போய் அவன் சடலம் கிடைக்காதலால் எழும்பும் ஒரு தாயின் ஓங்கியெழும் அழுகையொலி. இப்படித் தொடர்ந்து வந்து தாக்கும் சத்தங்கள். சற்றுத் தடுமாறிப்போகும்போது பச்சைப்பசேல் என்ற புல்லில் மறைந்து கிடக்கும் பச்சைப் பாம்பு கண்ணில் படுவதுபோல் கதைகளினூடே ஓடும் மௌனத்தின் தடங்கள் கண்ணில் படுகின்றன. அந்தத் தடங்களில் நடக்கும்போது மெல்ல மெல்ல ஒவ்வொரு கதையும் விரிந்துகொண்டேபோய் எட்ட முடியாத வெளிகளுக்கு இட்டுச்செல்கிறது. எல்லா ஒலியையும் உள்ளடக்கிக்கொண்டு ஒலிக்காமல் கிடக்கும் வெளிகள். அந்த வெளிகளில் நின்றுகொண்டுதான் ஸ்ரீதர் கதை சொல்கிறார்.</span></p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">சுதந்திரமான தாயின் பல பதில்களைத் தன்னுள் புதைத்துவைத்திருக்கும் மகன். எட்வர்ட் மூங்க்கின் ஒலியில்லாத ”ஓலம்” ஓவியத்தின் பௌதிக உண்மையாய் அவன் வாழ்வு. செயற்கை ஃபைபர் காலில் மறைந்துள்ள ஜன்மக் கணக்கு. தரகு பேசப்படும் தனத்தின் பேச்சு எழும்ப வகையில்லா மௌனம். உற்றுக் கேட்பவர்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும் உடைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் கலந்திருக்கும் பல ஓசைகள். பூவாசம் முகர முடியாத ஒருவனின் முரட்டுத்தனமும் அவன் மனைவியின் உடலில் உள்ள சிகரெட் சூட்டுத் தழும்புகளும் அழிக்கமுடியாதபடி அவளுள்ளே மறைந்திருக்கும் பேசப்படாத காதல். இருபதாண்டுகளுக்குப் பின் மொட்டாய்க் கிடக்கும் கனிவை யதார்த்த உலகின் நடவடிக்கைகளில் பூட்டி வைக்கும் மௌனம். பத்திரிகை திருடும் கள்ளம். பழங்கால வீட்டின் ஓர் உள் அறையின் மூலையில் பல ஆண்டுகளாக கடன் சிட்டையுடன் விழுந்து கிடக்கும் அடகு வைத்த சவரப் பெட்டி; அத்துடன் பேச்சற்றுப்போன ஒரு கிழவர். இழவு வீட்டில் பதினான்கு வயதில் விதவையான நார்மடி உடுத்திய பெயரற்றுப்போய் விட்ட சரசம்மா பாட்டியைப் பற்றிப் பலரும் பேசும்போது கொடுங்களூர் ரெவென்யூ ஆபீஸில் தாழம்பூவில் மல்லிகைச் சரம் கோர்த்துப் பூ தைத்த பின்னலுடன் இருக்கும் அவள் பதினான்கு வயது புகைப்படத்தைத் தன் பர்ஸில் எப்போதும் வைத்திருக்கும் ஒருவனின் அமுங்கிப்போன காதல். இத்தனை மௌனங்களையும் நத்தைக்குள் இருக்கும் முத்துபோல் சுமந்துகொண்டு கடலாழத்தில் வைக்கும் கதைகள்.</p><p><br /></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiIEIclRUztWkrHWwnzOfE2RzOSmsy2uUR2IG5NC9BfQjqy03nNXcxCuF0fTX8l7NCQfmhlZ1q2Ftg0vqs3he9A8NdkQMz-CE1cICQo3woQ5qZeC6Iey3go4Ap5SwrCEu2QknGVkhA60zxAM9UzQKMfn21sOxXb4iYkA48DePOB-wODoxwofQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="809" data-original-width="1211" height="428" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiIEIclRUztWkrHWwnzOfE2RzOSmsy2uUR2IG5NC9BfQjqy03nNXcxCuF0fTX8l7NCQfmhlZ1q2Ftg0vqs3he9A8NdkQMz-CE1cICQo3woQ5qZeC6Iey3go4Ap5SwrCEu2QknGVkhA60zxAM9UzQKMfn21sOxXb4iYkA48DePOB-wODoxwofQ=w640-h428" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><p></p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">இந்தக் கதைகளின் மௌனத்தில் அன்றாட வாழ்க்கையை உரக்கவும் மெல்லவும் பேசியபடி நகர்பவர்கள் சாதாரண மனுஷிகள்; ஆண்கள். எந்த அசாதாரணத் தன்மையும் இல்லாத, பேருந்திலும் ரயிலிலும் கடைகண்ணிகளிலும் ஓட்டல்களிலும் திருவிழாக்களிலும் திருமணங்களிலும் வீட்டில் செய்யும் வைபவச் சடங்குகளிலும் அன்றாடம் நாம் பார்க்கும் சாதாரண நபர்கள். குடிகாரக் கணவனின் பொறாமையையும் சொல்லம்புகளையும் தாங்கமுடியாமல் அவளுடன் வரும் தேர்வைச் செய்யமுடியாத பதிமூன்று வயதுப் பையனை விட்டுவிட்டுத் தைரியமாக வெளியே வந்து தனக்கென்று ஒரு வாழ்வு அமைத்துக்கொண்டு எல்லோர் வாய்க்கும் அவலாகி மெல்லப்படும் கல்யாணி சாரங்கன் உலகெங்கும் உண்டு. அவர்கள் கதைகள் அவர்கள் தரப்பிலிருந்து அவர்கள் மகன்களால் அநேகமாய்க் கூறப்படுவதில்லை. இரு மனைவிகளை மணந்த ஒருவர் விட்டுச் செல்லும் ஜன்மக் கணக்கை இரு சகோதர்கள் வெளிப்படையாகப் பேசாமலேயே தீர்த்துக்கொள்ளும் சிகரெட் புகை கப்பிய கதையில் வரும் துரையும் குமரப்பெருமாளும் போர்டுகள் எழுப்பும் வேலையின் உரத்த உரையாடல்களும் உத்தரவுகளும் வசவுகளும் விழும் இடத்தில் இருப்பவர்கள்தாம். சாபமிடும் பெண்களும் புரோட்டாக் கடைகளும் ஆஃபாயில் ஆர்டர்களும் ரௌடிகளும் சூழ்ந்த அவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் ஆறப்போடச்சொல்லும் விடாமல் புகைபிடிக்கும் தயாளன்களும் இருப்பதுதான் விசேஷம்.</p><div class="separator" style="clear: both; text-align: justify;"><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">சேட்டு ஒருவர் நடத்தும் ஆயத்த உடைகள் விற்கப்படும் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணும் அவள் பெற்றோர்களும் வாழ்க்கையில் எவ்வளவு உரிமைப் போராட்டம் செய்ய முடியும்? சேட்டு அந்தப் பெண்ணை உடல்ரீதியாக உபயோகித்துக்கொண்டால் அவள் டாக்டரிடம் கூட்டிப்போகப்படுவாள். அவளுக்கு ஒன்றும் ஆகாது. அவள் தரகு பேசப்படும் ஒரு பண்டம். கிடைக்கக்கூடியது ஐம்பதாயிரம் ரூபாயும் அப்பாவுக்கு வேலையும் வெகு தூரத்தில் இருக்க ஒரு வீடும் அவள் வேலை போய்விடாது என்ற உறுதிமொழியும் கூடவே ஒரு தயார் உடைப் பொட்டலுமும்தான். இதைத் தெரிந்துகொண்டும் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் சரியான அரசு வேலை கிடைக்காத கருணாகரன்களும் இருப்பதுதான் ஏதோ வகையில் வாழ்க்கையின் கொந்தளிப்புகளைச் சமனப்படுத்துகிறது. காளான்களாக முளைத்திருக்கும் கணினி மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் புத்தக அட்டை, பக்க வடிவமைப்பு கற்றுக்கொண்ட மாலினி ஏமாந்துபோனபோதுகூட அவள் ஏமாற்றியவனைப் பார்த்து இரண்டு வார்த்தை கேட்கத் துரைப்பாக்கம்வரை தன்னுடன் வர அழைப்பது வழவழப் பக்கங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டு, அம்மாவின் வசவுகளைக் கேட்டுக்கொண்டு, வேலையில்லாமல் ஊர்சுற்றும் காசியைத்தான். அவளுக்கு வேறு கதியில்லை. கண்ணகி மாதிரி அவளால் நீதி கேட்கவும் முடியாது. காசி கூறுவதுபோல் “பஜாரி மாதிரி” செருப்பால் அடிக்கத்தான் முடியும் அவளால். தெருவோரத்தில் வாந்தி எடுக்கும்போது அதை அருவருப்புடன் பார்ப்பதும் அந்தக் காசிதான். ஆனால் அவளை வீடுவரை கொண்டுவிடும் அளவு அவனிடம் பரிவு இருக்கிறது. அவள் தோழமையுடனும் நன்றியுடனும் அவனைப் பார்த்துப் அரைப்புன்னகை செய்யலாம். ஆனால் அந்தப் புன்னகைக்கு எதிர்காலம் கிடையாது. மனத்தினுள் உள்ள ஆற்றாமையும் ஆத்திரமும் அழுகையும் உடைந்து வெள்ளமாய் வெளியே வரும்போது அந்த ஓசையும் மாலினிக்கு மட்டுமானதுதான். கதையின் முடிவில் அவனுடைய அம்மா மாலினியுடன் கல்யாணப் பேச்சை எடுக்கும்போது அவளுக்கு வெடுக்கென்று பதில் கூறிவிட்டு “ஒரே கசகசன்னு இருக்கு” என்று கூறிவிட்டுக் குளிக்கப்போகும் காசிதான் சராசரி ஆண். இவ்வளவையும் கூறும் கதையின் உடைநீர் ஓசை, கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் அன்றைய மனம் உடைந்து வெள்ளம் பெருகும் ஓசை மட்டும் இல்லை. அது யதார்த்த வாழ்க்கையின் அன்றாடக் கசடுகளையும் கழிவுகளையும் அவலங்களையும் அவமானங்களையும் சேர்த்துக்கொண்டு வரும் வெள்ளத்தின் ஓசை. செவி இருப்பதாலேயே கேட்டுவிடும் என்று கூறமுடியாத ஓசை.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">பூ வாசமாய் ஒரு சின்னப் பையனின் மனத்தில் நிலைத்துவிடும் ஒரு டீச்சர் அவன் மனத்திலாவது தான் “கறை படாதவளாய்” இருக்கவேண்டும் என்று அவன் வளர்ந்தபின் அவனிடம் கூறுவது கண்ணில் படாத மெல்லிய பட்டு இழையாய் அவர்கள் உறவு இருப்பதைக் காட்டும் கணம். அகஸ்மாத்தாக இசைக்கருவி ஒன்றில் கைபட்டு அதிலிருந்து கிளம்பும் கலவையான ஒசைபோல் எழுந்து மறையும் கணம் அது. கதையின் வெகு ஆழத்தில், சிகரெட் நாற்றத்தின் இடையே புறங்கைச் சூட்டுத் தழும்புகளை மீறி வெண்தாமரையிதழில் டயமண்ட் பதித்த மோதிரத்துடன் மின்னிக்கொண்டு கிடப்பது. மேலே எல்லோரும் பார்த்துப் பூபோட்டுக் கும்பிடுவது படுக்கப்போட்ட பெரிய கல்தான். பாதாளியம்மன் இருப்பது சாலையின் கீழே.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">ருமைத் தாத்தா ஒருவர். பாப்பாவின் செல்லத் தாத்தா. அவள் மனம் முழுவதும் வியாபித்திருப்பவர். பாப்பாவின் குழந்தைப் பருவ நினைவுகளில் முக்கியமானவர். வட்ட்டிக்கடை வைத்திருக்கும் தாத்தா. தாத்தாவுடன் ஒன்றிவரும் பிம்பம் தாத்தாவுக்கு வழக்கமாக சவரம் செய்ய வரும் இன்னொரு கிழவர் வேலு. ஏழை. பாட்டியிடம் பழந்துணி கேட்பவர். மிகவும் வயதானதால் வருவதை நிறுத்தியவர். தாத்தா சாகக் கிடக்கிறார் வெளுத்துப்போன தலைமுடியும் மழிக்காத முகமுமாய். முகம் மழிக்கத் தேவையானவற்றைத் தேடத் தொடங்கும்போது நல்ல கூர்மையான கத்தி கிடைக்கிறது. அத்துடன் வேலுவின் சவர டப்பாவும். கூடவே முப்பது ரூபாய் முதலும் 12 ரூபாய் வட்டிக்குமான முறியடிக்கப்பட்ட சிட்டை. இப்படித்தான் வீழ்கிறார்கள் குழந்தைகள் மனத்தில் விச்வரூபத்தில் இருக்கும் சில பெரியவர்கள். கதை தாத்தாவைப் பற்றியது அல்ல. அந்தச் சிட்டை பாப்பாவின் மனத்தைத் தைத்து அதில் அவர் சிறுத்துப்போவதைக் குறித்தது.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">கான்சருக்குப் பின்னால் வந்த மறதி நோயுடன் போராட வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நினைவுகூர்ந்து, விடாமல் பேசும் பெண். ”இது என்னடா பாவம் செஞ்சது? நாந்தான் ஏழு ஜென்ம பாவத்துக்கும் இப்படி கீமோ சோமோன்னு வெந்துபோறேன். இதையும் சேர்த்து என்னோட சுழல்ல அழுத்தி சாகடிச்சுருவேன் போலிருக்கே? எதாச்சும் சினிமா படத்துல வர்ற மாதிரி ஒரே நைட்ல ‘ட்க்’னு ப்ரக்னென்ட்டா ஆயி குழந்தை பெத்து இது கைல கொடுத்திட்டு அப்புறமா செத்து போயிடறேண்டா. புள்ளைங்கன்னா அவ்ளோ இஷ்டம்ப்பா இதுக்கு” என்று தன் கணவன் பற்றிக் கூறித் தாயாக ஆசைப்படும் பெண்ணும் அவளுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு முதியவளும். இவர்களுடன் கதையில் கண்ணுக்குத் தெரியாத வேர்ப்பகுதில் இருப்பது பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பி பச்சை மையில் கையெழுத்திட்ட ஒருவன் மனத்தின் காதல்போன்ற இளக்கம்.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">பதினான்கு வயதில் வயிற்றில் எட்டுமாதப் பிள்ளையுடன் விதவையானவள் வேறு மாதிரித் தாய். நார்மடி உடுத்தியிருப்பவள் பெயர் என்னவோ சரசம்மா. ஆனால் ஒரு காலகட்டத்தில் ஊருக்கே பாட்டியம்மா. ”ஊரையே வறுத்து வாயில் போட்டுக்கொள்ளும் சாமர்த்தியம்” உள்ளவள். சொத்து விவகாரம், ஆண்டிபோல் வாழும் மகன், குழந்தைக்காக ஆசைப்படும் பேத்தி, “டோப்” சாப்பிடும் மருமகன், அவளிடம் பலமுறை “துன்னூறு” வாங்கியிருப்பதைக் கூறி அவள் எவ்வளவு பெரிய ஆத்மா என்று பேசும் ஒரு கடைக்காரர் இவர்களுக்கு சரசம்மாவை நார்மடிப் பாட்டியாகத்தான் தெரியும். ஆனால் கதையில் நேரிடையாக வராமல் எங்கோ கொடுங்களூரில் இருக்கும் ஒருவர்தான் அவளைப் பதினான்கு வயதுக் குமரியாக நீள் முடியுடன் பூ தைத்த பின்னலுடன் பார்த்த ஒரே நபர். அந்தப் பதினான்கு வயதுப் பெண்ணை வாழ்க்கை என்ன செய்தது என்பதுதான் கதை. அவளைப் பதினான்கு வயதுப் பெண்ணாகவே தன்னுள் இருத்திக்கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றியதும்.<br style="box-sizing: border-box;" />திடலில் கடைகளில் முறைவாசல் செய்து தண்ணீர் பிடித்துவைக்கும் வேலை செய்யும் செந்தாழை இன்னொரு தாய். ரௌடிக் கும்பலில் இருக்கும் ஐட்டங்காரனின் தாய். ஏதோ அடிதடி சண்டையில் அவன் கொலைசெய்யப்பட்டுவிட்டான். அவள் அவன் உடலை அடையாளம் காட்ட வேண்டும். போலீஸ்காரருடன் ஆட்டோவில் போகும் வழியில் பச்சைப்பட்டு கட்டி நிற்கும் மந்தையம்மனுக்குக் கற்பூரம் ஏற்றி அவளிடம் கண்ணால் சொல்லிக் குமுறவேண்டும். கட்டைவிரல் சூம்பிய மகனின் குழந்தைப்பருவத்தை நினைவுகூரவேண்டும். இப்போது ஐட்டங்காரனானதை நினைத்துப் புழுங்கவேண்டும். உடல்கள் கிடத்தப்பட்டிருக்கின்றன பிணக்கிடங்கில் நாற்றமடித்தபடி. இன்னும் ஒரே ஒரு உடல்தான் அடையாளப்படுத்தப்படவில்லை யாராலும். பச்சைப் போர்வை போர்த்திய உடல். போர்வையைத் திறப்பதற்கு முன்பே அழுகை. திறந்தபின்னும் ஓங்கிக் குரலெடுத்து அது அவள் மகன் இல்லை என்று நிம்மதியில் அழுகை. அது அவள் மகனாக இல்லையே என்ற நினைப்பில் அழுகை. இப்போதுதான் நல்ல வார்த்தை அவனைப் பற்றி இரண்டு கேட்டிருந்தாள். இனி திரும்பவும் ஐட்டங்காரன் அம்மாதான். இன்னும் யாரும் வந்து பார்த்திராத யார் பெற்ற மகனோ என்ற இரக்கத்தில் அழுகை. இவ்வளவும் கலந்த அழுகை. எத்தனையோ அம்மாக்களை நினைவுபடுத்தும் அழுகை.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">இத்தனையும் “உடைத்துப்போட்ட வெண்டைக்காய் மாதிரி இருப்பார்”, “ஓணானுக்கு உறை மாட்டிவிட்ட மாதிரி”, “தரத்துக்கு ஏற்ற தரகு வடியலுக்கு ஏற்ற விறகு”, “பொத்தி வச்ச பொண்ணு”, “குத்த வச்ச பொண்ணு”, போன்ற அன்றாட மொழியில் நுணுக்கமாக எழுதப்பட்ட கதைகள். எல்லாக் கதைகளிலும் அவற்றின் போக்கு ஆச்சரியத்தை அளிக்கும் அல்லது உலுக்கிவிடும் முடிவு வரப்போகிறது என்று சூசகமாக காட்டிவிடுவது உண்மைதான். ஆனால் அது எப்படிப்பட்ட ஆச்சரியம் எப்படிப்பட்ட அதிர்ச்சி என்பது கதை முடிவில்தான் தெரிகிறது. அது ஒருவகையில் கதை சொல்பவரின் வெற்றிதான்.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்துகொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்ல மெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் அதிர ஆரம்பிக்கின்றன.</p><p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, Geneva, sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word; text-align: start;">அம்பை<br style="box-sizing: border-box;" />மும்பாய், 6 டிசம்பர், 2019</p></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-38661524541921987362022-09-19T09:02:00.004-04:002022-09-19T09:02:59.323-04:00தெய்வத்தான் ஆகாது எனினும்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIQnUp20T0DWILLcruuVTznbE94hfOSxVK2Wy4X6ochuJ9VjYXJMtEwjG9aUDJD_EgGoKtvmKvAzE4S6ma9DaY4rP0bIoLYpsrEYjaORzZv56BIOQL1C-yzWnqXzZzCxWon-xpxTsJXFUuws68i4FuTU5GF7vB6i90bBSyRSZo725zp1fx5g/s500/aRam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="312" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIQnUp20T0DWILLcruuVTznbE94hfOSxVK2Wy4X6ochuJ9VjYXJMtEwjG9aUDJD_EgGoKtvmKvAzE4S6ma9DaY4rP0bIoLYpsrEYjaORzZv56BIOQL1C-yzWnqXzZzCxWon-xpxTsJXFUuws68i4FuTU5GF7vB6i90bBSyRSZo725zp1fx5g/s16000/aRam.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div></div><p></p><div class="m8h3af8h l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்</div><div dir="auto" style="font-family: inherit;">மெய்வருத்தக் கூலி தரும்"</div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><div style="text-align: left;"><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">என்கிறது திருக்குறள். ஆனால், அந்த மெய்வருத்தக் கூலியும் பொய்த்துப் போகும் நேரத்தில் என்னவாகும்? </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>அதுவும் எழுத்தைத் தொழிலாக கொண்டவருக்கு 'மெய்' வருத்தக் கூலி என்றால் என்ன என்பதில் ஆளுக்கொரு அபிப்ராயம் உண்டு. தன்னுடைய பிரசுரகர் தனக்குத் தரவேண்டிய ராயல்டியை எப்படியெல்லாம் தராமல் ஏமாற்றினார் என்பதை, ஒரு சாவகாசமான வேளையில் வெற்றிலை போட்டபடியே எழுத்தாளர் யதார்த்தமாக முன் வைக்கிறார்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எதிரில் கேட்டுக் கொண்டிருப்பவரும் ஓர் எழுத்தாளர் என்பதால், அந்த ராயல்டி பாக்கியைக் கோரும் காட்சிகள் உணர்ச்சிமயமாக நமக்கு விவரிக்கப்படுகின்றன. பொதுவாக Emotional Quotient எனப்படும் உணர்ச்சி நுண்ணறிவு அதிகமானவர்கள் வெகு சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். மாறாக, உணர்ச்சி கொந்தளிப்பானவரிடைதான் கலையம்சம் கூடி வரும். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"அறம்" சிறுகதையில் எழுத்தாளர் எம்விவி-யை கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்தாளர் பாத்திரம் உணர்ச்சி பிழம்பாக, பதிப்பக உரிமையாளரிடம் முறையிடுகிறது. காலில் விழுந்து கதறுகிறது. பட்டினியோடு ஒரு நாள் முழுவதும் காத்திருக்கிறது. எவ்வளவு இறைஞ்ச முடியுமோ அவ்வளவு இறைஞ்சுகிறது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கேட்கிறவர்களுக்கு அந்த எழுத்தாளரிடம் என்ன பிரச்னை? அவ்வளவு காலம் அவர் அசுரத்தனமாக எழுதி குவித்ததை எல்லாம் அவர்கள்தான் காசாக்கியிருக்கிறார்கள். ஆனால், எப்போதும் பரிதாபமாக நின்று இறைஞ்சும் நிலையில் இருக்கும் எழுத்தாளன் இன்று தருக்கி நிமிர்ந்து லௌகீகமாக பணத்தைப் பற்றி பேசுகிறான். அதுதான் அவர்களுக்கு பிரச்னை. இத்தனை காலம் தங்கள் வியாபாரம் என்னவோ இந்த எழுத்தை முதலீடாக கொண்டது என்றால் அதை அவர்களின் வணிக மனம் எப்படி ஒப்புக் கொள்ளும்? அதுவரை அடிமனதிலிருந்த வக்கிரம் எல்லாம் வெடித்துக் கிளம்புகிறது. எழுதுவது என்பதென்ன அப்படியொரு சிக்கலான வேலையா? சின்ன பசங்க எல்லாம் எழுதுகிறார்கள். வகை தொகையில்லாமல் அந்த எழுத்தாளர் மீது வசவுகள் கொட்டப்படுகின்றன. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எழுதுகோல் கவிழ்ந்திருந்தால்தானே எழுதும். நிமிர்ந்து நின்று தன் தரப்பைப் பேச ஆரம்பித்தால் அதன் ஒரே பயனும் போய், அதன் குத்தும் முனை எதிரிலிருப்பவருக்கு எரிச்சல் மூட்டுகிறது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இதற்கு கீழே போக முடியாது என்கிற அளவுக்கு அந்த எழுத்தாளர் மீதான பதிப்பாளரின் துவேஷம் அதலபாதாளத்திற்கு போகிறது. பொதுவாக எழுத்தில் உணர்ச்சி பிரவாகத்தை பொங்கவிடும்போது சற்று கவனமாகச் செய்ய வேண்டும். சிறு புள்ளி பிசகினாலும், வாசகனின் கவனம் பிசகி, வாசிப்பு தொடர்பு அறுந்து கொண்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"வாங்க புலவரே" என்று பதிப்பாளரின் மனைவி, கரிசனத்துடன் கேட்கும் வேளையில், அடிவேரிலிருந்து சரசரவென மரம் மீது ஏறும் சர்ப்பம் போல் அந்த எழுத்தாளரின் தன்மானம் உச்சந்தலைக்கு சென்று உட்கார்ந்து கொள்கிறது. என் பணத்தைக் கொண்டு உன் வம்சம் எப்படி வளர்ந்துவிடும்? அப்படி நடந்தால் நான் நம்பும் சரஸ்வதி எப்படி தெய்வமாகும்? சன்னதம் வந்து அறம் பாடுகிறார். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இந்த உணர்ச்சி வெடிப்புகளின் சாகச பயணமாக கதை மேலும் கீழும் குதித்து துடிக்கிறது. முறுக்கிக் கொண்டு துள்ளியெழும் சாமியாடிகள் சன்னதம் கொள்ளும் உச்சமென ஆச்சி கிளம்பி தன் கணவனிடம் நின்று எழுத்தாளருக்கென நியாயம் கேட்டு நிற்கிறாள். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">வஞ்சிக்கப்பட்டவர், வழிதெரியாதவர், தோற்றுப் போனவர் என மட்டுமல்லாமல், பொறாமையில் வேகுபவர், ஊரை அடித்து உலையில் போட்டவர், ஆளை ஏய்த்து ஐசுவரியம் சேர்த்தவர் அனைவரும் உள்ளார்ந்து சரணாகதியென விழுவது அந்த தெய்வத்தின் முன்னால்தான். என்ன, அவர்களுக்கான தெய்வம் ஒன்று எழுந்து வர வேண்டும்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஆச்சி அந்த தெய்வமென வந்து நின்று பதிப்பாளரின் மனதை நூற்றெண்பது பாகையென திருப்பி எழுத்தாளரின் மீதான மதிப்பை உணரச் செய்கிறாள். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கணவனுக்கெனத்தான் பத்தினி தெய்வம் நீதி கேட்டு கை நீட்டி நிற்குமா? எவனுக்காகவும் நிற்க முடியும் என, "அறம்" சிறுகதை ஓர் உணர்ச்சி வெறியாட்டம் நிகழ்த்தி முடிகிறது. அந்த கதைத் தொகுப்பிலான அத்தனை கதைகளுக்கும் கட்டியம் கூறுதல் போலொரு உன்னதத் தொடக்கம் அது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"அறம்" போற்றும் எழுத்தை இப்படியொரு தொகுப்பாக அமைத்த, மூத்த எழுத்தாளர் ஜெயமோகனின் அறுபது அகவை நிறைவு கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மெய்வருத்தக் கூலி பொய்த்துப் போனால்? மனிதர்பால் அன்புகொண்ட எந்த மனமும் சினந்து நீதி கேட்டுத் தெருவில் இறங்கும். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மனிதம் நிறைந்த மனம் அன்றி தெய்வம் வேறெது?</div></div></div><br /></div><p><br /><br /></p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-73041267006358524102022-09-19T08:58:00.002-04:002022-09-19T08:58:18.564-04:00கவி வாக்கும், காட்டின் பெருமூச்சும்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgpJLtEuqG8MiwDyoYL_256MUWe7YytKy5Gchu5Xp6MIGvWv8twM_hLvs_R3MvM_OiSl1QEbj1uZfSfCFEUoqoauwNBZpAFEMM73XJo6qlZH1CrwOOtdKsiw9CNsHYr9rXvQodfm4CJnxgAFUv3ReldAe7W__mVQ-ezq9kErL2r8ls3naVLWQ" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="250" data-original-width="621" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgpJLtEuqG8MiwDyoYL_256MUWe7YytKy5Gchu5Xp6MIGvWv8twM_hLvs_R3MvM_OiSl1QEbj1uZfSfCFEUoqoauwNBZpAFEMM73XJo6qlZH1CrwOOtdKsiw9CNsHYr9rXvQodfm4CJnxgAFUv3ReldAe7W__mVQ-ezq9kErL2r8ls3naVLWQ=s16000" /></a></div><br /><p></p><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இலக்கிய வகைகளில் கவிதைக்கு ஏன் உன்னத இடம் என்பதற்கு இந்த ஒரு கவிதைத் துளி சிறந்த உதாரணம்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>வெந்து தணிந்தது காடு</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இன்றைய எழுத்து வெளி நமக்கு பரந்த வீச்சைக் கொண்டு வந்து கொடுக்கிறது என்றாலும், அவற்றிடையே. உன்னதத்தை விழையும் இலக்கிய நோக்கு கொண்டவையையுடன், உன்மத்தத்தை கட்டியெழுப்பும் அடிப்படைவாதங்களும் ,சந்தர்ப்பவாதங்களும், வம்புவாதங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">முன்பு இது போன்ற திண்ணைப் பேச்சுக்களின் சந்தர்ப்பவாதங்களில் மூச்சுத்திணறி தவிக்கும்போது புகலிடமாக ஒரு 'புத்தக' வெளி வாசிக்கக் கிடைத்தது. இப்போது அந்தப் புத்தகங்களையும் மூடி மறைத்துக் கொண்டு சில்லறைக் குரல்களின் சலம்பல்கள் நிறைக்கிறது. போகட்டும். அனைத்துக்கும் ஓர் இடம் இருக்கத்தானே வேண்டும்.. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">காலம் அது போக்கில் சலித்துக் கொட்டியதில் எஞ்சுவதெல்லாம் கவிதையாக மட்டுமே இருக்கக் கூடும். அதனால்தான் அந்த வடிவத்திற்கு அவ்வளவு மதிப்பு. ஆதிகாவியம் என சொல்லப்படும் வால்மீகியின் இராமாயணத்தின் முதல் கவிதை, நிந்திக்கும் பொருள் கொண்டது போல் அமைந்திருந்தது என்பார். ஆனால் காலம் அதை போற்றும் பொருள் கொண்ட பாடலாக மாற்றியது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் கவிதை வரிக்கு, The forest charred and cooled என்றொரு ஆங்கில மொழியாக்கத்தை பார்த்தேன். ஆங்கில மொழியாக்கத்தில் காணப்படும் எரிந்து கரிந்து அணையும் சொற்றொடர் ஒரு சாம்பல் வெளியை நம் கண் முன்னே நிறுத்துகிறது. பாரதியின் மூல வரிகளில் வெந்து தணிந்தாலும் காடு காடாகவே நம் கண் முன் நிற்கிறது. ஒரு நீர்நிலை கொதித்து அணைவது போல, நம் உள்ளம் கொந்தளித்து அமைவது போல. நெருப்புப் பொறியை உள்ளிட்டும், அது பரவிப் பற்றிப் படர்ந்து கொழுந்து விட்டு எரிந்தணைந்த போதும் காடு காடாகவே நிற்கிறது பாரதியின் கவிதையில்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அக்காட்டை கொள்ளும் பெருந்தீயின் ஆதாரப் பொறியோ, சிறு பறவைக் குஞ்சு போன்ற உருவகத்தில் தொடங்குகிறது. பரபரத்து பற்றியெரியப் போகிற நெருப்பை ஒரு பறவையின் உருமாற்றறமென (Metamorphosis) பார்ப்பதற்கு ஒரு கவியின் கண்கள் வேண்டியிருக்கிறது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் படைப்புகளில் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது 'அக்னி' கவிதைதான். அடுத்தடுத்து பல மொழிபெயர்ப்புகளில் பல்வேறு வடிவங்கள் எடுத்திருக்கிறது இக்கவிதை. 'Baby Fire' என்ற மொழிபெயர்ப்பில், இறுதியில் வரும் ஜதி பிரயோகங்களை, நெருப்பின் ஓசையென மொழி பெயர்த்திருப்பார். Whoosh, crackle, snap, sizzle... </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மொழிபெயர்ப்பாளருக்கு கற்பனா சக்தி தேவைதான். ஆனால் அது மூல படைப்பை முறித்துப் போடுவது போல அமைதல் கூடாது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கண்டத்தட்டுகள் உரசிக் கொள்ளும்போது நிலம் விம்மித் தணிவது போல, பாறைக்குழம்பு சூடாகி எரிமலை பொங்கித் தணிவது போல், விஷப்பை ஊறிப்பெருக்க பாம்பு படமெடுத்து கொத்தித் தணிவது போல, நெருப்புப் பறவையால் காடு வெந்து தணிகிறது. நெடிய பெருமூச்சுப் போல. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">புலன்கள் கடந்த யோக நிலையில் கவி விம்மி தணிகிற போது, காலம் கடந்து நிற்கும் கவி வாக்கு பிறக்கின்றது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!"</div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-6778448144429011402022-09-19T08:56:00.004-04:002022-09-19T08:56:47.289-04:00சிட்டுக் குருவியைப் போலே<p> <span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;">"விட்டு விடுதலையாகி நிற்பாய் - இந்தச் </span></p><div class="m8h3af8h l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சிட்டுக் குருவியைப் போலே"</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">- பாரதி </div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiTkkJBke-BLkg2NGJB-wfk5n6D6u0zJeaTUReUwRDjzj9e_1DSgZCHm0LKW9pOcFsCO9rjCiwJi8krx2954hklb_vnWQ6r1Gvw1PJ3mC1wR5Ccvn1RmJASbYlQIy8_qanEMg16eOJsw5a8FlQpftGzKCORPbU3w8yD8j573btiKslOcGxI5A" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="929" data-original-width="600" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiTkkJBke-BLkg2NGJB-wfk5n6D6u0zJeaTUReUwRDjzj9e_1DSgZCHm0LKW9pOcFsCO9rjCiwJi8krx2954hklb_vnWQ6r1Gvw1PJ3mC1wR5Ccvn1RmJASbYlQIy8_qanEMg16eOJsw5a8FlQpftGzKCORPbU3w8yD8j573btiKslOcGxI5A=s16000" /></a></div><br /><br /></div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><a style="color: #385898; cursor: pointer; font-family: inherit;" tabindex="-1"></a></span>அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு அதைத் திரைப்படமாக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கமல் குறிப்பிட்டிருந்தார்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சினிமா வணிகம் அப்படித்தான். அதன் காப்புரிமைக் கிளைகள் இன்று பல ஊடகங்கள் வழியே பரவி எண்ணி பார்க்கவியலாத வகையில் மிகப் பெரும் வாணிபம் செய்கின்றன. ஆனால் கமல் குறிப்பிட்ட காலத்தில் (எம் ஜி ஆருடனான அவருடைய உரையாடல் நிகழ்ந்த போது), கல்கியின் படைப்புகள் நாட்டுடமையாக ஆக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். 90களில்தான் கல்கி வாரப்பத்திரிகையில், பத்மவாசனின் ஓவியங்களுடன், பொன்னியின் செல்வ்வன் நான்காவது முறை, தொடராக வெளியிடப்பட்டது. கல்கியின் வாரிசான கி ராஜேந்திரன் அவர்கள், திரைப்படமாக்க ஒப்பந்தத்தின் போது அதில் ஒரு காலவரை நிபந்தனையை உட்படுத்தியிருந்ததால்தான், அதன் காப்புரிமையை ஒரேயடியாக எம்ஜிஆருக்கோ, கமலுக்கோ, மணிரத்னத்திற்கோ தாரை வார்த்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என்பார்கள். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் நினைவு தினத்தன்று, இந்த காப்புரிமை பற்றிய எண்ணவோட்டம் வருவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. அவருடைய தம்பி விசுவநாதையர் மற்றும் பாரதியின் இந்த சிட்டுக்குருவிப் பாட்டு.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் கவித்துவத்தின் உச்சமென அவருடைய புதுச்சேரி வாசத்தைக் குறிப்பிடலாம். அப்பொழுதுதான் அவர் மிகுந்த படைப்பூக்கத்துடன் கண்ணன் பாட்டு, குயில்ப்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவைகளைக் கூறலாம். சிறு காவியங்கள் எனும் அளவிற்கு தமிழ்பிரவாகமும், புத்துயிர்ப்பான கருப்பொருளும் கொண்டவை. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அவருடைய பிரசித்திப் பெற்ற 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலில் இடம்பெற்றிருக்கும் "தீக்குள் விரல் வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா" என்கிற வரியைய்ப் பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அருமையானதொரு கட்டுரை எழுதியிருப்பார். "அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய்வேவாள்" என்கிற நம்மாழ்வாரின் பாசுரத்தோடு ஒப்பிட்டு மோகனரங்கன் எடுத்துவைக்கும் கருத்துரை, ஒரு கவிதையை எப்படி உள்ளார்ந்து அறிந்து கொள்வது என்பதற்கு மிக அழகான எடுத்துக்காட்டு. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அரசியல் கட்டுரைகள், விடுதலை முழக்கப் பாடல்கள், கார்ட்டூன்களுடன் (அவரே வரைந்தது) தலையங்கங்கள், அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு எழுதிய ஆன்மிக விவாதங்கள், புனைவுகள், காவியங்கள் என்று பாரதியின் படைப்புலகை ஒன்று கூட்டி புத்தகங்களாக அவர் கொண்டு வர நினைத்தது, அவருடைய மறைவிற்கு பின்னால்தான் முழுவதும் சாத்தியமாகியது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அவருடைய தம்பி விசுவநாதர், மதுரைக்கு அருகே மானாமதுரையில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். மதுரையில் இருந்த எங்கள் தாத்தாவிற்கு விசுவநாதர் மீது மிகவும் மதிப்புண்டு. எங்கள் மாமாவிற்கு அவருடைய பேத்தியைத்தான் மணமுடித்திருந்தார்கள். 'பாரதி பிரசுராலயம்' அமைத்து, பாரதியின் துணைவி செல்லம்மாள் அவர்களுடன் இணைந்து பாரதியின் படைப்புகளை பதிப்பித்தது விசுவநாதையர்தான். அத்தோடு நில்லாமல், பாரதியின் 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' பாடல்கள் முதற்கொண்டு பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1920களிலேயே வெளியிட்டார். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இதில் விசுவநாதர் சம்பந்தப்பட்ட பல குறிப்புகளை, "கத்திக்காரன்" தொகுப்பில் இடம்பெற்ற "பாரதி என்னும் பற்றுக்கோடு" சிறுகதையில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இடம்பெறாத ஆனால் முக்கியமானது, அவர் பாரதியின் படைப்புகளின் காப்பிரைட் வழக்கில் சிக்கிக் கொண்டது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">1940-களில் பாரதியின் பாடல்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு இருந்தது. பாடலுக்கான ராகம், சொற்களின் ஓசை நயம், மெட்டில் இயைந்து வரும் வரிகள், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முழக்கம் என்று பாரதியின் பாடல்கள் இயல்பாகவே இசையமைப்பாளர்களுக்கு உகந்தபடி அமைந்திருந்தன. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், 'நாம் இருவர்' என்னும் திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம், பதினோரு பாடல்களை இசையமைத்து கொடுக்கிறார். அதில் ஆறு பாடல்களை கேபி காமாட்சிசுந்தரம் (இவர் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் வில்லன் நடிகரும் கூட என்பது உபரி செய்தி) எழுதிக் கொடுக்க, வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் ஒரு பாடலும், மகாகவி பாரதியின் நான்கு பாடல்களையும் சேர்த்து அருமையான இசை ஆல்பம் உருவாகியது.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஏவிஎம் செட்டியார் பாரதியின் பாடல்களை மொத்தமாக சொற்ப தொகை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து காப்புரிமை வாங்கிக் கொண்டுவிட்டார். அப்போது பாரதி பிரசுராலயத்தின் வழியே பாரதியின் புத்தகங்களைப் பதிப்பிட்டுக் கொண்டிருந்த விசுவநாதருக்கு கிடைத்ததோ பத்தில் ஒரு பங்கு. ஆனால் ஒப்பந்தமோ பாரதியின் பாடல் வரிகளின் மொத்த காப்புரிமையும் செட்டியாருக்கு கொடுத்தபடி போடப்பட்டுவிட்டது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அவ்வை சண்முகம் அவர்களின் 'பில்ஹணன்' நாடகம் திரைப்படமாகும்போது, பாரதியின் பாடல் ஒன்றை அதில் சேர்க்கத் திட்டமிடுகின்றனர். பாரதி பிரசுராலயத்திடம் பேசி ஒப்புதல் வாங்கலாம் என்றால் முடியவில்லை. இந்தப் பாடல் அந்தப் பாடல் என பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த பாரதியின் பாடல்களின் காப்புரிமையும் ஏவிஎம்மிடம். அதுவும் சினிமாக்களுக்கு மட்டும் என இல்லாமல், நாடகங்கள், பத்திரிகைகள் என அனைத்து ஊடகங்களுக்கான காப்புரிமையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பத்திரிகையிலோ அல்லது வேறு பிரசுரங்களிலோ பாரதியின் பாடல் வரிகள் இடம்பெற வேண்டுமென்றால், ஏவிஎம்மிற்கு கட்டணம் கட்டித்தான் பாடல் வரிகளை பிரசுரிக்க முடியும். பாரதியின் குடும்ப்பத்தாருக்கோ, பாரதி பிரசுராலயத்திற்கோ தம்பிடி கூட கிடைக்காது என்பதுதான் அன்றைய நிலைமை. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அப்போதுதான் இந்த காப்புரிமை ஒப்பந்தத்தின் அபத்தமான திருகல் நிலை விசுவநாதையருக்கேப் புரிகிறது. அவ்வை ஷண்முமம் அவர்கள் அதை விடாமல், 'பில்ஹணன்' படத்தில் பாரதியின் பாடலை இடம்பெறச் செய்வதில் தீவிரமாக இருக்க, ஏவிஎம் செட்டியார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறார். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவரான பரலி சு. நெல்லையப்பரின் சீடரான மற்றொரு விசுவநாதன் இப்போது களத்திற்கு வருகிறார். இவரை 'எதிரொலி' விசுவநாதன் என குறிப்பிடுவார்கள். பாரதியின் பாடல்கள் இந்த திருகலான காப்புரிமைச் சிக்கலிலிருந்து விடுவிக்க எழுத்தாளர்கள் கூட்டமைப்பு வழியே, தோழர் ஜீவா உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடைய முன்னிலையில் போராட்டம் மேற்கொள்கிறார். ஒருவழியாக, சென்னை ராஜதானியின் முதல்வரான குமாரராஜா அவர்களின் கவனத்திற்கு இந்த காப்புரிமை பிரச்னை செல்ல, அவர் ஏவிஎம் நிறுவனத்தையும், பாரதியாரின் குடும்பத்தையும் அழைத்துப் பேசி, பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்கும் அறிவிப்பை வெளியிடுகிறார். </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதி மறைந்து முப்பது ஆண்டுகளிலே அவருடைய படைப்புகள் நாட்டு மக்களின் பொதுவுடைமையாகி விட்டன. அவருடைய குடும்பத்தாருக்கு மற்றும் அவருடைய படைப்புகளின் முதன்மை பிரசுரகர்த்தருக்கு எவ்வித பயனும் இல்லாமல் போயிற்று. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஆனால், அதன்பிறகு அந்த மகா கவிஞனின் எழுச்சிமிகு வரிகள் தமிழ் பேசும் நாவெங்கும் பற்றிக் கொண்டு, தமிழகம், ஈழம், ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகெங்கும் பரவத் தொடங்கின. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் படைப்பில் மிக நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து அவருடைய படைப்புலகை காலவரிசையிட்டு தொகுத்தவரும் ஒரு விசுவநாதன்தான். சீனி. விசுவநாதன் அவர்கள். 83ல் பாரதி நூற்றாண்டு விழா சீனி விசுவநாதன் தலைமையில் கொண்டாடப் பட்டது. </div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கிட்டத்தட்ட சீனி. விசுவநாதன் போல பாரதியின் எழுத்தில் நாட்டம் கொண்டவராகத்தான், 'பாரதி என்னும் பற்றுகோடு' சிறுகதையில் வரும் 'புலவர் இரத்தனசாமி' இருப்பார். பாரதியின் அருஞ்சேகரிப்பில் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டு.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஆனால், நடப்புலகம் அவருடைய ஆத்மார்த்தமான சேவையை, பண மதிப்பில் அணுகும்போது அவரை அது பேசவிடாதபடிக்கு அழுத்திக் கொள்ளும். கதைசொல்லி அளிக்கும் பணத்தை மறுக்க இயலாத பொருளாதார நிலையும். இதற்குத்தானா தான் இவ்வளவு பாடுபடுகிறோம் என்கிற அதிர்ச்சியும் ஒருங்கிணைந்து அவரை அழுத்த, அவருடைய மனதின் வெம்மையை உணர்ந்தபடி கதைசொல்லி வெளியேறுவதுமாக அந்தக் கதை முடிந்திருக்கும்.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சுதந்திர வானின் ஒளிக்கு நிகராக, மதுவின் சுவை தவிர வேறெது உண்டு.</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பாரதியின் சிட்டுக்குருவி பாடலின் முழுவடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது..</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">"விட்டு விடுதலையாகி நிற்பாய் - இந்தச் </div><div dir="auto" style="font-family: inherit;">சிட்டுக் குருவியைப் போலே</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எட்டுத் திசையும் பறந்து திரிகுவை</div><div dir="auto" style="font-family: inherit;">ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை </div><div dir="auto" style="font-family: inherit;">மட்டுப்படாது எங்கும் கொட்டிக் கிடக்கும்</div><div dir="auto" style="font-family: inherit;">இவ்வானொளி எனும் மதுவின் சுவையுண்டு</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பெட்டையி னோடு இன்பம் பேசிக்களிப்புற்றுப்</div><div dir="auto" style="font-family: inherit;">பீடையிலாததோர் கூடு கட்டிக்கொண்டு </div><div dir="auto" style="font-family: inherit;">முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி </div><div dir="auto" style="font-family: inherit;">முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு</div></div><div class="l7ghb35v kjdc1dyq kmwttqpk gh25dzvf jikcssrz n3t5jt4f" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">முற்றத்திலேயும் கழனி வெளியிலும் </div><div dir="auto" style="font-family: inherit;">முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு </div><div dir="auto" style="font-family: inherit;">மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் </div><div dir="auto" style="font-family: inherit;">வைகறை ஆகுமுன் பாடி விழிப்புற்று."</div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-68624851873336737162022-07-01T21:47:00.003-04:002022-07-01T21:47:35.249-04:00செந்தாழை<p><b><span style="color: red; font-family: "Latha",sans-serif;"></span></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiGiPF4545pVS2t1k8vjDlYhp5A8JCoLisPESI72WQ2rLNxKfwGZEhaF__lV-XXT7uiK_EcEL4wJGxRk4ZHBM-3cZBMO0ubD9Z2G5auh3lKwAiq7jjGXIikih7oP6tu5cs_fat70dz9d6jA1-h-hHF7uABhhme_Hk6NiCsg1PFvmdSzzJNMxg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img data-original-height="1023" data-original-width="1050" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiGiPF4545pVS2t1k8vjDlYhp5A8JCoLisPESI72WQ2rLNxKfwGZEhaF__lV-XXT7uiK_EcEL4wJGxRk4ZHBM-3cZBMO0ubD9Z2G5auh3lKwAiq7jjGXIikih7oP6tu5cs_fat70dz9d6jA1-h-hHF7uABhhme_Hk6NiCsg1PFvmdSzzJNMxg=s16000" /></a></b></div><b><br /></b><b><span style="color: red; font-family: "Latha",sans-serif;">சி</span></b><span style="font-family: Latha, sans-serif;">ப்பாய் சாவடியை ஒட்டிய பாலத்தின் வளைவில் திரும்பும்போதே
செந்தாழை கவனித்து விட்டாள். அன்னத்துடைய பூக்கடைக்கு எதிரே போலிஸ் நின்று கொண்டிருப்பதை.</span><p></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘இந்நேரத்துக்கு என்ன போலிஸ்’
என ஒரு பதைபதைப்பு வந்தது. வலப்பக்கம் எட்டி, செட்டியார் மளிகைக் கடையைப் பார்த்தால்,
ஏறுவெயிலுக்கென இழுத்து விடப்பட்ட முன்பக்க மறைப்பிற்கு பின்னால், இராமப்ப செட்டியார்
ஃபோன் பேசிக் கொண்டிருந்தார். இன்னமும் சாப்பாட்டிற்கு கிளம்பவில்லை. இடுப்பில் இருந்த குடத்தை ஏற்றி வைத்துக் கொண்டு,
சிமிட்டி பாதையில் ஏறிப் போகும்போது, அன்னம் அவளைப் பார்த்துவிட்டாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'ந்தா, செந்தி வந்திருச்சே. உன்னத்தான் கேக்கிறாரு' என்றாள். குரலில் ஒருவித
அலுப்பு. கட்டிக் கொண்டிருந்த மாலையை தூக்கி நிறுத்தி அளவு பார்த்துவிட்டு மேல் கொக்கியில்
தொங்கவிட்டாள். டிவிஎஸ் 50ஐ நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு, தன் தொப்பியை சரிசெய்து
கொண்டே திரும்பிய ஏகாம்பரம், நடைமேடையில் போய்க் கொண்டிருந்த செந்தாழையைப் பார்த்துவிட்டு,
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">''இந்தம்மாதானா… தோப்புக்கொல்லை
பக்கம்னு அட்ரஸ்ல போட்டிருந்துச்சு. அங்கப் போனா, சாவடில இருக்கும்னுட்டாங்க’ என்றார்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">இன்று வியாழக்கிழமை. செட்டியார்
வாரக்கணக்கை தீர்த்து வைக்கும் மூடில் இருப்பார். வெள்ளிக்கிழமை என்றால் யாருடைய கணக்கு
சிட்டையையும் திறக்கமாட்டார். ஏகாம்பரத்தை பார்த்து, ‘தா வந்திர்றேன்’ என்பது போல கெஞ்சலாக
தலையை ஆட்டிவிட்டு, செட்டியார் கடைக்குள் நுழைந்தாள் செந்தாழை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">சாவடி திடலுக்கு இந்தப் புறம்
ஆறு கடைகள். அந்தப்புறம் நாலு கடைகள். நடுவில்
சின்ன கொட்டடியில் வேண்டாத மரச்சாமான்கள் போட்டு வைத்திருப்பார்கள். சுற்றி இருக்கும்
நடைமேடையை நாளைக்கு ஒருமுறை கூட்டிப் பெருக்கி, இரண்டு தடவை கடைகளின் முகப்பில் முறைவாசல்
செய்து, தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும்.
கொட்டடியின் வெளிச்சுவரில் இருக்கும் பிள்ளையார் படத்திற்கும், காந்தி படத்திற்கும்
பூ வைத்து, ஊதுபத்தி கொளுத்தி வைக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்த திடலில் காந்தி வந்து
பேசியிருக்கிறார் என்பார்கள். அப்பொழுது வந்த தினசரி பேப்பரில் வெளியான காந்தியின்
படத்தைத்தான் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறார்கள். இதே போல், எதிர் வரிசையில்
இருக்கும் பஸ்டாண்ட் அவுட்போஸ்ட்டுக்கும் அவள்தான் தண்ணீர் கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.
இப்பொழுதெல்லாம் ரங்கசாமியிடம் கேன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ இராமப்ப செட்டியார்
புண்ணியம். சாவடியில் அவளுக்கு வேலை இருந்து கொண்டிருக்கிறது. பத்து கடைகளுக்கும் சேர்த்து
அவர்தான் பொதுகணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்து போலிஸ் வந்திருப்பதைப்
பார்த்தால், இன்று பொழுது போய்விடும் போலிருக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;"> </span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">தண்ணீர் வைத்து, டம்ளர்களை
கழுவி துடைத்து வைத்து விட்டு, வாசலுக்கு வந்தவள், ஈரத் தலைப்பை தோளோடு பற்றிக் கொண்டு,
காலை மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்தாள். செட்டியார் போனை வைப்பது போலத் தெரியவில்லை.
இவளை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். கடையில் உளுத்தம் பருப்பை
நிறுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருந்த காளியப்பன், அவளைப் பார்த்து 'ன்னா, போலிஸ்
வந்திருக்கு. ஐட்டங்காரனுக்கு எதுவும் ஏழராயிட்டா? கொஞ்ச நாளா சவுண்டு இல்லையேன்னு
நினச்சேன்' என்றான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">நான்கைந்து ஆண்டுகள் முன்னர்,
மந்தையம்மன் கொடையின் போது, இந்த திடலில்தான் வள்ளி திருமணம் நாடகம் போட்டார்கள். அப்போது
ஏற்பட்ட கலாட்டாக்களால், சாவடி கடைக்காரர்கள் யாரும் மாணிக்கத்தை பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. ஐட்டங்காரந்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறதே,
என திரும்பிப் பார்த்தால் அன்னத்தின் கடைக்கு முன்னால், ஏழெட்டு பேர் கூடி விட்டிருந்தனர்.
வீடியோ கடை ரபீக், கம்ப்யூட்டர் சாம்சன், சலூன் கடை புன்னூஸ் என பலரும், போலிஸ் தலையைப்
பார்த்தவுடன் வந்துவிட்டிருந்தார்கள். போட்டோ ஸ்டூடியோ இன்றைக்கு திறக்கவில்லை. காண்ட்ராக்டர்
அருள்தாஸ் வெளியூர் போயிருந்தான். மற்ற கடைகளில் ஆள் இல்லையோ என்னவோ. ஏகாம்பரம், தொப்பியை
எடுத்து, தலையைக் கர்சீப்பால் ஒற்றிக் கொண்டே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">என்ன அக்கப்போர் செய்து வைத்திருக்கிறான்
என்று தெரியவில்லை. இன்று செட்டியாரை விட்டால்
அப்புறம் சனிக்கிழமையில்தான் வாரக்கூலி கிடைக்கும். நீர் ஊறியிருந்த முந்தானையை உதறி, இடுப்பில் செருகிக்
கொண்டு, என்ன செய்வது என்பது போல காளியப்பனைப் பார்த்தாள். வெளியில் அன்னம் 'ஐயோ...ஐயோ.... செந்தீ.... யம்மா....'
என பெருங்குரலெடுத்து கத்துவது கேட்டது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">பதறியபடி கடையிலிருந்து இறங்கி
ஏகாம்பரத்தை சுற்றியிருந்த கூட்டத்தை நோக்கி ஓடினாள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'ஏய்.... கத்தாத. அங்க அய்யா வெயிட் பண்ணிட்டிருக்கார். டிவிக்காரங்கள்லாம் வந்திருவாங்க. எங்க அந்தம்மா'
என்றபடியே, ஏகாம்பரம் இவள் ஓடிவரும் திசைப்பக்கம் திரும்பினார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">இப்போது முக்கு ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து
இன்னமும் பேர் வர ஆரம்பித்தனர். தராசை விட்டுவிட்டு காளியப்பனும் இறங்கி வர, செட்டியார்
போனை அவசர அவசரமாக வைத்துவிட்டு சேரிலிருந்து எழுந்து, வெயில் மறைப்பைத் தூக்கி இவர்களைப்
பார்த்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'என்னாச்சு சாரு...' என அவள்
கேட்பதற்குள், அன்னம் வேகமாக வந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'பாவி... பாவி... இருந்தும்
கெடுத்தான்... செத்தும் கெடுத்தான்னுவாங்களே. இப்படி ஆக்கிட்டுப் போயிட்டான் பாருடி...
' <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">அவள் கத்தி முடிக்கட்டும்
என்பது போல ஏகாம்பரம் சற்று மௌனம் சாதிக்க, குழப்பத்துடன் இருந்த செந்தாழையைப் பார்த்து
சாமித்துரை சொன்னான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'அம்மாவயல் பாலத்தாண்ட நேத்து
நைட்டு பெரிய சம்பவமாத்தா. நாலஞ்சு பேர் காலி. அண்ணனையும்....' என்று சொல்லி நிறுத்தினான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ஏகாம்பரம் ‘நீதானம்மா, மாணிக்கத்தோட
அம்மா. இந்த மொசைக் மாணிக்கம்னு ஐட்டங்காரனாமே.'
என்றார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">எப்பவும் ஏதாவது வம்பு வழக்காடு
என்றுதான் மாணிக்கம் பெயரில் வரும். அதற்கே ஸ்டேஷன், கோர்ட்டு ஜாமீன் என அலைய அவளிடம்
பொழுதிருக்காது. இன்றைக்கு ஏதோ சம்பவம் என்கிறார்கள். சட்டென செய்தியின் கோரம் முழுமையாகப் புரிந்தது
செந்தாழைக்கு. முகமெல்லாம் இளகி கண்ணீர் கரைகட்டிவிட்டது
கண்களில். புரிந்தது என்பதற்கு பொருளாக தலையை
மட்டும் அசைத்தாள். அன்னம் பட்பட்டென தலையை
அடித்துக் கொண்டு 'இப்படி ஒரு பொறப்பும் இதுக்கு ஒரு சாவும் வேணுமா' என்று அழுதாள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ஏகாம்பரம் கையிலிருந்த வாட்சை
திருப்பி பார்த்துவிட்டு, 'இந்தாரும்மா, சோகந்தான். கஷ்டந்தேன். என்னா செய்யறது. இது பெரிய கோஷ்டி சம்பவம். மொண்டிக்குளம் பாபுன்னு பெரிய ஆளுக்கு ஸ்கெட்ச்சு
போட்டிருக்காங்க. ஏழெட்டு காஷுவாலிட்டி. உம்பையனும் ஒண்ணு. கொஞ்சம் ஆசுபத்திரிக்கு
வந்து அடையாளம் காட்டிட்டுப் போயிடு. அய்யா
அங்க ஸ்டேசன்ல வெயிட்டிங்ல இருக்கார்' என்றார். கம்பீரமாக தொடங்கிய அவர் குரல் மெல்ல
மெல்ல தேய்ந்து பரிதாபமாகிவிட்டிருந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">அதற்குள் செட்டியார் கடையிலிருந்து
இறங்கி அங்கே வந்துவிட்டார். 'என்னாச்சு. மாணிக்கத்தையா… எப்படி...' என்றபடி வந்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ஏகாம்பரம் இப்போது சற்று மரியாதையை
சேர்த்துக் கொண்டு, 'நைட்டு ரெண்டு, மூணு மணின்னாங்க. ரவியண்ணன் குரூப்புக்கும், மொண்டிக்குளம்
குரூப்புக்கும் சம்பவம். ரொம்ப நாளாவே நடக்கும்னுதான் நினச்சிட்டிருந்தோம். இப்ப காமாட்சிபுரத்தில்
காம்ப்ளக்ஸ் வருதில்ல. அந்த காண்ட்ராக்ட்டு பஞ்சாயத்துல வெட்டிக்கிட்டாய்ங்க. ஏழெட்டு
அவுட்டாயிடுச்சு' என்றார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘பெரிய சம்பவம் சார். மாணிக்கண்ணந்தான்
ஸ்கெச்சாம்’ என்றான் சாமித்துரை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ஏகாம்பரம், செந்தாழையை பாத்து
'சின்னப் பையன்னாங்க. இன்னும் ஃபைலே இல்ல எங்கட்ட. இப்படி போய் செஞ்சுட்டிருக்கானே.
அதான் உன்ன கூட்டியாந்துடனும்னு அய்யா சொல்லிட்டார்' சற்று திரும்பி சாமித்துரையைப்
பார்த்து 'ஆட்டோல கூட்டிட்டு வந்திடறியாடா நீயு' என்றார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">சாமித்துரை திரும்பி சகாக்களைப்
பார்த்து போய்வருகிறேன் என்பது போல கையசைத்துவிட்டு, செந்தாழையைப் பாத்து 'வா ஆத்தா,
இப்படி...' என்றவாறு திரும்பி ஆட்டோவை நோக்கி நடந்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">செட்டியார், துயர் நிறைந்த
குரலில் 'எப்படி வந்திருக்க வேண்டிய புள்ள. இப்படி வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும்
போயிருச்சே. இப்பவும் உன் ஊட்டுக்காரர் கையப்
புடிச்சுக்கிட்டு சின்னப்புள்ளயா வந்து நின்னதெல்லாம் அப்படியே கண்ணு முன்னாடி வருது. இந்தக் கடையெல்லாம் ஆறுமுகம் கட்டினதுதான. அப்ப
மாணிக்கத்துக்கு என்ன… ரெண்டு மூணு வயசிருக்குமா' என்றார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">செந்தாழை அவர் பேசுவதையே பார்த்துக்
கொண்டு நின்றிருந்தாள். தொண்டைக்குழி ஏறியிறங்க, கண்ணில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'பாத்துப் போயிட்டு வா. பெரியாஸ்பத்திரிக்குத்தான
சார்' என்றார் ஏகாம்பரத்தைப் பார்த்து. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">'அதுக்கு பின்னாடி சார், சின்னதா
ஒரு கரட்டு ரோடு ஒண்ணு போவும். அங்கத்தான் மார்சுவரி.’ என்றார் ஏகாம்பரம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">சட்டைபையிலிருந்து நோட்டுக்
கற்றைகளை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு, 'மதியமேட்டு காளியப்பனை ஸ்டேசன் பக்கம்
வரச்சொல்றேன். அங்கிருந்து கடைக்கு போன் பண்ணுத்தா. உன் ஊட்டுக்காரரோட நல்ல மனசுக்கும் அதுக்கும், எப்படி
எப்படியோ வந்திருக்க வேண்டிய புள்ள. இப்படி...' என்று சொல்லிவிட்டு, கையை காற்றில்
வீசியபடிக்கு, சோர்வுடன் கடைக்கு திரும்பி நடந்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">பணம் வைக்கப்பட்ட கைகளை கூப்பியபடி
அவர் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தாழை. அன்னம் தொட்டு திருப்ப, வந்து நின்ற சாமியின் ஆட்டோவில்
ஏறி உட்கார்ந்தாள். ஏகாம்பரத்தின் டிவிஎஸ்
ஃபிஃப்டியை தொடர்ந்தபடி நூறடி ரோட்டுக்கு ஆட்டோவை திருப்பினான் சாமி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘அண்ணன் பேர்ல கேஸே கெடயாது
ஆத்தா. ஆனாலும் செம வலு டவுன்ல. பேரைக் கேட்டாலே
டெரர்தான். இப்படி செஞ்சிப்பிட்டாங்களே’, சாமி, ஆட்டோ கண்ணாடி வழியே பின் சீட்டிலிருந்த
செந்தாழையைப் பார்த்து புலம்பினான். அவனுக்கு
எப்படியும் மாணிக்கத்துடன் பழக்கமாகிவிட வேண்டும் எனும் ஆர்வம் இருந்தது. ஆளு, பொருளு,
காசு ஓட்டம் என என்ன ஒரு கெத்து.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">கூட்டுத் தெரு தாண்டி வலதுபக்கம்
திரும்பும் போது, செந்தாழை அவன் முதுகைத் தொட்டாள். வாயை மூடிக் கொண்டிருந்த முந்தானையை
எடுத்து, துக்கம் கமறும் குரலில் ‘அப்படிக்கா கோவிலாண்ட செத்த நிறுத்தேன். ஒரு நிமிட்டுல வந்திடறேன், என்றாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">பின்னாடி வந்து கொண்டிருந்த
ஏகாம்பரத்திற்கு சைகை காட்டியபடி, சாமி வலதுபக்கம் ஓரமாக ஆட்டோவை நிறுத்தினான். முன் மதிய வேளையில் மந்தையம்மன் கோவில் வாசலில்
அவ்வளவு கூட்டம் இல்லை. ஏகாம்பரம் கால்களைத் தேய்த்து தனது வண்டியை நிறுத்தியபடி ‘என்னாச்சுய்யா…’
என்றார். ‘ஒரு நிமிட்டாம்ண்ணே. இதோ இங்கதான்
போயிருக்கு’ என்றான் சாமி. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">கோவில் வாசலில் இருந்த ஓலைத்தடுப்பு
கடையில், ‘ஒரு கற்பூரத் துண்டு கொடுய்யா’ என்றபடி நின்றிருந்த செந்தாழையைப் பார்த்தார்
ஏகாம்பரம். ஏனோ அவசரப்படுத்த நினைப்பில்லாமல்,
வாட்சை மட்டும் பார்த்துவிட்டு, வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">கோவிலின் வாசலில் இருந்த கருங்கல்
படியில், நடுவில் இருந்த வட்ட இலச்சினையில் கற்பூரக்கட்டியை வைத்துவிட்டு, வாசல் ஓரத்தில்
நிழலில் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்த கிழவியிடம் தீப்பெட்டி வாங்கிவந்து கற்பூரத்தைப்
பற்ற வைத்தாள். கட்டியின் மேல் நின்ற தீப்பிழம்பு, நெளிந்து ஆடியது. படியின் பக்கத்தில்
மரத்தாலான சரிவைப் பற்றியபடி அப்படியே தரையில் உட்கார்ந்து நேரேப் பார்த்தாள். நூறடி
தூரத்தில் பச்சை பட்டுக்கட்டியபடி அம்மன். கண் வில்லைகள் இரண்டும் இவளைப் பார்த்துக்
கொண்டு, கற்பூர சுடர் போல ஆடி ஆடிக் காட்டின. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘இப்ப என்னத்துக்கு கும்பிட்டுக்கிட்டு. அதான் போயிட்டானே. உள்ளல்லாம் போகக் கூடாதும்மா’ என்றபடி அவள் அருகில்
வந்தார் ஏகாம்பரம். அவருக்கு இப்போது இன்ஸ்பெக்டர் ஐயாவின் அவசரம், டீவிக்காரர்களுக்கு
சொல்ல வேண்டிய ஸ்கூப் நியூஸ் எல்லாம் மறந்துவிட்டிருந்தது. என்னவோ நினைவுக்கு வந்தவள்
போல, செந்தாழை, அவரை நிமிர்ந்துப் பார்த்து, கண்ணீருடன், <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘இந்த மரப்பாதையில்தான், அவனை
நடத்திக் கூட்டிப் போவார் சார் அவங்கய்யா.
செட்டியார் சொன்னார்ல. சாவடி கடைல்லாம் கட்டுவிடும் போது இவருதான் மேஸ்திரி.
அப்ப மாணிக்கத்துக்கு 2 வயசு முடியப் போவுது.
ஆனா நடக்க மாட்டான். பாதம் இப்படி உள்ளாற வளஞ்சு கட்டவிரல் சூம்பி இருக்கும்.
தோ, அந்த முக்குலதான் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு ஷெட்டுல குடியிருந்தம். இவங்கய்யா, நெதம்
கோவிலுக்கு கூட்டிட்டு வந்து, இந்த ஏறுமேடைல அவன மேலுங்கீழுமா நடக்க வைப்பாரு. காலை
அழுத்தி வச்சு நடந்து பழகறதுக்கு. அப்புறம் இந்தத் தெரு முழுசும் அவன் ஓடியாடிட்டிருந்தான்’.
அவள் பேசப்பேச அவள் முகம் அழுகையில் இன்னமும் கலங்கிப் போனது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘அறுதலி வளத்த புள்ளதான் சார்.
ஆறு வயசாறதுக்கு முன்னமே அவங்கய்யா போயிட்டாரு. ஆனாலும் நல்லாத்தான் வளத்தேன். ஒரு
பொல்லாப்பும் இல்லாமத்தான் இருந்தான். எந்தக் கண்ணு பட்டுச்சோ, இப்ப அயிட்டங்காரன்னு
பேரு வாங்கி, எத்தன பேரு சாபம் … எத்தன பேரு வயத்தெரிச்சலு…’ அவள் குரல் கம்மியது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘கேட்டீங்கள்ல செட்டியார்
பேசினத. இம்புட்டு நாள்ல இன்னிக்குத்தான் என்
காதார அவனப் பாராட்டி நாலு வார்த்த கேட்டேன். காலை மடிச்சு மடிச்சு தெருவெல்லாம் ஓடின
அந்த பழய மாணிக்கத்த இன்னிக்குத்தான் எங்கண்ணுல பாக்க முடிஞ்சது சார். இந்த மந்தையம்மாதான்
அந்த ஆவிக்கு நல்ல வழி காட்டனும்’ பேச்சு முடியாமல் கேவல் வந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘சரி வந்து வெசனப்பட்டுக்கிடலாம். லேட்டாயிட்டே இருக்குப் பாரு. அய்யா டென்ஷன் ஆயிட்டார்னா
கெட்டகெட்ட வார்த்தைல கேப்பாரு. வெரசா போலாம் வாத்தா’ என்றார் ஏகாம்பரம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">கலங்கி வெளிறியிருந்த முகம்,
இன்னமும் கோணியது. ‘இப்படி அயிட்டங்காரன்னு நாலு பேர் வாய்ல விழுந்து ஏச்சும் பேச்சும்
வாங்கிக்கிட்டு. என்றய்யா…’ கதறினாள். "இன்னிக்கு நீ இல்லன்னோடன இப்படி ஊரே உனக்கு பரிவா பேசுதேய்யா. இதக் கேட்டாச்சும் நீ திரும்பி வாரக்கூடாதா".<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘இப்பப் பேசி என்ன. நீ சுருக்க
வா. அங்க என்ன ஓடிட்டிருக்கோ’ என்று சொல்லிவிட்டு, ஏகாம்பரம் வண்டியை எடுத்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">முகத்தை துடைத்துக் கொண்டவள்,
‘என்னிக்காச்சும் திருந்தி, எனக்கு வச்சு கஞ்சி ஊத்துவான்னு இருந்தேன்…. இப்படி என்ன
முந்திக்கிட்டானே…’ என்றவள், முந்தானையை வாயில் பொத்திக் கொண்டபடி எழுந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ராகசுதா தியேட்டர் தாண்டி
வலப்பக்கத்தில் இருக்கும், அறுபதடி விளம்பர போர்டுக்கு அடுத்துத்தான் பெரியாஸ்பத்திரிக்கு
போகும் வழி இருந்தது. பின்னாடியே ஏகாம்பரம்
சொன்ன கரட்டு பாதை. பறவை எச்சங்களால் வண்ணமழிந்த
போர்டில் மார்ச்சுவரி என எழுதியிருக்க, தனிக் கட்டடமாக இருந்தது. காம்பவுண்டில் நுழைந்து,
சாமியின் ஆட்டோ, அரைவட்டமடித்து நிற்க, மூடிவைத்த நடைக்கதவின் முன்னால் நின்றிருந்த
முருகேசன் தலையை எக்கிப் பார்த்தான். பீன்னாடியே ஏகாம்பரத்தின் டிவிஎஸ்50 வருவதைக்
கண்டதும், படியை விட்டு இறங்கி கீழே வந்தான். இடது உள்ளங்கையில் வைத்து தேய்த்த பாக்குத்தூளை
பல்லுக்கும் கீழுதடுக்கும் இடையே அழுத்தி வைத்துக் கொண்டு, <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘என்ன சார், உங்க ஸ்டேஷன்லேந்து
எனக்கு போன் மேல போன் வருது நீங்க ஆப் பண்ணிட்டீங்களா’ என்றான் ஏகாம்பரத்தைப் பார்த்து.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">பதிலேதும் சொல்லாமல், செந்தாழையைப்
பார்தது, உள்ளே வா எனத் தலையை ஆட்டிவிட்டு, கர்சீப்பை எடுத்து மூக்கிற்கு மேல் வைத்துக்
கொண்டு மார்ச்சுவரி கட்டடத்தின் படிக்கட்டுகளில் ஏறினார். முந்தானையை முகத்தில் வைத்து
மூடியபடி செந்தாழையும் பின்னாலேயே ஏறினாள். பின்னாடியே வந்த முருகேசன், தூணுக்கு அருகிலிருந்த
மேஜையின் மேலிருந்த கெட்டியட்டை ரெஜிஸ்தரை எடுத்துக் கொண்டு, அவளருகில் வந்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘யாருக்குன்னு வந்திருக்கம்மா
நீயு?’ என்றான். செந்தாழை மையமாக தலையாட்டினாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘அம்மாவயல் சம்பவமா?’ வேகமாக
முன்னால் போய்க் கொண்டிருந்த ஏகாம்பரத்தைப் பார்த்து, ‘சார் அந்த பாடில்லாம், மேக்கால
ரூம்ல இருக்கு சார். ரைட்டுல இருக்கற டோர் பாருங்க’ என்றான். பிறகு செந்தாழையிடம்
‘அம்பது ரூவா வச்சிருக்கியா’ என்று தணிந்த குரலில் கேட்டான். அதற்குள், ஏகாம்பரம் திரும்பி
‘சீக்கிரம் வாத்தா. அப்புறமா துக்கம் கொண்டாடிக்கலாம்’
என்றார். ‘உள்ள வை. போகசொல்ல வாங்கிக்கறேன்’
என்றவாறே முருகேசன் படிகளை தாவி, மார்ச்சுவரியின் வலதுபக்க கதவுக்கு போனான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">ஏகாம்பரம், தயக்கத்துடன் கதவைத்
தள்ளினார். குப்பென குளிர்க்காற்றும், மருந்து வாடையும், மக்கிய கூள வாடையும் கிளம்பியது. தயக்கத்துடன் உள்ளே நுழைய, வயிற்றைப் பிரட்டும்
மக்கும் உடல்கள் வாடையை மூக்கு உணர ஆரம்பித்தது. கர்சீப்பால் இன்னமும் அழுத்தமாக மூக்கைப்
பிடித்துக் கொண்டே கேட்டார்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘அந்த ஸ்கெட்ச்சு போட்டானே,
மாணிக்கம். அவன் பாடி எங்கடா’ என்றார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘அதுவா, அந்த சைடு டேபிளுக்கு
வாங்க’ என்று சொல்லியபடி, அறையில் முன்பகுதியிலிருந்த டேபிள்களைத் தாண்டிப் போனான்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">செந்தாழை பிரமைப் பிடித்தபடி
அவர்கள் பின்னால் செலுத்தி விட்டது போலப் போனாள்.
மூலையில், இரண்டு பக்கச் சுவர்களையும் இணைத்து, முக்கோணம் ஆக்கியது போல குறுக்காகப்
போட்டிருந்த மேஜையில் பச்சைப் போர்வை போர்த்திக் கிடந்த உடலை, விரலால் இருமுறைத் தொட்டுக்
காட்டினான் முருகேசன். ‘இதுதான். 26 டோ டாக்.
இதுதான் இதுவரை ஐடென்டிஃபை ஆவல’. கையில் வைத்திருந்த
ரிஜிஸ்தரை பிரித்து மங்கிய ஒளியில் கண்ணுக்கு கிட்டே வைத்துப் பார்த்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘மூஞ்சைக் காமிடா. அந்தம்மா பாக்கட்டும்’ என்றார் ஏகாம்பரம். செந்தாழை
இப்பொழுதே கேவி கேவி அழத் தொடங்கியிருந்தாள். முகத்தை மூடியிருந்ததால் கமறலாய் கேட்டது
அழுகை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">பிணத்தின் மேலிருந்த துணியை,
ஒருபுறமாக முருகேசன் விலக்கினான். விரிந்து,
வானை நோக்கியபடி கிடந்த ஒரு ஜோடி பாதங்கள்தான் வெளியே வந்தன. கால் கட்டை விரலில் மாட்டியிருந்த
அட்டையில் ‘26’ என கருப்பு மசியில் பெரியதாக எழுதி சுழித்திருந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘டேய். மூஞ்சி இந்தப் பக்கம்.
இப்படி திருப்பு’ என்று சொல்லிக் கொண்டு, ஒரு அடி முன்னே வைத்தார் ஏகாம்பரம். சட்டென
நினைவுக்கு வந்தாற்ப் போல, ‘காலை மூடாதடா.
இந்தாத்தா, சின்ன வயசில கட்டவிரல் சூம்பிப்போய் கால் வளஞ்சிருக்கும்னியே’ என்றார்
குழப்பத்துடன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">அதற்குள் முருகேசன் இந்தப்
புறம் பிணத்தின் முகம் வெளிப்படும்படி போர்வையை விலக்கினான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">தலையை நீட்டி, பிணத்தின் முகத்தை
பார்த்த செந்தாழைக்கு, ஏகாம்பரத்தின் கேள்வி முதலில் காதில் எட்டவில்லை. ‘இங்க பாருத்தா’ என்று அவர் அவளைத் தொட்டு திருப்பி,
விறைத்து நின்ற பாதங்களையும், டேக் கட்டியிருந்த கட்டை விரலையும் காட்டினார். 'பிணத்தின்
முகத்தையும் கால்களையும் மாறிமாறி பார்த்துவிட்டு, முகத்தை முந்தானையால் முழுவதும்
மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். முருகேசன், ஏகாம்பரத்திடம் திரும்பி
‘இதானா’ என்பது போல குழப்பத்துடன் பார்த்தான்.</span></p>
<p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: "Latha",sans-serif;">‘இதில்ல… என்றய்யா… இதில்ல…’
என்று கைகளால் மாறிமாறி மாரில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் செந்தாழை. இன்னும்
இரண்டடி முன்னே வைத்து, பிணத்தின் மேலிருந்த போர்வையை பற்ற, அது கையோடு நழுவி வந்தது.
அப்படியே, அந்த பிணத்தின் மேல் சாய்ந்து, ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். ‘என்றய்யாஆஆ’.</span></p><p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: Latha, sans-serif;">முருகேசன் நீட்டிய ரிஜிஸ்தரை, புறம் தள்ளிவிட்டு, பொறு என்பது போல சைகை செய்தார் ஏகாம்பரம். காட்டமாக மூக்கைத் துளைத்தது பிணவாடை. கர்சீப்பால் அழுத்தி மூடிக் கொண்டு திரும்பி மார்ச்வரியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பின்னால் செந்தாழையின் தேம்பல் இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது.</span></p><p class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: 12.0pt; tab-stops: 356.25pt;"><span style="font-family: Latha, sans-serif;">(2019, ஆகஸ்ட்டில் <a href="https://www.vikatan.com/arts/literature/senthazhai-short-story" target="_blank">ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியானது.</a> )</span></p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-30138061217273552692022-06-29T02:43:00.004-04:002022-06-29T02:43:56.688-04:00கணிதமும் கவிதையும்<p><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgOx9QSczYBhuM90TMNFU-_NmeHExskZyyyo13AcPYjidmxI7YbwNgCJC1NW8roPQiWzOTnV1ELBDMLN261uVWkNTPgc0_BlAvCIaxtgczYG8OKNMgK-eZLnq0zRrRhSbolP3OcV_yAniOmytvWFQk_AgHG3F3EpuLYUub7s5FA0p422V4qOA" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img data-original-height="264" data-original-width="191" height="400" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgOx9QSczYBhuM90TMNFU-_NmeHExskZyyyo13AcPYjidmxI7YbwNgCJC1NW8roPQiWzOTnV1ELBDMLN261uVWkNTPgc0_BlAvCIaxtgczYG8OKNMgK-eZLnq0zRrRhSbolP3OcV_yAniOmytvWFQk_AgHG3F3EpuLYUub7s5FA0p422V4qOA=w289-h400" width="289" /></a></p><p>எங்களுடைய பள்ளிக்காலத்தில் கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பிரவாகமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது யாராவது குறுக்கே சந்தேகம் கேட்கிறேன் என்ற பாவனையில் வீண் இடைஞ்சல் செய்தால் மிகவும் எரிச்சல் அடைந்து விடுவார்.</p><br />கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த சாக்பீஸை அப்படியே ஒற்றைக்கையிலேயே ஒடித்து, வகுப்பின் சாளரம் வழியே தூக்கி எறிந்து காண்பித்து "அப்படி உன்னையும் தூக்கிப் போட்டு விடுவேன். எனக்கு அந்த வலு உண்டு தெரியுமா" என்று தடாலடியாக இறங்கிவிடுவார். <br /><br />மாணவர்கள் செய்யும் கலாட்டாவை விட, அதற்கு பதிலாக அவர் செய்யும் கலாட்டா இன்னமும் வேடிக்கையாக இருக்கும்.<br /><br />அவருடைய கோபத்திற்கும காரணம் இருந்தது. நாம் ஒன்றைப் பற்றி பேசும்பொழுதோ எழுதும்போதோ அதையொட்டி எதேனும் கேள்வியை விட்டெறிந்து விட்டு போகும் ஆவலாதிக் கூட்டத்திற்கு நாம் பொறுமையாக எவ்வளவு பதிலளித்தாலும் போதாது. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்ப்பது எவ்வித முறையான விளக்கத்தையும் அல்ல. பேசுகின்ற உங்களை பத்து பேர் கவனிக்கிறார்கள் என்றால், குறுக்குசால் ஓட்டி இடைஞ்சல் செய்பவரை ஐந்து பேராவது கவனிக்க மாட்டார்களா என்பதுதான். இன்றைக்கோ, எவ்வித ஆக்கபூர்வ கருத்துகளுமில்லாது வெற்று ட்ரோல்களுக்கு என்றே ஒரு பெரும் ரசிகக் கூட்டம் இருக்கிறது. <br /><br />ஆரோக்கியமான விவாதங்கள் ஒருதரப்பாக நிகழ்த்தப்படுவதில்லை. பேசுபொருளின் மையத்தை விட்டு விலகாமல் மாறி மாறி விளக்கங்களும், அதையொட்டி அல்லது விலகி நடத்தும் வாதங்களும் சேர்ந்து ஒரு விவாதத்தின் செறிவைக் கூட்டுகின்றன. <br /><br />அக்காலத்து கணிதவியலாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை, விளக்கங்களை பெரும்பாலும் கவிதை வடிவில் பதிந்து வைத்திருந்தார்கள். கடலையோ நிலவையோ பெண்ணையோ வர்ணித்து பாடும் கவிஞர்கள் போல, இவர்கள் எண்களின் சேர்க்கை, அவற்றின் வர்க்கம், சமன்பாடு பற்றியெல்லாம் இசைபட எழுதி வைத்திருந்தார்கள். <br /><br />இன்னொருவகையில், ஐரோப்பிய பல்கலைகழகத்தில் பணிபுரியும் கணிதவியலாளர்களுக்கு தங்கள் பணியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அதொரு உபாயமாகவும் இருந்தது. <br /><br />இத்தாலிய கணிதவியலாளர் நிக்காலோ டார்டாக்லியா, எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வதே மிகவும் ஆடம்பரம் என்கிற அளவிற்கான ஏழ்மையான சூழலில் பிறந்தவர். பதினைந்து வயதில்தான் அவர் எழுதுவதற்கே கற்க ஆரம்பிக்கிறார். ஓர் ஆசிரியரிடம் சேர்ந்து கல்வி கற்க முடியாத சூழலில், அவர் தானாகவே முனைந்து முதலில் மொழியைக் கற்றுக் கொள்கிறார். அதன் வழியே கணிதத்திற்கான கதவுகள் அவருக்கு திறந்து கொள்கின்றன. மெள்ள மெள்ள கிரேக்க அறிஞர்களின் கணித நூல்களை இத்தாலியில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார். பிறகு அவரே கணிதத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார். ஆனால் அதை வைத்து பெயர் மற்றும் புகழ் அடையும் வழிவகைகளைத் தேடாது, இரகசியமாக பாதுகாக்கிறார். <br /><br />அக்காலத்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியில் இருப்பவர் யாரையும், வெளியிரு இருந்து வருபவர் வாதுக்கு அழைக்கலாம். Duel என்று கத்தி சண்டைக்கோ துப்பாக்கிச் சண்டைக்கோ சவால் விடும் வழக்கம் போலத்தான் இந்த கணித போட்டியும். பேராசிரியரும், வாதுக்கழைப்பவரும் ஒருவருக்கொருவர் பரீட்சை வைத்துக் கொள்வார்கள். யாருடைய கணக்குகளுக்கு யார் அதிகமாக விடையளிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர். ஜெயித்தவருக்கு பேராசிரியர் பதவி அளிக்கப்பட, தோற்றவரின் பிழைப்பில் மண்தான்.. <br /><br />தன் பணியை காப்பாற்றிக் கொள்வதற்காக டார்டாக்லியா போன்ற கணிதவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள். க்யூபிக் சமன்பாடுகளுக்கான அவருடைய தீர்வை அவர் ஒரு கவிதை வடிவத்தில்தான் எழுதி வைத்திருந்தார். மெடீவல் காலத்திற்கு முன்பு, ஐரோப்பாவில் அல்ஜீப்ரா அவ்வளவாக பரவாத சமயத்தில், வடிவவியல் கொண்டுதான் பல கணித தீர்வுகள் அமைந்திருந்தன. அந்த முறையில் க்யூபிக் சமன்பாட்டிற்கான தீர்வு மிகவும் அரிதானது. அவருடைய பாடங்களுக்கு அது ஓர் அந்தஸ்தை கொடுத்திருந்ததால் அவர் அதை தன்னுடைய அறிவு முதலீடாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார். <br /><br />இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அதே க்யூபிக் சமன்பாடுகளுக்கான தீர்வை முன் வைத்த பிற கணிதவியலாளர்களிலும் ஒரு கவிஞர் உண்டு. அவர் பாரசீக கவிஞர் உமர் கய்யாம்.<br /><br />பழைய 'கள்வனின் காதலி' திரைப்படத்தில் கண்டசாலா பாடும் 'வெயிலுக்கேற்ற நிழலுண்டு' பாடலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, உமர் கய்யாமின் ருபாயத்தை மூலமாகக் கொண்டுதான் எழுதினார். <br /><br />உமர்கய்யாமின் பாரசீக கவிதையின் ஆங்கில வடிவம்<br /><br /><blockquote>A Book of Verses underneath the Bough,<br />A Jug of Wine, a Loaf of Bread--and Thou<br />Beside me singing in the Wilderness<br />Oh, Wilderness were Paradise enow!</blockquote><br /><br />கவிமணியின் பாடல்,<br /><br /><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">வெய்யிற்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றற் காற்றுண்டு</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">வையந்தருமிவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?</blockquote></blockquote><br />கவிமணியின் கவிதை ஓசைநயத்திலும், இசை மெட்டிற்கும் நெருக்கமாக அமைந்திருந்தது என்றால், மற்றொரு பரிணாமத்தில் நகுலனின் புகழ்பெற்ற கவிதை இதே காட்சிப்புலனை மனதுக்கு நெருக்கமாக காட்டுகின்றது.<br /><br /><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">ஒரு கட்டு வெற்றிலை</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">பாக்கு சுண்ணாம்பு புகையிலை</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">வாய் கழுவ நீர்</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ்</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">ஒரு புட்டி பிராந்தி</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">வத்திப்பெட்டி சிகரெட்</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">சாம்பல் தட்டு</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">பேசுவதற்கு நீ</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">நண்பா</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">இந்தச் சாவிலும்</blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;">ஒரு சுகம் உண்டு</blockquote></blockquote><br />புகழ்பெற்ற நோபல் வெற்றியாளர் ஜான் நாஷிடம் ஒரு மாணவர் சும்மா பேச்சு வளர்க்கும் தொனியில், 'இப்ப நேரம் என்ன' என்றுக் கேட்க, "உனக்கு நேரம் என்பது என்ன பொருள்படும் என்பதை பொறுத்திருக்கிறது" என்று நாஷ் பதிலளித்தார். எங்கள் கணித ஆசிரியரின் ஒடித்து வீசிய சாக்பீஸ் போன்றதொரு செயல்தான் அது. நாஷ் தன்னுடைய மாறுபட்ட உலகை இந்த லௌகீக வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள தொடர்ந்து போராடிக் கொண்டேயிருந்தவர். கவிபித்து தளும்பும் படைப்பாளிகளைப் போலத்தான் அவருடைய துன்பமும். தன்னுடைய மன உபாதைகளை தானாக தீர்த்துக் கொள்ள முடியும் என திடமாக நம்பியவர், அதற்கு முரணாக நின்ற சமூக அமைப்போடு தீராத ஒவ்வாமை கொண்டிருந்தார். <br /><br />உமர் கய்யாமின் கவித்துவ கற்பனையில் இடம்பெற்றிருக்கும் கவிதை புத்தகத்துடன் கணித பாடத்தையும் இணைத்து கற்பனை செய்திருந்தாரா எனத் தெரியாது. ஆனால் எங்கள் கணக்கு ஆசிரியரோ, நிகோலா டார்டாக்லியாவோ, ஜான் நாஷோ அவர்களுடைய ஆதர்ச சூழலில் அவர்களுக்கு உவகையளிக்கும் ஒரு நட்புக் குரல் அணுக்கமாக இருந்திருந்தால் அவர்களும் ஒரு ருபாயத்தாவது கண்டிப்பாக எழுதியிருப்பர்.<br /><br />கணிதமும் சரி. கவிதையும் சரி. கற்றுத் தேர்வதை விட, அமிழ்ந்து கரைவதில்தான் தெளிவு பிறக்கிறது.<div><br /><div><br /></div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-15929213746654239292022-05-25T10:43:00.001-04:002022-05-25T10:43:10.987-04:00சிவப்பு நிறப் பை<p><b><span style="color: #990000; font-size: large;">மூ</span></b>ன்றாவது சுற்று ஓட்டத்தின் போதுதான் குணாளன் கவனித்தான். வெள்ளைப் பூக்கள் சொரிந்து கிடந்த மரத்தடி பெஞ்சில் அதே சிவப்புநிறப் பை அப்படியே இருந்தது. தவில் உறை போல நீள உருண்டை வடிவத்தில் இருந்தது. இரத்தச் சிவப்பில் இருந்த பையின் மேல் ஒரு புத்தகம் பிரித்தவாக்கில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. </p><p>அந்த சிவப்பு நிறப் பையை சற்று நெருங்கிப் பார்த்த போது, அதன் மேலிருந்து புத்தகத்தில் இருந்த தமிழ் எழுத்துகள் கவனத்தை ஈர்த்தன. புத்தகத்தை எடுத்துப் பார்த்தான் குணா. ‘புளியமரத்தின் கதை’ எனப் பெயரிட்டிருந்தது. உள்பகுதியில் ஜேஸ்டன்வில் நூலக முத்திரை. </p><p>சுவாதி கூட இருந்திருந்தால், உடனே அந்த மரம் பற்றி, அந்த பார்க் பற்றி, அந்தப் புத்தகம் பற்றி என ஏதாவது சொல்லிக் கொண்டே வந்திருப்பாள். </p><p> ‘இது நம்மூர் பக்கம் இருக்கிற பேரி மரம் வகைதான் குணா. இவ்வளவு அழகா பூவாக் கொட்டுதேன்னு வீட்டுக்கு முன்ன, வீதியிலன்னு அலங்காரமா வாங்கி வச்சிடறாங்க. ஆனா சூழலுக்கு மிகப் பெரிய கேடு தெரியுமா. நாள்பட நிலையா நிக்காத வீக்கான மரம் வேற. அவ்ளோ உயரத்துக்கு வேற வளந்துடும். இந்தூர்ல புயல்காத்து சூறைக்காத்துன்னு நிறைய வேற வரும் பாத்துக்கோ. இங்க பக்கத்துல இருக்கிற பெர்க் கவுண்டில, இது போன்ற மரங்களை முழுசா அகற்றிட்டா, கவுண்டி செலவிலயே புது மரம் கொண்டு வந்து வச்சுக் கொடுப்பாங்களாம். அதோட அந்த முள்ளு இருக்கே… நாலு இஞ்சுக்கு மேல நீளமா, எளிதா நீக்க முடியாமல், சூழலியலுக்கு கெடுதியாம்ப்பா’ என்று அவள் முன்பு சொல்லிக்கொண்டே போனது நினைவுக்கு வந்தது.</p><p>அந்த பார்க், நீண்ட நடைகள், சைக்கிள் ஓட்டுதல்களுக்கென்றே கட்ட(ப்)பட்டிருந்தது. முன்பகுதியில் சிறிய மரக் கொட்டகைகள் போடப்பட்டு, பக்கத்தில் பெரிய கரி அடுப்புகள் இருந்தன. பார்பேக்யூ பார்ட்டிகள் நடத்திக் கொள்ளலாம். அது இலையுதிர் காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கும் காலமென்பதால், நிறையக் கூட்டம் இல்லை. </p><p>அப்படியே சற்று மேற்கு பக்கமாக நடந்தால், வலதுபக்கம் திரும்பும் கிளைப்பாதையின் முடிவில், சிறிய குளத்திற்கு அப்புறமாக, பூங்காவின் அலுவலகக் கட்டிடம் இருப்பதை நினைவுப் படுத்திக்கொண்டான். அந்த சிவப்புப் பையை அங்கே ஒப்படைத்து விடலாம் என்று தோளில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மின்னும் மரகத கழுத்துடன் நீந்திக் கொண்டிருத மல்லார்டு வாத்துக்கள் இருந்த குளத்திற்கு எதிரே ஒரு வயதான ஜோடி உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்மணி கையில் இருந்த கிண்டில் போன்ற கருவியில் ஏதோ மும்முரமாக படித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த பெரியவர் எதற்கோ காத்திருப்பது போல இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். குணாளன் கடந்து போகும்போது அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.</p><p>பதிலுக்கு புன்னகைத்தவன். அநிச்சையாக,</p><p>‘பார்க் நிர்வாக அலுவலகம் இந்தப் பக்கம்தானே? ‘ என்று ஆங்கிலத்தில் கேட்டான். </p><p>ஆமோதிப்பாக கையசைத்தவர், ‘இப்போது அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். சனிக்கிழமை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார்கள்’ என்று ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.</p><p>‘ஓ!’ என்றவன், அந்தப் பையை என்ன செய்வது என யோசித்தபடி தயங்கி நின்றான்.</p><p>அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த பெண்மணி சட்டென தான் படித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, </p><p>‘நாலு மணி ஆயிடுச்சா’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, அந்தப் பெரியவரைத் திரும்பிப் பார்த்தார். </p><p>‘பசிக்கல உங்களுக்கு. காலைல கொஞ்சம் மோர்சாதம் சாப்பிட்டதுதான்’, பிறகு உள்ளங்கைகளால் கண்களை நன்கு அழுந்தத் தேய்த்து விட்டுக்கொண்டு, ‘நைட்டுக்கு என்ன பண்ணலாம். வாழைக்காய் இருக்கு. புடலங்கா இருக்கு. ஒரு பொரியல் கூட்டு, ரசம்னு வச்சிடலாம். கூட இல வடாமும் பொரிச்சா... ஷோபாவுக்கு ரொம்பப் புடிக்கும்’ என்றார்.</p><p>அந்தப் பெண்மணி பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான் குணாளன். அவர், அந்தப் பெண்மணி பக்கம் திரும்பி, ‘ஷோபா(வு)க்காக வடாமா?’ என்றார், சற்றே அதிர்ச்சியுடன்.</p><p>திரும்பிப் பார்த்த பெண்மணி, தோளைச் சற்று குலுக்கி கைகளை விரித்து, ‘ஏன், அவளுக்கு பிடிக்கும்கிறதை மறந்திட்டீங்களா? அது சரி. உங்களுக்குத்தான் எண்ணெய்ல பொரிக்கக் கூடாது. வாய்வு ஆகாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அவளுக்கென்னப் போச்சு. அம்மா சமையல்னா…’ என்று ஆரம்ப்பித்தவர், அப்போதுதான் அங்கே, தயங்கி நின்று கொண்டிருந்த குணாளனைப் பார்தத்துவிட்டு, நிறுத்தி விட்டார்.</p><p>அவர்களுடைய தமிழ் உரையாடலைக் கேட்டுக்கொண்டு நின்றவன், அந்தப் பெண்மணி தன்னைப் பார்த்து தயங்கி நிற்பதை உணர்ந்து,</p><p>‘இல்ல, இந்த பையும், புத்தகமும் அந்த முக்கு பார்க் பெஞ்ச்ல ரொம்ப நேரமா இருந்தது. யாரோ விட்டுட்டுப் போயிட்டாங்கப் போல. அதான் இங்க அட்மின் ஆபிஸ்ல கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்’ என்று அவனும் தமிழில் சொன்னான்.</p><p>அவன் சொன்னதும் மீண்டும் அவன் தோளில் இருந்த பையை ஒருமுறைப் பார்த்தவ பெண்மணி, சட்டென தெளிவுக்கு வந்தவர் போல, பெரியவர் பக்கம் திரும்பி ‘எப்பவும் ஜிம்ல விட்டுட்டு வந்தேம்பீங்க. இல்ல ஸ்விம்மிங் பூல்ல மறந்திருவீங்க. இன்னிக்கு பார்க்ல மறந்திட்டீங்களா’ என்றார் சலிப்பு நிறைந்த குரலில்.</p><p>பெரியவர் எழுந்து குணாளனிடம் நன்றி சொல்லிக்கொண்டே, அவன் கையிலிருந்த பையையும் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டார். </p><p>‘அது, நான் வந்திட்டு இருக்கும்போது டாக்டர் ஆஃபீஸ்லர்ந்து போன் வந்தது. அப்படியே நின்னு பேசிட்டு இருக்க சொல்ல கைமறதியா வச்சிட்டேன் போல’ என்றார் கூச்சத்துடன் சொன்னவர், அவனைப் பார்த்து, ‘‘என் பெயர் மயில்வாகனன். இது என் மனைவி சிவகாமி, நீங்க புதுசா இந்தூருக்கு? முன்ன பாத்த நினைவில்லயே’ என்றார்.</p><p>குணாளன் தன்னை அறிமுகப்படுத்தி முடிக்கு(ம்) முன்னர், சிவகாமி ‘பழசா இருந்தா மட்டும் அப்படியே நினப்புல வச்சிருக்கப் போறீங்களாக்கும்’ என்றார் ஒரு நொடிப்போடு. மூப்பின் அடையாளம் இரண்டு பேரிடமும் நிறைய இருந்தது. தலையை சிறுகொண்டையென முடிந்திருந்தவர், சிறிய சதுர வடிவ வெள்ளெழுத்துக் கண்ணாடி வழியே மயில்வாகனனை தீர்க்கமாக பார்த்தார்.</p><p>பிறகு குணாளன் பக்கம் திரும்பி ‘ரொம்ப தாங்க்ஸ்ங்க. இப்படித்தான் நின்னா நின்ன இடம், வந்தா வந்த இடம்னு எதையாவது மறந்து தொலைச்சிடுவார். இது மாதிரி எத்தனை லைப்ரரி புக்கை தொலைச்சிட்டு ஃபைன் கட்டியிருக்கோம் தெரியுமா’ என்றார்.</p><p>அவர் படபடவென பேசியதைக் கேட்டு சிரித்த குணாளன், ‘நாங்க ஜேஸ்டன்வில் வந்து ஒரு மாசம்தான் ஆச்சு. இந்த பார்க்ல கொஞ்சம் ரன்னிங் போலாம்னு வந்தேன்.’ என்றான்.</p><p>‘ஓ! மராத்தான் மாதிரி நீள ஓட்டத்துக்கு ப்ராக்டிஸ் செய்யறீங்களா?’ என்ற மயில்வாகனன், குணாளன் பதிலளிப்பதற்கு முன்னர், சிவகாமியிடம் திரும்பி, ‘நம்ம பன்வாரி குப்தா ஓடுவர்ல. அது மாதிரி’ என்றார். </p><p>‘யாரைச் சொல்றீங்க. அந்த இரட்டைப் பசங்க இருப்பாங்களே. கார்னெல்ல படிக்கப் போனாங்களே. அவங்கப்பாவா? அவர் பாவம் உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரில சேத்து இப்பத்தான் கொஞ்சநஞ்சம் நடமாடறார். அவர் எங்க ஓடறது பாவம். ’ என்றார் சிவகாமி. </p><p>குணாளன் சிரித்துவிட்டு ‘இல்ல சும்மா ரெண்டு மூணு ரவுண்டுதான். அப்புறம் குளிர்காலம் வந்திட்டா ஜிம்ல மட்டுந்தானே ஓட முடியும்’ என்றான்.</p><p>‘ஆமாம். ‘ என்று ஆமோதித்த மயில்வாகனன், ‘இங்க எங்க இருக்கீங்க நீங்க’ என்றார்</p><p>‘இங்க த்ரீ ஓ டூ (302) ஹைவே பக்கமா பார்க் வ்யூ அபார்ட்மெண்ட் இருக்குல்ல அங்கதான்‘ என்றான். </p><p>‘ஆமாம். ஹில் மாதிரி இருக்கும்ல’ என்றவர் சிவகாமியிடம், ‘அங்கதானே ராமசந்திரன் இருக்கார்’ என்றார் </p><p>‘எந்த ராமசந்திரன்?’ என்றார் சிவகாமி.</p><p>‘புதுசா இந்திய மளிகைக்கடை ஒண்ணு ஆரம்பிச்சாங்களே, ஒரு குரூப்பா. அவரும் இன்னும் ரெண்டு….’ என்று முடிப்பதற்குள் இடைமறித்த சிவகாமி,</p><p>‘நீங்க வந்தனா வீட்டுக்காரரைச் சொல்றீங்க. அவங்க இந்தியாவுக்கு போயாச்சு. நம்ம விஜயா பொண்ணு கல்யாணத்தப்ப ஈரோட்ல அவங்க எல்லோரையும் பார்த்தோமே. இப்ப அந்தப் பொண்ணுக்கே குழந்தை பொறந்தாச்சு. நீங்க இன்னமும் ராமசந்திரன் பார்க்வ்யூல இருக்கார்ன்னுட்டு’ என்றார் சலிப்போடு.</p><p>அவர்கள் உரையாடலில் குணாளனுக்கு தனி சுவாரசியம் வந்துவிட்டது. 'இந்திய மளிகைக் கடையா, ஜெஃபர்ஸன் தெருல இருக்கே அதுவா? குல்மோரான்னு' என்றான்.</p><p>உடனே சிவகாமி, 'அதைத்தான் சொல்றார். ஆனா அது தொறந்து நாலு வருஷமாயிட்டுது. நடுவில மூனு மாசத்துக்கு ஹெல்த் டிபார்ட்மெண்ட் இன்ஸ்பெக்ஷன்னு சொல்லி மூடி வேற வச்சிருந்தாங்க. இவர் எப்பவும் இப்படித்தான். எல்லாத்தையும் மறந்துட்டு நம்மளயே கேட்டுட்டிருப்பார். இவருக்கு பதில் சொல்லி சொல்லியே நான் கெழண்டு போயிட்டேன்’ என்றார். பிறகு மூக்குக் கண்ணாடியை கழட்டி பக்கத்தில் இருந்த கைப்பையைத் திறந்து அதன் பெட்டியில் வைத்துக்கொண்டே கிளம்பத் தயாராகிவிட்டார்.</p><p>சிவகாமி என்னதான் அலுப்புடன் பேசினாலும், அடுத்து மயில்வாகனன் என்ன கேட்கப் போகிறார் என காத்துக் கொண்டிருந்தது போலப்பட்டது. அவன் அங்கே வருமுன்னர் இருவரும் அவ்வளவாக பேசிக் கொண்டிருந்ததுபோலத் தெரியவில்லை. இப்போது அவன் இருப்பதை கவனிக்காமல் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்.</p><p>அவன் எதிர்பார்த்தது போலவே மயில்வாகனன் மீண்டும் ஆரம்பித்தார், ‘ஆமாமாம். அந்த ஹெல்த் டிபார்ட்மெண்ட் கேஸ்ல நம்ம சோப்ராதான மீட்டிங்க்லாம் போட்டு, கையெழுத்து பிரசாரமெல்லாம் செஞ்சு, அந்த ஸ்டோரை திருப்பித் திறக்கப் போராடிட்டிருந்தார். நல்ல மனுஷன்' என்றார்.</p><p>தலையை குறுக்காக பலமாக ஆட்டியபடி மறுத்த பெண்மணி 'சோப்ராஜி ஊர்வலம் எல்லாம் நடத்தினது வேற கேஸ். மார்க்ஸ்டர் கவுண்டில ஒரு தெலுங்கு பையனை போலிஸ் அடிச்சிட்டாங்கன்னு ஒரே களேபரமாச்சே. ஏதோ டிரக் பிரச்னைன்னாங்க. அப்புறம் ரிலீஸ் பண்ணிட்டாங்க. சோப்ராதான் நஷ்டஈடு வாங்கப் போறேன்னு கிளம்பினார். ஆனா ஒன்னும் பிரயோஜனமில்ல. ஜேஸ்டன்வில் ஹெரால்டுல்ல ரெண்டு தடவ அவர் போட்டோ வந்தது. அதான் லாபம்’ என்றார்.</p><p>குணாளன், சரி கிளம்பலாம் என மனதில் எண்ணிக்கொண்டு, அவர்களிடம் இருந்து விடைபெற வாயெடுக்கும்போது, மயில்வாகனன் மீண்டும் ஆரம்பித்தார்.</p><p>'நீங்க ஜேஸ்டன்வில் ஹெரால்டு வாங்கறீங்களா? உள்ளூர் செய்திகளை பிரமாதமா கவர் பண்ணுவாங்க. சந்தீப் கவுர்ன்னு ஒர்த்தர் ஞாயித்துக் கிழமை ஞாயித்துக் கிழமை ‘கவுர் கார்னர்’னு ஒரு பத்தி எழுதிட்டிருப்பார். அருமையா இருக்கும்’ என்றார்.</p><p>‘அந்த பத்திரிகையே இப்பவோ அப்பவோன்னு, மூடப்போற நிலைமைலதான் இருக்கு. சந்தீப் கவுர் பத்தில்லாம் எப்பவோ நின்னுட்டது. அவர் ஏதோ சினிமாவுக்கெல்லாம் எழுதி, இவங்களுக்கு கட்டுப்படியாகல’ என்றார் சிவகாமி.</p><p>அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் பார்க்க, குணாளனுக்கு வேடிக்கையாக இருந்தது. </p><p>அதற்குள் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு பெஞ்சிலேந்து எழுந்த சிவகாமி, ‘ஊர்லேந்து கோங்குரா இலை யாரோ கொண்டு வந்தாங்கன்னு, மஞ்சரி இவ்ளோ இலை கொண்டு வந்து கொடுத்தா. அதை ஒரு பச்சடி பண்ணி வச்சிடலாம்னு பாக்கிறேன். போன தடவ ஷோபா அதை ஸ்கூலுக்கு கொண்டு போய், அங்க மத்த டீச்சர்களுக்கெல்லாம் கொடுத்து ஒரே ஃபேமஸாயிடுச்சு’ என்று சற்றே வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார்.</p><p>குணாளன் உடன் இடைமறித்து ‘உங்க பொண்ணு ஸ்கூல் டீச்சரா? எம் பொண்ணு கூட மூணாங்கிளாஸ் படிக்கிறா. நேயா-ன்னு பேரு’ என்றான்.</p><p>அவன் கேள்வியை எதிர்பார்க்காதவர் போல அவனைச் சற்று விழித்துப் பார்த்தார். பிறகு,</p><p>‘இல்லல்ல… அவ எலிமெண்ட்ரி ஸ்கூல் இல்ல. ஹை ஸ்கூல் டீச்சர். க்கொ…கொலம்பைன் ஹை ஸ்கூல்’ என்றார். பிறகு நினைவு வந்தவர்ப் போல, ‘அவளை ஸ்கூல்ல எல்லாருக்கும் தெரியும். அவ்ளோ பாப்புலர். ஒரு வேலை விடாம இழுத்துப் போட்டு செய்வா’ என்றார். மாலையொளியில் அவர் முகம் பளபளவென்றாகி அதில் பெருமை பொலிந்தது. </p><p>மயில்வாகனன், எதுவும் பேசாமல் அந்த பெண்மணியையேப் பார்த்துக் கொண்டிருந்தார். </p><p>‘சரி நான் போயிட்டு இருக்கேன். நீங்க மெள்ள வாங்க. எல்லாத்தையும் மறக்கற மாதிரி வழியையும் மறந்து தொலையாம வீட்டுக்கு வந்து சேருங்க’ என்றுவிட்டு நடக்க ஆரம்பித்தார் சிவகாமி.</p><p>அவர் சொன்னதைக் கேட்டு சற்று சோகையாக சிரித்த பெரியவர். ‘சிலசமயம் மறதியை விட சிறப்பான மருந்தென்ன இருக்கு. இல்லயா சார்’ என்றார் இவனைப் பார்த்து. </p><p>பிறகு நினைத்துக் கொண்டார்ப் போல எழுந்து, ‘உங்களோட பேசினதுல ரொம்ப சந்தோஷம். திரும்பவும் சந்திப்போம்னு நம்பறேன். ‘ என்றவர், திரும்பி சிவகாமியைப் பார்த்துவிட்டு ‘நானும் போயாகணும். அப்புறமா நிதானமாப் பேசலாம்’ என்று சொல்லிவிட்டு சிவகாமியை விரைவாக பின்தொடர ஆரம்பித்தார்.</p><p>‘எனக்கும் மிகவும் மகிழ்ச்சி சார்’ என்றான் குணாளன். போன் நெம்பர், விலாசம் பரிமாறிக் கொள்ளலாமா என எண்ணி முடிப்பதற்குள் அவர் விரைந்து நடந்து, சிவகாமியை எட்டிப் பிடித்திருந்தார். அந்த கிளைச்சாலை திரும்பி பெரிய சாலையில் சேரும்வரை, அருகருகாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்களை சற்று நேரம் நின்று பார்த்தான் குணாளன். </p><p>கையிலெடுத்த கவளம் வாயினுள் போய்ச்சேரும் முன்னர், சாம்பாரிலிருந்த சின்ன வெங்காயத்தின் வாசம் குணாளனின் நாசியை நிரப்பியது. ‘சூப்பர் டேஸ்ட் மா’ என்றபடி பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தது நேயா குட்டி. </p><p>‘நேத்து போயிருந்தேன். எல்லா காய்கறியும் வாடி வதங்கிப் போயிருந்தது. வெள்ளிக்கிழமைதான் ஃப்ரெஷ்ஷா வரும்னான். அதான் இன்னிக்குப் போனேன். சின்ன வெங்காயம், கத்திரிக்கா, கொத்தவரங்காய், முருங்கைன்னு நிறைய வந்திருந்தது. கோங்குரா இலை கூட இருக்குன்னான். ஊர்லேந்து ஃப்ரெஷ்ஷா வந்திருக்காம்’ என்றாள் சுவாதி.</p><p>‘எங்க? ஜெஃபர்ஸன் தெரு சப்ஜி மண்டியா? நல்லாருக்கா என்ன அது? முன்ன ஏதோ ஹெல்த் டிபார்ட்மென்ட்ல இன்ஸ்பெக் ஷன்ல சீல் வச்சிருந்தாங்களாமே.’ என்றான் குணாளன். டிவியில் ஏதோ பெரிய மால் பற்றிய படம் ஓடிக் கொண்டிருந்தது. குண்டு உடம்பை வைத்துக் கொண்டு பால் ப்ளார்ட் தாவிக் குதித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நேயா உட்கார்ந்த இடத்திலே குதித்து குதித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.</p><p>சுவாதி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து, ‘உனக்கெப்படி தெரியும்? எனக்கே இன்னிக்குத்தான், பிரியா…’ பக்கத்து அபார்ட்மெண்ட் திசையை சுட்டிக் காட்டி, ‘சொல்லிட்டிருந்தா. இப்ப மேனேஜ்மென்ட்லாம் மாறிடுச்சுன்னு கேரண்ட்டியா சொன்னப்புறம்தான் கடைக்கேப் போனேன்’ என்றாள்.</p><p>குணாளன் சிரித்துக் கொண்டே ‘இந்த ஊரில் நடந்த அத்தனை சம்பவங்களையும் தேதிவாரியா அந்த ஆண்ட்டி நினைவு வச்சிருந்தாங்க. பாவம் அவங்க புருஷன்தான், இதெப்ப, அதெப்பன்னு கேள்வியா கேட்டுட்டிருந்தார்’ என்று அன்று மாலை நடந்த சந்திப்பைப் பற்றி விவரித்தான்.</p><p>‘செம இன்ட்ரெஸ்டிங்கான ஆளுங்களா இருப்பாங்கப் போலயே. ஏன் அவங்க அட்ரஸ் கேட்டுட்டு வந்திருக்கலாம்ல. ‘ என்று குறைபட்டுக் கொண்டாள் சுவாதி.</p><p>‘அதனாலென்ன. அவங்க பொண்ணு ஸ்கூல் டீச்சராம். ஷோபான்னு. நாங்கூட நேயா ஸ்கூலாக்கும்ன்னு விசாரிச்சேன். கொலம்பைன் ஹை ஸ்கூல்ன்னாங்க. உன் ஃப்ரெண்டு ப்ரியாவோட பையன் எட்டாவதுதானே. விசாரிச்சிக்கிடலாம்’ என்று சமாதானப்படுத்துவது போல் சொன்னான் குணாளன்.</p><p>‘ம்ம்…’ என ஏதோ யோசித்தவள், ‘கொலம்பைன் ஹை ஸ்கூல்? இங்க இருக்கறது வில்லியம் ஃப்ராங்க்ளின் ஹைஸ்கூல்தான. கொலம்பைன்னு இங்க எதுவும் கிடையாதே. ஒருவேளை மார்க்ஸ்டர் இல்ல குவேக்கர் டவுன் பக்கம் ஏதாவது ஸ்கூலா?’ என்றாள் சுவாதி.</p><p>குணாளன் ‘அப்படியா. ஒரு வேள நாந்தான் தப்பா கேட்டுட்டேனோ. இல்லயே. கொலம்பைன்னு பேரைக் கேட்டவுடன டப்புன்னு நெஞ்சுல நின்னுட்டதே.’ என்றான்.</p><p>சுவாதியும் ‘ஆமா, எனக்கும் அந்த ஸ்கூல் பேர் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு. ஆனா இங்க எங்கயும் பக்கத்தில் இருக்கிற மாதிரி தோணல. ஷோபா டீச்சர். கொலம்பைன் ஸ்கூல்’ என்று யோசனையோடு சொல்லிக் கொண்டிருந்தாள்.</p><p>டிவி படத்தை நிறுத்திவிட்டு, கையில் வைத்திருந்த ஸ்பூனை வேகமாக மேஜையின் மேல் வைத்த நேயா, ‘இப்படி நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருந்தீங்கன்னா, நான் எப்படி சினிமா பாக்கிறது. ’ என்றாள். பிறகு சட்டென திரும்பி, பக்கத்து டேபிளில் இருந்த, சிறிய வட்ட வடிவ கருவியைப் பார்த்து ‘ஹே அலெக்ஸா, கொலம்பைன் ஹை ஸ்கூல் ஷோபா டீச்சர் பத்தி சொல்லு’ என்று கேள்வியை வீசியது குழந்தை.</p><p>விளக்குகள் ஒளிர, விழித்துக் கொண்ட அலெக்ஸா, ‘ஷோபா சாண்டர்ஸ், அறிவியல் ஆசிரியர், கொலம்பைன் மேல்நிலைப் பள்ளி குழந்தைகளுக்காக தன் உயிரைத் தந்தவர். ஏப்ரல் 20ம் தேதி, 1999ம் ஆண்டு இரண்டு மாணவர்கள் துப்பாக்கிகளுடன், கொலம்பைன் பள்ளிக்குள்ளே அதிரடியாக நுழைந்து, பலபேரை சுட்டுத்தள்ளி படுகொலைகள் செய்த சம்பவத்தில், ஷோபா சாண்டர்ஸ் தீரத்துடனும் சமயோசிதத்துடனும் பல குழந்தைகளைக் காப்பாற்றினார். இறுதியில் அவரும் சுடப்பட்டு இறந்தார்….’ அந்த இயந்திரம்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக, குணாளனும் சுவாதியும், அந்த செய்தியின் பாதிப்பில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.</p><p>அலெக்ஸாவின் செய்தி முடிந்ததும், நேஹா சற்று சோகமாக ‘செத்துப் போயிட்டாங்கப் போல’ என்றாள். பிறகு டிவியின் சத்தத்தை(க்) கூட்டி வைத்துக்கொண்டு பால் ப்ளார்ட்டின் வேடிக்கை சாகசங்களை ரசிக்க ஆரம்பித்தாள்.</p><p>குணாளன் பக்கம் சாய்ந்து கிசுகிசுப்பாக ‘செத்துப் போய் இருவது வருசமாச்சாமே. அந்தப் பொண்ணப் பத்தியா பேசிட்டிருந்தாங்க அந்தம்மா’ என்றாள்.</p><p>குணாளன் எதுவும் பதில் சொல்லவில்லை. சிவகாமி திரும்ப(த்) திரும்ப ஷோபாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில், அதில் அவருக்கொரு லயிப்பும் பெருமையும் இருந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நினைவுச் சங்கிலியில் நீங்காத கண்ணியாக ஷோபா எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறார் எனப் புரிந்தது. மிகவும் வருத்தமாகவும், சற்றேப் பயமாகவும் இருந்தது. </p><p>வாய் நிறைய சிரித்துக் கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்த நேயா-வைப் பார்த்தபடி இருவரும் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.</p><p>வெள்ளைப் பூக்கள் சொரியும் பேரி மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார் மயில்வாகனன். தோளிலிருந்த சிவப்புப் பையை பக்கத்தில் இருந்த பெஞ்ச்சின் மீது வைத்தவர், அதன் மேல் ஒரு புத்தகத்தை பிரித்து, கவிழ்த்த வாக்கில் வைத்தார். அதன் மேலட்டையில் ‘ஒற்றன்’ என்று பெரிய எழுத்தில் தெரிவதைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டவர் போல, சற்று விலகி வந்து நின்று கொண்டார். ஒற்றைக் காலை முழங்காலிட்டு, குனிந்து மற்றொரு கால் ஷூவின் கயிறுகளை அவிழ்த்து பிறகு இறுக்கமாகக் கட்டிக் கொண்டார். பிறகு எழுந்து விறுவிறுவென நடந்து, உள் சாலையில் திரும்பி அந்த பெஞ்சிற்கு வந்தார். இன்று சற்று குளிர் பரவியிருக்க, சிவகாமி, நீலப்புடவைக்கு மேல் சாம்பல் வண்ண ஸ்வெட்டர் அணிந்து, அந்த பெஞ்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். </p><p>சிவகாமியின் அருகில் வந்து அமர்ந்த மயில்வாகனன், சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு. ‘என்ன படிக்கிறே’ என்றுக் கேட்டார்.</p><p>‘சேப்பியன்ஸ்’ என்று முணுமுணுப்பாக சொன்னவர், தொந்தரவானது போல நிமிர்ந்து மயில்வாகனனைப் பார்த்தார்.</p><p>‘ஜிம்முக்கு போறேன்னீங்களே. பையைக் கொண்டு வரலையா?’ என்றார். குரலில் முட்கள் உரசிக் கொண்டிருந்தன.</p><p>தோள்ப்பட்டையைத் தடவிப் பார்த்த மயில்வாகனன், மெலிதான குற்றவுணர்ச்சியோடு ‘மறந்திட்டேன் போல’ என்றார்.</p><p>‘மறந்திருங்க. எல்லாத்தையும் மறந்திருங்க. அதான் உங்களுக்கு வேணும்’ என்று கடுகடுத்த குரலில் சொல்லியபடி மீண்டும் வாசிப்பில் ஆழ்ந்தார் சிவகாமி.</p><p>சிவகாமியையே சில நொடிகள் பரிதாபமாகப் பார்த்தவர், திரும்பி, சிவப்புநிறப் பையை விட்டுச் சென்ற திசையை நோக்கிப் பார்த்தார். </p><p>பிறகு காத்திருக்க ஆரம்பித்தார்.</p><p> </p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-62599610284561168632022-01-31T11:09:00.004-05:002022-01-31T16:57:58.644-05:00கோடிடா (Gordita)<p><b><span style="color: #660000; font-size: large;">அ</span></b>மெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி மாநில தமிழ்ச்சங்கத்தின் 32வது ஆண்டுவிழா மலரில் இடம்பெற்ற சிறுகதை. இந்த ஆண்டில் வெளியான எனது இரண்டாவது சிறுகதை. </p><p>இந்த கதைக்கு, அருமையான படங்களை சேர்த்து பதிப்பித்த, மலர் ஆசிரியர் <a href="https://www.facebook.com/subhakaraikudi">சுபா காரைக்குடி</a> அவர்களுக்கு நன்றி. </p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj637PsXPG4QDWCWnFc8cjk1wW82lV5reJWiOXod-UpBBHY04tQVHcLito3C90VTdITPRYWMY7uY7zxM9J4EiSpsqL0k37oQJRJecEdeOh1MQwtSNS9Ph82wo00BbE2LmH1KDITvYJGvUe26_TVbOq-pjxQGjG3-BunZau6yTVBdNvlq3I-LQ=s834" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="834" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj637PsXPG4QDWCWnFc8cjk1wW82lV5reJWiOXod-UpBBHY04tQVHcLito3C90VTdITPRYWMY7uY7zxM9J4EiSpsqL0k37oQJRJecEdeOh1MQwtSNS9Ph82wo00BbE2LmH1KDITvYJGvUe26_TVbOq-pjxQGjG3-BunZau6yTVBdNvlq3I-LQ=s320" width="249" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh5Bf-1Jg5kV4er9z4t8pmZ71pORgjmy1PrlEsHcjRixKkzeaKxA9azKgJ-YgtQs7bxQVbSCJ9rzxhxyhrPNpbQ13cU_vvK5ykhFhxueKpwQLKPtOJ7WoWFQYh3jUs786NR969L2nb-3jb4MnBm-aOifq6bV0773mx1QtDFh-Kc1VXTeI7m7g=s841" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="841" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh5Bf-1Jg5kV4er9z4t8pmZ71pORgjmy1PrlEsHcjRixKkzeaKxA9azKgJ-YgtQs7bxQVbSCJ9rzxhxyhrPNpbQ13cU_vvK5ykhFhxueKpwQLKPtOJ7WoWFQYh3jUs786NR969L2nb-3jb4MnBm-aOifq6bV0773mx1QtDFh-Kc1VXTeI7m7g=s320" width="247" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0bpSRrt2KXvqLP_pADlx5qRo75HdRCbxoxlDFJD5ZI3dEAv_do0UtdosvWZhSzFA1PRVq9QFyXUns4BQBXABgTiEpcvYf1ZnEKDNmbUcRCimDCNVprP6EQ6hgpk6qLIYeJx3fz6yxhJgsHHKTAJOmMZRMUWnXw9o4XHZJWCRDGlf83Csnsg=s833" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="833" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0bpSRrt2KXvqLP_pADlx5qRo75HdRCbxoxlDFJD5ZI3dEAv_do0UtdosvWZhSzFA1PRVq9QFyXUns4BQBXABgTiEpcvYf1ZnEKDNmbUcRCimDCNVprP6EQ6hgpk6qLIYeJx3fz6yxhJgsHHKTAJOmMZRMUWnXw9o4XHZJWCRDGlf83Csnsg=s320" width="250" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjwTXODzqEKC5AQH4BxD_p7a_4CLX6c_sbI4AFX3zYPJulNHr9lF2GYLGfS7tV777Ig7iA-49ZXCL83VJyaW6VhQslXLr-haddZOyhVn9tn2-nIAx6GCjD-RRkZu-guf9gA3h5hn1gm6LRxuTKu6DNbysyrsMERHsqX_5iFQypVetbu5XWetw=s834" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="834" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjwTXODzqEKC5AQH4BxD_p7a_4CLX6c_sbI4AFX3zYPJulNHr9lF2GYLGfS7tV777Ig7iA-49ZXCL83VJyaW6VhQslXLr-haddZOyhVn9tn2-nIAx6GCjD-RRkZu-guf9gA3h5hn1gm6LRxuTKu6DNbysyrsMERHsqX_5iFQypVetbu5XWetw=s320" width="249" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi2Tw-fG89TaL3ZLS37iD-QwlI7c7RYDGfJugLKeG--iZsKh6Mkfpib2pYt0zCUj8wFccJ8DM_XSrTvuwMBnqNv84-0-g_e-Cy-ogswl2pAEdateRt8s9x22RSAWdDuj2Uo7svnkzOaLVZVvGlr32OFjD9hbvvt6xNwgfSKMIgopG_OyZhnyg=s835" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="835" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi2Tw-fG89TaL3ZLS37iD-QwlI7c7RYDGfJugLKeG--iZsKh6Mkfpib2pYt0zCUj8wFccJ8DM_XSrTvuwMBnqNv84-0-g_e-Cy-ogswl2pAEdateRt8s9x22RSAWdDuj2Uo7svnkzOaLVZVvGlr32OFjD9hbvvt6xNwgfSKMIgopG_OyZhnyg=s320" width="249" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;"><br /><br /><br /><br /><div style="text-align: center;">o0O0o</div></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /><div class="separator" style="clear: both;"><b><span style="color: #cc0000; font-size: large;">தீ</span></b>ப்திக்கு இப்பொழுதெல்லாம் அம்மாவைப் பார்த்தால் சற்று எரிச்சலாக இருக்கிறது. சிலசமயம் கோபம் கூட வருகிறது. கண்ணாடி முன்னால் நின்று ஸ்ட்ரெய்ட்னரை வைத்து தலைமுடியை நேராக்கிக் கொள்வது, போனில் யாருடனோ சிரித்துப் பேசுவது, காரின் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகும்போது கூடவே ஹம் செய்து கொண்டு போவது…சிலசமயம் உல்லாசமாக விசில் கூட அடிப்பது… இவை எல்லாம் தீப்தியை முள்ளின் மேல் நிற்க வைப்பது போல் இருக்கிறது.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“டிபன் பாக்ஸ்ல அப்படியே மிச்சம் வச்சிருக்க”</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“ஏய்… ஏண்டி சாப்பிடலன்னு கேட்டா ஒண்ணுஞ் சொல்ல மாட்டீங்கிற”</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“பிடிக்கல” மோவாயை அழுத்தமாக வைத்துக்கொண்டு உதட்டிடுக்கில் பதிலளித்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">உடன் மஞ்சரி ஒருபாட்டம் ஆரம்பித்தாள். தினமும் காலையில் ஐந்தரைக்கே எழுந்து சமையல் செய்து அவர்கள் இருவருக்குமான லஞ்ச் பாக்ஸை நிரப்பி, ஏழு மணி ஸ்கூல் பஸ்ஸிற்கு ஆறே முக்கால்வரை தூங்கும் தீப்தியை எழுப்பித் தயார் செய்து பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு, முக்கால் மணி நேர தொலைவில் இருக்கும் அலுவலகத்திற்கு காலை போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எட்டு மணி அடிப்பதற்கு முன்னால் போய் சீட்டில் அமர்ந்தப்புறம்தான், வழியில் டங்கினில் வாங்கிய காப்பியை இரண்டு வாயாவது குடிக்க முடிகிறது. இவள் என்னடாவென்றால் வெண்ணையிட்டு சுட்ட சப்பாத்திகளையும், தக்காளி சட்னியையும், உருளைக் கிழங்கு கூட்டையும் அப்படியே சாப்பிடாமல் திருப்பிக் கொண்டு வந்துவிட்டு அதற்கு ஓர் எளிய காரணம் கூட சொல்லாமல் அழுத்தமாக இருக்கிறாள் பார்.</div><div class="separator" style="clear: both;">அம்மாவின் இந்த விளக்க வியாக்கியானங்கள் எதுவும் தீப்திக்கு வரவரப் பிடிப்பதில்லை. எந்தத் தவறும் நிகழாதமாதிரி எப்படி அவளால் நியாய வேஷம் போட முடிகிறது என்று கோபமாக வந்தது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அம்மா அலுவலகத்தில் இருந்து திரும்புவதற்குள், கிரேடில் அவஸ்தையுடன் உறுமிக் கொண்டிருக்கும் ரூடியை வாக்கிங் அழைத்துப் போய்விட்டு வந்துவிட்டால், பிறகு தீப்தியின் அறையிலிருந்து வெளிவரவேண்டிய அவசியமே இல்லை. அம்மாவை, அவள் அணுக்கத்தை, அவள் மிருதுவான தொடுதலை, அவள் உடல் வாசத்தை, முக்கியமாக அந்த சிரிப்பை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் அந்த நாளை முழுவதும் கடத்திவிடலாம். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">இன்னும் பதினைந்து நிமிஷம்தான். இந்த பள்ளி ஹோம்வொர்க்குகள் அதுவாகவே தீர்ந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும். முன்பு அப்பா இருந்த போது இவ்வளவு பளுவானதாக பள்ளிக்கூடம் இல்லை. அப்பொழுது எலிமென்டரி ஸ்கூல்தான். நிதானமாக எட்டரை மணிக்குத்தான் ஸ்கூல் பஸ் வரும். அப்பாவும் அவளும் டைனிங் டேபிளில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, ஏகத்திற்கு வேடிக்கையாக இருக்கும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“மி கோடிடா, தாமே கஃபே….” என்று எஸ்பான்யோலில் எதையாவது சொல்லிவிட்டு அப்பா சிரிப்பார். அப்பாவின் குறைபாடான உச்சரிப்பில், தீப்திக்கு அது அபத்தமாக ஒலிக்கும். சிரிப்பு சிரிப்பாக வரும். அவளுக்குப் பள்ளியில் எஸ்பானியோல் ஒரு பாடமாக இருந்தது. வகுப்பு டீச்சரோடு அவளால் சற்று சரளமாக பேசுவது மட்டுமல்லாமல் வாசிக்கக் கூட முடியும். ஆனால் அப்பா பேசுவதற்கு பதிலென எதையும் சொல்ல முடியாது. சிரிப்பு மட்டும்தான். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“நம்மூர்ல கொடி மாதிரின்னா அவ்ளோ ஸ்லிம்மா இருக்குன்னுவாங்க. ஆனா ஸ்பானிஷ்ல குண்டாம்” அவளிடம் கிசுகிசுக்கும் அப்பா, உரக்க” மஞ்சரி கோடிடா. காபி கொடுடா. அட… காப்பியை தாம்மே” என்பார் </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஆரம்பத்தில் அம்மாவிற்கு, அப்பாவின் செல்லக் கிண்டல்களின் பொருள் தெரியாமல்தான் இருந்தது. டாகோ பெல்=இல் ஒரு முறை கோடிடா கிரஞ்ச் சாப்பிடும்போதுதான் தீப்தி அதன் பொருளை விளக்கி, அப்பா அம்மாவைக் கிண்டலடிப்பதை புரிய வைத்தாள். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அதற்கு அம்மா சிரித்து விட்டு, “ஸ்பானிஷில் திருடனுக்கு என்ன சொல்வாங்க” என்றுக் கேட்டு வைத்துக் கொண்டாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அதன் பிறகு, “மி அமோர், மி விடா, மி கோடிடா….” என்று அப்பா கொஞ்சல் மொழிகளுக்கு இடையே அம்மாவின் உடல்பருமனை குறிப்பிட்டு கிண்டலடித்தால், </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“மி லேத்ரோன். மி ஸ்டுபிடோ…” என்று அவளும் பதிலுக்கு நாடக பாணியில் அப்பாவை கிண்டலடிப்பாள். அதெல்லாம் நான் சொல்லித்தரவில்லை என்று தீப்தி கையை விரித்து அப்பாவிடம் மறுப்பு தெரிவிக்க, அவளை பிடித்திழுத்து “மி சீலோ” என்று முத்தம் கொடுப்பாள். டைனிங் மேஜை முழுவதும் சிரிப்பு துகள்களாக இறைந்து கிடக்கும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">தேங்க்ஸ் கிவிங் விடுமுறையின் போது நியூயார்க்கிலிருந்து வந்திருந்த கிருபா அங்கிளின் பெண் மரியாவிற்கு அம்மாவைப் பார்த்து அவ்வளவு வியப்பு “உங்க மம்மி சூப்பரா ஸ்மைல் பண்றாங்க” என்று. எவரையும் ஈர்த்து வைத்துக் கொள்ளும் அற்புதச் சிரிப்புத்தான் அது.</div><div class="separator" style="clear: both;">அந்த தாங்க்ஸ் கிவிங் விடுமுறைக்கு அப்புறம், நான்கு தேங்க்ஸ் கிவிங் விடுமுறைகள் கடந்து போய்விட்டன. அப்பாதான் அங்கேயே நினைவுகளாக தங்கிவிட்டார். இப்போதும் அம்மாவிடம் அதே சிரிப்புத்தான். ஆனால் தீப்திக்கு அது இப்போதெல்லாம் எரிச்சல் உண்டாக்குகிறது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அவளால் அப்பாவின் மினுங்கும் கண்களையோ, உதட்டுக் கோணலையோ முன்னுச்சு மயிர்கற்றை வளைவுகளையோ மறக்க முடியவில்லை. அவற்றையெல்லாம் எண்ணற்ற முறைகள் ஸ்க்ராப் புத்தகத்தில் நடுங்கும் கைகள் கொண்டு வரைந்ந்து பார்த்திருக்கிறாள். எதுவும் சரியாக வந்ததில்லை. அந்த மூக்கு சப்பளிஞ்சு போய் இன்ன உரு எனத் தெரியாமல் மாறிப் போய்விட்டிருந்த கருப்பு யாரிஸ் கார் மட்டும் சரியாக வரைய முடிந்தது. அதுவும் அதன் பழுதாகாத பின்பகுதியைத்தான்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அம்மாவால் மட்டும் இந்த சுவடுகளை எல்லாம் துடைத்துப் போட்டாற்ப் போல அதே சிரிப்புடன் சுற்றி வர முடிகிறது. அதுவும் இந்த தேங்க்ஸ் கிவிங் விடுமுறையின் போது, எதிர்வீட்டு ஜேமி அங்கிள், ““நேற்று செய்த டர்க்கியில் சற்று மிஞ்சிவிட்டது மஞ்சரி. உங்களுக்கென எடுத்து வந்தேன்” என வந்து நிற்கிறார்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அம்மா அதை வேண்டாமென மறுத்துவிட்டாலும், அவள் கன்னங்கள் செவ்வண்ணம் படர்ந்ந்ததைப் தீப்தியால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. மிஸஸ் மூர்த்தி, எப்போது வெறும் மஞ்சரியாக மாறியது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“வெஸ்ட் வெர்லிங்கடன் பார்க்கில், அடுத்த வாரம் ஒரு கார்னிவெல் செய்கிறார்கள். சிறு வணிகர்களுக்கு ஒரு கடைபோட்டுக் கொள்ள இடம் தருகிறார்களாம். சகாயமான வாடகை. நானும் ஜேமி வொர்க்ஸ் சார்பாக பழைய புராதன மர கலைப்பொருட்களை விற்பனைக்கு போடலாம் என்றிருக்கிறேன் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் மஞ்சரி” என்றவர், சற்று தணிந்த குரலில் “நீங்களும் வந்து பாருங்கள். இவையெல்லாம் நானே பழைய ஆண்டிக் லுக் கொண்டு செய்த கலைப் பொருட்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார் </div><div class="separator" style="clear: both;">“நிச்சயம் ஜேமி. சனிக்கிழமை நேரம் இருந்தால் வருகிறேன். இவளை பாட்டு வகுப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றாள் அம்மா.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஜேமியை தீப்தியை திரும்பிப் பார்த்து, “பாட்டு வகுப்பு முடிந்ததும் நீயும் வாயேன். எனக்கு மேலும் சில கைகள் கிடைத்தால் வெகு ஒத்தாசையாக இருக்கும். மணிக்கு பதினோரு டாலர்கள் தருகிறேன்” என கண்களைச் சிமிட்டிச் சொன்னார். </div><div class="separator" style="clear: both;">சட்டென முகத்தைத் திருப்பி, வெட்டினாற்ப் போல “அடுத்த வாரம் எனக்கு டெஸ்ட் இருக்கு. படிக்க வேண்டும்” என்று விடுவிடென மாடிக்குப் போய்விட்டாள். ஜேமி அங்கிள் எதிரில் அம்மா நின்றிருப்பதும், அந்த சூழலின் இளகியதன்மையும் தீப்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ரூடியின் உறுமல் அதிகரிப்பதை உணர்ந்ததும் வேகமாக கணிணியையும் புத்தகங்களையும் மூடிவைத்து விட்டு கீழே வந்தாள். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“என் அவஸ்தையைப் புரியாமல், இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய்” என்று குற்றஞ்சாட்டும் பார்வையுடன் அவளைப் பார்த்தான் ரூடி. பீகில்ஸ் வகைக்கேகுரிய குள்ள உயரம். குளிர்காலம் என்பதால் அதிக நேரம் அவனை வெளியில் சுற்ற விடமுடிவதில்லை. சற்று சுணக்கமாகவும் எடைகூடியும் இருந்ந்தான். அப்பா இருந்த போது இவனையும் கூட்டிக் கொண்டு வாரத்துக்கு நான்கு முறையாவது ஓடுவார். இப்போது அம்மா நேரம் கிடைக்கும்போது ரூடியுடன் வெளியேப் போனாலும், வாரநாட்களில் அந்த வேலை பெரும்பாலும் தீப்தியுடையது என ஆகிவிட்டிருந்தது.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“சாரிடா. ஹோம் ஒர்க் ஜாஸ்தியா இருந்தது” என்றவாறே ரூடியை கிரேட்டிலிருந்து விடுவிக்கும்போதுதான் கவனித்தாள். அவஸ்தையுடன் உறுமிக் கொண்டிருந்தவன், கால்களை நீட்டி இழுத்து ஏதோ நோட்டுப் புத்தகத்தை தாறுமாறாக கடித்து கிழித்துப் போட்டு வைத்திருந்தான். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">முதல்நாள் அவனைப் பிடித்து அமர்த்தி ஸ்கெட்ச் பண்ணலாம் என்று அங்கே அமர்ந்திருந்த தீப்தி, அந்த ஸ்க்ராப் புத்தத்தை அப்படியே போட்டு வைத்திருந்தாள். அதன் பக்கங்கள்தான் பல துண்டுகளாக சிதறிக் கிடந்தன ரூடியின் புண்ணியத்தில். அயர்ச்சியும் கோபமும் ஒருங்கே தாக்கின தீப்தியை. முதலில் அவனை வெளியில் கொண்டு சென்று வந்தால்தான் அவனுடைய அவஸ்தை தீரும் என்பதால் அவசரமாக ரூடியை அவிழ்த்து விட்டு, அவளும் குளிக்கோட்டும், ஷூவும் அணிந்து கொண்டு வெளிக் கிளம்பினாள். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">சற்று நடக்க ஆரம்பித்ததும்தான், அவசரத்தில் பிளாஸ்டிக் பையை எடுத்து வரவில்லை என்பது உறைத்தது. ரூடிக்கு மலங்கழிக்க உகந்த இடம் என்பது சாலையின் மறு எல்லையில் இருக்கும் ஒரு ஸ்டாப் கம்பத்திற்கு முந்தைய மரத்தடி. அந்த எல்லைக்குள் போனபின்புதான் அவன் ஆசுவாசமாவான். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“தீப்திதானே…. சட்டென தூரத்திலிருந்து பார்த்ததில் மஞ்சரிதானோ என்று நினைத்து விட்டேன்” என்றவாறே திருமதி ரானே எதிர்சாரியிலிருந்து தெருவை கடந்து இவளை நோக்கி வந்தாள். “ஹாய் ஆண்ட்டி” என்று இவளும் கையசைத்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">தாரிகா வீட்டு நாயும், குள்ள நாய் வகைகளில் ஒன்றுதான். சட்டென தீப்திக்கு அது என்ன வகை என்று நினைவில் உறைக்கவில்லஇ. பண்டு என்று அதை அழைப்பார்கள் என்பது மட்டுந்தான் நினைவில் இருந்தது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“இன்னிக்கு இப்படிச் சுற்றி வரலாம் என வந்தேன். இவன் கொஞ்சம் ஸ்லோவாத்தான் போவான். மஞ்சரி எப்படி இருக்கிறாள்? பார்த்து ரொம்ப நாளாச்சு” என்றாள் தாரிகா. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">முணுமுணுப்பாக “நல்லா இருக்காங்க ஆண்ட்டி” என்றாள் தீப்தி. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">விரைவாக தாரிகா நலம் விசாரித்து விட்டுப் போனால், இவளும் வீட்டிற்குத் திரும்பிப் போய் பிளாஸ்டிக் பையைக் கொண்டு வந்து ரூடியின் அவஸ்தை வெளிப்பாடுகளை சுத்தப்படுத்தலாம். ஆனால் ரூடி இப்போதுதான் கொஞ்சம் நெகிழ்ந்து ஆசுவாசமாகி இருக்கிறான். இன்னமும் சிறிது நேரம் அந்த எல்லைக்குள் சுற்றி வந்தால்தான் அவனுக்கு முழுதிருப்தி ஆகும் என நினைத்துக் கொண்டாள். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“இரண்டு மாசம் இருக்கும். இல்ல மூணா. ஃப்ளீ மார்கெட்டில் பாத்தேன் உங்கம்மாவை. எப்படி இளைச்சுப் போயிட்டிருந்தா தெரியுமா. பாவம்” என்றவாறே தீப்திக்கு அருகில் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டாள் தாரிகா.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“உன்னைப் பார்த்தால் கல்யாணத்தின் போது உன் அம்மாவைப் பார்த்தது போலவே அப்படியே இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில்தான் உங்கம்மா கல்யாண ரிசப்ஷன். அப்ப இவங்கள்லாம் ஒரே கம்பெனியில்தானே இருந்தார்கள்.” என்று சற்று நினைவுகளில் பின்னோக்கிப் போன தாரிகா, </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“அப்ப, அவ்வளவு பூரிப்பும் சிரிப்புமாக இருந்தாள் தெரியுமா உன் அம்மா. இப்ப அதில் பாதி கூட இல்லை. அப்படியே எல்லாம் வற்றிப் போய்விட்டது பாவம்.”</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ரூடி மரத்தின் பட்டையில் முதுகைத் தேய்த்துக் கொண்டான். பிறகு மீண்டும் மேல் பக்கமாக ஒரு பாய்ச்சல் காட்டிவிட்டு திரும்பி மரத்தடிக்கு வந்து முதுகைத் தேய்த்துக் கொண்டான்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“மூர்த்தி போனதும் உன் அம்மாவின் பாதி உயிரில் பாதி போவிட்டது பெண்ணே. இப்பொழுது மீதம் இருப்பதும் உன் நினைப்பு கொண்டுதான்.” தீப்தி ரூடியையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, “என்ன பை கொண்டுவரவில்லையா? என்னிடம் இருக்கிறது. இரு இரு” என்றவாறே குனிந்து ரூடியின் தலையை வருடிக் கொடுத்தாள் தாரிகா. “ இவனுக்கென்ன ஆறு ஏழு வயதிருக்குமா?” </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">பிளாஸ்டிக் பையின் அடியில் கையை விட்டு உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்பியவர் அப்படியே ரூடியின் கழிவுகளை அள்ளி சேகரித்துக் கொண்டு மீண்டும் உட்புறமாக திருப்பிக் கொண்டு, பையின் முனையை முடிந்து வைத்தார். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“ஆண்பிள்ளைகளுக்கென்ன. அவர்கள் இர்ருந்தாலும், போனாலும் அவர்களுக்கென ஒரு பாதையைப் போட்டுக் கொண்டு போவார்கள். நமக்கு எப்போதும் அவர்கள் இட்ட பாதை மட்டுந்தானே. தனியாக அவளும் எத்தனை காலம் போவாளோ” என்றாள். </div><div class="separator" style="clear: both;">பிறகு. ஏதோ நினைவு வந்தவர் போல,</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“மஞ்சரியின் அம்மா இந்தியாவில்தானே இருக்கிறார்?” எனக் கேட்டாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">தீப்தி உதட்டை அழுத்திக் கொண்டு, “இல்லை ஆண்ட்டி. பாட்டி இஸ் நோ மோர்” என்றாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“அடடா, இது எப்போ? எனக்குத் தெரியவே தெரியாதே” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போன மஞ்சரியின் தாயாரைப் பற்றி அப்பொழுது துக்கப்பட்டாள் தாரிகா.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஒரு கையில் ரூடியின் கழிவுப் பையும் இன்னொரு கையில் பண்டுவைப் பிடித்துக் கொண்ட கயிற்றுடன், தீப்தியை பற்றி இழுத்து அணைத்துக் கொண்டாள் தாரிகா.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“எப்போதும் சந்தோஷமாக இரு பொண்ணே” என்றவர், அவளை விட்டு விலகும்போது என்னமோ நினைத்துக் கொண்டு, “அம்மாவையும் சந்தோஷமாக பார்த்துக் கொள் நீ” என்று தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு பண்டுவின் இழுப்பிற்கு நடக்க ஆரம்பித்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">வீட்டிற்குத் திரும்பியபோது, அம்மா வந்துவிட்டிருந்தாள் என்பது கராஜில் இருந்த காரைப் பார்த்ததும் தெரிந்தது. ரூடிக்கான தட்டில் ஓட்மீலும் சிக்கனும் கலந்த உணவை இட்டு அவன் அதை மோப்பம் பிடித்து சாப்பிடும் மூடிற்கு வரும்வரைக் காத்திருந்தாள். எப்போதும் உடனே கிரேட்டிற்குள் தள்ளிவிட்டு மாடிக்கு ஓடிவிடுவாள். அம்மா வந்ததும் ரூடியை அவிழ்த்துவிட்டு மடியோடு சேர்த்த்உ வைத்துக் கொண்டு டிவி பார்ப்பது மாடியிலிருந்து எட்டிப் பார்க்கும்போது தெரியும். இன்று, அவள் பார்வைக்கு புறம்பாக அம்மா கிச்சனில் காப்பி கலந்து கொண்டிருப்பது, கடல பர்பி பாக்கெட்டை பிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பது, சாப்பாட்டு டப்பாக்களை கழுவி வைப்பது என ஒவ்வொன்றையும் உணர்ந்தபடி ரூடி கிண்ணத்தை நக்கி நக்கி சாப்பிட்டு முடிக்கும்வரை க்காத்திருந்தாள். அவன் கிழித்துப் போட்டிருந்த பேப்பர் தூள்களை கூட்டிப் பெருக்கி குப்பையில் போட்டுவிட்டு டிவி முன் அமர, </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“ந்தா கிடக்குப் பாரு உன் ஸ்க்ராப் புக். இது ஏன் கிழிஞ்சிருக்கு” என்று பிய்ந்து போன பாதி ஸ்க்ராப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தாள் மஞ்சரி. அருகில் வரும்போதுதான் தீப்தியின் முகம் கோணிக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டு, பதட்டமாக “என்னாச்சும்மா, ஆர் யூ ஆல்ரைட்?” என்று தீப்தியின் பக்கத்தில் சட்டென அமர்ந்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">தீப்தி வரைந்து பாதியில் விட்டிருந்த கருப்பு யாரிஸ் கார் பக்கத்தைப் பார்த்ததும் தீப்தி விம்ம ஆரம்பித்தாள். தீப்தி வரையாமல் விட்டிருந்த நசுங்கிய முன்பகுதியில்தான், மூர்த்தி சீட்டோடு பிணைக்கப்பட்டு கிடந்தான் என பிறகு சொன்னார்கள். ஜேஸ்டன்வில் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான அந்த நசுங்கிய காரின் முழுப் படமும் தீப்தியின் நினைவில் அப்படியே இருந்தது.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">அந்த நோட்டுப் புத்தகத்தை கையில் பிடித்துக் கொண்டு கண்கள் கரைய அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் தீப்தி. அப்பொழுதுதான் அந்தக் காகிதத்தில் இருந்த படத்தையும் மஞ்சரி பார்த்தாள். அந்த படத்தின் முழு பரிணாமத்தை உணர்ந்ததும் திடுக்கிட்டுப் போன மஞ்சரி, தீப்தியை திரும்பிப் பார்த்தாள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">“எல்லாத்தையும் கிழிச்சு வச்சிருக்கான்ம்மா”, சாப்பாட்டு தட்டில் மூக்கைத் தேய்த்து நாக்கை சுழட்டி நக்கிக் கொண்டிருந்த ரூடியைக் காட்டினாள். “நேத்து இவனை வரையத்தான் வந்து ஒக்காந்தேன். இன்னிக்கு அந்த புக்கை…. எல்லா படத்தையும்…. சரியான ஸ்டுப்பிடோ… லேப்ரதோ.. .” என்று அவனைச் சுட்டிக் காட்டி கையை உதறிக் கொண்டு விம்மல்களிடையே வெடித்தாள் தீப்தி.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">தீப்தியின் அரற்றல்கள் மஞ்சரியை நிலைகுலைய வைத்தன. படபடவென டொமினோக்கள் சரிந்து விழுவது போல இருவரும் பொலபொலவென உடைந்து போய் கைகளைச் சுற்றி ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டனர். பேசுவதற்கு என சேகரித்து வைத்திருந்த சொற்கள் எல்லாம் அந்த கண்ணீர் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">வேகமாக வந்து அவர்களிடையே இடம் தேடி அமர்ந்து கொண்ட ரூடி, இருவரையும் மாறி மாறி முகர்ந்து பார்த்துவிட்டு முகத்தை அவர்களின் மடிக்கு இடையே வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டது.</div><div class="separator" style="clear: both;"> </div><div class="separator" style="clear: both;">“சனிக்கிழமை கார்னிவெல் போகலாமாம்மா. எனக்கு மரத்தில் கலைப்பொருட்கள் எப்படி செய்யறாங்கன்னு பாக்கனும் போலிருக்கு. இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்” என்றாள் தீப்தி கண்களைத் துடைத்துக் கொண்டு.</div></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">o0O0o</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><p></p><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-90188970177352952392020-11-07T17:53:00.002-05:002020-11-08T09:52:19.718-05:00காலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்<div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;">(காலச்சுவடு அக்டோபர் 2020 இதழில் வெளியானக் கட்டுரை)</div><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;"><br /></div><h1 style="text-align: left;"><b><span style="font-size: large;">பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்</span></b></h1><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;"><br /></div><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;">- எம். கோபாலகிருஷ்ணன்</div><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiocUq1nfnupJWdrA4jW5U7Ih1ZCGzrQ29n2Qw6XtzYgO6Xq6vQ4vmLwvFhnuhKwtSwtM-dEDBKB3OTM-OvtM2-2wm218Odk9sCfAiZHMATdSKQ9HPTdW5zy_bGjhaKJy3MJjEK/s1277/0A00D1EE-141C-456C-BE8B-1D581F82D324.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1277" data-original-width="960" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiocUq1nfnupJWdrA4jW5U7Ih1ZCGzrQ29n2Qw6XtzYgO6Xq6vQ4vmLwvFhnuhKwtSwtM-dEDBKB3OTM-OvtM2-2wm218Odk9sCfAiZHMATdSKQ9HPTdW5zy_bGjhaKJy3MJjEK/s320/0A00D1EE-141C-456C-BE8B-1D581F82D324.jpeg" /></a></div><br /><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;"><br /></div><div style="caret-color: rgb(69, 69, 69); color: #454545; font-family: UICTFontTextStyleBody; font-size: 17px;"><div><b>நூ</b>ற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதைவெளியில் தீவிர வாசிப்புக்குப் பிறகு புதிதாகச் சிறுகதை எழுதவருபவர்களுக்குச் சில சாதகங்கள் உள்ளன. சிறுகதையின் வடிவமும் செறிவும் ஒருமையும் குறித்த உள்ளுணர்வு அவர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அதே நேரத்தில், எழுத உத்தேசிக்கும் கதைகளை ஏற்கெனவே முன்னோடிகளில் சிலர் எழுதியிருக்கவும் கூடும். எனவே அவற்றை முன்பில்லாத மொழியிலும் வடிவிலும் எழுத வேண்டிய நிர்ப்பந்தம். புதிதாக எழுதவருபவர்கள் எதிர்கொள்ள நேரும் சவால் இது.<br /></div><div>இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தமிழ்ச் சிறுகதை பல்வேறு அலைகளுக்கிடையில் தன்னைத் தொடர்ந்து உறுதியுடன் நிலைநிறுத்தியே வந்துள்ளது. எழுபதுகளில் புதுக் கவிதை பெரும் வீச்சில் எழுதப்பட்ட காலத்திலும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் நாவல்கள் எழுச்சிபெற்றபோதும் சிறுகதைகள் தமக்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்கவில்லை.</div><div><br /></div><div>இணையதளங்களின் வருகையும் எழுதுவதற்கான தொழில்நுட்பத்தின் புதிய வரவுகளும் இளைஞர்கள் பலரையும் எழுதச் செய்த இன்றைய காலகட்டத்தில் சிறுகதையின் மீதான கவனம் தீவிரம் பெற்றுள்ளது. முந்தைய காலகட்டத்தைப்போலவே அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் வெளியாகின்றன. புதிய சிறுகதையாளர்களின் தொகுப்புகளும் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுகின்றன.</div><div><br /></div><div><div>அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் வெளியாகின்றன. புதிய சிறுகதையாளர்களின் தொகுப்புகளும் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுகின்றன.</div><div>அச்சிதழ்களில் பக்க அளவுகளுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு சிறுகதைகளை மட்டுமே வெளியிட வாய்ப்பிருந்த நிலையில் இணைய இதழ்கள் அவ்வாறான வரையறைகளின்றி எண்ணிக்கையிலும் பக்க அளவிலும் அதிகக் கதைகளை வெளியிடும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. இத்தகைய சுதந்திரத்தின் காரணமாக இணைய இதழ்கள் பல ஒரே இதழில் ஐந்துக்கும் அதிகமான கதைகளை வெளியிடுகின்றன. புதிய எழுத்தாளர்கள் எழுதுவதற்குப் பெரும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. சொல்வனம், பதாகை, வாசக சாலை, கனலி, தமிழினி, ஓலைச்சுவடி, யாவரும் ஆகிய இணைய இதழ்கள் ஏராளமான சிறுகதைகளை வெளியிடுகின்றன.</div><div>இந்தச் சுதந்திரமான, வரையறைகளற்ற தணிக்கைகளற்ற, அணுகுமுறை ஓர் எழுத்தாளருக்குச் சாதகமான அம்சங்கள் பலவற்றையும் உறுதிப்படுத்துகிறது. எழுதியதை உடனடியாக இதழில் காணமுடிவது, சமூக வலைதளங்களின் வழியாக அனைவருக்கும் கொண்டுசேர்ப்பது, பக்கங்களின் அல்லது சொற்களின் எண்ணிக்கை சார்ந்த வரையறையின்மை ஆகியன அவ்வாறானவை. அதேசமயத்தில் இத்தகைய சுதந்திரமும் உடனடித் தன்மையும் பாதகமான சில விஷயங்களையும் கொண்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது முக்கியமான சிறுகதையொன்று கவனத்துக்கு வராமல் போய்விடக்கூடும். நண்பர்களின் பரிந்துரையும் ஊடகங்களின் வழியாக அடைய நேர்கிற தேர்வும் எல்லா நேரங்களிலும் சரியாக அமைவதில்லை. அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகளுக்கு நடுவே ஒரு நல்ல சிறுகதை தனக்கான இடத்தையும் கவனத்தையும் பெற முடியாமல் ஆகிவிடக்கூடும்.</div></div><div><br /></div><div><div>எழுத்தாளர்களிடமிருந்து பெறும் கதையை பெரும்பாலான இணைய இதழ்களில் அப்படியே பதிவேற்றும் நடைமுறையே உள்ளது. எழுத்தாளர் எழுதியபடியே எழுத்து, வாக்கிய, இலக்கணப் பிழைகளுடன் கதைகள் வெளியாகின்றன. புதிய எழுத்தாளர்களின் தொகுப்புகள் வரும்போதும் இதே நிலைதான். இவ்வாறான நடைமுறைசார்ந்த சிக்கல்கள் அந்த எழுத்தாளரின் கதைகளுக்கும் தொகுப்புக்கும் கொண்டுசேர்க்கும் பேறுகள் மெச்சும்படியானவையாய் இருப்பதில்லை.</div><div>இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளில் (2010 முதல் 2020 வரை) வெளியான புதியவர்களின் சிறுகதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்தக் காலகட்டத்தின் சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் நோக்குடனே எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை. ஏற்கெனவே சொன்னதுபோலப் பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை நிறைய! காலக்கெடுவின்றி ஆய்வு நோக்கில் கட்டுரை எழுத நேரும்போது விடுபடுதல்களின்றி ஒரு முழுமையான பார்வையைத் தருவது சாத்தியம். அவ்வாறன்றிக் குறைந்த காலக்கெடுவில் கட்டுரையாக எழுத நேரும்போது, ஏற்கெனவே வாசித்திருந்த, கவனத்துக்கு வந்த சில தொகுப்புகளையும் சில கதைகளையும் மட்டுமே கணக்கிலெடுப்பது சாத்தியம். எனவே விடுபடுதல்கள் தவிர்க்க முடியாதவை. இதில் சொல்லப்பட்டுள்ள சிறுகதையாசிரியர்கள் தொகுப்புகளைத் தவிர வேறு எழுத்தாளர்களும் தொகுப்புகளும் கதைகளும் நிச்சயம் இருக்கக் கூடும்.</div></div><div><br /></div><div>புதிய ஒரு சிறுகதையை வாசிக்கும்போது ஏற்கெனவே உள்ள சிறுகதைகளுடன் ஒப்பிடுவது இயல்பானது. உருவம், உள்ளடக்கம், மொழிநடை என ஒவ்வொன்றுக்கும் நிறுவப்பட்ட முன்மாதிரிகள் இருக்கும் நிலையில் ஒப்பீட்டளவில் புதிய கதைகள் எந்த நிலையில் அனுபவமாகின்றன என்பதே அந்தக் கதைகளுக்கான சோதனை எனலாம். இன்று எழுதப்படும் எந்தவொரு கதைக்கும் நம் மரபிலிருந்து இன்னொரு கதையை உதாரணமாகக் காட்ட முடியும். எழுதப்படும் சிறுகதையின் சவாலே அது தன் முன்னிருக்கும் சாதனைக் கதைகளின் முன்னால் தனக்கான இடத்தை எப்படி நிறுவ முனைகிறது என்பதுதான். முன்னோடிகளின் சாதனையைக் கடக்க வேண்டும் அல்லது தொட வேண்டும்்; இதுவே எழுத முனையும் எழுத்தாளரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். அவ்வாறான சீரிய முயற்சியில் அவர் வெற்றிபெற முடியாமலும் போகலாம்; அது பொருட்டில்லை. ஆனால் அந்த முயற்சியின் வழியாக எட்ட முடிந்த உயரத்தை அக் கதை எட்டியுள்ளதுதான் முக்கியம்.</div><div><br /></div><div>இந்தப் பத்தாண்டுக் காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதைகள் ஏற்கெனவே நம்முன் உள்ள தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியத்துக்குச் சேர்த்திருக்கும் புதிய பரிமாணங்களையும் உத்தி, உருவம், உள்ளடக்கம் சார்ந்து கொண்டுசேர்த்துள்ள புதுமைகளையும் அறியும் முனைப்புடன் இக்கதைகள் அணுகப்பட்டுள்ளன.</div><div><br /></div><div>நூற்றாண்டைக் கடந்திருக்கும் சிறுகதைகள் பொதுவாக அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கையையும் மனிதர்களின் போக்கையும் முன்வைக்கின்றன. சமூகத்துக்கும் தனிமனிதனுக்குமான உறவு, மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு என்ற இருவேறு நிலைகளிலுள்ள முரண்களையும் முயக்கங்களையும் தொட்டுக் காட்டியுள்ளன. மனத்தின் தீராத மர்மங்களைத் துலக்கிக் காட்ட முனைந்துள்ளன. விரிவான நோக்கில் அணுகும்போது இக்கதைகள் நிலம் சார்ந்த எல்லைகளுக்குள் நின்றே பேசுவதை உணரலாம். (எப்போதும்போல புதுமைப் பித்தனும் மௌனியும் இதில் விதிவிலக்கு.) ஒவ்வோர் எழுத்தாளருக்குமெனக் குறிப்பிட்ட களத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் அடையாளப்படுத்த முடியும்.</div><div><br /></div><div>தமிழ்க் கதைகளின் நிலம்சார்ந்த எல்லைகளை இன்றைய கதைகள் உலகளாவிய அளவில் விரிவடையச் செய்துள்ளன. இந்த எல்லைகள் வெறும் பிரதேசம் கடந்த ஒன்றாக மட்டுமல்லாது மதிப்பீடுகளிலும் அணுகுமுறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகவும் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மனித வாழ்வுக்கெனப் பொதுவான அம்சங்கள் சில உள்ளன. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ்ப் படைப்பு ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுதுவதை உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்குச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக்கதைகள் தமிழ்ப் புனைவுலகுக்குப் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்துள்ளன.</div><div><br /></div><div>உலகளாவிய மானுட வாழ்வின் பல்வேறு விநோதங்களையும் வியக்கத்தக்க அம்சங்களையும் அ. முத்துலிங்கத்தின் கதைகள் நிறையவே அறிமுகப்படுத்தியுள்ளன. இன்றைய உலகில் நவீனமடைந்திருக்கும் பார்வைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள சாதகமும் பாதகமுமான பல்வேறு கூறுகளையும் இன்றைய தலைமுறையினரின் கதைகள் மையப்படுத்துகின்றன.</div><div><br /></div><div><div>இவ்வகையில் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர் சித்துராஜ் பொன்ராஜ்; அதிகமும் சிங்கப்பூரைக் களமாகக் கொண்டிருப்பவை அவரது கதைகள்.</div><div>தமிழில் அவ்வளவாக பேசாப்பொருளாக உள்ள தன்பாலின உறவு சார்ந்த கதை (கடல், சிரித்த முகமாய் சிங்கம், இருட்டு மனிதர்கள்)களைக் குறிப்பிட வேண்டும். ‘பசித்த மானிடம்’ நாவலில் கரிச்சான்குஞ்சு வெகுகாலத்துக்கு முன்பே கையாண்டிருந்தபோதும் சிறுகதைகளில் அவை சொல்லும்படியாக வெளிப்படவில்லை.</div></div><div><br /></div><div>இன்னொருவர் ரா. கிரிதரன். அவரது சில கதைகள் தமிழில் பேசப்படாத கதைக்களங்களைக் கொண்டவை. மேற்கத்திய இசை சார்ந்த பின்னணியைக் கொண்டவை. ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை’, ‘இருள் முனகும் பாதை’ ஆகிய இரு கதைகள். மலையேற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நந்தா தேவி’யும் அறிவியல் புனைகதையான ‘பல்கலணும் யாம் அணிவோ’மும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருபவை.</div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiagtTHg7Bd_jvSSq8HfqENea67YmrGkwLsHOhlZtrc8QDPgDx6BKl1X0gHlmExWjGtavjzzVoy6IZQC-NHTv0-C4umVxcyvWpgEt6lmXS32p2fyrCIkFv0WTQvYsbg9KKmxKy0/s837/B75F7024-663D-437D-B996-5DCB537B6FA1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="837" data-original-width="745" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiagtTHg7Bd_jvSSq8HfqENea67YmrGkwLsHOhlZtrc8QDPgDx6BKl1X0gHlmExWjGtavjzzVoy6IZQC-NHTv0-C4umVxcyvWpgEt6lmXS32p2fyrCIkFv0WTQvYsbg9KKmxKy0/s320/B75F7024-663D-437D-B996-5DCB537B6FA1.jpeg" /></a></div><br /><div><br /></div><div>ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ தொகுப்பிலுள்ள கதைகளும் ஜேஸ்டன்வில் என்ற புனைவு நகரில் நிகழும் அயல் அனுபவங்களாகவே அமைந்துள்ளன.</div><div><br /></div><div>தகவல் தொழில்நுட்பத் துறையும் கணினியும் இன்றைய சமூக வாழ்வின் பல்வேறு திசைமாற்றங்களை நிர்ணயிப்பதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைத் தருபவை. ஏராளமான சம்பளம், வசீகரமான வேலைச்சூழல், வெளிநாட்டு வாய்ப்பு என இளைஞர்களின் மனத்தைக் கவர்ந்த இத்துறைகள் பொதுச் சமூகத்திலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தையும் அதன் வழியாக அவர்களது தனித்தன்மைகளையும் உறுதிப்படுத்தின. கடந்த சில ஆண்டுகளில் சரிவைச் சந்தித்திருந்தபோதும் இதன் மீதான ஈர்ப்பு மட்டுப்படவில்லை. இத்துறை சார்ந்தோர் எழுதியுள்ள சிறுகதைகள் அகச்சிக்கல்களை அலசுகின்றன. திடீரென எதிர்கொள்ளும் பொருளாதாரச் சரிவுகளை நேர்ப்படுத்த முடியாமையின் அவலத்தைச் சுட்டுகின்றன. ஆண்பெண் உறவுகளில் நிகழும் அபத்தங்களையும் உடைவுகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. மாறும் மதிப்பீடுகளுக்கும் மரபின் சுமைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் தடுமாறுகிற நிலையைச் சித்திரிக்கின்றன.</div><div><br /></div><div><div>பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’த் தொகுப்பிலுள்ள ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’, ‘உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்பவர்கள்’, ‘ஜங்க்’ ஆகிய கதைகளில் இன்றைய தலைமுறையின் மனச் சுமைகளை உணரமுடிகிறது.</div><div>வெளியிலிருந்து பார்க்கும் பளபளப்பான உலகத்துக்குள்ளே இருக்கும் யதார்த்தத்தையும் அரசியல் காய்நகர்த்தல்களையும் சுயநலபோக்கையும் நேர்த்தியாக முன்வைக்கும் கதைகளை எழுதியுள்ளார் கார்த்திக் பாலசுப்ரமணியன். அவரது ‘டொரினா’ தொகுப்பிலுள்ள ‘லிண்டா தாமஸ்’, ‘மேய்ப்பனின் கருணை’, ‘பார்வை’, ‘பொதுப்புத்தி’ ஆகிய நான்கு கதைகளும் துறைசார்ந்த உள் அடுக்குகளை மையமாகக் கொண்டவை. இத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தத்தைச் சுட்டும் கதை ‘காகித முகங்கள்.’ </div></div><div><br /></div><div><div>லாவண்யா சுந்தர்ராஜன், அரிசங்கர் ஆகியோரின் கதைகள் சிலவும் பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தங்களையும் சோர்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.</div><div>ஈழப்போரின் முடிவுக்குப் பிறகான ஈழ எழுத்துக்கள் புதிய பரிமாணங்களை அடைந்துள்ளன. போர்க் காலச் சூழல் குறித்த முக்கியமான நாவல்கள் வெளியாகியுள்ள அதே நேரத்தில் போருக்குப் பின் அடையாளங்களை இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழ்ந்திருக்கும் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் இருத்தலியல் நெருக்கடிகளை சித்திரிக்கும் சிறுகதைகள் பலராலும் எழுதப்பட்டுள்ளன. பிறந்த மண்ணின் வாழ்ந்த நினைவுகளைச் சுமந்தலையும் துயரையும் அந்நிய நிலத்தில் கால்கொள்ளமுடியாத இயலாமையையும் வெளிப்படுத்துகின்றன. உரிமையை இழந்த அதே மண்ணில் சமரசங்களுடன் வாழ நேரும் அவலத்தையும் முன்வைக்கின்றன.</div></div><div><br /></div><div>அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பேரீச்சை’, ‘கதிர்ச்சிதைவு’ ப. தெய்வீகனின் ‘அவனை எனக்குத் தெரியாது’, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ அகரமுதல்வனின் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’, ‘நெடுநிலத்துள்’, உமையாழின் ‘கிருமி’, ‘மேய்ப்பர்’, தமிழ்நதியின் ‘அப்பாவின் புகைப்படம்’, ‘காத்திருப்பு’, ‘மாயக்குதிரை’, யதார்த்தனின் ‘குசலாம்பாள் எனும் செயின்பிளாக்’, தீபச்செல்வனின் ‘ஆமிக்காரி’, ‘காவலன்’, சயந்தன், சந்திரா இரவீந்திரன் ஆகியோரின் சில கதைகள் ஆகியவை ஈழப்போரின்போதும் அதற்குப் பின்னுமான மனநிலைகளையும் சிக்கல்களையும் தடுமாற்றங்களையும் வெவ்வேறு கால, இடப் பின்னணிகளுடன் விவரிக்கின்றன.</div><div><br /></div><div>ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சமகால வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதனுமே கண்ணுக்குத் தெரியாத வலைப்பின்னலில் செயலிகளால் இயக்கப்படுகிறான். அவனது அந்தரங்கம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. ஒரு சமூகப் பிராணியாக இருந்த மனிதனை, தனித்தனியான உயிரிகளாக முடக்கியிருக்கும் சமூக வலைதளங்களும் கைப்பேசிச் செயலிகளும் உளவியல் தளத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்களும் நெருக்கடிகளும் அச்சத்தை ஏற்படுத்துபவை. தகவல்களின் அடிப்படையில் மனநிழலெனத் தொடரும் தொழில் நுட்பத்தின் ஆற்றல் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. குடும்பம், சமூகம் எனும் கூட்டமைப்பின் பொருண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இன்றைய சூழலின் நெருக்கடிகளை மையப்படுத்தும் கதைகள் முக்கியமானவை.</div><div><br /></div><div>பாலியல் இச்சைகளையும் அவற்றின் பல்வேறு பரிமாணங்களையும் வசீகரமாகக் காட்சிப்படுத்தி ஈர்க்கும் வலைதளங்கள் அந்தரங்கமாக ஏற்படுத்தும் தடுமாற்றங்களைக் கதைகளாக்க முனைகிறார் ரமேஷ் ரக்ஷன். அவரது ‘பெர்பியூம்’ தொகுப்பிலுள்ள சில கதைகள் அவ்வாறான மனநிலையை வெளிப்படுத்துபவை.</div><div><br /></div><div><div>தனிமனிதர்கள் தற்செயலாக வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் அவர்களது விருப்பங்களை அறிந்து பொருட்களைச் சந்தைப்படுத்த முனையும் இன்றைய வியாபாரத் தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பின்னலின் உச்சபட்சச் சாதுர்யத்தைப் பேசும் சிறுகதை கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘சுழல்’. இதன் அடுத்த கட்டமாக ஒருவனின் விருப்பத்துக்கேற்ற பெண்ணுடனான சந்திப்பை நிகழ்த்தும் சாத்தியத்தைச் சொல்கிறது ‘மெய்நிகரி’.</div><div>சாதியத்தின் சமூக அவலங்களை, நெருக்கடிகளைப் பற்றிய கதைகள் தமிழ்ச் சூழலில் புதிதல்ல. மாறிவரும் சமூக, பொருளாதார நிலைகளுக்கேற்பச் சாதியத்தின் முகங்களும் புதிய பரிமாணங்களை ஏற்கின்றன. அவற்றின் தாக்கங்கள் இன்னும் நுட்பமடைந்துள்ளன. சமூகத்திலிருந்து களையப்பட முடியாமல் இன்னும் வன்மம் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளைச் சுட்டுவதோடு நின்றுவிடாமல் சாதியிலிருந்து வெளியேற உதவும் வழிமுறைகளாக முன்வைக்கப்படும் கல்வி, பொருளாதாரம், நகர வாழ்வு உள்ளிட்ட பல்வேறு உத்திகளுக்குப் பின்னும் அதிலிருந்து வெளியேற முடியாமல் திகைத்து நிற்கும் இன்றைய இளைஞர்களின் தத்தளிப்புகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நுட்பமான கேள்விகளை இன்றைய கதைகள் பேசுகின்றன.</div></div><div><br /></div><div>உறவுகளிலிருந்தும் கிராமத்திலிருந்தும் முக்கியமாக சாதியிலிருந்தும் விலகியிருக்க முடிகிறதென்றாலும் அந்த ஆசுவாசம் நிறைவைத் தரவில்லை. சாதியிலிருந்து விடுதலை பெறுவது போதாமைகளுடன் இருப்பதைக் குறித்த சோர்வும் கோபமும் ஆற்றாமையும் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றன.</div><div><br /></div><div>சாதியத்தின் இரண்டு எதிரெதிர் எல்லைகளையும் தொட்டிருக்கும் சுரேஷ் பிரதீப்பின் ‘வரையறுத்தல்’ ஒரு முக்கியமான கதை. சாதிய ஒடுக்குமுறையை உக்கிரமாகச் சொல்லும் பின்கதையுடன் இன்றைய கல்வியும் பிற கருவிகளும் அவ்வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வதிலுள்ள நடைமுறை முரண்களையும் அதே அழுத்தத்துடன் சொல்லியுள்ளது. சாதிசார்ந்த அரசு நடைமுறைகளையும் சாதிய விடுதலையின் நடைமுறைப் படுத்தலிலுள்ள போதாமைகளையும் பேசுகிற ‘எஞ்சும் சொற்கள்’ சிறுகதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.</div><div><br /></div><div>அடையாளங்களால் ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து கல்வியின் வழியாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மீள முயலும் இளைஞர்களின் இருதலைக்கொள்ளி மனநிலையைத் தூயனின் ‘இருமுனை’ தொகுப்பிலுள்ள சில கதைகள் உணர்த்துகின்றன. தனி அடையாளங்கள் அழிக்கப்பட்ட நவீனமயமான இன்றைய வாழ்நிலையிலும் பிறப்பின் சுமையானது மீண்டும் மீண்டும் வெவ்வேறு உருவங்களில் முளைத்தெழுந்து நினைவுபடுத்தியபடியே உள்ளது. அவ்வாறான துயரம், அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளிவிடும். இத்தகைய அவலத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவனது தடுமாற்றங்களைத் ‘தலைப்பிரட்டைகள்’ கதை விவரிக்கிறது.</div><div><br /></div><div><div>குட்டிரேவதியின் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ தொகுப்பிலுள்ள ‘காது’ சிறுகதை அத்தகைய மனநிலையை அடிப்படையாகக் கொண்டது.</div><div>கதைகளின் வடிவிலும் கதைமொழியிலும் நவீன உத்திகளைக் கையாளும் போக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்திருப்பது. மரபான அணுகுமுறைக்கு மாற்றான வகையில் எழுதிப் பார்க்கும் முயற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் கவனம் பெற்றுள்ளன. யதார்த்தவாத எழுத்து முறை சரியாகப் பொருந்திவராத நிலையில் புதியதொரு பாணியைக் கைக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வடிவங்களையும் உத்திகளையும் மீறிப் புதிய கதைமொழியைக் கண்டடைய முனையும் எவரும் புனைவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவே நேரும்.</div></div><div><br /></div><div>அந்த வகையில் மரபான கதை சொல்லல் முறையிலிருந்து வேறுபட்ட உத்திகளைக் கையாளும் முனைப்புடன் எழுதுபவர்கள் என கிருஷ்ணமூர்த்தி, சுனில் கிருஷ்ணன், ஜீவ கரிகாலன் ஆகியோரைக் குறிப்பிடலாம். கிருஷ்ணமூர்த்தியின் ‘காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகள்’ தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சொல்முறையிலும் வடிவிலும் புதிய சாத்தியங்களைக் கொண்டுள்ளன. சுனில் கிருஷ்ணன் ‘அம்புப் படுக்கை’யில் உள்ள தன்னுடைய கதைகளில் மாறுபட்ட சொல்முறையைக் கையாண்டுள்ளார். ஜீவ கரிகாலனின் ‘கண்ணம்மா’, ‘டிரங்குப் பெட்டிக் கதைகள்’ ஆகிய தொகுப்புகளில் உள்ள பல கதைகளில் வழக்கமான கதைசொல்லல் முறையை மீறும் போக்கைக் காணமுடிகிறது. மேலையக் கதை வடிவங்களைத் தமிழில் எழுதிப் பார்க்கும் கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் மாறுபட்ட வடிவங்களில் எழுதப்பட்டவை.</div><div><br /></div><div><div>‘தமிழ்ப் புனைகதைகள் சிரிக்க மறுப்பவை’ என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அந்த அபவாதத்தைப் போக்க முயலும் கதைகளை எழுதியுள்ளார் சாம்ராஜ். ‘பட்டாளத்து வீடு’, ‘ஜார்ஜ் ஒழிக’ ஆகிய தொகுப்புகளிலுள்ள சில கதைகள் அத்தகையவை. குறிப்பாக இடதுசாரித் தோழர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்களை மையப்படுத்தி எழுதிய கதைகள் அவ்வகையில் முக்கியமானவை. அன்றாடங்களின் உரையாடல்களாகவும் கதைசொல்லல்களாகவும் அமைந்திருக்கும் பிரபு தர்மராஜின் கதைகள், பாலியல் மீறல்களையும் இச்சைகளையும் அங்கதம் கொப்புளிக்கும் மென்மையான குரலில் சொல்கின்றன. சமகாலப் புனைவின் பல்வேறு தேற்றங்களைக் கிண்டலடித்தபடி வாசகர், எழுத்தாளர் இருவரையும் கதைக்குள் இருத்தி நகைக்கும் கதைகள் காலத்துகளின் கதைகள் ‘எஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல்’, ‘சாத்தியமற்ற குற்றம்’, ‘அந்தி கிறிஸ்துவின் வருகை’, ‘முற்றுப்புள்ளியுடன் முயல்வளைக்குள் ஒரு பயணம்’ என அவரது கதைகள் பலவும் வாசிப்புச் சுவை கொண்டவை. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த ஒன்பது பேர்’, ‘பெரும் படம் காணல்’ உள்ளிட்ட கதைகள் சமகால இலக்கிய அரசியலையும் எழுத்தாளரின் நிலையையும் பகடி செய்துள்ளன.</div><div>மொழியிலும் வடிவத்திலும் மரபின் தொடர்ச்சியாகவே பெண் எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் அமைந்துள்ளன. சிலர் இன்றையச் சூழலின் புதிய கதைக்களங்களை எழுதியுள்ளனர்.</div><div>மத்தியதரக் குடும்பங்களின் எளிய அன்றாடங்களின் நடைமுறைச் சிக்கல்களும் தடுமாற்றங்களும் அதனூடான அகமோதல்களுமே கலைச்செல்வியின் சிறுகதைக் களங்கள். புதிய களங்களை எழுதிப் பார்க்கும் முனைப்பை வெளிப்படுத்தும் கதைகள் அவரது ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தொகுப்பில் உண்டு.</div></div><div><br /></div><div>மரபான குடும்ப வாழ்வின் எல்லைகளையும் அவை ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்களையும், பெண்களின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தும் கதைகளாக அ.வெண்ணிலா தந்திருக்கிறார். குடும்பத்தினுள்ளும் புறச்சூழலிலும் பெண்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறார்கள், உடல்மொழி, சிரிப்பு, பேச்சு என்று வெளி எவ்வாறு சுருக்கப்படுகிறது என்பதில் அவரது கதைகள் கவனம் குவிக்கின்றன.</div><div><br /></div><div><div>லாவண்யா சுந்தரராஜனின் கதைகள், இதுவரையிலும் சொல்லப்பட்ட பெண்களின் இருப்பை இன்றைய நகரமயமும் தொழில்நுட்பமும் பொருளாதாரச் சுதந்திரமும் வடிவமைத்துள்ள நவீன வாழ்வு மாற்றியமைத்துள்ளதா என்ற வலுவான கேள்வியை எழுப்புபவை. குழந்தைப் பேறுகளையும் உறவுகளுக்கிடையிலான ஓயாத அகச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டிருந்தாலும் இவை இன்றில் கால்கொண்டிருப்பதால் மேலும் பொருட்செறிவு மிக்கவையாக அமைந்துள்ளன.</div><div>கிராமங்களில் இன்னமும் மேல் அழுத்தமாகக் கவிந்திருக்கும் சமூகம், குடும்பம் போன்ற அமைப்புகள் சார்ந்த அழுத்தங்களைக் குறித்த பெண்களின் மௌனங்களை அடங்கிய குரலில் சொல்லும் கமலதேவியின் கதைகளின் வடிவம் நுட்பமானது. முழுமையான கதையாக எதையும் சொல்லாமல் அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாகவே ‘சக்யை’, ‘குருதியுறவு’ ஆகிய தொகுப்புகளிலுள்ள அவரது கதைகள் அமைந்துள்ளன.</div></div><div><br /></div><div><div>பெண்களைப் பற்றிய ஆண்கள் கொண்டுள்ள பொதுவான தட்டையான சித்திரத்தைக் கலைத்துப் போடுபவை, கேள்வி கேட்பவை குட்டி ரேவதியின் கதைகள். பெண்களின் அக உலகம் சார்ந்த வெளிப்படையான உரையாடல்களையும் பேசியிருக்கும் கதைகள் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘குரல்கள்’ ஆகிய தொகுப்புகளில் உள்ளன.</div><div>உடல்சார்ந்த விடுதலையை இச்சைகளின் களிப்பையும் போதையையும் முன்வைக்கும் கட்டற்ற எழுத்து லைலா எக்ஸ்-இன் சிறுகதைகள்.</div><div>ஒன்றிலிருந்து முற்றாக வேறுபட்ட வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டவை ஜா. தீபாவின் கதைகள். ‘நீலம் பூக்கும் திருமடம்’ தொகுப்பிலுள்ள ‘குருபீடம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை.</div></div><div><br /></div><div><div>நவீன வாழ்வின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தையும் மதிப்பீடுகளையும் இழந்த நாஞ்சில் நாட்டின் வாழ்வியல் துயரங்களை வட்டார மொழியில் சொல்பவை மலர்வதியின் சிறுகதைகள். ‘கருப்பட்டி’ அவரது சிறுகதைத் தொகுப்பு.</div><div>அனுசரணையும் சமரசமும் பூசல்களுமாய் விளங்கும் கூட்டுக் குடும்பத்தின் எளிய தருணங்களைக் காட்டும் ‘ஒரு மழைநாள்’, ‘லீலாவதியின் தத்துவங்கள்’ போன்ற கதைகளை எழுதியிருக்கும் சுசித்ராவின் ‘ஒளி’ குறிப்பிடத்தக்க சிறுகதை. அறிவியல் புனைகதைளும் எழுதியுள்ளார்.</div></div><div><br /></div><div><div>உழைக்கும் சிறுவர்களைக் குறித்துத் தமிழில் முன்னோடிகளால் எழுதப்பட்ட கதைகளின் வரிசையில் இன்றைய சிறுவர்களின் துயரமான வாழ்நிலையைக் காட்டும் கதைகளை எழுதியுள்ளனர் ராம்தங்கம், நாகபிரகாஷ் ஆகிய இருவரும்.</div><div>ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் ‘டாக்டர் அக்கா’, ‘உடற்றும் பசி’ உள்ளிட்ட பல கதைகளும், நாகபிரகாஷ் எழுதிய ‘எரி’ தொகுப்பிலுள்ள ‘கூப்பன்’, ‘சகடம்’ ஆகிய கதைகளும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.</div><div>அறிவியல் புனைவுகள் எழுதும் முனைப்பை அநேகமாய் இன்றைய தலைமுறைச் சிறுகதையாளர்கள் பலரிடமும் புதியவர்களிடமும் காணமுடிகிறது. அறிவியல் புனைகதைகளுக்கான மின்னிதழான அரூ தொடர்ந்து அத்தகையக் கதைகளை வெளியிடுகிறது. ‘சொல்வனம்’ அறிவியல் புனைகதைகளுக்காகச் சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அவ்வகைக் கதைகளைப் பற்றிய விவாதங்கள் அவற்றின் சாத்தியங்களைக் குறித்த விரிவான புரிதல்களுக்கு வழிவகைகள் செய்கின்றன.</div><div>ரா. கிரிதரன், சுசித்ரா, சுனில் கிருஷ்ணன் போன்று ஒருசிலரைத் தவிர இவ்வகைக் கதைகளை எழுத முனைபவர்கள் பலரும் சிறுகதை எழுத்துக்குப் புதியவர் களாய் இருப்பது வியப்பைத் தரும் ஒன்று.</div></div><div><br /></div><div>மனித உறவுகள், காமம், அக நெருக்கடிகள், துயரின் பல்வேறு நிறங்கள், துலக்கமான தனித்துவங்களைக் கொண்ட கோட்டுச் சித்திரங்கள் என முன்னோடிகளின் தேர்ந்த கைகள் எழுதிக்காட்டியவற்றைத் தமக்கான கதைமொழியில் சொல்ல விழையும் சிறுகதையாளர்கள் பலரும் இந்தப் பத்தாண்டுகளில் உண்டு.</div><div><br /></div><div><div>காமமும் இச்சையும் குற்றங்களின் மீதான ஈர்ப்பும் இட்டுச்செல்லும் சுழல் வழியின் திருப்பங்களில் கால்கொண்டிருக்கும் போகன் சங்கரின் கதைகள், சொல்முறையில் திருத்தமானவை. கண்முன்னால் மலர்ந்து மறையும் மத்தாப்புத் தருணங்களின் ஜாலங்களையும் வசீகரத்தையும் கொண்டவை. ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’, ‘திகிரி’, ‘போகப் புத்தகம்’ ஆகியவை இவரது தொகுப்புகள்.</div><div>சுயநலத்தின் அலகுடன் அமையும் மனித உறவுகளையும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களையும் நேரடியாகவும் (அபரஞ்சி, பஸ்ஸ்டாண்ட்) புதிர்வடிவாகவும் (வாசலில் நின்ற உருவம், புலி) கொண்ட கதைகள் கே.ஜே. அசோக்குமாரின் ‘சாமத்தில் முனகும் கதவு’ தொகுப்பில் உள்ளன.</div></div><div><br /></div><div>தகுதிவாய்ந்த ஒருவனுக்காகத் தன் ஓவியத்தைப் பாதுகாத்திருக்கும் பெண்ஓவியர், கதை கேட்கும் செவிகள், சர்க்கஸ்காரர்கள், ஆராய்ச்சிக்காகக் குதிரையைத் தேடுவது என்று வெவ்வேறு கதைக்களங்களைக் கையாளும் நரனின் (‘கேசம்’, ‘சரீரம்’) கதைகள் மொழியிலும் வடிவிலும் சிடுக்குகள் கொண்டவை.</div><div><br /></div><div>விஞ்ஞானத்தின் அளப்பரிய கண்டுபிடிப்புகள் இன்றைய மருத்துவத்தில் அற்புதங்கள் நிகழ்த்தியுள்ள நிலையில் நோய்ப்பட்டவனின் வாதையுடன் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிக்க நேரும் நெருக்கடிகள், துயரங்கள் மேலும் வலுவடைந்தே வரும் முரணை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்கின்றன மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள். </div><div><br /></div><div>விஞ்ஞானத்தின் அளப்பரிய கண்டுபிடிப்புகள் இன்றைய மருத்துவத்தில் அற்புதங்கள் நிகழ்த்தியுள்ள நிலையில் நோய்ப்பட்டவனின் வாதையுடன் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிக்க நேரும் நெருக்கடிகள், துயரங்கள் மேலும் வலுவடைந்தே வரும் முரணை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்கின்றன மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள். </div><div><br /></div><div>கதைகளைத் தொடர்ந்து எழுதி, தொகுப்புகளை வெளியிடுவதன் வழியாக ஆத்மார்த்தி, கார்த்திக் புகழேந்தி, கவிதைக்காரன் இளங்கோ, லக்ஷ்மி சிவகுமார், ஜி. கார்ல் மார்க்ஸ், உதயஷங்கர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்புகளைத் தருகின்றனர்.</div><div><br /></div><div>இளைஞர்கள் பலர் தொடர்ந்து சிறுகதைகளில் ஆற்றலுடனும் தீவிரத்துடனும் பங்களிப்பதன் வழியாக இதுவரையிலும் தமிழ்ச் சிறுகதைகள் தொட்டிருக்காத புதிய நிலவெளிகளும் புனைவுத் தருணங்களும் நமக்கு அறிமுகமாயுள்ளன. வடிவிலும் மொழியிலுமான பரிசோதனைகளில் ஆரோக்கியமான சில ஆச்சரியங்களைத் தந்திருக்கின்றன. அறிவியல் புனைவுகள், குறுங்கதைகள் போன்ற வகைகளை எழுதுவதிலும் அணுகுவதிலும் தீவிரம் மிகுந்துள்ளது. ஏராளமான புதிய பெயர்களையும் புதிய கதைகளையும் கடந்து வர நேர்கிறது. </div><div><br /></div><div>காலம் தாட்சண்யமின்றி உதிர்க்கும் பெயர்களுக்கு நடுவில், எழுதிப் பல காலத்துக்குப் பின்னும் புனைவின் வசீகரத்தையும் நேர்த்தியையும் சிறிதும் இழக்காத செவ்வியல் கதைகளின் வரிசையில் இப்படி தூண்டுதலில் எழுதப்பட்ட சில கதைகளேனும் இடம்பெறுமானால் அதுவே இந்தப் பத்தாண்டுகாலச் சிறுகதைப் பயணத்தை அர்த்தப்படுத்துவதாக அமையும்.</div><div><br /></div><div>(கட்டுரை ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்புகொள்ள: murugesan.gopalakrishnan@gmail.com )</div><div><br /></div><div> </div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-31580383214461652772020-09-18T11:20:00.001-04:002020-09-18T11:20:20.783-04:00பறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா <p> </p><p><br /></p><div class="art-Post" style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgb(70, 74, 69); color: #464a45; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; margin: 3px; min-height: 1px; min-width: 1px; position: relative; z-index: 0;"><div class="art-Post-body" style="padding: 10px; position: relative; z-index: 1;"><div class="art-Post-inner art-article"><div class="art-PostContent" style="line-height: 20pt; margin: 0px; text-align: justify;"><div class="navigation" style="text-align: center;"><div class="alignright" style="float: right;"><a href="https://www.sramakrishnan.com/?p=11196" rel="next" style="color: #323531;">டோரா ஜெயிக்கிறான்</a> »</div></div></div><div class="cleared" style="border: none; clear: both; float: none; font-size: 1px; margin: 0px; padding: 0px;"></div></div><div class="cleared" style="border: none; clear: both; float: none; font-size: 1px; margin: 0px; padding: 0px;"></div></div></div><div class="art-Post" style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgb(70, 74, 69); color: #464a45; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; margin: 3px; min-height: 1px; min-width: 1px; position: relative; z-index: 0;"><div class="art-Post-body" style="padding: 10px; position: relative; z-index: 1;"><div class="art-Post-inner art-article"><h2 class="art-PostHeader" style="color: #353833; font-size: 22px; font-variant-east-asian: normal; font-variant-ligatures: normal; font-variant-position: normal; line-height: inherit; margin: 0.2em 0px; padding: 0px; word-spacing: normal;"><a href="https://www.sramakrishnan.com/?p=11193" rel="bookmark" style="color: #a38a2e; margin: 0px; text-decoration: none;" title="Permanent Link to பறவை">பறவை</a></h2><div class="art-PostContent" style="line-height: 20pt; margin: 0px; text-align: justify;"><div id="_mcePaste">பதாகை இணைய இதழில் வெளியாகியுள்ள ஸ்ரீதர் நாராயணன் கவிதை மிகச்சிறப்பாகவுள்ளது.</div><div>காத்திருப்பின் தருணத்தில் தான் எத்தனை சாத்தியங்கள். ஜென் கவிதைகளில் செயல்படுவது போல ஒரு புள்ளியை முதன்மைப்படுத்தி கவிதை விரிகிறது. பறவையின் சிறகசைப்பை போல கவிதையும் படபடத்து எழுகிறது.</div><div>வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன்.</div><div>••</div><div><a href="https://www.sramakrishnan.com/wp-content/uploads/2020/08/br.jpg" style="color: #323531;"><img alt="" class="aligncenter size-full wp-image-11194" height="151" src="https://www.sramakrishnan.com/wp-content/uploads/2020/08/br.jpg" style="border: 0px; display: block; margin: 1em auto;" title="br" width="126" /></a></div><div><br /></div><div><div><a href="https://padhaakai.com/2017/11/10/bird/amp/" target="_blank">பறவை</a> –</div><div>ஸ்ரீதர் நாராயணன்</div><div id="_mcePaste"></div><div id="_mcePaste">*</div><div id="_mcePaste">இறக்கைகளை பறத்திக் கொண்டு</div><div id="_mcePaste">விரிந்த நிலப்பரப்பில்</div><div id="_mcePaste">நின்றிருக்கிறது</div><div id="_mcePaste">சாம்பல் வண்ண பறவை ஒன்று</div><div id="_mcePaste">தன் நிழலைப் பார்த்தபடி.</div><div id="_mcePaste">பருவமாற்றத்தின் படிநிலையைக்</div><div id="_mcePaste">காட்ட வலசை போகலாம்.</div><div id="_mcePaste">காவ் காவ் என கப்பல்காரருக்கு</div><div id="_mcePaste">நிலத்தின் வரவை</div><div id="_mcePaste">கட்டியம் கூறலாம்</div><div id="_mcePaste">உண்டிவில்லிலிருந்து விசையோடு</div><div id="_mcePaste">வீசப்படும் கல்லுக்கு</div><div id="_mcePaste">தப்பித்து செல்லலாம்.</div><div id="_mcePaste">செந்நா சுவைக்கு இலக்கென</div><div id="_mcePaste">அனலில் வறுபட்டு</div><div id="_mcePaste">அரிவகை உணவாக செரிமானம் ஆகலாம்.</div><div id="_mcePaste">ஓவியனின் கலைச்சுவைக்கு</div><div id="_mcePaste">தூண்டுகோலாகி</div><div id="_mcePaste">தூரிகையில் வண்ணப்பிரதியாகலாம்.</div><div id="_mcePaste">தன் இனத்தின் பிரதிநிதியாக</div><div id="_mcePaste">நூல்களின் சேகரிப்பில்</div><div id="_mcePaste">தகவல் தொகுப்பாகலாம்.</div><div id="_mcePaste">உயிர்த்திருத்தலின் எத்தனிப்பிற்காக</div><div id="_mcePaste">சிறுமீன் வேட்டைக்கு புறப்படலாம்.</div><div id="_mcePaste">மூக்குயர்த்தி எழும்பி</div><div id="_mcePaste">விரிந்த வானில் புள்ளியென</div><div id="_mcePaste">கரைந்து போகலாம்.</div><div id="_mcePaste">சிறுகண்ணை திருப்பி</div><div id="_mcePaste">என்னைப் பார்த்துக் கொண்டே</div><div id="_mcePaste">வளைய மூக்கால்</div><div id="_mcePaste">இறகுககளை கிளர்த்திக் கொண்டு</div><div id="_mcePaste">யோகியின் முக்திநிலையில்</div><div id="_mcePaste">இப்படியே இருக்கலாம்.</div><p style="line-height: 20pt; margin: 0.5em 5px;">••</p><p style="line-height: 20pt; margin: 0.5em 5px;"><span style="text-align: left;">நன்றி: <a href=" https://www.sramakrishnan.com/?p=11193" target="_blank">எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்</a> </span></p><p style="line-height: 20pt; margin: 0.5em 5px;"><br /></p></div></div></div></div></div><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-31412140900734687442020-07-22T09:07:00.000-04:002020-07-22T09:07:14.877-04:00சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை என ‘புதிய நிலம்’ கதையைச் சொல்ல முடியும். சிறு காதல் கதையாகத் தொடங்கிய கதை, மனிதன் நிலத்தைக் கொண்டு நினைவினூடாக செல்லும் அகப்பயணங்களைச் சீராக நம்முன்னே நிகழ்கிறது. சவிதா எனும் இந்தியப்பெண் அவளது அமெரிக்க நண்பர்களுடன் கழிக்கும் ஓரிரு மணிநேரங்களில் நிகழும் கதை என்றாலும் மாறும் நிலம் வழியே வரலாறு நெடுக மனிதர்கள் அடையக்கூடிய புது மாற்றங்களை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwa347iFy2fk4ebFrEK2Fivt-ynnnimiT5NFjcBQIWta9dZAT7cHVAu-ml2VuR6sEU_lsifruYxCYb_4zsI91jLnFg8_c4mLbyawiYIivHCa1FELYzn4_sPH7phogPPVvJj2J0/s1600/77FD7CF8-A348-43D1-89BC-1EB44650D75A.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwa347iFy2fk4ebFrEK2Fivt-ynnnimiT5NFjcBQIWta9dZAT7cHVAu-ml2VuR6sEU_lsifruYxCYb_4zsI91jLnFg8_c4mLbyawiYIivHCa1FELYzn4_sPH7phogPPVvJj2J0/s320/77FD7CF8-A348-43D1-89BC-1EB44650D75A.png" width="298" height="320" data-original-width="937" data-original-height="1007" /></a></div>வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பெரிய கட்டடத்தைத் தகர்க்கும் நிகழ்வுக்குச் செல்லும்போது பாப் எனும் வயதானவர் பழங்கதையை மீட்டுப் பார்ப்பதோடு தன்னுடைய நினையவிலிருக்கும் பெண்ணுடனான காதலையும் தொட்டுப் பார்க்கிறார். ஒரு நோஸ்டால்ஜியா குறிப்பாக நின்றுவிடாமல் மனிதர்கள் தங்களை மீட்டுக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக கதை நிகழ்ந்துள்ளது. உலகில் பழமையான காதல் நிகழும் ஒவ்வொரு முறையும் புதியது தான்.<br />
<br />
உலகில் உள்ள எந்த சிறு பிரச்சனையையும் தீர்க்க முடியும் என அதீத ஆர்வத்துடன் வெகுளித்தனத்தோடு திறமையும் ஒருசேர இருக்கும் தென் அமெரிக்கரான ஹிபோலியோவின் கரிசனத்துக்குப் பின்னால் தர்க்கமற்ற ஒரு விதி ஓடிக்கொண்டிருப்பதைக் காட்டும் கதை ‘ஹிபோலியோ’. உடைந்த கார் பாகங்களிலிருந்து, எலெக்ட்ரிக் ரிப்பேர் வரை செய்து பார்த்து தொழிலை கற்றுக்கொள்ளும் ஹிபோலியோ, கதைசொல்லியின் வீட்டிலிருக்கும் ஏஸியை ரிப்பேர் செய்ய வருகிறார். பல நேரங்களில் நாம் தெரிந்தே தவறு செய்வதில்லை. போலவே, நல்லவைகளும். ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி நம் செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதை சுவாரஸ்யமான முடிச்சுடன் இந்தக் கதையில் சொல்லியுள்ளார். ஏஸி சீர் செய்யத் தேவையான ஒயர் கிடைக்காமல் ஒரு நாள் தாமதித்ததில் ஒரு எலிக்குடும்பமே தப்பியிருப்பதை உணர நேரும் தருணம் உண்மையில் ஒரு முகூர்த்த தருணம் தான். கடவுளின் கரம் போன்ற ஏதோ ஒன்று பெரு முயற்சிக்காரரான ஹிபோலியோவைத் தடுத்திருக்கிறது.<br />
<br />
ஹிபோலியாவின் தருணம் போலொரு மாயக்கரம் ‘யோகம்’ சிறுகதையிலும் நிகழ்கிறது. பார்வை குறைபாடுள்ள வங்கி கணக்காளரின் தவறால் அதிகப்பணம் பெற்றவன் தனது அதிர்ஷ்டத்தை நினைத்திருக்கும் வேளையில் போலீஸுக்கு தெரிந்துபோனால் தனது இந்தியப்பயணம் ரத்தாகிவிடும் என பயப்படுகிறான். அதிகப்பணம் பெற்றதால் போலீஸ் பிடிக்கவில்லை என உணரும் போது குற்றவுணர்வை மீறி ஆசுவாசம் தெரிகிறது. தன்னை மீறிய சக்தியால் குற்ற உணர்விலிருந்து தப்பிவிடுகிறான். நிகர் லாபம் இல்லாவிட்டாலும் இதுவும் ஒருவித யோகமே. அடுத்த நாள் பயணத்துக்கான பணமும் கிட்டிவிடுகிறது. வங்கிக் கணக்கில் ரத்தான டிக்கெட்டின் பணமும் தவறாக கைக்கு வந்ததுக்கு நிகராகி விடுகிறது. ஏதோ ஒரு விதத்தில் மனதைத் தேற்றிக்கொள்ள வைக்கும் யோகம். ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கக் கூடிய திறன் ஶ்ரீதருக்கு அமைந்திருப்பதை நிரூபிக்கும் கதை சொல்லல் முறை.<br />
<br />
‘பியாரி பாபு’ கதையில் வரும் ஜார்ஜ் ஒரு வகையில் புதிய நிலம் கதையின் பாப் எனும் முதியவரின் பிம்பம் தான். இளமையில் நடந்தவற்றை அசைபோட்டபடி வாழும் வயதான நாட்களில் சில நினைவுகள் மிகத் தெளிவாகவும் சில புகை மூட்டமாகவும் இருப்பது சாத்தியம். பியாரி பாபு கதையின் ஜார்ஜ் தனது மாமா தந்த பெட்டியைத் திறக்காமலேயே வைத்திருக்கிறார். காந்தியின் பிரதான சீடரான அவரது மாமாவுக்கு காந்தி எழுதிய கடிதங்களும், அவரது முதல் உயிலும் இருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள். ஒருவிதத்தில் நாம் திறக்காமல் வைத்திருக்க நினைக்கும் பழைய நினைவுகள் போல ஒரு மிஸ்டிக் தன்மை இருக்கும் பெட்டி. திறந்தால் அதன் வசீகரத்தை இழந்துவிடுவோம் எனும் பயமாகவும் இருக்கலாம்.<br />
<br />
எப்படி எடுத்துக்கொண்டாலும், அதன் திறக்காத பூட்டு தனது வாழ்வுக்கு தனித்த அர்த்தம் தருவதாக ஜார்ஜ் நினைப்பது மனித மனதின் எண்ணிலடங்கா மர்மத்தின் ஓரிதழ். இப்படி நமக்குள் பலவிதமான பியாரி பாபு பெட்டிகள் இருக்கலாம். அதன் அர்த்தங்கள் நமக்கு மட்டுமே புரியக் கூடியவையாக இருக்கலாம். அதில் இருக்கும் வசீகரம் வாழ்வு மீதான நம் பிடிப்பின் திறவுகோல். மிக யதார்த்தமான இந்த வாழ்வின் மர்மத்தை செல்லா காந்திக்கு கடத்திவிடுகிறது பியாரி பாபுவின் பெட்டி. ஒரு விதத்தில் செல்லா காந்தி செல்லுபடியாகத்தொடங்கும் இடத்தை நோக்கி நகர்வது கதையை மிகவும் ரசிக்கத்தக்கதாக ஆக்கியுள்ளது.<br />
<br />
வானவில் – மிக நம்பிக்கை ஊட்டும் கதை – போலியான வார்த்தைகளால் மிகையாகப் பாராட்டும் பாணி அல்ல. அது மட்டுமல்ல. ’90கள் வரை பதின்மத்தைக் கழித்தவர்களுக்கு பாலுணர்வைத் தூண்டும்படியாகவோ, வெறுப்பை விதைக்கும் விதமாகவோ கைக்கெட்டிய தூரத்தில் கிட்டும் பொருட்கள் மிகவும் குறைவு. இன்றைய காலம் அப்படிப்பட்டதல்ல. கண் சிமிட்டும் நேரத்தில் நம் மனதின் திசைக்கேற்ப எத்தனை கீழ்த்தரமான தளங்களையும், உச்சகட்ட வன்முறை மற்றும் வெறுப்பை ஊட்டக்கூடிய காணொளிகளையும் பார்க்கக்கூடிய காலத்தில் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி வாழும் குழந்தைகளை எப்படியெல்லாம் இவை பாதிக்கும் என பெரும்பான்மையான நேரம் நாம் உணர்வதில்லை. எதிர்மறையாக, பல நேரங்களில் நம் அதீத ஜாக்கிரதை உணர்வால் அவர்களைச் சந்தேகப்படவும் தொடங்குகிறோம். அப்படிப்பட்ட குடும்பம் பற்றிய மிக மேன்மையான கதை இது.<br />
<br />
பதின்பருவத்துப் பெண், தன் கூடப்படிக்கும் பையனுடன் இணையத்தில் எதையோ தேடப்போக ஒரு கீழ்த்தரமான விஷயத்தைக் காண நேர்கிறது. அந்த நொடியே அதிலிருந்து வெளியேறும் மனநிலையைப் பெற்றிருப்பவர்கள் உடனடியாக இதைக் கடந்து விடுகின்றனர். அப்பாவிடம் இதை ஒரு செய்தியாகச் சொல்லும் பள்ளிக்கூடமும் கடமைக்காகவே இதைப் பகிர்கின்றது. குழந்தையாக பாவித்து வளரும் பெண்ணிடன் இது எந்த மாதிரி விளைவை ஏற்படுத்தியிருக்கும் எனவும், அவள் வெறும் அப்பாவிக் குழந்தை என எண்ணுவது தவறோ எனவும் அப்பா நினைக்கத் தொடங்குகிறார். மனைவிக்கு இருக்கும் முதிர்ச்சி அவரிடம் இல்லை. உடனடியாக மனம் அந்த நாட்டின் தாராளவாத பாலியல் சுதந்திரம் மீதும், இந்திய சமூகத்தின் கட்டுப்பாடின் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தி ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமளவு அவரை நிலைகுலைய வைக்கிறது. வானவில்லின் தீவிர நிறம் அது. பெண்ணோ அவளது அம்மாவோ இதை மிக இயல்பாகத் தாண்டிச் செல்கிறார்கள். நம் அடுத்தத் தலைமுறை மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கையை அழுத்தமாக அதே சமயம் ஆரவாரமில்லாமல் சொல்லும் கதை.<br />
<br />
ஶ்ரீதர் நாராயணனின் கதையின் பெரிய பலம் அவர் கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் விதமும் தான். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பல தளங்களில் எழுதி வருபவரது எழுத்து மிகவும் முதிர்ச்சியுடனும் கதைக்குத் தேவையானளவு அமைதியும் கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலேயே அதற்கு பல உதாரணங்கள் உண்டு. ‘பாரதி எனும் பற்றுக்கோடு’ அதற்குச் சிறந்த உதாரணம். அமெரிக்காவில் வசிப்பவரிடம் பாரதியின் முதல் ஆங்கிலப் பிரதியான ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ்’ நூலை வாங்கிவரச் சொல்கிறார் பாரதி அறிஞரின் நண்பர். 9/11 சிக்கலுக்குப் பிறகு ஊருக்கு வெறுங்கையோடு திரும்ப வருபவரது பார்வையில் பாரதி என்ன பொருள்படுகிறார் என ஆராயும் கதை. அறிஞரின் நண்பர் பிடிபடாத பெருமையுடன் பாரதி பிரீதியை பல கதைகள் மூலம் காட்டி வரும்போது கதைசொல்லிக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் வரும் தடுமாற்றம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. முடிவில் பணத்தை ஒரு கவரில் வைத்துக் கொடுக்கும்போது அங்கு பகிரப்படுவது என்ன எனும் மிகச் சிக்கலான கேள்வியோடு முடிந்திருக்கும் மிக நல்ல கதை.<br />
<br />
இத்தொகுப்பின் மிக அருமையான கதைகள் மட்டுமல்லாது சமீப காலங்களில் அதிக ஆரவாரமில்லாமல் நேர்த்தியாக எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்தக்கூடியவை – கத்திக்காரன் மற்றும் முயல் காதுகள். தலைப்புக் கதையான கத்திக்காரன் ஒரு கலைஞனின் திறமையை அறிய முயல்பவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. கலைஞன் தனது கலைத்திறமைக்கான ஊற்றைத் தேடிக் கண்டடைய முனையும்போதெல்லாம் அது அவனை மீறிச் சென்றபடியே இருக்கும். கலை நடக்கும் கணத்தில் அவனை மீறி நிகழ்வதன் மூலத்தை அறிய முடியாது. பல நேரங்களில் குறைபாடுகள் கூட நம்பமுடியாத சாத்தியங்களை உருவாக்கலாம். தங்கராஜுக்கு அந்தக் கத்திக்காரன் மிகச்சரியாக கத்தியை வீசுவதன் மீதிருக்கும் வசீகரத்தைப் போல அந்தப் பெண்ணும் அதை லாகவமாக உணர்ந்து கச்சிதமான நொடியில் துல்லியமாக நகர்வதையும் வியக்க முடிகிறது. இந்த மேஜிக்கை ஒரு முறையேனும் தவறவிடுவார்களா எனும் எதிர்பார்ப்பினாலோ பல முறை பார்த்தாவது அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள முடியுமா எனும் ஆர்வத்தினாலோ, தங்கராஜ் தினமும் கத்திக்காரனின் ஆட்டத்தைப் பார்க்கச் செல்கிறான்.<br />
<br />
குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் ஒரு முறை அவர்களையும் அழைத்துச் சென்று அந்த நொடியின் உன்னதத்தை அறியச் செய்ய பிரயத்தனப்படுகிறான். கத்திக்காரனின் இல்லாத கட்டை விரலையும் அந்தப் பெண் அவன் மீது கொண்டிருக்கும் ஆசையையும் கண்டுணரும் தருணம் அவனுள் அந்த மேஜிக் நிகழ மறுத்துவிடுகிறது. ஏதோ ஒரு பெரிய ரகசியத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது அந்த விரலையும் மீறி கத்திக்காரனின் திறமை தெரிவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவரை மேஜிக் நிகழ்ந்த இடம் எது எனும் கேள்வியோடு கதை முடிகிறது. அந்தப் பெண் கத்திக்காரன் மீது வைத்திருந்த மாறாத நம்பிக்கையும் ஈர்ப்பும் அவளை அவனது அசைவுகளை நுட்பத்தோடு தொடர வைத்திருக்கிறது. ஒருவேளை அவளது கண்களில் மட்டுமே அந்த ரகசியம் தேங்கி இருக்கிறதோ எனும் ஆழமான வினாவையும் நம்முன் வைக்கிறது இந்தக் கதை.<br />
<br />
சின்னச் சின்ன விஷயங்களில் அடையக்கூடிய ஒழுங்கைப் பற்றிய அற்புதமான சிறு விசாரணை ‘முயல் காதுகள்’ எனும் கதையாக மாறியுள்ளது. வெங்காயம் வெட்டுவது முதல் செடிக்கு நீர் ஊற்றுவது வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் அதனதன் அழகுணர்ச்சியோடு செய்வது ஒருவித கலை. அது ஜென் அனுபவம் கூட. அப்படி அனுபவிக்கத் தெரிந்தவர் கூடவே இருப்பது வரமும் சாபமும் தான். நம் பார்வைக் கோணத்தைப் பொருத்து அமைவது. முயல் காதுகள் போக அழகாக ஷூலேஸ் கட்டிக்காட்டும் 80 வயது மூதாட்டி கதாசிரியரின் ஜூனியருக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். அதுவும் விளையாட்டு போல. வளர்ந்துவிட்ட அவரது சொந்த நாயை கைவிடும் தருணம் கூட ஒரு ஓவியத்தைப் போல அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மலரினும் மெல்லியது காமம் என்பது போல மிக நுணுக்கமான ரசனையும் மெல்லிய புல்லின் அசைவை ஒத்தது. மிக இயல்பானது. காலணி அணிந்துகொள்வதிலும் அப்படி ஒரு நுண்மை உள்ளதைக் காட்டும் மிக அழகான கதை. சொல்லப்போனால், ஜேஸ்டன்வில் நகரின் ஆன்மா இப்படிப்பட்ட பாத்திரங்களின் அன்றாட வாழ்வில் ஒளிந்துள்ளது. அது வெளிப்படும் கதைகளில் இதுவும் ஒன்று.<br />
<br />
ஜேஸ்டன்வில் எனும் கற்பனை நகரை உருவாக்கி அங்குள்ள இடங்களையும் மனிதர்களையும் பற்றி எழுதப்பட்ட தொகுப்பு என்றாலும் அந்த ஊருக்கான பிரத்யேக அடையாளங்களும் வாசனைகளும் உருவகங்களாக கதையில் அதிகம் வருவதில்லை. ஊரின் தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாத்திரமாக மாற சாத்தியமுள்ள இடங்கள் தெளிவுற வெளிப்படவில்லை எனும் குறை இருந்தாலும் இப்படி ஒரு சாத்தியத்தை உருவாக்கியதன் மூலம் எதிர்காலத்தில் பழுத்த பல கனவுகளை நிஜமாக்கும் திறமையுள்ளவர் என நிரூபித்துள்ளார்.<br />
<br />
கடந்த சில வருடங்களில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்புகளில் மிக நுட்பமான தருணங்களும் கதை எனும் அம்சத்துக்கான முக்கியத்துவமும் தெளிவான கதாபாத்திர வார்ப்பும் அதிக அலட்டல் இல்லாத கூறுமுறையும் போலியான இலக்கிய பாவனைகள் அற்றதுமான சிறுகதைத் தொகுப்பாக ‘கத்திக்காரன்’ அமைந்துள்ளது. எழுத்தாளரின் கதைகளையும் கட்டுரைகளையும் கதை போல கச்சிதமாக எழுதப்படும் அவரது பத்தி எழுத்துகளையும் (ஜூனியர் குறிப்புகள்) கவிதைகளையும் ஒன்றுவிடாமல் தொடர்ந்து படித்து வருபவன் எனும் முறையில், எளிமையான விதத்தில் மிகத் திறமையுடன் சுவாரஸ்யமாக கதை சொல்லும் புது எழுத்தாளர்களில் ஶ்ரீதர் நாராயணன் மிக முக்கியமானவர் என நிச்சயமாகச் சொல்லலாம்.<br />
<br />
*<br />
<br />
ஶ்ரீதர் நாராயணனின் கதையின் பெரிய பலம் அவர் கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் விதமும் தான். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பல தளங்களில் எழுதி வருபவரது எழுத்து மிகவும் முதிர்ச்சியுடனும் கதைக்குத் தேவையானளவு அமைதியும் கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலேயே அதற்கு பல உதாரணங்கள் உண்டு. ‘பாரதி எனும் பற்றுக்கோடு’ அதற்குச் சிறந்த உதாரணம். அமெரிக்காவில் வசிப்பவரிடம் பாரதியின் முதல் ஆங்கிலப் பிரதியான ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ்’ நூலை வாங்கிவரச் சொல்கிறார் பாரதி அறிஞரின் நண்பர். 9/11 சிக்கலுக்குப் பிறகு ஊருக்கு வெறுங்கையோடு திரும்ப வருபவரது பார்வையில் பாரதி என்ன பொருள்படுகிறார் என ஆராயும் கதை. அறிஞரின் நண்பர் பிடிபடாத பெருமையுடன் பாரதி பிரீதியை பல கதைகள் மூலம் காட்டி வரும்போது கதைசொல்லிக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் வரும் தடுமாற்றம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. முடிவில் பணத்தை ஒரு கவரில் வைத்துக் கொடுக்கும்போது அங்கு பகிரப்படுவது என்ன எனும் மிகச் சிக்கலான கேள்வியோடு முடிந்திருக்கும் மிக நல்ல கதை.<br />
<br />
இத்தொகுப்பின் மிக அருமையான கதைகள் மட்டுமல்லாது சமீப காலங்களில் அதிக ஆரவாரமில்லாமல் நேர்த்தியாக எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்தக்கூடியவை – கத்திக்காரன் மற்றும் முயல் காதுகள். தலைப்புக் கதையான கத்திக்காரன் ஒரு கலைஞனின் திறமையை அறிய முயல்பவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. கலைஞன் தனது கலைத்திறமைக்கான ஊற்றைத் தேடிக் கண்டடைய முனையும்போதெல்லாம் அது அவனை மீறிச் சென்றபடியே இருக்கும். கலை நடக்கும் கணத்தில் அவனை மீறி நிகழ்வதன் மூலத்தை அறிய முடியாது. பல நேரங்களில் குறைபாடுகள் கூட நம்பமுடியாத சாத்தியங்களை உருவாக்கலாம். தங்கராஜுக்கு அந்தக் கத்திக்காரன் மிகச்சரியாக கத்தியை வீசுவதன் மீதிருக்கும் வசீகரத்தைப் போல அந்தப் பெண்ணும் அதை லாகவமாக உணர்ந்து கச்சிதமான நொடியில் துல்லியமாக நகர்வதையும் வியக்க முடிகிறது. இந்த மேஜிக்கை ஒரு முறையேனும் தவறவிடுவார்களா எனும் எதிர்பார்ப்பினாலோ பல முறை பார்த்தாவது அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள முடியுமா எனும் ஆர்வத்தினாலோ, தங்கராஜ் தினமும் கத்திக்காரனின் ஆட்டத்தைப் பார்க்கச் செல்கிறான்.<br />
<br />
குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும் ஒரு முறை அவர்களையும் அழைத்துச் சென்று அந்த நொடியின் உன்னதத்தை அறியச் செய்ய பிரயத்தனப்படுகிறான். கத்திக்காரனின் இல்லாத கட்டை விரலையும் அந்தப் பெண் அவன் மீது கொண்டிருக்கும் ஆசையையும் கண்டுணரும் தருணம் அவனுள் அந்த மேஜிக் நிகழ மறுத்துவிடுகிறது. ஏதோ ஒரு பெரிய ரகசியத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது அந்த விரலையும் மீறி கத்திக்காரனின் திறமை தெரிவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவரை மேஜிக் நிகழ்ந்த இடம் எது எனும் கேள்வியோடு கதை முடிகிறது. அந்தப் பெண் கத்திக்காரன் மீது வைத்திருந்த மாறாத நம்பிக்கையும் ஈர்ப்பும் அவளை அவனது அசைவுகளை நுட்பத்தோடு தொடர வைத்திருக்கிறது. ஒருவேளை அவளது கண்களில் மட்டுமே அந்த ரகசியம் தேங்கி இருக்கிறதோ எனும் ஆழமான வினாவையும் நம்முன் வைக்கிறது இந்தக் கதை.<br />
<br />
சின்னச் சின்ன விஷயங்களில் அடையக்கூடிய ஒழுங்கைப் பற்றிய அற்புதமான சிறு விசாரணை ‘முயல் காதுகள்’ எனும் கதையாக மாறியுள்ளது. வெங்காயம் வெட்டுவது முதல் செடிக்கு நீர் ஊற்றுவது வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் அதனதன் அழகுணர்ச்சியோடு செய்வது ஒருவித கலை. அது ஜென் அனுபவம் கூட. அப்படி அனுபவிக்கத் தெரிந்தவர் கூடவே இருப்பது வரமும் சாபமும் தான். நம் பார்வைக் கோணத்தைப் பொருத்து அமைவது. முயல் காதுகள் போக அழகாக ஷூலேஸ் கட்டிக்காட்டும் 80 வயது மூதாட்டி கதாசிரியரின் ஜூனியருக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். அதுவும் விளையாட்டு போல. வளர்ந்துவிட்ட அவரது சொந்த நாயை கைவிடும் தருணம் கூட ஒரு ஓவியத்தைப் போல அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மலரினும் மெல்லியது காமம் என்பது போல மிக நுணுக்கமான ரசனையும் மெல்லிய புல்லின் அசைவை ஒத்தது. மிக இயல்பானது. காலணி அணிந்துகொள்வதிலும் அப்படி ஒரு நுண்மை உள்ளதைக் காட்டும் மிக அழகான கதை. சொல்லப்போனால், ஜேஸ்டன்வில் நகரின் ஆன்மா இப்படிப்பட்ட பாத்திரங்களின் அன்றாட வாழ்வில் ஒளிந்துள்ளது. அது வெளிப்படும் கதைகளில் இதுவும் ஒன்று.<br />
<br />
ஜேஸ்டன்வில் எனும் கற்பனை நகரை உருவாக்கி அங்குள்ள இடங்களையும் மனிதர்களையும் பற்றி எழுதப்பட்ட தொகுப்பு என்றாலும் அந்த ஊருக்கான பிரத்யேக அடையாளங்களும் வாசனைகளும் உருவகங்களாக கதையில் அதிகம் வருவதில்லை. ஊரின் தனித்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாத்திரமாக மாற சாத்தியமுள்ள இடங்கள் தெளிவுற வெளிப்படவில்லை எனும் குறை இருந்தாலும் இப்படி ஒரு சாத்தியத்தை உருவாக்கியதன் மூலம் எதிர்காலத்தில் பழுத்த பல கனவுகளை நிஜமாக்கும் திறமையுள்ளவர் என நிரூபித்துள்ளார்.<br />
<br />
கடந்த சில வருடங்களில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்புகளில் மிக நுட்பமான தருணங்களும் கதை எனும் அம்சத்துக்கான முக்கியத்துவமும் தெளிவான கதாபாத்திர வார்ப்பும் அதிக அலட்டல் இல்லாத கூறுமுறையும் போலியான இலக்கிய பாவனைகள் அற்றதுமான சிறுகதைத் தொகுப்பாக ‘கத்திக்காரன்’ அமைந்துள்ளது. எழுத்தாளரின் கதைகளையும் கட்டுரைகளையும் கதை போல கச்சிதமாக எழுதப்படும் அவரது பத்தி எழுத்துகளையும் (ஜூனியர் குறிப்புகள்) கவிதைகளையும் ஒன்றுவிடாமல் தொடர்ந்து படித்து வருபவன் எனும் முறையில், எளிமையான விதத்தில் மிகத் திறமையுடன் சுவாரஸ்யமாக கதை சொல்லும் புது எழுத்தாளர்களில் ஶ்ரீதர் நாராயணன் மிக முக்கியமானவர் என நிச்சயமாகச் சொல்லலாம்.<br />
<br />
*<br />
<br />
நூலை வாங்க: https://www.commonfolks.in/books/d/kaththikkaaran<br />
<br />
*<br />
<br />
(ஜூலை, 2020 தமிழினி இணைய பத்திரிகையில், ரா. கிரிதரன் எழுதியிருக்கும் நூல் <a href="http://tamizhini.co.in/2020/07/20/சின்னச்-சின்ன-அசைவுகளின்/">விமர்சனம்</a>. <br />
<br />
கிரிதரன், சொற்களை அநாவசியமாக வீணடிக்காத, மிகக் கூர்மையான வாசிப்புப் புலன் கொண்ட, மிகப்பரந்த படைப்பாளுமை கொண்ட, பெரும் சாதனை எழுத்தாளர்களே வியந்து போற்றும் எழுத்தாளுமை கொண்ட, அனைத்துக்கும் மேல், அதியற்புதமான நண்பர்.<br />
<br />
அவருடைய இந்த நூல் விமர்சனம், என்னைப் போன்றவர்களில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு மகத்துவமானது என அவருக்கேக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சொல்லியிருப்பதைப் போல, ‘போலியான வார்த்தைகளில் மிகையாக சொல்வது போலில்லை’ இந்த உணர்வும். <br />
<br />
அவருக்கு நான் செய்யக்கூடிய நன்றியெல்லாம் ஒன்றுதான்.<br />
<br />
அவருடைய வாசிப்பு உரைகல்லில், மங்காது ஒளிரும்படியாக இன்னமும் காத்திரமான படைப்புகளை உருவாக்க முயல்வது அது நிகழ முன்னோர்களின் ஆசியும், நண்பர்களின் உள்ளன்பும் துணை நிற்கட்டும்.)<br />
<div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-52692011521607989992020-04-25T19:11:00.000-04:002020-04-25T19:26:38.842-04:00நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரைஇது போன்ற ஒரு கொள்ளை நோய் காலத்தில்தான் நியூட்டன் தன்னுடைய புகழ்ப்பெற்ற Principia Mathematica எழுதி முடித்தார் என்கின்றனர். ட்ரினிடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது லண்டனில் பரவிய ப்ளேக் நோயிலிருந்து தப்பிக்க தன்னுடைய பிறந்த ஊரான லிங்கன்ஷைருக்கு போய்விட்டார். அப்பொழுதுதான் ஒன்றிணைந்த புவியீர்ப்பு விசைக்கான அடிப்படை, கால்குலஸ் கணிதம்,, ஒளியியலில் அவருடைய சிந்தனைகள் என அவருக்குத் தோன்றிய பல ஆராய்ச்சி தலைப்புகளை செறிவாக வளர்த்தெடுத்தார். பின்னாளில் அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை தாங்கி வெளியான Principia Mathematica (கணித கோட்பாடுகள்) நம்முடைய இயற்பியலை பெருமளவிற்கு முன்னகர்த்திய நூல்.<br />
<br />
அவருக்கு அரை நூற்றாண்டு முன்னர் நிகழ்ந்த மற்றொரு கொள்ளை நோயின்போதுதான், ஷேக்ஸ்பியர் தன்னுடைய புகழ்ப்பெற்ற கிங் லியர் நாடகத்தை எழுதினார். அன்றைய லண்டனின் ஆட்சியாளர்களின் ஆதார நம்பிக்கை ‘கொள்ளை நோய்களுக்கு முதல் காரணம் மனிதர்கள் செய்த பாவங்கள். மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு முதலிடம் நாடக கேளிக்கைகள்’ என்பதாக இருந்தது. இன்றைக்கு இலக்கிய உலகில் போற்றப்படும் பல நாடகங்களும், கேளிக்கை கொண்டாட்டங்களாக மட்டும் சமூகவெளியில் பார்க்கப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. <br />
<br />
கவிதைகள் தொடர் பரிமாற்ற மடல் சங்கிலித்தொடரில், ஒரு நண்பர் அமெரிக்க கவிஞரான விஸ்டன் ஆடனின் (W H Auden) புகழ்பெற்ற கவிதையொன்றை அனுப்பி வைத்திருந்தார். இரண்டாம் உலகப்போர் காலத்தின் இருண்ட பொழுதில் ஆடன் எழுதியது ‘காவலற்று, இரவின் அடியில், மதிமயங்கிய பொய்களில் நம் உலகு இருக்கிறது’ ்னத் தொடங்கும் அக்கவிதை. பின்னாட்களில் போர் நிகழ்வுகள்ப் பற்றிய பல எழுத்துகளிலும் எடுத்தாளப்பெற்ற புகழ் பெற்ற வாசகமாக அக்கவிதை வரி திகழ்ந்தது. Defenceless under the night.<br />
<br />
<!— more—><br />
எனக்கு இப்பொழுது இது போன்ற படைப்பூக்க உந்துதல் எதுவும் நிகழ முடியாதபடிக்கு இரண்டு விஷயங்கள் நடந்தன. அலுவலகத்தில் ஏப்ரல் மாத பணிச்சுமையை இரட்டிப்பாகக் கூட்டி விட்டனர். வீட்டிலிருந்தபடி பணி புரிவதில் இருக்கும் பல அனுகூலங்களுக்கு நிகராக, பல சவாலான வேலைகளும் சேர்த்து தரப்பட்டன. இரண்டாவதாக, என்னுடைய இணைய தொடர்புக்கு வாசலாக இருந்த என்னுடைய கைப்பேசி மொத்தமாக உயிரை விட்டு விட்டது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகாலம் அருமையான சேவையை அளித்த கைப்பேசி கடந்த ஆறு மாத காலமாக ‘என்னைச் சற்று கவனியேன்’ என்று முரண்டு செய்து கொண்டேயிருந்தது. எவ்வளவோ சிசுருஷைகள் செய்தும் பயனில்லை. மார்ச் மாத இறுதிக் காலத்தில் மொத்தமாக இறந்து போய்விட, புதிய கைப்பேசி ஒன்றை வாங்கினேன்.<br />
<br />
புதிய கைப்பேசி சற்று பெரிய திரை அளவு கொண்டது. நேர்த்தியான வடிவமைப்பும், வழுவழுக்கும் மேலுடலும் கொண்டது. கூடுதல் ஆற்றல், திறன் என்று பல சாதகங்கள் இருந்தாலும், அந்த பழைய கைப்பேசி போல கைக்கு அடக்கமானதாக இல்லை. ஒற்றைக் கையால் பழைய கைப்பேசியை பயன்படுத்தி ஒரு முழுக் கட்டுரையே எழுதிவிட முடியும். ஆனால் இதென்னவோ கையில் நிறுத்தி பேலன்ஸ் செய்வதே பெரும் பாடாக இருக்கிறது. போதாததற்கு, வழுக்கும் மேலுடல் என்பதால் கூடுதலாக இரண்டு மூன்று கைகளைக் கொண்டு தாங்கிப் பிடித்தபடி செயலாற்ற வேண்டியிருக்கிறது. விரிந்த திரை என்பதால், விசைப்பலகை அளவு மாறுபட தட்டச்சில் ஏகப்பட்ட பிழைகள் உண்டாகி, ஏதேதோ மொழித் தோற்றம் கொண்டு ஆச்சரியப்பட வைக்கிறது.<br />
<br />
அனைத்தையும் விட பெரிய சங்கடம் என்னவென்றால், எவ்வளவு துல்லியமான சமதளத்தில் வைத்தாலும், அது வழுக்கிக் கொண்டு போய் ஏதாவது பிளவில் சென்று செருகிக் கொள்கிறது. உனக்குத்தான் விதி. கையைக் காலை முடக்கிட்டு, இருந்த இடத்திலேயே கிடக்கனும். எனக்கென்னப் போச்சு என்று சுதந்திர எக்காளத்துடன், எண்ணியபடிக்கு சறுக்கி சறுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.<br />
<br />
‘அந்த மாடல் அப்படித்தான்ப்பா. இதோ இந்த மாடல்ல அலுமினியம் பாடி இருக்கும். இது அவ்வளவு ஸ்லிப்பரி இல்ல. நீங்க இப்படி ஒரு கேஸ் வாங்கிப் போடுங்க’ என்று ஜூனியர் வேறு தன்னுடைய கண்டுபிடிப்புகளைக் கொண்டு என்னை வழிநடத்த ஆரம்பித்தார். <br />
<br />
நான் எப்பொழுது போனை மாற்றினாலும், அந்தப் பழைய ஃபோன் தனக்குத்தான் வரும் என்ற நம்பிக்கையிலிருந்தவருக்கு, அந்த ஃபோன் மொத்தமாக உயிரிழந்து போனது பெருத்த ஏமாற்றமாகிப் போய்விட்டிருந்தது. ‘இப்படி செய்துவிட்டாயே’ என என்னை மாபெரும் குற்றமிழைத்து விட்டவனாக சுட்டெரித்துக் கொண்டிருந்ததால், அவருக்கென ஒரு தனி கைப்பேசி வாங்கியிருந்தோம். அதன் விளைவுதான் இந்த அதீத தொல்லைகள் எல்லாம். வீட்டில் எந்த விஷயத்தைப் பற்றி பேசத் தொடங்கினாலும் அதில் அவருடைய குரலாக ஏதாவது புதிய தகவல்கள் வந்து விழுந்தவண்ணம் இருக்கும். <br />
<br />
எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம். எதைப் பற்றியும் விவாதிக்கும் ஆர்வம் என்று அவரும் இந்த புதிய கைப்பேசி போல் ஒரு கையில் பேலனஸ் செய்ய முடியாமல், நானும் மனைவியும் சேர்ந்து நான்கு கைகளாள் பேலன்ஸ் செய்ய வேண்டிய நிலை. <br />
<br />
ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஒரு சிறுகதையில், கதைசொல்லி ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீட்டைச் சென்று நேரில் பார்த்த அனுபவத்தை தன் பையனிடம் சொல்வான். கதைசொல்லி எதைப் பற்றி பேசுவதற்கும் முன்னால் அந்தப் பையன் பதில்களோடு காத்திருப்பான். ‘Einstein-க்கு ஸ்பெல்லிங் சொல்லுப் பாப்பம்னு ஜபர்தஸ்தா கேக்க முடியுதா இந்தக் கால பசங்கக் கிட்ட. விரல் நுனியில் கூகிளை வச்சுக்கிட்டு நம்மளை மொக்கை செய்திடறாங்க’ என்று அந்த அப்பாவி கதைசொல்லி அப்பா புலம்புவர். கடைசியில் பார்த்தால்,, அவருடைய புகைப்பட சேகரிப்பிலிருந்து, அந்த ஐன்ஸ்டீன் வீடு பற்றிய புகைப்படங்களை அவர் பையந்தான் மீட்டெடுத்துக் கொடுப்பான். ‘ஐன்ஸ்டீன் பேரை தப்பான ஸ்பெல்லிங்க்ல டேக் பண்ணி வச்சிருந்தீங்க’ என்பான். <br />
<br />
அந்தக் கதையில் வரும் பையனுக்கு வயது 13 என்றிருக்கும். அப்பொழுது அக்கதையை படித்த நண்பரும் எழுத்தாளருமான சத்யராஜ்குமார், ‘உங்க பையனுக்கு அவ்வளவு வயசில்லையே. அப்புறம் எப்படி இந்த சங்கடத்தையெல்லாம் அப்படியே எழுதினீங்க’ எனக் கேட்டிருந்தார். அவருடைய பையன் அப்பொழுது டீன் ஏஜ் வயதில் இருந்ததால் அவருக்கு அப்படியான அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். <br />
<br />
இந்த ஆண்டு ஜூனியர் பதின்மூன்று வயதை நிறைவு செய்து விட்டார். பழைய அனுபவங்களிலிருந்து புதிய கதைகள் எழுதுவார்கள். எங்கள் வீட்டில் பழைய கதைகளிலிருந்து அனுபவங்கள் புதியதாக நிகழ்கின்றன. <br />
<br />
‘என்னேரமும் அந்த போனைப் போட்டு ஏன் உருட்டிக்கிட்டு இருக்க. ராத்திரி ஏழு மணியிலிருந்து காலைல ஏழு மணி வரைக்கும் ஃபோனை தொடாம இரு பாப்போம். உன்னால முடியுமா?’ என்றேன். அறிவுரைகளாக இல்லாமல் அறைகூவலாக இருந்தால்தான் அவருக்கு சற்று ஈடுபாடு உண்டாகும்.<br />
<br />
‘அதனால் என்ன. இதிலேயே நோ ஸ்க்ரீன் டைம் இருக்கு. இப்பவே செட் பண்ணிடறேன்’ என்றார் ரோஷமாக.<br />
<br />
அன்று இரவு என் போனை எடுத்து ஃபேஸ்புக்கை திறந்தால், ‘இந்த நோ ஸ்க்ரீன் டைமில் இந்த செயலியை நீங்கள் இயக்க முடியாது’ என்று எச்சரிக்கை விடுத்தது. மனைவியின் போனிலும் அப்படி எச்சரிக்கைகள் மானாவரியாக வந்து விழுந்தன. என்னுடைய ஆப்பிள் கணக்கில் இணைக்கப் பட்டிருந்த அத்தனை உபகரணங்களுக்கும் அந்த நோ ஸ்க்ரீன் டைமை அமலாக்கம் செய்து விட்டு ஜூனியர் தூங்கப் போய்விட்டிருந்தார்.<br />
<br />
மறுநாள் அவரிடம் சற்று பவ்யமாக ‘என்னடா, இப்படி எல்லோ ஃபோனுக்கும் போட்டு வச்சிட்டியே. இதை எப்படி ரிலீஸ் செய்யறது’ என்றுக் கேட்டு எங்கள் போன்களை விடுவித்துக் கொண்டோம். <br />
<br />
‘ஐன்ஸ்டீன் வாழ்ந்த வீடு’ கதைசொல்லி என்னை அனுதாபத்துடன் பார்த்தான். ‘இன்னுமா நீ திருந்தல’.<br />
<br />
இந்த பதிவுக்கு ஆண்ட்டி கிளைமேக்ஸாக ஒரு அற்புத நிகழ்வு நடைபெற்றது. கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் வந்த போது, எங்கள் வீட்டு இளவரசியார், அதிகாலையிலேயே வந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டுப் போனார். பெரியவர், அனுதினமும் பெற்றோர்களான எங்களைக் கூர்ந்து கவனித்து, எங்களை அல்லாட விட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், சின்னவர், பெரியவரை கூர்ந்து கவனித்தபடி, அவ்வப்போது அவரைப் பற்றிய ரகசியங்களை எங்களிடம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார். <br />
<br />
என்னுடைய பிறந்தநாளுக்கு இளவரசியாரின் பரிசு என்பது, அவர் கைகளால் தயாரித்த ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை. அட்டைக் கூட இல்லை. ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பேப்பர்தான் அது. அதில் பல வண்ணங்கள் கொண்ட எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக்கடியே, எனக்கு அவருடைய பரிசாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
‘இந்த வீட்டின் எல்லா மின்னணு கருவிகளுக்கும் உங்களுக்கு தங்குதடையில்லாத அனுமதியை பரிசாக வழங்குகிறேன்’ என எழுதி கீழே அவருடைய பெயரை கையொப்பமிட்டிருந்தார்.<br />
<div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-66471631327889638162020-04-11T12:41:00.003-04:002020-04-11T12:41:43.357-04:00சொல் வரைந்த ஓவியம்சொல்லுதல் யாவர்க்கும் எளிது. ஆனால் சொன்னதை அதன் முழுமையோடு கேட்போர்க்கு உணரவைத்தல் அரிய கலை. அதை நிகழ்த்துவதில் கவிதை வடிவத்திற்கு நிகரான ஒரு கலை வடிவம் இல்லை எனலாம். ஒருவரின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போகிறோம். அதை அவரிடம் எப்படி தெரிவிப்பது?<br />
<br />
இதில் என்ன சங்கடம் என்றால், நம்மில் பெரும்பாலோர்க்கு நாம் அடுத்தவர்க்கு அளிக்கும் ஏமாற்றங்கள், அவமதிப்புகள் பெரிதும் உணரப்படுவதில்லை. அதன் தொடர்ச்சியான அனைத்து நிகழ்வுகளுக்குமான காரணத்தை அடுத்தவரிடமே தேடி அலுத்துப் போவோம். மற்றோர் மீது பழி போட்டு நம்மை நிலை நிறுத்திக் கொள்வது ஓர் ஆதார பண்பு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTTQ4wkO9_mXpn9CdqYtZDlGI4fUiQJp-dQmNvOAtO4ouPG_OdFIjKArtbBbJL5GEIbJFJmAojkNqWaRDz0q8ryxxEnNIz_EkoTzDujZtadz9RMcm0aFYNOPxroAejswtTl6fG/s1600/4F815B60-A3A5-4584-A8D6-75CE2FD9FD54.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="355" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTTQ4wkO9_mXpn9CdqYtZDlGI4fUiQJp-dQmNvOAtO4ouPG_OdFIjKArtbBbJL5GEIbJFJmAojkNqWaRDz0q8ryxxEnNIz_EkoTzDujZtadz9RMcm0aFYNOPxroAejswtTl6fG/s320/4F815B60-A3A5-4584-A8D6-75CE2FD9FD54.jpeg" width="269" /></a></div><br />
நீல நொச்சி மரம்<br />
<br />
<!— more—>இந்நிலையில் எப்படி தலைவனை எதிர்பார்த்து தான் ஏமாந்து போன அந்தரங்கத் துயரை தலைவி வெளிப்படையாக பகிர முடியும்? சொல்வதை சரியாகச் சொல்ல முடியாமல், பதிலுக்கு ஒரு சுடு சொல் பெற்றால், விண்டு போகும் மனதில் காதல் எங்ஙணம் நிலைக்கும்?<br />
<br />
கொல்லன் அழிசி என்னும் சங்கக்கால புலவரின் குறுந்தொகைப் பாடல் எளிமையாகத்தான் தொடங்குகிறது. ‘ஊரே தூங்கினாலும், நாங்கள் தூங்குவதில்லை’ என்று தலைவியின் தோழி தலைவனிடத்தில் சொல்கிறாள். ‘கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே…’ என்று தொடங்கும் பாடல் அடுத்து மெள்ள மெள்ள விரிக்கும் வியன்புலக் காட்சி அருமையானது. சொல் புனைந்த சித்திரம்.<br />
<br />
‘வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும், ஏழில் என்ற பெயருடைய குன்றின் மேலே, மயில் பாதம் போன்ற இலைகளோடு, பெரிய கொத்துகள் கொண்ட நொச்சி மரத்தின், அழகான மெல்லிய கிளைகளிலிருந்து உதிரும், நீலமணி போன்ற பூக்களின் ஓசையைக் கேட்டுக் கொண்டே நாங்கள் தூங்கவில்லை’ என்று விவரிக்கிறாள்.<br />
<br />
நொச்சி மரங்களில் வெண்ணொச்சி, நீல நொச்சி என்று வகைகள் உண்டு. இதில் நீல நொச்சி அதிகம் பரவலாக இருப்பதில்லை. அதன் இலைகளின் வடிவு, கிளைகளின் அழகு, பூக்களின் உவமை என்று ஒரு காட்சி படிமத்தை முழுமையாகக் கொடுத்து தாங்கள் தூங்காமல் தலைவனின் வருகைக்காக காத்திருந்தோம் என்று கூறுகிறாள் தோழி.<br />
<br />
சங்கப் பாடல்களில் பொதுவாக தலைவிகளின் மனங்களை வெளிப்படுத்த ஒரு செவிலித்தாயோ, தோழியோதான் வருகிறார்கள். அவளுடைய விருப்பம், அத்துமீறல்கள், துயரம் அனைத்துக்கும் அவர்கள்தான் சாட்சிகள். இந்தப் பாடலிலும் தோழி, தலைவன் இல்லாத அந்த இரவின் வெறுமையைப் பற்றிக் குறிப்பிடுகிறாள். <br />
<br />
அதிலும் அந்த நொச்சி மரத்தின் விவரிப்பு மிக முக்கியமானது. அக்காலத்தில் நொச்சி இலைகளை சேர்த்து தலையணை போல செய்து பயன்படுத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் தரக்கூடிய தன்மை கொண்டவை நொச்சி இலைகள் என்பார்கள். ஆனால் அன்று தலைவியின் தூக்கமில்லா இரவை நிரப்பிக் கொண்டிருந்ததும் நொச்சி மலர்களின் ஓசைகள்தான். <br />
<br />
இனி தலைவன் அந்த ஏழில் குன்றைப் பற்றி கேட்கும்போதெல்லாம், நொச்சி மரங்களைக் காணும் போதெல்லாம், எந்த மரத்தின் இலைகளின் வடிவை நோக்கும் போதெல்லாம், இத் தோழியின் கூற்றுதான் நினைவிற்கு வரும்.<br />
<br />
ஊரடங்கிய நடுச்சாமத்தில், பூக்களின் பாடலைக் கேட்டபடி, அவனில்லாத வெறுமையை விழித்துப் பார்த்தபடி இருக்கும் அவள் முகம் அவன் முன்னெழும் ஓர் ஓவியமென.<br />
<br />
<br />
(குறுந்தொகை – 138; பாடலாசிரியர்: கொல்லன் அழிசி)<br />
<br />
<blockquote class="tr_bq">கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே<br />
எம் இல் அயலது ஏழில் உம்பர்<br />
மயிலடி இலைய மா குரல் நொச்சி<br />
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த<br />
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே.</blockquote><div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30880544.post-26146404385275971242020-02-27T22:16:00.001-05:002020-02-27T22:54:21.673-05:00கருத்த பறவைகள்<header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: left; text-transform: uppercase; width: 613.797px;">கருத்த பறவைகள்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><br />
சிறிய கருப்பு பறவை<br />
மென்னடையில் அளக்கிறது<br />
மதிற்சுவரின் அகலத்தை.<br />
<br />
அதன் உமிழெச்சத்தை<br />
மடியில் வாங்கி<br />
தன் விரிசல்களில்<br />
விதைத்துக்<br />
கொள்கிறது சுவர்.<br />
<br />
அலையென கருத்த பறவைகள்<br />
வந்தமர்கின்றன சுவரின் மேல்<br />
ஒரு காட்டை மீட்டெடுத்த<br />
கொண்டாட்டத்தோடு.<br />
<br />
</div></div><a name='more'></a><br />
<header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: right; text-transform: uppercase; width: 613.797px;">சாண்டாவை பார்த்தவள்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><div style="text-align: right;"><br />
நீறு பூத்த கணப்பின் வாயிலில்<br />
கயிறு கட்டி வைத்து<br />
சாண்டாவை தடுக்கி விழுத்தாட்டிய<br />
வேடிக்கை கதையை<br />
சிரிப்பும் களிப்புமாக<br />
சொல்லிக் கொண்டிருக்கிறாள் சிறுமி.<br />
<br />
வெண்சிறகு தாடியை<br />
அவள் பற்றியிழுத்ததை<br />
சாண்டா பொறுத்துக் கொண்டார்.<br />
பருத்த தொப்பையை குலுக்கிக் காட்டி<br />
கோமாளித்தனம் செய்து<br />
அவளைச் சிரிக்க வைத்தார்.<br />
பனிச்சறுக்கு தேரை இழுத்து வந்த<br />
கலைமான்களின் பெயர்களை<br />
ஒவ்வொன்றாக அவளுக்கு<br />
சொல்லிக் கொடுத்தார்.<br />
<br />
போக்கிரி பட்டியலில்<br />
தன் பெயரைப் போடவில்லை என<br />
அவள் சாண்டாவுக்கு<br />
அலங்கார காகிதம் சுற்றிய<br />
பரிசொன்றைக் கொடுத்தாள்.<br />
<br />
கதை கேட்டுக் கொண்டிருந்தவர்களின்<br />
கேலிக் கேள்விகள் அனைத்திற்கும்<br />
அவளிடம் தீர்க்கமான<br />
நிரூபண பதிலொன்று இருக்கிறது.<br />
<br />
அவள் விவரிக்க விவரிக்க<br />
சாண்டாவின் குதூகல மகிழ்ச்சி<br />
அந்த அறையில் மெல்ல மெல்ல<br />
நிறைகிறது<br />
<br />
பனித்துகள்கள் மேவிய<br />
பளபளக்கும் ஆடையுடன்<br />
பரிசுப்பொதியை<br />
தோளில் ஏற்றிக் கொண்டு<br />
சாண்டா புறப்படும் போது,<br />
அறையில் இருக்கும்<br />
அனைவரையும் பார்த்து<br />
உரக்க நகைக்கிறார்.<br />
<br />
அப்படித்தான் என்றுச்<br />
சொல்லி சிரிக்கிறாள் அவள்.<br />
நீங்கள் பார்க்கவில்லை என்றாலும்<br />
சாண்டா உங்களைப் பார்த்துவிடுவார்.<br />
<br />
</div></div></div><br />
<header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: left; text-transform: uppercase; width: 613.797px;">சிற்பம்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><br />
கற்பாறையை<br />
பொளிக்கும் உளியின் இசைவில்<br />
வெளிப்போழ்ந்தது<br />
அழகிய கலைச் சிற்பம்.<br />
<br />
விடையேறி வந்த சிவமென<br />
கால்தூக்கி சுழன்றாடும் காளியென<br />
இரட்டை அட்டிகை போட்டு<br />
ஒப்பனை செய்துகொள்ளும்<br />
நடனமணியென<br />
இசையொலி எழுப்பும் தூணென<br />
<br />
கற்பனைக்கு ஒவ்வாததென<br />
செதுக்கி எடுத்ததில்<br />
தெறித்து விழுந்த கல் ஒன்று<br />
அமர்ந்திருக்கிறது<br />
ஆதி மலையின் வடிவு கொண்டு<br />
<br />
</div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: right; text-transform: uppercase; width: 613.797px;">வெற்றுப் பக்கம்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "lucida grande", "lucida sans unicode", "lucida sans", geneva, verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><div style="text-align: right;"><br />
இப்பொழுது இப்பக்கம்<br />
காலியாக இருக்கிறது.<br />
<br />
துரோகங்களின் விளைவால்<br />
துளிர்த்த குருதி சொட்டுகள்<br />
நிரம்பியிருந்தன முன்பு.<br />
ஊறிப்பெருகிய அதன்<br />
ஈரத்தினைக் கொண்டு<br />
அவற்றை துடைத்தேன்.<br />
<br />
சினம் சுமந்து வந்து சாபங்கள்<br />
சுருட்டி எறிந்தன இதை.<br />
அவ்வசவுகளின் வெம்மையைக் கொண்டு<br />
அச்சுருக்கங்களை நீவி நேராக்கினேன்.<br />
<br />
விசை கொண்ட கற்களால்<br />
வீசி அடிக்கப்பட்டதால்<br />
படபடத்துக் கொண்டிருந்தது ஒருமுறை.<br />
அதே கற்களின் கனத்தைக் கொண்டு<br />
இப்பக்கத்தை புரண்டு விழாமல்<br />
நிலைப்படுத்தி வைத்தேன்.<br />
<br />
கசந்த அனுபவங்களை தந்தவர்களின்<br />
பெயர்ப் பட்டியல் ஒன்றிருந்தது முன்பு.<br />
மை தெளித்த அலங்காரமென<br />
அதை மாற்றி புனைந்தேன்.<br />
<br />
இப்பொழுது இப்பக்கம்<br />
காலியாக இருக்கிறது.<br />
<br />
புதிய நிறத்தில்<br />
பெயரறியா பூவொன்று போல<br />
வெட்கச் சிரிப்புடன்<br />
வெகுளியென நோக்கும்<br />
ஒரு சிறுமியின் குழந்தைமையை<br />
இட்டு நிரப்பி வைக்கிறேன்<br />
இனி எப்பொழுதிற்கும்.<br />
<br />
</div></div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: left; text-transform: uppercase; width: 613.797px;">புலரும் நகரம்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><br />
அலையடித்து கரையொதுங்கிய<br />
கிளிஞ்சல் போல<br />
முதல்நாள் மழையின்<br />
மிச்சத்திலிருந்து<br />
மீண்டெழுகிறது நகரம்.<br />
<br />
அறைச் சுவர்களின் கதகதப்பில்<br />
இருந்து வெளிப்பட்டு<br />
நேர்த்தியான உடையணிந்த கனவான்கள்<br />
உலவத் தொடங்குகின்றனர்.<br />
<br />
சாலையோர குட்டையிலிருந்து<br />
வெளிப் போகும் காலடிச்சுவடுகள் போல<br />
இரவில் பெறப்பட்ட<br />
ரகசிய ஈர உத்தரவாதங்கள்<br />
உலரத்தொடங்குகின்றன<br />
புலரொளியில்.<br />
<br />
</div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: right; text-transform: uppercase; width: 613.797px;">பிரும்மம்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "lucida grande", "lucida sans unicode", "lucida sans", geneva, verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><div style="text-align: right;"><br />
அவர் மிகவும் இலேசாக இருந்தார்.<br />
விடுபட காத்திருக்கும் இறகு போல<br />
<br />
பீடத்தின் மீதேற்றி வைக்க<br />
காலணிகளை விடுவிக்க<br />
அவருக்கு வியர்க்காமலிருக்க<br />
விசிறிகளை முடுக்கிவிட<br />
ஆசனத்தை தூசிதட்ட<br />
என சுற்றிலும் ஆள் படை.<br />
<br />
கண்ணீர் சிந்தி கைகூப்பியபடி<br />
முன்வினையெல்லாம் தீரவேண்டி<br />
வழிபடுவோர் கூட்டம் முன்னால்.<br />
<br />
ஒவ்வொரு சொல்லாக தேர்ந்து<br />
அதன் ஒளிரும் முகம் துலங்க<br />
உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
கடப்பாடு இல்லாத கடமையைப் பற்றி<br />
பலன் எதிர்பாராத சேவையைப் பற்றி<br />
பாவங்களைப் போக்கி ரட்சிக்கும் இறையைப் ப்பற்றி<br />
கரைகாணாத கருணையைப் பற்றி<br />
பற்றற்ற வாழ்வியலைப் பற்றி<br />
<br />
சொற்கள் பெருக்கெடுக்க<br />
உரைகளின் கனத்தில்<br />
தொய்ந்து பீடத்தில் படிந்து<br />
பசப்பும் போதனைகளுடன்<br />
படபடத்து கொண்டிருக்கிறது<br />
பறக்க மறந்த இறகு<br />
<br />
கேள்வி பதிலற்ற ஒரு மௌன தருணத்தில்<br />
அந்த நாடகத்தில்<br />
வந்து நிறைகிறது<br />
அனைத்துக்குமான<br />
ஒரு சொட்டு பிரும்மம்.<br />
<br />
ஆம். அதுவே சத்தியம்.<br />
<br />
</div></div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: left; text-transform: uppercase; width: 613.797px;">எல்லைக்கோடு</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><br />
குதிகாலால் கெந்தி இழுக்கப்பட்ட<br />
சிறு தடமென நிலத்தை பிரித்திருந்தது<br />
இந்த எல்லைக்கோடு ஒருகாலத்தில்.<br />
<br />
பழுப்பு நிற புள்ளிமான் கூட்டங்கள்<br />
கோட்டை குலைத்தபடி<br />
குறுக்காக போய்வந்ததன.<br />
<br />
முட்களை முடைந்து<br />
வேலிப் படலடைத்ததும்<br />
பாதுகாப்பு பெருகியதென<br />
ஆசுவாசம் அடைந்தனர்.<br />
<br />
எயிறு வண்ண கண்களை<br />
உருட்டி விழித்துக்கொன்டு<br />
வெண் முயல்கள் கூட்டமொன்று<br />
வேலியைச் சாடிக் குதித்தன.<br />
<br />
காதத்துக்கொரு தூண் நிறுவி<br />
காரைச் சுவர் எழுப்பி<br />
எல்லையை மீண்டும்<br />
இற்றைப்படுத்தினர்.<br />
<br />
இரைக் கொத்தி தின்பதற்கென<br />
சுவர் தாண்டிப் போய் வந்தன<br />
கருநிற கிண்ணி கோழிகள்.<br />
<br />
வான் தொட உயர்ந்து நிற்கும்<br />
கல்மதில் கொண்டு<br />
காவலைக் கூட்டி நிறுத்தினர்<br />
<br />
தக்கை நிரை என<br />
தவிட்டு குருவிகள்<br />
மதில் தாண்டிப் பறந்து<br />
சுற்றி திரும்பின.<br />
<br />
அடுக்கு கோட்டையும்<br />
கண்காணிப்பு கோபுரங்களுமாக<br />
இறுமாந்து நிற்கிறது இப்போது.<br />
<br />
மகரந்த மினுமினுப்புடன்<br />
கோட்டை அரண் மீது<br />
வந்தமர்கிறது<br />
வண்ணத்துப் பூச்சி ஒன்று<br />
மெல்லிய அதிரும் சிறகுகளுடன்.<br />
<br />
மீண்டும் படபடக்கத் தொடங்குகிறது<br />
நெடிதுயர்ந்து நிற்கும் கோட்டை<br />
<br />
</div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: right; text-transform: uppercase; width: 613.797px;">கைக்குள் கடலும், அதற்குள் நானும்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "lucida grande", "lucida sans unicode", "lucida sans", geneva, verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><div style="text-align: right;"><br />
தளும்பலும் அலம்பலுமாய்<br />
கண்ணுக்குள் நிறைந்திருக்கிறது<br />
கடல்.<br />
அள்ளி எடுக்க முடிந்ததென்னவோ<br />
ஒரு கைக்குழி<br />
வழிந்தது போக நின்றிருப்பது<br />
ஒரு துளி<br />
தளும்பலும் அலம்பலுமாய்<br />
கைக்குள் நிறைந்திருக்கிறது<br />
கடலும், அதற்குள் நானும்.<br />
<br />
</div></div></div><header class="entry-header" style="box-sizing: border-box; display: block; margin-bottom: 2.3rem; width: 620px;"><h1 class="entry-title" style="box-sizing: border-box; clear: both; color: #4f4f4f; font-family: lato, sans-serif; font-size: 2rem; font-weight: 200; line-height: 1.5; margin: 0px; text-align: left; text-transform: uppercase; width: 613.797px;">இறத்தல்</h1></header><br />
<div class="entry-content" style="background-color: #efece6; box-sizing: border-box; color: #4f4f4f; font-family: "Lucida Grande", "Lucida Sans Unicode", "Lucida Sans", Geneva, Verdana, sans-serif; font-size: 13px; width: 620px;"><div style="box-sizing: border-box; margin-bottom: 2.3rem;"><br />
நான் இறப்பது<br />
இது முதன் முறையல்ல.<br />
<br />
குத்துவாளை விசையுடன்<br />
பாய்ச்சும் இறுதி தருணத்தில்<br />
அதன் ஒளிரும் விளிம்பில்<br />
பிரதிபலிக்கிறது உன் முகம்<br />
பொங்கி வழியும் சோகத்துடன்.<br />
<br />
நான் இறக்கிறேன்<br />
சற்று நிம்மதியாக.<br />
<br />
</div></div><br />
<div class="blogger-post-footer"><br/>
<br/>
<p>உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.</p></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com0